இலக்கியத்தில் புதைந்துண்ட அறிவியல் தகவல்கள்|கி.பானுராதா

இலக்கியத்தில் புதைந்துண்ட அறிவியல் தகவல்கள் - கி.பானுராதா
முன்னுரை
      இனியது இனியது தமிழ்மொழி உயிரினும் இனியது, உன்னதமானது, பண்பை வளர்ப்பது,பண்பாட்டை காப்பது. தொண்மைசான்ற இவ்வின்பத் தமிழ்மொழிமுன்னைப்பழைமைக்கும் பழமையாய்,பின்னைப்புதுமைக்கும் புதுமையாய் புத்துணர்வுடன் திகழ்வது. பண்டைத் தமிழ் மக்களின் கலாச்சார பழக்கவழக்க பண்பாட்டுப்பாரம்பரியத்தை எடுத்தியம்புவன நம் இன்தமிழ் இலக்கியங்களே! இயற்கையோடு இயைந்து இன்பமயமான வாழ்வுதனை வாழ்ந்தோர் நம்தம் பழங்குடி தமிழ்மக்களே ஆவர் என்று அழகுற நயம்பட எடுத்தியம்புவன, தமிழ் இலக்கியச் செல்வங்களேயாம். ஆழ்ந்த அறிவின் அடிப்படையில் அமைந்தவை அறிவியல் அறிவியல் என்பது மனித வாழ்வை மகத்துவமடையச் செய்வது, அறிவியல் என்பது அறிவிற்கும் அப்பாற்பட்ட தன்மையது. அத்தகு அறிவியல் சார்ந்த அறிவு நம் பண்டைக்கால மக்களின் பகுத்தறிவுடன் பின்னிப்பிணைந்து பிரதிபலிக்கிறது என்பதனை அவர்தம் படைப்புகள் புலப்படுத்தும். நம் இலக்கியப்பாடல்களை நுண்ணிதின் ஆராயப்படின் புலமை சான்ற புலவர்களின் அறிவியல் அறிவை நாமும் அறியலாம்.

இலக்கியத்தில் அறிவியல் தகவல்கள்
            ‘இலக்கியப்பாடல்’ என்பது இன்றைய மக்களின் சிந்தனைக் கருவூலம், அன்றைய மக்களின் அறிவுப் பெட்டகம் அத்தகைய அறிவுப்பெட்டகத்தை ஆழ்ந்து அகன்று ஆராய்ச்சி நோக்கில் நுணுகி ஆராயுமிடத்து எத்தனை, எத்தனையோ அறிவியல் தகவல்கள் ஆழப்புதைந்துண்டு கிடப்பதனை நாமும் அறியலாம். அறிவியல் சார்ந்த அறிவென்பது அன்றைய பழந்தமிழ் மக்களாகிய நம் முன்னோர்களுக்குள்ளேயும் இருந்துள்ளன.

இலக்கியத்தில் புரையோடிக்கிடக்கும் அறிவியல் சார்ந்த அறிவுச்செல்வங்கள்
       அறிவியல் என்பது வாழ்க்கையை வளப்படுத்துவது, தொலைவில் உள்ளதனை கொண்டுவரவைப்பது, ஆழ்ந்த அகன்ற அறிவின் பனுவலில் அறிவியல்சார்ந்த அறிவாகபுலபடுவது,மருத்துவம் தொடர்பான அருகாமைக்குக் அடிப்படையில் எழுதுவது அறிவியல். இலக்கியப் வீண் சார்ந்த அறிவு கனிமம் தொடர்பான அறிவு எந்திரம் தொடர்பான அறிவு நீர் தொடர்பான அறிவு அணு தொடர்பான அறிவு மண் சார்ந்த அறிவு அறிவு இதேபோன்று பல தரப்பட்ட அறிவியல் சார்ந்த அறிவு தொடர்பான கருத்துக்கள் நம்தம் புலமை சான்ற புலவர்களின் கைவண்ணத்தில் எழுந்த தமிழ் இலக்கியத்தில் புதைந்துண்டு கிடக்கின்றன.

மருத்துவம் தொடர்பான அறிவு
            வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ என்பான் அத்தகு பாரதிதாசன். புகழாரத்திற்கு உரித்தான பாவேந்தர் 1330 அருங்குறளை 133 அதிகாரத்துள் வள்ளுவப்பெருமகனார் அமைந்துள்ளான். இந்த 133 அதிகாரத்துள் ‘மருந்து’ எனும் தலைப்பில் ஓர் அதிகாரத்தை அழகுற நயம்பட நவின்றுள்ளான்வள்ளுவப் பெருமான். இதில் நோய்மிகக்காரணம் என்ன என்பதனைப் பாங்குற படைத்துள்ளான் வான்புகழ் கொண்ட வள்ளுவன. இயற்கை ஈனும் காய்கறிகள் நமது உடலில்தோன்றும் நோய்களைச் சமப்படுத்தும் என்பதனை,

‘மருந்தாகித் தப்பா மரத்தற்றால்’

     என்ற குறளின் வரி, நமக்கு மருத்துவத்தின் தொன்மைதனை நன்கு புலப்படுத்தும்.மருந்தில்லா மருத்துவத்தை நமக்கு அளித்துச்சென்றுள்ளனர் நம் பதினெட்டுச் சித்தர்கள். அச்சித்தர்கள் அவர்தம் நூற்களில் உடல்பிணியைப்பற்றியதகவல்களை ஏராளமாகஅளித்துச்சென்றுள்ளனர். பக்க விளைவுகள் அற்றது நம் சித்த மருத்துவமே ஆகும். இத்தகு இயற்கை சார்ந்த மருத்துவமுறையினை அன்றே கண்டறிந்துள்ளனர் நம் பழந்தமிழ் மக்கள். இத்தகைய மருத்துவத்தைக் குறிப்பிட வரும் தெய்வபுலவனவாம் வள்ளுவர்,

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றுது போற்றி உணின்” (குறள்-942)

      என்ற குறள் வழி அழகுற எடுத்தியம்பியுள்ளான். இதேபோன்று கூடுவிட்டு கூடு பாயும் தன்மையுடைய மூலன் எனப்படும் திருமூலர், முக்கியதுவத்தை பற்றி உடலைப்பாதுகாக்க வேண்டியதன் புலப்படுத்ததியுள்ளார். தமது படைப்பில் இது போன்று மருத்துவம் தொடர்பான பலதகவல்கள் இலக்கியப்பனுவல்களில் காணக்கிடக்கிறது.

நீர் தொடர்பான அறிவு
           
    நீரின் சுழற்சி குறித்து வள்ளுவப்பெருமகனார் அழகுற வான்சிறப்பு எனும் அதிகாரத்துள் எடுத்தியம்பியுள்ளார். தனது இரண்டடிகுறட்பாவில் நீரின் சுழற்சி இயக்கமே உலகத்தை வளப்படுத்தும் தன்மையது, அத்தகு நீரின் சுழற்சி இல்லை எனில் மழை வளம் குன்றும், ஒழுக்கநிலை மாறும், வெப்பநிலை மிகுந்து காணப்படும், புவியில் தட்பவெப்ப நிலையே மாறி அமையும். இந்நீர் சுழற்ச்சியே உயிரிகள் வாழ்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்நிலை மாறின் கடலில் உள்ள நீர்கூட வற்றும் நிலைக்கு உள்ளாகும் என்பதனை,

“நெடுங்கடலும் தண்ணீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்”

     என்ற இக்குறள் வழி நயம்பட நவின்றுள்ளார் திருவள்ளுவர். மேலும் இம்மழைநீரை அமிழ்தம் என்றும் வர்ணனை செய்துள்ளார். இது வள்ளுவரின் அறிவியல் அறிவன்றோ!

அணு தொடர்பான அறிவு

      சங்க புலவரான ஒளவையாரும், கவிச்சக்கரவர்த்தி எனப் புகழப்படும் கம்பனும் அணுசேர்ப்பும், பிரிப்பும் பற்றி அன்றே தனது பாடலில் படைத்துள்ளனர் என்பதனை,

“ஓர் அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி”
      எனவரும் பாடல்வரியில் ஒளவைப்பெருமாட்டி அணு சோப்பு குறித்தும்,

“ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்”
           
       என்ற வரியில் கம்பர் அணுப்பிரிப்பு பற்றியும் அக்காலத்தே எடுத்தியம்பியுள்ளதை இவ்வரி நமக்கு நன்கு புலப்படுத்துகின்றன.

மண் தொடர்பான அறிவு
           
        நிலத்தின் தன்மைக்கு ஏற்றார்போல நிலத்தை ஐவகை நிலமாக பாகுபடுத்தியுள்ளனர் நம் தமிழர். மேலும் நிறத்தின் அடிப்படையில் செம்மண் நிலமாகவும், தன்மையின் அடிப்படையில் களர் நிலமாகவும், சுவையின் அடிப்படையில் உவர் நிலமாகவும் பாகுபடுத்தியுள்ளனர். இது அவர்களின் மண்ணியல் தொடர்பான அறிவுக்கு சான்றாக அமைகிறது.

கனிமம் தொடர்பான அறிவு
           
பலதரப்பட்ட மணிகள் குறித்து சிலப்பதிகாரத்தில் உள்ள ஊர்காண் காதையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஐவகை மணிகளும் ஒளிரும் தன்மையில் வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளன என்பதனை,

“ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்கு கதிர் விடுஉம் நலங்கெழு மணிகளும்”
          எனும் இவ்வரிகள் மூலம் அறியலாம்.

எந்திரம் தொடர்பான அறிவு
            இன்றைய மக்களின் வாழ்வில் பெரும்பங்குவகிப்பது பொறியியல், பலதரப்பட்ட எந்திரமும் பொறியியல் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. இத்தகு எந்திரம் தொடர்பான அறிவு அன்றைய மக்களிடம் இருந்ததை பதிற்றுப்பத்துப்பாடலில்

‘தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த’

           எனும் பாடலில் அன்றே எந்திரம் தொடர்பான அறிவியல் அறிவு இருந்ததனை அறியலாம்.
 
வானியல் தொடர்பான அறிவு           
     திருவாசகத்தில் வானியல் தொடர்பான அறிவு பேசப்படுகிறது. உலகம் சுற்றும் தன்மையது, தொங்கிக்கொண்டு இருப்பது என்பதையும், வானுலகத்தில் காற்றில்லா பகுதி உண்டு என்பதையும் பண்டைகாலப் புலவர்கள் தங்கள் பாடல்களில் அருமையாகப் புலப்படுத்தியுள்ளனர்.

முடிவுரை


       நம்  பண்டைத்தமிழர்கள் பரந்துபட்ட அறிவியல் பார்வையுடையவர்கள். மண் சார்ந்த, விண் சார்ந்த, மருத்துவம் சார்ந்த, நீரியல் சார்ந்த, உயிரியல் சார்ந்த, எந்திரவியல் தொடர்பான அறிவுடையவர்கள் என்பதை நம் பழம்பாடல்கள் உணர்த்தும் வகையில் இடம்பெற்றுள்ளது. அறிவியல் சார்ந்த அறிஞர்கள் அறிவியல் அடிப்படையில் இலக்கியப் பெட்டகத்தை ஆராயப்படின் பலதரப்பட்ட மறைந்துகிடக்கும் பல அறிவியல் தகவல்களை அறிய இயலும். இதன் வாயிலாக அன்றைய மக்களின் ஆழ்ந்து அகன்ற அறிவியல் அறிவை நம்மால் பெறமுடியும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
கி.பானுராதா
தமிழ் ஆர்வலர்,
திண்டுக்கல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here