“கேட்காத காது சொல்லும் கதை”
மலையடிவார நகரத்தில் இருந்த அந்தச் சிறு நகைக்கடை, ஒரு நாளில் பெரிய அற்புதத்தைக் கண்டது. அந்த நகைக்கடையின் உரிமையாளர் கோபாலன், அவருக்கு உறுதுணையாக இருந்த வேலைக்காரன் இராமு.. இராமுவிற்கு சரியாககாது கேட்காது. ஆனால், அவன் செயல்களில் எப்போதும் ஒரு நேர்மை இருந்தது.
ஒரு நாள், கடை உரிமையாளர் கோபாலன் அவனை அழைத்தார். “இராமு, நமதுகடையில் வெகுகாலமாக இந்த ஒரு தங்க நகை மட்டும் விற்காமல் இருக்கிறது. அதனால், அந்த நகையின் விலையை பாதியாகக் குறைத்து, ஒரு தகடு எழுதி அதற்கு அருகே ஒட்டி வை” என்றார்.
இராமுவும் சிரித்துக் கொண்டே, தலை அசைத்து ஒப்புக்கொண்டான். ஆனால் அவனுக்கு உரிமையாளர் கோபால் கூறிய செய்தி அவனுக்கு சரியாகக் கேட்கவில்லை. “பாதி விலை”என்றதை அவன் “இரண்டு மடங்கு விலை” என்று தவறாகப் புரிந்து கொண்டான். அதே நேரத்தில், அவனுடைய மனசு அது சரி என்றுதான் சொல்லியது, “இந்த நகை விலைமதிப்பற்றது, பாரம்பரியம்மிக்கது இதன் மதிப்பு உயர்த்தினால் தான் யாராவது கவனிப்பார்கள் !” என தனக்குத் தானே சொல்லிக்கொண்டு செயல்பட்டான்.
பின்னர் இரண்டு மடங்கு விலையை எழுதி, ஒரு அழகிய அட்டையில் அந்த நகையுடன் சேர்த்து வைத்தான்.
மறுநாள், வாடிக்கையாளராக ஒரு பெரிய தொழிலதிபர் அந்த நகைக் கடைக்கு வருகை தந்தார். கடை முழுவதையும் பார்த்துவிட்டு, இறுதியாக அவரது கண்கள் ராமு எழுதி வைத்த அந்த தாங்க நகையின் மீது கவனம் சென்றது. இந்த நகை ஏன் இவ்வளவு விலையுயர்ந்தது?
இதில் என்ன சிறப்பு ?” என அந்த வாடிக்கையாளர் வினவினார்.
“இது சாதாரண தங்க நகைதாங்க எங்கள் முன்னோர்கள் செய்தது பாரம்பரியமானது ” என்று சொல்லி முடிப்பதற்குள், சரிசரி நான் புரிந்துக்கொண்டேன் “இதற்கு மற்றதைக் காட்டிலும் அப்போ தனித்தன்மை இருக்கு, ரொம்ப நல்லது, அப்போ இது எங்கள் வீட்டில் இருந்தா தான் இன்னும் சிறப்படையும் இதை என் மனைவிக்கு பெரிய பரிசாக நானே வாங்கிக் கொள்கின்றேன்!” இந்தாங்க அதற்கான முழுப்பணம் என விலை அட்டையில் சேர்க்கப்படிருந்த முழுத்தொகையினையும் எடுத்து நீட்டினார்.
அந்த நகை விற்ற மகிழ்ச்சியில், நகைக் கடையின் உரிமையாளரான கோபாலன் தனது ஊழியரான இராமுவை அழைத்தார்.
“இராமு, நான் சொன்னதை யெல்லாம் நீ மாறாக ஏன் செய்தாய்?
நான் பாதி விலை குறைக்க சொன்னேன்.
ஆனால், நீ எதற்கு இரண்டு மடங்கு அதிகம் எழுதினாய்?” என ராமூவிடம் வினவினார்.
இராமு தன் தலையை சொறிந்துகொண்டே மெல்ல திரும்பி பார்த்தான், முதலாளி என்னை மன்னிசுடுங்க ஒரு உண்மையை நான் உங்க கிட்ட சொல்லாம மறைத்துவிட்டேன்,
உங்களிடம் நான் ஒரு உண்மை சொல்ல வேண்டும். எனக்கு காது அவ்வளவாக சரிவர கேட்காது. நீங்க அன்னிக்கு சொன்ன வார்த்தை எனக்கு சரியா புரியல. ஆனால் நான் என்னுடைய மனசை கேட்டு, இந்த நகைக்கு அவ்வளவு மதிப்பு தர வேண்டும் என்று எண்ணினேன். அதையே முயற்சி செய்தேன்.”
கோபாலன் சற்று நேரம் உட்கார்ந்தார். அன்போடு இராமுவின்தோளைத் தொட்டு, மெல்லச் சிரித்தார்.
“இராமு, நீ செய்தது அற்புதம்! கேட்காத காதே இன்றைய என் மகிழ்ச்சிக்கும் லாபத்திற்கும் காரணம். சில நேரங்களில் நாம் தெரியாமல் செய்யும் காரியம் கூட நல்லதொரு முடிவாக முடியகூடும் என எண்ணி ராமுவை அன்போடு கட்டி அனைத்தான்.
“விலையால் அளவிடும் மனிதர்கள்,
விதியால் உயர்ந்தார் ஒருவன்.
சிறு தவறுகள் கூட,
சில நேரங்களில் பேருணர்ச்சி தரும்!”
சிறுகதையின் ஆசிரியர்
ச. வினிதா
இளநிலை இரண்டாம் ஆண்டு
கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்
வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திண்டல், ஈரோடு.