Thursday, June 18, 2026
Home இலக்கணம் இலக்கணம் கடிதம் எழுதுவது எப்படி?|இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்

கடிதம் எழுதுவது எப்படி?|இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்

கடிதம் எழுதுவது எப்படி
     கடிதம் இல்லா உலகம் வெறுமையானது. மனிதனுடைய உண்மையான மனநிலையை எடுத்துக்காட்டுவது கடிதம் ஆகும். நேரிலே சொல்ல முடியாதவற்றை எல்லாம் எழுத்தின் மூலமாகக் காகிதத்தின் வழியாக கடிதங்கள் மூலம் தெரிவிக்கலாம். ஒவ்வொருவரும் கடிதம் எழுவது பற்றி அறிந்து வைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு இடத்திலும் கடிதம் மூலம் நாம் கேட்கும் ஒவ்வொரு கருத்துக்களுக்குமே மதிப்பு உண்டு.

      ஆரம்ப காலத்தில் ஓலைச்சுவடி, துணிகளில் மையிட்டு எழுதி ஒற்றர்கள் (குதிரைகள்) மூலமாகவோ அல்லது புறாக்களில் கால்களில் கட்டியோ கடிதங்கள் அனுப்பட்டன. பின்னாளில் அதற்குத் தனியாக அஞ்சல் அலுவலகங்கள் தொடங்கப்பட்டன.  எந்தவொரு கிராமத்திற்கும் கடிதம் கொண்டு சென்று கொடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.

       இலக்கியங்களில் கடிதங்களை நிறைய பார்க்க முடியும். அக்காலங்களில் மனிதர்களையே தூது என்ற வாக்கில் சொல்லி அனுப்பப்பட்டார்கள்.  ஆனால் இவ்வகையான முறைகளில் நாம் சொல்லும் அனைத்தும் சரியாகப் போய்ச்சேருமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் நாம் அனுப்பும் ஆள் கூட்டியோ குறைத்தோ சொல்ல முடியும்.  ஆதலால் கடிதம் மூலம் எழுதி அனுப்பும் முறைதான் சரியாக இருக்கும்.
     
கம்பராமாயணம், சீவகசிந்தாமணி, தூது இலக்கியங்கள், தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், ஞாபக கடிதங்கள் எனக் காணமுடியும்.
கடித வகைகளை மூன்று வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். அவை,

1.அலுவலகம் சார்ந்த கடிதங்கள்

2.உறவுநிலை சார்ந்த கடிதங்கள்

3.அழைப்பிதழ் சார்ந்த கடிதங்கள்
           
        மேற்கண்ட மூன்று வகையான கடிதங்களில் பிரிவுகளாகக் கீழ்க்கண்ட கடிதங்களை வரையறுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

1.அலுவலகம் சார்ந்த கடிதங்கள்
1.விண்ணப்பக்கடிதங்கள்

2.அலுவலகக் கடிதங்கள்

3.புகார்க்கடிதங்கள்

4.வணிகக்கடிதங்கள்

2.உறவுநிலை சார்ந்த கடிதங்கள்
1.பாராட்டுக் கடிதங்கள் (வாழ்த்துக் கடிதங்கள்)

2.சுற்றுலாக் கடிதங்கள்
3.உறவுக்கடிதங்கள்
3.அழைப்பிதழ் சார்ந்த கடிதங்கள்
 
1.பொது நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழ் கடிதங்கள்

2.உறவு நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழ் கடிதங்கள்

எனப் பிரித்துக்கொள்ளலாம். மேற்கண்ட ஒவ்வொன்றின் தன்மையைத் தனித்தனியாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »