மகுடம் சூட்ட மார்க்கம் உண்டு! | நவநீதனா ச

மகுடம் சூட்ட மார்க்கம் உண்டு! நவநீதனா ச

👑 திங்களிலே பிறந்தவளாய்,


தென்பொதிகைச் சீமாட்டி!…


 

👑 மையலிலே திளைத்தவளாய்,


அவளுக்காக இவள்!…


 

👑 சீமையிலும் சிங்காரியாய்ச்


சீமாட்டியவள், பைந்தமிழே!…


 

👑 தாலாட்டிச் சீராட்டி,


தங்கமென வளர்ப்பாளை,


 

👑 தங்கசிங்க ஆசனத்தில்,


கம்பீரத் தோற்றத்திலே,


 

👑செங்கமல நாயகிபோல் 


செந்தாமரைத் தடக்கையால் 

 

👑 தாங்கித் தாங்கியே!


சிற்றுளியாய் வெற்றிகளைப்


 

👑பொழிந்திடும் அன்னைக்கு 


மணிமகுடஞ் சூட்டலிலே,


 

👑 மாணிக்க ரத்தினமாய் 


மாளா(றா)த காதலினால் 

 

👑 செம்பிராட்டி ஒளிர்வாளே!


சொக்கத் தங்கங்களாய்!…


 

👑 கோடிகள் கூறினாலும்,


கோபுரத்தில் ஏற்றினாலும்,


 

👑 செம்மொழியாள் அவளிற்கு 


உவமைகள் சொல்வதிலே,


 

👑கோடிகளாய்த் தயக்கங்களே!


இணையாகா இன்பத்திற்கு,


 

👑 இணையான உவமை கூற


வேறென்ன மொழியிலடீ?!


 

👑 உம் குழவி தேடிடுவாள்,


பேருவமைகளை!!…


 

👑 திகட்டாத் திரவியமாய்,


திரண்டு நிற்பதிலே 


உமக்கென்ன அத்துனை ஆனந்தம்?!


 

👑 உவமைக்கு உருவகமாய் 


அணிகளாவது சொல்லிவிடு!


 

👑 எம் பெயரிணைக்காப் புத்தகமாய்,


உம் பெயரிலே, 


 

👑 பரிசு விழைகிறேன்! காதல் கூறாக் கவியே!!…

 

கவிதையின் ஆசிரியர்

நவநீதனா ச


கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,

கோவை.

Leave a Reply