தமிழ்விடு தூதில் பெண் உளவியல் பார்வை| முனைவர் கி.நாகேந்திரன்

தமிழ்விடு தூதில் பெண் உளவியல் பார்வை -முனைவர் கி.நாகேந்திரன்
முன்னுரை
            தமிழ்மொழியில் அமைந்த சிற்றிலக்கிய வகைகளைப் பிரபந்தங்கள் என்று அழைப்பர். இவற்றை வகைப்படுத்தித் ‘தொண்ணுற்றாறு பிரபந்தங்கள் என தமிழ் மொழியில் குறிப்பிடும் வழக்காறு உள்ளது. பிரபந்தம் என்பது நன்கு கட்டப்படுகின்ற பொருளைத் தருவதாய் அமைகின்றது. மேலும் பிரபந்தம் என்ற சொல்லாட்சி சிற்றிலக்கியத்தை மட்டும் குறிப்பிட்டு உணர்த்தாமல் சிற்றிலக்கிய வகைகளையும் குறிப்பிட்டு உணர்த்துவதால் சிறுபிரபந்தம் அல்லது சில்லறைப் பிரபந்தம் என்ற சொல் அமைப்பை பயன்படுத்தத் தொடங்கினர். இச்சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று தூது இலக்கியம். தமிழ்விடுதூதுவில் பெண்கள் உளவியல் என்ற நோக்கில் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

தூது
            ஒருவர் மற்றொருவரிடத்து ஓர் அஃறிணைப் பொருள் அல்லது ணர்வுகளை அல்லது ஓர் உயர்திணையோர் வழியாகத் தம் உள்ள உ செய்திகளைக்கூறி, அனுப்பும் பொருள்மையைக் கொண்டு இயற்றப்படும் இலக்கியவகையே தூது இலக்கியம் ஆகும். சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையைக் கொண்டதாகவும் கலிவெண்பாவால் பாடப்படும் இலக்கிய வகையாகவும் தூது இலக்கியம் திகழ்கின்றது. இவற்றில் தமிழ்விடு தூது என்பது மதுரை சோமகந்தர இறைவன் மேல் காதல்கொண்டதலைவிதன்காதல்வேட்கையை வெளிப்படுத்தத் தமிழைத் தூதாக அனுப்புவதற்கு இயற்றப்பெற்ற இலக்கியம் ஆகும். இத்தூது இலக்கியத்திற்கு இலக்கணமாக பாட்டியல் நூல்கள்,

“இரு திணையுடன் மையலை யுரைத்துத்
தூது செலவிடுவது தூது இவை கலிவெண்
பாவினால் விரித்துப் பகிர்வது மரபே” (பி.ம. 15)
“பயிறருங் கலிவெண்பாவினாலே
உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்
சந்தியின் விடுத்தல் முந்நூறு தூதெனப்
பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே” (இ.வி. 874)


 என்ற இலக்கணம் கூறுகின்றன.

உளவியல்
           
       முன்பு நடந்த ஒரு செயலை நினைவிற்கு கொண்டு வரும் உருவகமே உளவியல்.மனிதனின் உள்ளம் அல்லது மனதின் செயல்களை விளக்கும் இயல் உளவியல் எனச் சில அறிஞர்கள் கருத்து தருகின்றனர். ‘உள்ளம்’ உளவியலை”நனவுநிலை’பற்றிய இயல் என விளக்குகின்றனர்.”உளவியல் என்பது மனிதனின் நடத்தை,நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் என்பது ‘ஆன்மா’ என்பதைப் போன்றே தெளிவற்றதென நினைத்து, ஆகியவற்றைப்பற்றிப்படிப்பதாகும்” என்று வில்லியம் மக்டூகல் கூறுகிறார். பற்றிப் படிப்பதாகும்” என்று லெஸ்டர் குரோ மற்றும் ஆலிஸ் குரோ ‘உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவுமுறைகளைப் எடுத்து இயம்புகிறார். மனிதனது நடத்தை பற்றிய சில அடிப்படைக் கருத்துக்கள் இன்று பொதுவாக எல்லா உளவியலறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. “உடலுக்குள்ளிருந்து எழும் வேட்கைகள் வெளியுலகச் சூழலிலிருந்து எழும் தூண்டல்கள், மனிதர்களின் சமூக உறவினின்றும் எழும் துன்பங்கள் போன்ற பல வகைப்பட்ட தூண்டல்களினால் மனிதனது நடத்தை தோற்றுவிக்கப்பட்டு நெறிப்படுத்தப்படுகிறது.” (சு. சாவித்திரி வாழ்வியற்களஞ்சியம் தொகுதி – 5 ப. 444)படைப்பாற்றல் மிக்க மனம், உயர்திணைப்பொருள்களாகிய மனிதனுக்கு மட்டும் உரியது. மனம்தான் மனித சமுதாயத்திற்கு நாகரிகத்தையும் பண்பாட்டையும் படைத்துத் தந்ததாகும். இயற்கையாகவே ஏனென்றால் மனிதன் பரிணாமத்தின் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளான். ஐம்பொறிகளின் தலைமைப் பீடமாகிய மூளை தலையினுள் அமைந்துள்ளது. வாய், கண், மூக்கு, செவி என்னும் நாற்பொறிகளும் தலையில் அமைய ‘மெய்’உடம்பு முழுவதையும் இணைத்துத் தொடு உணர்ச்சியை மூளைக்குக் கொண்டு செல்கிறது. திருக்குறளில் காமத்துப்பாலில் ஐம்பொறிகளைப் பற்றி வள்ளுவர்,
“கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள” (திருக்குறள் 1101)

        என்று கூறுகிறார். சமூக உளவியல் சார்ந்த கருத்துக்களைத்திருக்குறள் பொருட்பாலில்

“மன நலத்தி னாகும் மறுமை மற்றஃதும்
இனநலத்தின் ஏமாப்புடைத்து” (திருக்குறள் 459)

    என மனிதன் ஒருவன் கொண்டுள்ள மனநலத்தினால் அவன் மறைந்த பின்னரும் புகழ் உண்டு என்பதைக் கூறகின்றார்.

தமிழ்விடு தூதில் பெண் உளவியல்
           
    உடல்மெலிந்து இருக்கின்றேன். காதல் கொண்ட தலைவியின் உள்ளத்தைத் தமிழ்விடுதூது காலக் கண்ணாடியாக படம்பிடித்துக் காட்டுகின்றது. மதுரையில் வீற்றிறுக்கும் சோமசுந்தர கடவுள் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் மன வருத்தத்தினால் தமிழ் மொழியைப் பார்த்து, காதல் நோயால் வருத்தமுற்று அறியவேண்டிய உன்னிடத்தில் உன்னுடைய சீரிய பெருமைகளையேநான் என்னுடைய நிலையைப் பற்றி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். தமிழே! என்னுடைய காதல் வேட்கையை, அறிந்துகொள்ள ‘மாட்டேன் என்கிறாயே! என் உள்ளத்தின் நிலையைத்

“என் செய்தி நீ கண்டு இரங்குவது நீதியல்லால்
உன் செய்தி நானோ உரை செய்வேன்” (தமிழ்விடுதூது-96)
           
என்று தலைவி கூறுகிறாள். தன் தலைவன் மீது கொண்டுள்ள காதல்
 வேட்கையின் உணர்வு எத்தகையது என்பதைத் தன் மனம் நொந்து கூறுவதைக் காணமுடிகிறது.

தலைவன் இல்லாமல் வாழ முடியாது
           தலைவனிடத்து அன்பு கொண்ட தலைவி, தலைவன் இல்லாமல் உயிரோடு இருக்கமுடியாது என்கிறாள். அதன் பொருட்டு மனம் இரக்கம் கொண்டு காதலனான சோமசுந்தர கடவுளிடத்து தூது சென்று வரும்படி கூறுகின்றாள். சுந்தர மூர்த்தி நாயனார் தன் காதலுக்காக ஓர் அடிக்கு ஓராயிரம் பொன் கொடுத்தார். அவரின் காதலின் பொருட்டு பரவை நாச்சியாரிடம் தூதாக சென்ற தமிழே என் மன நிலையை அறிய மாட்டாய நானும் பெண்தானே என் மன வேட்க்கையை நீக்குவாயாக என்று தலைவியானவலின் மன வேட்க்கையையும் வேட்கையால் உண்டான மனவேதனையும் நீக்குகின்ற பொறுப்பு தமிழிடம் இருக்கின்றதாகதலைவி கூறுகின்றாள். இதனை

“மாண்பாய் ஓர் தூது சொல்லி வர என்பேன் என் வருத்தம்
காண்பாய் என் பெண்மதி நீ காணாதே” (தமிழ்விடுதூது -101)
           
     என்று தமிழ்விடு தூது கூறுகின்றது. தலைவியின் உள்ளத்தை வாட்டி வருத்துகின்ற புண்களை மாற்றுவாயாக! என்று தமிழைப் பார்த்துக் காமம் மிக்க கழிபடர் கிளவியாக உரைக்கின்றாள். சங்க இலக்கியமான நற்றிணையில் தலைவி மீது காதல் கொண்ட தலைவன் தோழியிடம்,

“உரைமதி உடையும் என் உள்ளம் சாரல்
கொடுவில் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பைதல் நெஞ்சம் உய்யுமாறே” (நற்.75)

     என்று கூறுகிறான். தன்னுடை துன்பத்தை அறிந்தும், தன்னிடம் இரக்கங்கொண்டு தன்னுடைய மனம் அறியாமையைத் தலைவியிடம் சொல்லி சிரிக்கச் செய்யாமல் என் நெஞ்சம் விரும்புமாறு தன்னுடைய காதலைத் தலைவியிடம் எடுத்துக் கூறும்படி கூறுகிறான். தோழியிடம் தன் மனவேட்கையைப் பலவாறு எடுத்துரைக்கின்றான் தலைவன். காதல் வேட்கை கொண்ட ஒரு தலைவனின் மனப்பாங்கை இங்குக் காணமுடிகிறது.

பிற அஃறிணைப் உயிர்களைத் தூதாக அனுப்புதல்
            மதுரையம் பதியில் வீற்றிருக்கும் சோமசுந்தரக் கடவுள் மீது காதல் கொண்ட தலைவி, தலைவனிடம் மனவேட்கையைப் புலப்படுத்தப் பல அஃறிணைப்பொருட்களைத் தூதாக அனுப்ப நினைக்கிறாள். பின் அதன் செயல்பாடுகளை நினைத்து ஒவ்வொன்றாகத் தவிர்க்கின்றாள்.
அன்னப்பறவையை தூது அனுப்புதல்
           
      முதலில் அன்னத்தைத் தேர்ந்தெடுக்கின்றாள். ஒளி பொருந்திய தாமரை
 மலரை விரும்பி அதன் மேல் அமர்ந்திருக்கும் அன்னத்தைத் தூதுவிடலாம் என்று நினைத்தால், முன்பு ஒருநாள் சிவபெருமானிடம் அடி முடியைக் காண பிரம்மன் அன்னப் பறவை வேடங்கொண்டு சென்று அவருடைய அடிமுடியைக் காணாமல் வந்தது போன்று என்தலைவரையும் காணாமல் வந்துவிடுமோ என்று தலைவி தன் மனத்திற்குள் எண்ணுகிறாள். இதை,

“அன்னந்தனை விடுப்பேன் அன்னந்தான் அங்கவரை
இன்னம்தான் கண்டு அறியாது என்பரே” (தமிழ்விடுதூது -107)
 
           தலைவனுக்குத்தூதுவிட அன்னத்தின் செயல்களைக் கூறி, அதனுடன் புராணக் கருத்துக்களையும் எடுத்துக் கூறுகின்றாள். இப்புராணச் செய்தி
அன்னம் விடு தூதில்,

மூளையால் நான்
முகன் நின்றனை நன்கறிந் தேறினான்” (அன்ன. 8-9)
           
       கூறப்படுகின்றது. அன்னம் பற்றிய புராணக் கருத்தும் அதன் பெருமைகளும் விளக்கப்பட்டுள்ளன. அன்னத்தின் இயல்பை நினைத்த எனக் தலைவி வண்டைத் தூதாக அனுப்ப நினைக்கிறாள். ஆனால், அது தலைவன் “காமம் செப்பாதே’ என்று கூறினால் உடனே திகைத்து ஒன்றுவிடும் என்கிறாள். “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பிகாமம் செப்பாது கண்டதுமொழியுமோ” (குறுந். 2) என்ற குறுந்தொகைப்பாடலில் வண்டின் இயல்பு கூறப்பட்டுள்ளதைக் தேனையுண்டு போதையில் தலைவனிடம் செல்லும் பொழுது, இயற்கையில் காமத்தைச் செப்பாதே என்று கூற, இவ்வண்டு தலைவியான என்னுடைய காமத்தைப் பற்றிக் கூறாதே என்று அவர் கூறியதாக எடுத்துக் கொண்டாலும் எடுத்துக் கொள்ளும் என்கிறாள்.

மானைத் தூதாக அனுப்புதல்
            மானைத் தூதாக அனுப்பத் தலைவி நினைத்தபோது, சிவபெருமான் அணிந்திருக்கும் புலித்தோல் ஆடையைப் பார்த்து பயந்து நின்றுவிடும் என்று நினைக்கின்றாள். இது,
“மானைப் போய்த் தூது சொல்லி வா என்பேன் வல்லியப்பூத்
தானைப் பரமர்பால் சாராதே” (தமிழ்விடுதூது-109)
என்ற வரிகள் மூலம் தலைவன்பால் காதல் கொண்ட தலைவியின் நிலை அறியப்படுகிறது.

குயிலைத்துதாக அனுப்புதல்
            தூதுவிடுவதற்கு சிறந்ததொரு வழி, எது என்று தீர்வு காணமுடியாமல் தலைவி வருந்தினாள். பின் குயிலைத் தேர்ந்தெடுத்துத் தூதுவிட நினைத்தாள். அனால் குயிலோ காக்கை இனத்தைச் சோந்தது என்றும், காக்கைக்கும், வலியானுக்கும் பகை என்றும் எண்ணுகிறாள். ஆனால் வலியான் சோமசுந்தரக் கடவுளை வழிப்பட்டு ‘வலியான்’ என்னும் பெயரையும், காக்கையை வெல்லும் வலிமையும் பெற்றுள்ளது. இதனால் தூது செல்லும் குயில் வலியானைக் கண்டதும் பயந்து என் தலைவனிடம் என்னுடைய குறையையும் என்நிலையையும் எடுத்துக்கூறாம வந்துவிடுமோ ! என்று தலைவி குயிலின் இயல்பை நினைந்து வருந்துகிறாள். இதை,

“கோகிலத்தை நான்விடுப்பேன்
கோகிலமும் காக்கை இனம்
ஆகிய வலியானுக்கு அஞ்சுமே” (தமிழ்விடுதூது-110)
       கண்ணியில் தலைவி, புராணக்கதையுடன் ஒப்பிட்டுக் என்று கூறுகின்றாள். தலைவி தலைவனிடம் தூதாக விடுவதற்கு நினைத்த அஃறிணைப் பொருள்களின் அனைத்து இயல்புகளையும் எடுத்துரைத்து அவைகளை ஒதுக்கிவிட்டுத் தன் மனத்தையே தூதாகவிட நினைக்கின்றாள். ஆனால் தலைவனான அவர் மனதிற்கு எட்டாதவர்.ஆகையால் மனமும் அவரிடம் நெருங்க முடியாது என்று தலைவி கூறுகின்றாள்.

  இவ்வாறு தலைவி ஒரு பொருளும் தன் மனநிலையை தலைவனிடம் உரைப்பதற்குத்தகுதியுடையதாகத் தோன்றியமையால் என்ன செய்வேன். என்ன செய்வேன் என்று தன் மனம் ஓங்கி நிற்கிறது என்று தன் மன வருத்தத்தைத் தமிழிடம் எடுத்துரைக்கின்றாள்.

“என்று என்று இரங்கினேன் என் கவலை எல்லாம் பொன்
குன்று அனையாய் உன்னுடன் கூறுகேன்” (தமிழ்விடுதூது – 112)
           
      என்ற கண்ணியில் தலைவி, தன் கவலைகளையெல்லாம் ‘மூவாத்தமிழ்’ எனவும்‘கன்னி’ எனவும் சிறப்பிக்கின்ற தமிழான உன்னிடம் கூறுகிறேன். மதுரையில் எழுந்தருளியிருக்கும் இறைவனிடம் எனக்காகச் சென்று ‘என்னுடைய காதலை அவர் ஏற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக ஒருமாலை வாங்கி வா என்று தலைவி தமிழிடம் தன் காதல் வேட்கையால் ஏற்பட்ட மனவருத்தத்தைக் எடுத்துக் கூறுகின்றாள்.

முடிவுரை
            மனிதர்களின் இயல்பான மனநிலையை தமிழ்விடு தூதில் அறிய முடிகின்றது. தலைவி ஒவ்வொரு பொருளையும் தான் ஏன் தூதாக அனுப்பவில்லை என்பதற்குரிய காரணத்தைக் கூறுகின்றாள். குயிலையும் அன்னத்தையும் கூறுகின்றபொழுது சிவபெருமானோடு தொடர்புபடுத்திப் புராணச் செய்திகளைக் கூறுகின்றபொழுது தலைவியின் உள்ளப்பாங்கு தெளிவாகத் தெரிகின்றது. தன்னுடைய ஆறாக் காதலைத் தலைவனிடம் சொல்லவேண்டுமே என்ற தவிப்பு தலைவியிடம் காணப்படுகிறது. இது தூதுவிடும் தலைவி ஒவ்வொருவர்க்கும் இருக்கக்கூடிய மனநிலையே, இன்றைய உலகிலும் தூதாகச் செல்லுபவரைப் புகழ்தல் என்பது இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் தமிழ்விடுதூதில் தலைவியின் மனநிலை உளவியல் ரீதியில் சிறப்பாக வெளிப்படுத்தப்படக் காணலாம்.

சான்றெண் விளக்கம்
1.சு.சாவித்திரி, வாழ்வியற்களஞ்சியம் தொகுதி – 5 ப. 444.

2.திருக்குறள் 1101

3.மேலது 459

4. பேராசிரியர் முனைவர் அ.மீனாட்சிசுந்தரம் கற்றல் மற்றும் மனித வளர்ச்சி உளவியல், காவியமாலா பப்ளிசர்ஸ், சின்னாலபட்டி, திண்டுக்கல் 624 302

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் கி.நாகேந்திரன்,
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை,

ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி),

சாத்தூர், விருதநகர் மாவட்டம் – 626203,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here