Pazhadhtamillarkalin Uzhavutholil Muraigalin Sirapiyalpugal|Dr.S.Ilavarasi

Pazhadhtamillarkalin Uzhavutholil Muraikalin Sirapiyalpugal
Abstract           
        Man was involved in the agricultural industry, one of the industrial systems of the ancient Tamil. Essential for their livelihood is the man who created a plowing industry through food farming. In the Sangam literature, the eating habits of the Tamils are found about the food industry. He created a food production capacity for the food. Agriculture is the most important industry during the Sangam period. The way of literature can be highlighted by the spy system.
         The study is complicated in that there is no intention of the tillage industry that produces the food that is important for us to eat. This review is explained in the analysis set. The literature of the time they lived in certifies the biological elements of the ancient Tamil. Food, clothing, and location are the needs of man. Once the people found fire, he was focused on eating. He started the first step. The characteristics of the food industry can be found in the literature.

பழந்தமிழரின் உழவுத்தொழில் முறைகளின் சிறப்பியல்புகள்

முன்னுரை
            இயற்கையோடு இணைந்த பழந்தமிழரின் தொழில் முறைகளின் ஒன்றான வேளாண்மைத் தொழிலில் மனிதன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டன. தங்களுடைய வாழ்வாதார வாழ்க்கைக்கு இன்றியமையாதது உணவு விவசாயத்தின் மூலமாக உழவுத் தொழிலை மனிதன் உருவாக்கினான். சங்க இலக்கியத்தில் பைந்தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்கள் உணவுத்தொழில் பற்றி காணப்படுகின்றன. உணவிற்காக பயிரிடும் தொழிலை தன் நிலைக்கேற்ப உணவு உற்பத்தித் திறனை உருவாக்கினான். சங்க காலத்தில் விவசாயம் மிக முக்கிய தொழிலாக் காணப்பெறுகின்றன.
     இலக்கியத்தின் வழி உளவத் தொழில் முறைகளை சிறப்புகளை எடுத்துரைக்கலாம்.
சங்க கால உணவு முறைகளின் பயன்பாட்டுகளை அறிவதற்கு துணை புரிகின்றன.நாம் உண்பதற்கு முக்கியமாகத் திகழக்கூடிய உணவுப் பொருளை தயாரிக்கும் உழவுத் தொழில் சிறப்பு இயல்புகளை உணர்த்துவதை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை ஆய்வு சிக்கலாக எடுத்துரைக்கின்றன. பகுப்பாய்வு தொகுப்பு முறையில் இவ்வாய்வியல் விளக்கப்பட்டுள்ளது.
பழந்தமிழரின் வாழ்வியல் கூறுகளை அறிய அவர்கள் வாழ்ந்த காலத்து இலக்கியங்கள் சான்றளிக்கின்றன. உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் மனிதனின் தேவையாகும். இவற்றுள் மக்கள் நெருப்பை கண்டறிந்தவுடன் அவன் கவனம் உணவு அருந்தும் முறையில் இருந்தது. அதன் முதல்படி விவாசயத்தைத் தொடங்கினான். இலக்கியங்களின்வழி உணவுத்தொழிலின் சிறப்பியல்புகளை அறியலாம்.

தொழில்கள் வரையறை
        பண்டைய தமிழகத்தின் வழக்கில் இருந்த தொழில்களை குறித்து செய்திகளை அறியலாம். தொழில் என்பதற்கு ஒரு வரையறை காண்போம். உழைப்பு என்பது பெயர்ச்சொல்லாக ஒரு செயல் அல்லது தொழிலைக் குறிக்கும். உழைத்தல் என்பது வினைச்சொல்லாகத் தொழில்செய்தலைக் குறிக்கும். உழைப்பவர் இனம் என்பது பொதுவாக தொழிலாளர்களைக்குறிக்கும். இவ்விலக்கணத்தின்படி உழைப்பு எல்லா வகையான தொழில் திறமைகளையும் உள்ளடக்கும்நிலைகள்ஆகும்.

வாழ்வியல் தொழில்கள்
       மக்களின் வளமான வாழ்விற்கும் வசதிக்கும் பயன்படும் தொழில்கள் அனைத்தும் வாழ்வியல் தொழிலாகக் கருதப்படுகின்றது. அவற்றுள் கைத்தொழில், நிலஞ் சார் தொழில், கைவினைத் தொழில், பிற தொழில், அறிவு சார் தொழில் ஆகிய நிலைகளில் வகைப்படுத்தி உள்ளனர். அவற்றுள் கைத்தொழில்களில் பயிர்த்தொழில் மிகவும் முக்கியதாக க் கருதப்படுகிறது.

பயிர்த்தொழில்
       மனித வாழ்விற்கு அடிப்படையானது உணவு ஒருவர் சிறந்த பண்பினைப் பெற அடிப்படையாய் இருக்க வேண்டியது வறுமையின்மை. உணவே இல்லை இன்றேல் பண்பாடு இல்லை,பழம் பெருமையும் இல்லை ஆதலால் உணவுப்பொருளின் இன்றியமையினை உணர்ந்து அவற்றைப் பெருக்கினர். உணவுத் தொழில் தலைமைத் தொழிலாக உயிர்த் தொழிலாகப்போற்றப்பட்டது. பண்டைய தமிழர் இயற்கையோடு ஒன்று வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றாக பயிர்த்தொழில் பன்னெடுங்காலமாகத் தமிழரது தொழிலாக அமைந்தது எனினும் இதற்கான முதல் சான்றினை தருவது தொல்காப்பியமாகும்.

“வேளாண் மாந்தர்க் குழுதூண் அல்லது
இல்லென மொழிபிறவகை நிகழ்ச்சி “1
      என்ற நூற்பா மூலம் விளக்குகின்றது. சங்க இலக்கியங்களில் ‘வேளாண்’ என்ற சொல் இரண்டு இடங்களிலும்’ வேளாண்மை’ என்ற சொல் ஓரிடத்திலும் இடம்பெற்றுள்ளது. ‘வேளாளர்’ என்ற சொல்

“தொடர்ந் தேம்எருது தொழில் செய்யாதோட
விடுங்கடன் வேளாளர்க் கின்று”2
       என்று பரிபாடல் அடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக தொல்காப்பியர் காலம் தொடங்கி சங்ககாலம், சங்கம் மருவிய காலம் முடிய வேளாண்மை என்னும் சொல் பெரும்பான்மை உதவி என்ற பொருளியிலும் சிறுபான்மை உழவுத் தொழில் என்று பொருளிலும் ஆளப்பட்டுள்ளது. இலக்கண நூலார் வேளாண் என்னும் சொல்லைவேள்+ஆள் எனப் பிரிப்பர். வேள் என்னும் வேர் சொல்லுக்கு மண் என்று ஒரு பொருள் உண்டு. வேளாண்மை மண்ணை ஆளுதல் என்ற பொருளைத் தரும். மண்ணைப் பயன்படுத்தி ஆள்பவன் வேளாண் என பட்டான்.

உழவுத் தொழில் முறைகள்
       உழவுத் தொழில் என்பது நிலத்தைத் தயார்ப்படுத்தி விதைகளை விதைத்து பயிர்களை விளைவித்து அறுவடை செய்யும் முறையாகும். ஒருவர் உண்ணும் உணவில் ஒவ்வொருவரின் உழைப்பு இருக்கின்றது. உழவர் இல்லை என்றால் இவ்வுலகம் இல்லை. எவ்வித விளம்பரமும் இல்லாமல் இருக்கின்ற ஒரே தொழில் முறை உழவுத் தொழிலாகும்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்”3
       என்ற வரிகள் வள்ளுவர் உழவுத் தொழிலின் சிறப்பினை விளக்குகின்றார். உழவுத் தொழில் என்பது உழுதல், உரமிடுதல், நீர்ப்பாய்ச்சுதல், விளைத்தல், களை கட்டல், காத்தல், அறுவடை, பதப்படுத்துதல் எனப் பல கூறுகளை விளக்கலாம்.

உழுதல்
           நிலத்தை பண்படுத்துதல் நிலையே உழுதல் ஆகும். நீர்வளம் நிறைந்த வயல் பகுதிகளில் நாற்று நடுவதற்கு முன் நிலத்தைப் பலமுறை உழுவார்கள் அதனை பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலில் ஆசிரியர் உத்திர கண்ணனார் சிறு சிறு அடைமொழிகளின் மூலம் உழும் வகையை குறிப்பிடுகிறார்.

“குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்
நடைநவில் பெரும்பகடு புதவிற் பூட்டிப்
பிடிவாயன் னமடிவாய் நாஞ்சில்
உடுப்புமுக முகக்கொழு மூழ்க ஊன்றித்
தொடுப்பெறிந்து உழுததுளர் படுதுடவை”4
        என்ற வரிகள் மூலம் உழுதல் நிலையை விளக்குகின்றனர். பண்டைய தமிழர் நிலத்தை உழுவதற்கு எருதுகள் இன்றி எருமைகளையும் பயன்படுத்தினர்.சான்றாக

“மலைகண்டன் னநிலை புணர் நிவப்பின்
பெருநெற் பல்கூட்டு எருமை உழவு”5
          என்ற வரிகள் நெற்களையுடைய பல பெரிய சேர்களைக் கட்டி வைத்திருக்கின்ற எருமைகளைப் பூட்டி விழுகின்ற உழவனே என்பதை விளக்குகின்றன. மண்ணை செழுமைப்படுத்தும்  உழுதல் விதைகளின் விதைப்பதற்கும் நீர் பாய்ச்சலுக்கும்தயார்படுத்தும் நிலையே  உழுதலாகும்.

பல்வேறு பயிர்கள் பயிரிடல்
     நிலத்தை  உழுதல் முறைகளில் விதை விதைத்து அறுவடை செய்து அதனை பயன்படுத்தினர். நிலத்தின்தன்மைக்கு ஏற்றவாறு அதன் பயிரிடும் முறைகளும் வேறுபடுகிறது. பின்னர் மீண்டும் அந்நிலத்தில்வேறு பயிரிடும் முறைகளை  அறிவோம்.திணைப்புனங்களில்  திணையொடு கலந்த பருத்தியையும் விதைப்பர். அதன்பிறகு தினை, அவரை விதைப்பர். இந்த அவரை வளர்ந்து சிறுதினை மறுகாலில் படர்ந்து காய்க்கும்.

“பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால்
கொழுங்கொடி அவரை பூக்கும்.”6
     என்று குறுந்தொகைப் பாடல் வரிகள் விளக்குகின்றது. புன்செய் விளைச்சலில் ஒரு நிலப்பகுதியில் ஒருவகை பயிரை மட்டும் விளைவிக்காமல் பல்வேறு விளைவித்தனர். ஒரு பகுதியில் தினை மற்றொரு பகுதியில் எள் பிறிதொரு பகுதியில் வரகு எனவும் விளைவித்தனர் என்பதை,

“சிறுதினைகொய்யக்கவ்வைகறுப்பக்
கருங்கால்வரகின்இருங்குரல்புலர.”7
       என்ற பாடலடிகளால் உணரலாம். பயிரிடும் முறைகளை இலக்கியங்களின்வழி சான்று அளிக்கின்றன.இன்றையச் சூழலில் உணவு பயிரிடும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பருவகாலநிலைக்கேற்ப இல்லாமல் நவீனமுறையில் பயிரிடும் முறை அமைந்துள்ளது. இதனால் உணவின் சுவை, ஆரோக்கியம் பாதிக்கின்றது. பருவநிலைக்குஏற்ப நிலத்தின் தன்மையை பொருத்தும் உளவுத்தொழிலை உருவக்குவதே இவ்வாய்வின் நோக்கம் ஆகும்.

முடிவுரை
     பழந்தமிழர்களின் உணவு பயிரிடும் முறைகளை சங்க இலக்கியங்களின் வழி அறியலாம். காலங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் நிலத்தில் விதை விதைத்து அறுவடை செய்யும் விவசாயம் முறை என்றும் மாறாது. ஆயினும் சுற்றுச்சூழலின் நிலத்தைப் பராமரிக்கும் முறையினைநாம் ஒவ்வொருவரும் கடமையாகக் கருத வேண்டும். நிலத்தை பாதுகாக்கவும் ஆரோக்கியமான உணவைப் பெறுவோம்.

சான்றெண்விளக்கம்
1.தொல்காப்பியம்பொருள், மரபு -81 நூற்பா

2.மேலது – 20:63-64

3.திருக்குறள் – 1033

4.பெரும்பாணாற்றுப்படை196 – 200

5.நற்றினைபாடல் – 60 – 2

6.குறுந்தொகை – 82

7.மதுரைக்காஞ்சி 271-2

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சு.இளவரசி
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
ஜமால் முகமது கல்லூரி, திருச்சி.

 

Leave a Reply