இலக்கியத்தில் கூற்றுகள் ?

இலக்கியத்தில் கூற்றுகள்
1.ஆசையே துன்பத்திற்குக் காரணம்   – புத்தர்

2.கற்றுணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சிவாயவே –  திருநாவுக்கரசர்

3.என் கடன் பணி செய்து கிடப்பதே  – திருநாவுக்கரசர்

4.நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
 ஏமாப்போம் பிணியறிவோம் பணிவோம்
அல்லோம் –  திருநாவுக்கரசர்

5. குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்  – திருநாவுக்கரசர்

6. அடியவர்க்கும், அடியவர்க்கும், அடியவர்க்கும் அடியேன் யான்  – நம்மாழ்வார்

7. வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன் : மெய் கூறுவல்  – மருதனில் நாகனார்

8. செல்வத்துப்பயனே ஈதல் – நக்கீரர்

9. ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
  ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று 
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று  – கழைதின் யானையார் (புறநானூறு)

10.கோல்நோக்கி வாழும் குடிபோல் இருந்தேன்- குலசேகர ஆழ்வார்

11.செல்வத்துப் பயனே ஈதல்  – நக்கீரர்

12.நூல் பல கல்  – ஒளவையார்

13.இளமையில் கல்  – ஒளவையார்

14.நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு  – ஒளவையார்

15.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்  – ஒளவையார்

16.அணுவைத் துளைத்தேழ் கடலையும் குறுகத் தறித்தக் குறள்  – ஒளவையார்

17.திரைகடல் ஓடியும் திரவியம் தேடு  – ஒளவையார்

18.மீதூண் விரும்பேல்  – ஒளவையார்

19.இயல்வது கரவேல்  – ஒளவையார்

20.நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ  
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே  – 
ஒளவையார்

21.ஈவது விலக்கேல்  – – ஒளவையார்

22.எறும்பும் தன் கையால் எண்சாண்   – – ஒளவையார்

23.கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு  – – ஒளவையார்

24.காயுடை நெல்லொடு கரும்பு அமைத்துக்
கட்டி அரிசி அவள் அமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்  – ஆண்டாள்

25.உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்  – திருவள்ளுவர்

26.இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்  – திருவள்ளுவர்

27.அன்பின் வழியது உயிர்நிலை  – திருவள்ளுவர்

28.அறிவற்றங் காக்கும் கருவி  – திருவள்ளுவர்

29.எண்ணித் துணிக கருமம்  – திருவள்ளுவர்

30.நீரின்றி அமையாது உலகு  – திருவள்ளுவர்

31.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்  – திருவள்ளுவர்

32.நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்  – திருமூலர்
33.உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்  – திருமூலர்

34.உடம்பார் அழியின் உயிரார் அழிவர்  – திருமூலர்

35.ஒன்றே குலம் ஒருவனே தேவன்  – திருமூலர்

36.உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்  – திருமூலர்

37.என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு   – திருமூலர்

38.வைதோரைக் கூட வையாதே – இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே – கடுவெளிச்சித்தர்

39.முப்பால் அறிந்த முதற்பா விலர் ஒப்பார் எப்பா பலரினும் இல் – நல்லந்துவனார்

40. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே – அதிவீரராம பாண்டியன்

41. திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்

42.உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோனா றரசும் செல்லும் என்று பாடியவர் – பாண்டியன் நெடுஞ்செழியன்

43.பரணிக்கோர் ஜெயங்கொண்டான் – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

44.தென்றமிழ் தெய்வப் பரணி – ஒட்டக்கூத்தர்

45. தீதும் நன்றும் பிறர் தர வாரா – கணியன் பூங்குன்றனார்

46. பொன்னுந் துகிரும் முத்தும் மன்னிய
மாமலைப் பயந்த காமருமணியும் – கண்ணகனார் (புறநானூறு)

47. பசித்திரு, தனித்திரு, விழித்திரு – இராமலிங்க அடிகள் (வள்ளலார்)

48.அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை  – வள்ளலார்

49.வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்  – வள்ளலார்

50.கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போக வேண்டும் – வள்ளலார்

51.ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர்ஆகி
உலகியல் நடத்தல் வேண்டும்  – வள்ளலார்

52.உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்  – வள்ளலார்

53. சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்
இவையெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு வள்ளலார்

54.எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர் போல் எண்ணி உள்ளே  – வள்ளலார்

55.கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான்  – வள்ளலார்

56.பெண்ணினுள் ஆணும், ஆணினுள் பெண்ணும் எண்ணுற வகுத்த
அருட்பெருஞ்சோதி  – வள்ளலார்

57.கலையுணர்ந்த கற்பனையே நிலையெனக்
வழக்கமெல்லாம் மண்மூடிப் போக  – வள்ளலார்

58.உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்  – வள்ளலார்

59.எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
வேறொன் றறியேன் பராபரமே  –
தாயுமானவர்

60.அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே  – தாயுமானவர்

61.ஓர் அணுவினைச் சதக்கூறிட்ட கோணினும் உளன்  – கம்பர்

62.உடம்பிடைத் தோன்றிற் றொன்றை அறிந்ததுன்
உதிரமூற்றி
அடல்உறச் சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்  – கம்பர்

63.கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் – ராமகிருஷ்ண பரமஹம்சர்

64.திருந்திய பண்பும் சீர்த்த நாகரீகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்
செம்மொழியாம்  – பரிதிமாற்
கலைஞர்

65.வாலெங்கே நீண்டு எழுந்த வல்லுகி ரெங்கே ? நாலு
காலெங்கே? ஊன் வடிந்த கண்ணெங்கே?  -கவிகாளமேகப்புலவர்

66.நமக்கு தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்  – பாரதியார்

67.காக்கை குருவி எங்கள் ஜாதி  – பாரதியார்

68.காக்கைச் சிறகினிலே நந்தலாலா  – பாரதியார்

69.சாதிகள் இல்லையடி பாப்பா  – பாரதியார்

70.பெண் விடுதலை வேண்டும்  – பாரதியார்

71.என்று தணியும் இந்த சுதந்திர தாகம்  – பாரதியார்

72.எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பாரதியார்

73.அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே  – பாரதியார்

74.ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா  – பாரதியார்

75.ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்  – பாரதியார்
76.ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் – பாரதியார்

77.பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும்
நனிசிறந்தனவே-  பாரதியார்

78.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு  – பாரதியார்

79.நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்  – பாரதியார்

80.தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம் – பாரதியார்

81.செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்- பாரதியார்
82.உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்  – பாரதியார்
83.பாரத நாடு பழம் பெரும் நாடு நீர்
அதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்  – பாரதியார்

84.யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்கும் காணோம்  – பாரதியார்

85.சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்  – பாரதியார்

86.காவிரி தென்பெண்ணை பாலாறு
கண்டதோர் வையை பொருநை நதி  – பாரதியார்

87.கல்வி சிறந்த தமிழ்நாடு
புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு  – பாரதியார்

88.நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர்
மணி ஆரம் படைத்த தமிழ்நாடு  – பாரதியார்

89.யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவன்போல் இளங்கோவனைப்போல்
பூமிதனில்
யாங்கணுமே பிறந்ததில்லை  – பாரதியார்

90.வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு  – பாரதியார்

91.தனியொருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் – பாரதியார்

92.கம்ப நாடன் கவிதையிற் போல்
கற்றோர்க்கு இதயம் களியாதே – பாரதியார்

93.ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர்
வந்து புகலென்ன நீதி – பாரதியார்

94.பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு
நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்  – பாரதியார்

95.காசிநகர்ப் புலவன் பாடும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்  – பாரதியார்

96.வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்  – பாரதியார்

97.ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று  – பாரதியார்

98.வாழிய செந்தமிழ்! வாழிய நற்றமிழர்!  – பாரதியார்

99.செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்துபாயுது காதினிலே  – பாரதியார்

100.பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்  – பாரதியார்

101.இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்  – பாரதியார்

102.பாலைப் பொழிந்து தரும் பாப்பா- அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!  – பாரதியார்

103.வயலில் உழுது வரும் மாடு – அதனை
ஆதரிக்க வேணுமடி பாப்பா! – பாரதியார்

104.வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் –
பாரதியார்

105.முப்பது கோடி முகமுடையாள்
நிகரென்று கொட்டு முரசே இந்த
நீணிலம் வாழ்ப வரெல்லாம்
தகரென்று கொட்டு முரசே
பொய்ம்மைச் சாதிவகுப்பினை எல்லாம் – பாரதியார்

106.மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்  – பாரதியார்

107.வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டு – பாரதியார்

108.இதந்தரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும்
சுதந்திர தேவி, நின்னை தொழுதிடல் மறக்கி லேனே – பாரதியார்

109.இன்பக் கதைகளெல்லாம் – உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ
அன்பு தருவதிலே உனை நேர் ஆகுமோர் தெய்வமுண்டோ- பாரதியார்

110.தேடிச்சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – பாரதியார்

111.அறம் பெருகும் தமிழ் படித்தால்,
அகத்தில் ஒளி பெருகும் திறம் பெருகும் உரம்
பெருகும் தீமைக் கெதிர் நிற்கும் – பெருஞ்சித்திரனார்

112.கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித் தானா? –
இராமச்சந்திரக் கவிராயர்

113.தமிழுக்கும் அமுதென்று பேர்  – பாரதிதாசன்

114.புதியதோர் உலகம் செய்வோம் – பாரதிதாசன்

115.எங்கெங்கு காணினும் சக்தியடா  – பாரதிதாசன்

116.வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையமே- பாரதிதாசன்

117.கொலை வாளினை எடுடா
வெகு கொடியோர் செயல் அறவே – பாரதிதாசன்

118.இருட்டறையில் உள்ளதடா உலகம்
சாதி இருக்கிறது என்பவனும் இருக்கின்றானே – பாரதிதாசன்

119.கல்வி இல்லாத பெண் களர் நிலம் போன்றவள்  – பாரதிதாசன்

120.எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே – பாரதிதாசன்

121.திங்களோடும் செழும்பரிதி தன்னோடும்  
விண்ணோடும் உடுக்களோடும் மங்குன்கடல்  
இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் – பாரதிதாசன்

122.வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே  – பாரதிதாசன்

123. அகர முதலி ஒன்றை நாளும் படித்து வருவாய்
நிகரிலாத சொற்கள் நினைவில் நன்கு பெறுவாய் – பாரதிதாசன்

124.மழையே மழையே வா வா – நல்ல
வானில் புனலே வா வா – இவ்
வையத் தமுதே வா வா – பாரதிதாசன்

125.தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள்
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே – பாரதிதாசன்

126.’காடு கமழ வந்த கற்பூரச் சொற்கோ’ என்று பாரதியாரைப் பாடியவர் – பாரதிதாசன்

127.தொண்டு செய்து பழுத்தபழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும் – பெரியார் பற்றி பாரதிதாசன்

128.செத்தும் கொடுத்த சீதக்காதி – படிக்காசுப் புலவர்

129.உள்ளத்துள்ளது கவிதை
இன்பம் உருவெடுப்பது கவிதை – கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை

130.வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசுதென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு – – கவிமணி

131.மங்கைய ராகப் பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திட வேண்டு மம்மா – கவிமணி

132.தோட்டத்தில் மேயுது”வெள்ளைப்பசு
அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி – கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை

133.தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம் – கவிமணி

134.சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும்
சாலைகளிலே தமிழ் எழுந்து முழங்க வேண்டும் – கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை

135.கல்லைப் பிசைந்து கனியாக்கும்
செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ – கவிமணி

136.காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிப்போவானே –  கவிமணி

137.நாடக சாலையொத்த நற்கலாசாலை ஒன்று
நீடுலகில் உண்டோ நிகழ்த்து – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

138.தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை

139.தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா – நாமக்கல் கவிஞர்

140.கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது  – நாமக்கல் கவிஞர்

141.கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக் கொள் – நாமக்கல் கவிஞர்

142.அமிழ்தம் அவளுடைய மொழியாகும் அன்பே அவளுடைய வழியாகும்
மானம் பெரிதென உயிர் விடுவார்  – நாமக்கல் கவிஞர்

143.தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு – நாமக்கல் கவிஞர்

144.பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும்
 பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும் – நாமக்கல் கவிஞர்

145.சூதினும் சூதானது யாதெனின் சூதினும் சூதே சூதா னது – பம்மல் சம்மந்தனார்
146.எதையும் தாங்கும் இதயம் வேண்டும் – அறிஞர் அண்ணா

147.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு  – அறிஞர் அண்ணா

148.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு  – அறிஞர் அண்ணா

149.உச்சிமலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது
ஒற்றுமையில்லா மனித குலம் உயர்வு தாழ்வு வளக்குது –
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார்

150.செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத்
திறமைதான் நமது செல்வம் – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார்

151.வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள் முதல் உயிர் மொழி – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

152.செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன் வண்ணச்
சந்தத்திலே கவிதைச் சரம் தொடுப்பேன் – கண்ணதாசன்

153.எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும் – கண்ணதாசன்

154.நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை – கண்ணதாசன்

155.போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்
தொடர்ந்து சொல்வேன் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எவர்வரினும் நில்லேன் அஞ்சேன் – கண்ணதாசன்

156.ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால்
அன்னைமொழி பேசுதற்கு நாணுகின்ற
தீங்குடை மனப்போக்கர் வாழும் நாட்டில்
தென்படுமோ மொழியுணர்ச்சி!  – முடியரசன்

157.நான் தனியாக வாழவில்லை. தமிழோடு வாழ்கிறேன் – திரு.வி.கலியாணசுந்தரனார்

158.பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு.
வயல் வரப்பு வழுக்கி இறந்தவனும் உண்டு – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

159.ஏர்முனைக்கு நிகரிங்கே எதுவுமில்லை – மருதகாசி

160.வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே! வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன  செய்வாய்? – அப்துல் ரகுமான் (பால் வீதி கவிதைத் தொகுப்பு)

மேலும் இலக்கணம் மற்றும் மொழிபெயர்ச்சிகளைக் காண்க..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here