Friday, July 17, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home இலக்கணம் இலக்கணம் அழைப்பிதழ் சார்ந்த கடிதங்கள் | இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்

அழைப்பிதழ் சார்ந்த கடிதங்கள் | இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்

அழைப்பிதழ் சார்ந்த கடிதங்கள்
     அழைப்பிதழ் கடிதம் மிக முக்கியமான ஒன்றாகும். படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருமே இவ்வகையான கடிதத்தினைப் பயன்படுத்துவார்கள். வீட்டிற்கு வந்தவர்களை அழைத்து மகிழ்வது தமிழர்களின் பண்பாடு. நம் வீட்டிலே விஷேசம் என்றால் அவர்கள் வீடு தேடிச்சென்று அழைத்து மகிழ்வார்கள். அழைப்பிதழ் கொடுத்து அழைக்கும் முறையிலேயே உறவுநிலை எப்படி இருக்கின்றது என்பது தெரிந்து விடும்.

அழைப்பிதழ் கடிதங்களைப் பொறுத்தவரை இரண்டு வகைகளாகப் பாகுப்படுத்தலாம்.
1.பொது நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழ் கடிதங்கள்

2.உறவு நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழ் கடிதங்கள்

1.பொது நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழ் கடிதங்கள்
           
       இவ்வகையான கடிதங்கள் பொது நிகழ்ச்சிகள் நடக்கும்போது வந்திருந்தவர்களை வரவேற்கும் பொருட்டும் அவர்கள் பெறும் சிறப்பகள் குறித்தும்  அமையும். அவைகள் கீழ்க்கண்டவாறு அமையலாம்.

1.கல்லூரி விழா ஒன்றிற்கு அழைப்பிதழ் கடிதம் வரைக.

2.தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கடிதம் ஒன்றை  தயார் செய்க.

3.நாட்டு நலப்பணித்திட்ட முகாமிற்கான அழைப்பிதழ் கடிதம் வரைக.

4.இலவச உதவித்தொகை வழங்கும் விழாவை வைத்து அழைப்பிதழ் கடிதம் வரைக.

5.புதிய நூலகம் திறப்புக்கான அழைப்பிதழ் கடிதம் வரைக.

6.புத்தக வெளியீட்டு விழாவினை முன்வைத்து அழைப்பிதழ் கடிதம் தயார் செய்க.

7. பணி நிறைவு விழாவிற்கான அழைப்பிதழ் கடிதம் எழுதுக.

2. உறவு நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழ் கடிதங்கள்
           
         இவ்வகையான கடிதங்கள் குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் மங்கள நிகழ்ச்சிகள் மற்றுமுள்ள இதர நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படும். அவைகள் கீழ்க்கண்டவாறு அமையலாம்.

1.திருமணப் பத்திரிக்கை ஒன்றை அமைக்க.

2.காது குத்தும் விழாவிற்கு அழைப்பிதழ் பத்திரிக்கை அமைக்க.

3.புதுமனை புகுவிழாவிற்கு அழைப்பிதழ் பத்திரிக்கை அமைக்க.

4. இறந்தவர்க்கு கிரியைப் பத்திரிக்கை அமைக்க.

5.கோவில் கும்பாபிஷேகம் பத்திரிக்கை அமைத்துத் தருக.

6. மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பத்திரிக்கை அமைத்துத் தருக.

        இவ்வாறான இரண்டு வகையான கடிதங்களும் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகிறன. இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். இரண்டிலும் ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு உதாரணமாகப் பார்ப்போம்.

புதிய நூலகம் திறப்புக்கான அழைப்பிதழ் கடிதம் வரைக.
நிகழ்ச்சி நிரல்

தழிழ்த்தாய் வாழ்த்து

குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு

வரவேற்புரை                             :  திரு.நடராஜன் அவர்கள்

                                                            நூலகர்.

முன்னிலை                                 :  பெயர்
தலைமையுரை                        :   திருமதி.கல்பனா அவர்கள்
    
                                                              பஞ்சாயத்துத் தலைவர்,

நூலகம் திறந்து வைத்து

சிறப்புரை                                  :    திரு அரங்கநாதன்  அவர்கள்
                                                           
                                                              மாவட்ட ஆட்சித்தலைவர்.

வாழ்த்துரை                             :           பெயர்

வாழ்த்துரை                             :           பெயர்

நன்றியுரை                               :           பெயர்

நாட்டுப்பண்

கவனிக்கத்தக்கவை

1. முதலில் தமிழ்த்தாயை வணங்கி ஆரமிப்பது நன்று.

2. குத்துவிளக்கேற்றி மங்களகரமாகத் தொடங்குதல் நல்வரவைத் தரும்.

3.வரவேற்புரை 
இந்த நிகழ்ச்சியினை (நூலகம் அமைய)  யார் முன்னின்று வேலை செய்தார்களோ அவர்கள் வரவேற்புரை சொல்ல வேண்டும். மேலும் இவ்விழாவிற்குத் தகுதியானவர்கள் அழைத்தால் அனைவரும் வருவார்கள்.

4.முன்னிலை

இந்நூலகம் அமைய காரணகர்த்தாவாக இருக்கின்றவர் முன்னிலையாக இருக்கலாம். மேலும் இவர்கள் பெரும்பாலும் வயதானவராக இருப்பர்.

5. தலைமையுரை
           
இந்த விழாவினைத் தலைமையேற்று நடத்தக்கூடியவரும் மற்றவர்களுக்கு முன்மொழிபவராகவும் இருப்பார். இவர்களும் பெரும்பாலும் வயதானவராக இருபார்கள்.

6. சிறப்புரை
           
இவ்விழாவினைப் பெரியதாகவும், சிறப்பாக நடத்தவும், விழாவானது நல்லதொரு முறையில் நடைபெறவும் தகுதியான ஒருவரை நியமித்தலே ஆகும். சிறப்புரை வழங்குபவர் அந்நிகழ்வினை சிறப்புப்படுத்தி நடத்திக்கொடுப்பவர்.

7. வாழ்த்துரை
           
இந்நிகழ்வினை வாழ்த்திப் பேசுதல். வாழ்த்துரையைப் பொறுத்தவரையில் எத்தனை பேர் வேண்டுமானாலும் பேசலாம். வரையறை கிடையாது. ஆனாலும் நேரத்தைப் பொறுத்து குறைவானால் நன்று.

8.நன்றியுரை
           
இந்நிகழ்வின் ஒரு மனிதராய் நின்று கடைசி வரை இருந்து அனைவரையும் கவனித்து கொள்பவரே நன்றியுரை வழங்கலாம்.

9.நாட்டுப்பண்
           
இறுதியில் நாட்டுப்பண் பாடி நிகழ்வினை முடித்தல் என்பது சிறப்பானதாகும்.

குறிப்புகள்
1.வரவேற்புரை ஒருத்தர்தான் சொல்ல வேண்டும்.

2.தலைமையும் ஒருவர்தான்.

3.சிறப்புரை அதிகமாக இருவர் இருக்கலாம். ஆனாலும் ஒருவர் இருந்தால் நலம்.

4.வாழ்த்துரையில் நேரத்தைப் பொறுத்து எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம்.

2 வது அழைப்பிதழ் கடிதம்திருமணப் பத்திரிக்கை ஒன்றை அமைக்க.
♦ தற்போது உள்ள திருமணப்பத்திரிக்கை நகல்கள்

மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி  அழைப்பிதழ் கடிதங்களை எழுதுங்கள்.

1.அலுவலகம் சார்ந்த கடிதங்கள் பார்க்கவும்

2.உறவுநிலை சார்ந்த கடிதங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »