அனுபவ பாடம்|சிறுகதை|ரா. ஷர்மிளா

அனுபவ பாடம் - ரா. ஷர்மிளா
கேட்ரீங் டெக்னாலஜி காலேஜ் பஸ் பல கதைகளை சுமந்து சென்றது. சென்னை டீ. நகரில் இருந்த காலேஜ்க்கு எதுக்கு காலேஜ் பஸ்ல போனும்.  மைலாபூருக்கும்  டீ.நகருக்கும் அரசு பேருந்தில் சென்றால் தூரம் அரைமணி நேரம். காலேஜ் பஸ்லயும் அதே நேரம் தான். ஆனா பிரண்ஸ் கூட நிறைய கதை பேசலாம்.
         
தீபா வீட்டுல அடுக்கடுக்கா கேள்விகள். அவ படிக்கிற கேட்ரீங் டேக்னாலஜிக்கு கிண்டல் வேற.

தீபா அம்மா: “நீ படிச்சுட்டு செய்யறத நான் படிக்காமலே செய்யறேன்”

தீபா அப்பா: த பாருடி பணக்காரங்க விதவிதமா சாப்டுவாங்க. ஸ்பிரீங் ரோல், சூுசி, ராப், பர்கர், மேக்ரோனி, பாஸ்தா, நூடில்ஸ் இதெல்லாம் உனக்கு தெரியுமா. வத்தக்குழம்பு, மோர்குழம்பு, சாம்பார், ரசம், புளிசாதம் இதுகள வச்சுட்டு நீ கடை போடற.

அம்மா: அது சரி. நூலப் போல சேல தாயப் போல பிள்ள. என் சாமார்த்யம் உங்க கண்ணுக்கு தெரியல.

தீபா: அம்மா நான் படிச்சுட்டு வேலைய கத்துட்டு பிசினஸ் பன்ன போறேன். அப்போ என் யூடியூப் சேனல்ல பழங்கால சமையலையும் புதுயுக சமையலையும் பயன்களோட சொல்ல போறேன்.

அம்மா: அப்படி சொல்லு என் தங்க கட்டி. பாரம்பரிய சமையல்ல எவ்வளவு ஆரோக்கியம். நாம தான் அதை எடுத்து சொல்லனும்.  அப்புறம், ஏண்டி காலேஜ் பஸ்ல லவ் ஸ்டோரி ஓடுதுன்னு சொன்னியே. எல்லாரும் ஏதோ ஜோடியா லவ்வர்ஸ் பார்க் மாதிரி இருக்குன்னு சொன்னியே.

தீபா: ஆமாம்மா. லவ் பன்றது இப்போ ஒரு டைம் பாஸ்.

அப்பா: நீ கவர்மென்ட் பஸ்ல போ. கண்ணை, காதை, வாயை மூடிட்டு இரு தங்கோ. அப்ப தான் மனசு அலைபாயாது. என் பொன்னு என் சொத்துன்னு பெருமைபட்டார்.

தீபா: எனக்கு திருமண வாழ்க்கையை விட என் லட்சியம் தான் முக்கியம் பா.

அம்மா: என் வைராக்கியம் அப்படியே இருக்கு என் பொன்னுகிட்ட.

அப்பா: பிரசவ வைராக்கியம், மரண வைராக்கியம்ன்னு அந்த காலத்துல சொல்லுவாங்க. அது நிரந்தரம் இல்லன்னும் சொல்லுவாங்க.

அம்மா : ஆமா. சில பேரு காரியம் ஆகற வரை வைராக்யமா இருப்பாங்க. காரியம் ஆன அப்புறம் எல்லாத்தையும் விட்டுடுவாங்க.

தீபா: இப்ப என்ன சொல்ல வர்றீங்க.

அம்மா : நீ சமையல்ல “டாப்பா” வருவே. ரொம்ப ஆர்வமா இருக்கேன்னு சொன்னோம்.

சில வேலைக்கு அறிவு வேனும். சில வேலைக்கு பேச்சு சாமார்த்யம் வேனும். சில வேலைக்கு அழகுணர்ச்சி வேனும்.
உதாரணத்துக்கு ஒரு பேங்கல வேலை செய்யறவளுக்கு பொது அறிவு வேனும். ஒரு துணி கடைல வேலை செய்யறவளுக்கு பேச்சு சாமர்த்யமும் அழகுணர்ச்சியும் வேனும். சமையல் வேலை செய்யறவளுக்கு அழகுணர்ச்சியும் பேச்சு சுவாரஸ்யமும் வேனும்.
தீபாக்கு அழகுணர்ச்சியும் கலையுணர்ச்சியும் நிறைய இருந்தது. ஆனால் பேச்சு சாமார்த்யம் தான் கம்மி.
அவ காலேஜ் பிரபசர் அதை தான் சொன்னார். “தீபா நம்ம வேலைல சோசியலா பழகறது ரொம்ப முக்கியம். நீ உன் வட்டத்தை விட்டு வெளியில வரனும்”. தீபா குடும்பம் பழமைவாதிங்க. இந்த காலத்து “தேவை” புரியாதவங்க. அவ வேலைல இருந்த வேகம் பேச்சுல இருக்கல.

தீபா கனவுகள் சுமந்து லட்சியப் பார்வையோட காலேஜ்க்கு போனா. அவ நினச்ச மாதிரியே படிப்பு முடிஞ்சு கேம்பஸ் இன்டர்வியூல ஒரு பெரிய ஹேட்டல்ல வேலை கிடைக்குது.
வேலைக்கு போக அப்பா, அம்மா கிட்ட கேட்டு புது வண்டி வாங்கறா. அவ வேலைக்கு சேரும் பொழுதே
சில ரூல்ஸ் சொன்னாங்க. சுத்தமா இருக்கனும், பீக் சீசன்ல லீவ் போட கூடாது, கஸ்டமர்ஸ் கம்ளெயின்ட் பன்ன கூடாதுன்னு முதலாளி சொன்னாரு. தீபாவும் ஆமோதித்தாள்.
தீபா தன்னோட வேலை, சம்பளம் பத்தி அப்பாகிட்ட சொன்னா.

தீபா அப்பா: கவர்மென்ட் வேலைல கார்ப்ரேட் கம்பெனி வேலைல நிறைய முதலாலிங்க இருப்பாங்க. பிரைவேட் கம்பெனில, பிரைவேட் ஸ்கூல்ல, ஹேட்டல்ல ஒரு முதலாளி தான். அந்த ஒரு முதலாளிய திருப்தி படுத்திட்டா எந்த பிரச்சனையும் இல்லாம ஒரு பத்து வருஷம் ஓடி போயிடும்.

தீபா: ஆமாம்பா நல்ல பேரு எடுத்துட்டா நிறைய நாள் வேலை பார்கலாம். முன்னேற்றம் அடையலாம்.

தீபா அப்பா: நீ நல்லா வருவேம்மான்னு வாயார மகளை ஆசிர்வதித்தார்.

அந்த ஹேட்டல் ல தினசரி உணவு மற்றும் கல்யாண கேட்ரிங் கும் எடுத்து செய்வார்கள். இவள் பொறுப்பாக இருப்பதால் “கல்யாண கேட்ரிங்” குழு ல வர்ற பெரிய ஆர்டர்களை பாத்துக்கிட்டா. சாப்பாடு ருசியா இருக்கனும், ஆரோக்கியமா இருக்கனும், சரியான அளவு ல இருக்கனும். சாப்பாடு விக்கற விலைக்கு அதை வீண் பன்ன கூடாதுங்கறது தீபாவின் எண்ணம்.

ஒரு பெரிய மனிதரின் கல்யாண ஆர்டர் வந்தது.

கஸ்டமர்: கல்யாண சாப்பாடு, தாம்பூலம் எல்லாம் ஐயர் சம்பிரதாயம் படியே இருக்கட்டும். ஆனா, கல்யாணத்துக்கு முன்னாடி நாள் மாப்பிள்ளை அழைப்பு, ரிசப்ஷனுக்கு பாப் கான், பேல் பூரின்னு இல்லாம ஏதாவது வித்யாசமா சொல்லுங்க மேடம்.

தீபா: காபி, டீ கூட ராகி ஹாட் சாக்கலேட், மோஜிடோ பானம் குடுக்கலாம்.
அப்புறம் பாம்பே ஜவ்வரிசி வடை, சேலத்து தட்டு வடை எங்க கேட்ரீங்கோட சிக்னேசர் டிஷ் அதை கண்டிப்பா ரசிப்பாங்க சார்.

கஸ்டமர்: சரிங்க மேடம் முந்நூறு பேர் இரண்டு வீட்டுலயும் சேத்து வருவாங்க. வர்றவங்க சாப்பாடு நல்லா இருக்குன்னு சொல்லனும். அது தான் முக்கியம்.

தீபா: எங்க சமையல் உங்களுக்கு நல்ல பேரு வாங்கி குடுக்கும் சார்.
அவ சாப்பாடு வீண் பன்னாம சரியா சமைக்கனும்ன்னு நினச்சது ஆபத்தா போயிடுச்சு.

முந்நூறு பேருன்னு கணக்கு சொன்னாரு. ஆனா, முந்நூத்தி அம்பது பேர் வந்தாங்க. பேல் பூரி, லேமன் ஜூஸ் காப்பி போட்டு கடைசில வந்தவங்கள சமாளிச்சா தீபா.
ஸ்பெஷல் அயிட்டமான “பாம்பே ஜவ்வரிசி வடை, சேலம் தட்டு வட, ராகி டார்க் சாக்லேட், மோஜீட்டோ  தீர்ந்து போயிடுச்சு.
கஸ்டமர் பணம் குடுக்க வந்தப் போ கம்ளெயின்ட் பன்றாரு

கஸ்டமர்: உங்க பேரு மார்க்கெட்ல நல்லா இருக்கறதால தான் நான் செலவு ஆனாலும் “நல்ல பேர் ” கிடைக்கும்ன்னு நினச்சேன்.
முதலாளி: ஏன் சார்? நல்லா நடந்தது இல்ல.

கஸ்டமர்: எனக்கு திருப்தி இல்ல. கடசியா வந்தவங்களுக்கு சாப்பாடு சரியா இருக்கல

தீபா: சார் நீங்க முந்நூறு செல்லிட்டு முந்நூத்தி ஐம்பது பேர் வந்தா நாங்க என்ன செய்யறது? சமாளிச்சு செஞ்சோம்.

கஸ்டமர்: அதிக ஆளுங்க வந்தா என்ன பன்னனும்ன்னு நீங்க கேட்கவே இல்ல.

தீபா: இந்த அனுபவம் பல திருமணங்கள்ல எங்களுக்கு வந்திருக்கு. நாங்க சமாளிக்க தான் சில உணவுகள வச்சிருக்கோம்.

முதலாளி: தொழிலதிபர், சினிமா பிரபலங்கள் எதை எதிர்பாப்பாங்கன்னு எங்களுக்கு தெரியும். நீங்க விஜய் டிவி புகழ் ஆலியா மானசாவோட க்ருஹப்ரவேசம் பாத்தீங்களா? நாங்க தான் பன்னோம். சின்ன சின்ன கம்ப்ளெயின்ட் இருக்கலாம். எங்க கஷ்டத்தை வார்த்தைகள்ல விளக்க முடியாது சார்.

கஸ்டமர்: புரியுது சார். சொல்லனும்ன்னு தோனிச்சு. அதான். இந்தாங்க உங்ககிட்ட பேசின பணம்ன்னு குடுத்தாரு.
அவர் போன பிறகு முதலாளி தீபாக்கு “அனுபவ பாடம்” எடுத்தாரு. இதோ பாரு தீபா கஸ்டமர் குறை சொன்னா நாம குறையே இல்லன்னு வாதாடறத விட நிறைகள சொல்லி திசை திருப்பனும். நீங்க நாம பன்ன தப்பையே சொல்றீங்க. கஸ்டமர் கிட்ட பேச தெரிஞ்சுக்கோங்கன்னாரு.
தீபாவிற்க்கும் எப்படி பேசி சமாளிக்கனும்ன்னு புரிஞ்சது. புத்தக பாடத்தை விட அனுபவ பாடம் விலைமதிப்பானதுன்னு தீபா புரிஞ்சுக்கிட்டா.

சிறுகதையின் ஆசிரியர்
ரா. ஷர்மிளா,

ஆதம்பாக்கம்,

சென்னை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here