Thursday, June 18, 2026
Home கவிதைகள் இயற்கையைப் பாதுகாப்போம்! | முனைவர் சீனு. தண்டபாணி

இயற்கையைப் பாதுகாப்போம்! | முனைவர் சீனு. தண்டபாணி

இயற்கையைப் பாதுகாப்போம்! முனைவர் சீனு. தண்டபாணி

🌳 பன்னெடுங் காலமாய்


தழைத்திட்ட இயற்கை,


 

🌳பண்ணிய பாவமென்ன?


பாரை விட்டுப் போவதென்ன?

 

🌳இறுமார்ந்த இயற்கை


உருமாறத் தொடங்கியதேன்?


 

🌳வருமானம் வரவேண்டி,


அவமானம் கருதாமல்,


 

🌳வளமையைக் குழிதோண்டிப்


புதைப்பது தகுமோ?


 

🌳செருக்கின்றிச் செழித்திட்ட


விளைநிலங்கள் எல்லாமே,


 

🌳அறுப்பின்றிப் போனதற்குப்


பொறுப்பேற்பார் எவருண்டு?


 

🌳அடர்ந்திட்ட வனமெலாம்


தொடர்ந்திட்ட இரணத்தாலே,


 

🌳படர்ந்திட்டக் கொடியறுத்துப்


பாரைவிட்டுப் போனதெங்கே?

 

🌳நாற்புறமும் பசுமையொடு


நடனமிட்ட இயற்கை,


 

🌳நான்குவழிச் சாலைக்குள்

முடங்கியது எவர்குற்றம் ?


 

🌳விசுவாசத் துரோகிகளின்


விஷப்பேச்சின் வீரியத்தால்,


 

🌳செயற்கை சிரிக்கிறது;


இயற்கை சிதைகிறது!


 

🌳நிலையில்லா வாழ்வை


நிலையென்று நினைத்து,


 

🌳விலையில்லா உயிரை


இழப்பதுதான் விதியோ ?


 

🌳எதிர்காலத் தலைமுறை


சுவாசிக்க வேண்டுமெனில்,


 

🌳இருக்கும் இயற்கையை


நேசித்துக் காத்திடுவோம்!


 

கவிதையின் ஆசிரியர்,

முனைவர் சீனு. தண்டபாணி,


தமிழ்த்துறைப் பேராசிரியர்,


சாரதா கங்காதரன்  கல்லூரி, 

புதுச்சேரி
.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »