Friday, September 12, 2025
Home Blog Page 18

அந்த ஓர் அதிகாலை|கவிதை|க.கலைவாணன்

அந்த ஓர் அதிகாலை - கலைவாணன்

ஆசிரியரின் பிற கவிதைகளைப் படிக்க – You searched for க.கலைவாணன் » இனியவை கற்றல் | பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (iniyavaikatral.in)

அப்பாசாமி|கவிதை|த.பிரகாஷ் ராஜ்

அப்பாசாமி - த.பிரகாஷ் ராஜ்

த. பிரகாஷ் ராஜ் அவர்களின் கவிதைகளை வாசிக்க..

சங்கப் பாக்கள் காட்டும் ஓவிய நாகரிகமும் – பாறை ஓவிய நாகரிகமும் | பா.செல்வகுமரன்

சங்கப் பாக்கள் காட்டும் ஓவிய நாகரிகமும் - பாறை ஓவிய நாகரிகமும் -பா.செல்வகுமரன்

தமிழகத்தில் முதன்முதலாக 1980-இல் மல்லப்பாடியில் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குதிரை மீது அமர்ந்திருக்கும் மனிதன் கையில் எறிவேல் ஒன்றை ஏந்தி எதிரே உள்ளவனைக் குறி வைப்பது போன்ற ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இதனை வேட்டைக்காட்சி என்றும் போர்க்காட்சி என்றும் கூறுவர். இப்பாறை ஓவியங்களுக்கு அருகில் நடந்த அகழ்வாய்வில் புதிய கற்காலக் கருவிகள் (Neolithic Stones)  கிடைத்துள்ளன. எனவே இத்தகைய ஓவியங்கள் புதிய கற்காலத்தைச் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன.


ஓவியன்                       

வண்ணங்களின் துணை கொண்டு எண்ணங்களுக்கு உயிர் கொடுப்பவன் ஓவியன் என்றழைக்கப்படுகின்றான். இவனே கண்ணுள் வினைஞர், வித்தகர், சித்திரக்காரர் என்று அழைக்கப்படுகின்றனர். ஓவிய நூலில் புலமை பெற்றவன் “ஓவியப் புலவனென்றும்’, அக்கலைஞர் குழாம் ‘ஓவியமாக்கள்’ என்றும் சங்க இலக்கியங்களில் கூறக் காண்கிறோம். இத்தகைய கண்ணுள் வினைஞரை “நோக்கினார் கண்ணிடத்தேதம் தொழிலை நிறுத்துவோர்’ என்று நச்சினார்க்கினியர் கூறுவர்.


ஓவியம்
                       

பல வண்ணக் கலவையால் துகிலிகைக் கொண்டு படைக்கப்பட்ட கண்கவர் காட்சி, ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், பாடாம், வட்டிகைச் செய்தி என்றும் அழைக்கப்பட்டன.
                       

ஓவியத்தின் வாயிலாக சங்ககால மாந்தர்கள் கருத்துக்களைப் புலப்படுத்தினர். காலப் போக்கில் இவ்வோவியங்களே வரி வடிவானமையை வரலாறு காட்டும். இவற்றை ஓவிய எழுத்துகள் என்பர். இவ்வகையில் எழுத்து என்ற சொல் சங்க இலக்கியங்களில் ஓவியம் என்ற பொருளில் வழக்கப்பட்டதை நம்மால் அறிய முடிகிறது.
                       

ஓவியங்கள் மாடத்திலும், கூடத்திலும் மணடபத்திலும், அம்பலத்திலும் தீட்டப் பெற்றிருந்தன என்பதைச் ‘சித்திரக் கூடம்’ , ‘சித்திரமாடம்’, ‘எழுத்துநிலை மண்டபம்’, எழுதெழில் அம்பலம் என்ற சொற்களால் அறிகிறோம். கலையுள்ளங் கொண்ட பாண்டிய மன்னனொருவன் சித்திர மாடத்தில் இறந்துபட்டான் என்பதைச் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று புறநானூறு குறிக்கிறது. அது போன்று அரசர் தம் அரண்மனை அந்தப் புரங்களிலும் பலவண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன என்பதை நெடுநல்வாடை வரிகள் நமக்குத் தெளிவாக்குகின்றன. மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் திருக்கோயில் சுவர்களில் பலவகைச் சித்திரங்கள் வரையபெற்றிருங்கின்றன என்பதை,


இருசுடர்நேமி

ஒன்றிய சுடர்நிலையுள் படுவோரும்

இரதிகாமன் இவனிவன் எனா அ

விரகியர் வினவ வினாவிறுப் போரும்

இந்திரன் பூசை இளவகலிகை யிவன்

சென்ற கவுதமன் சின்னுறக் கல்லுரு

ஒன்றிய படியிதென்றுரை செய்வோரும்

இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம்

                    என்ற பாடல் வரிகளால் அறிகிறோம். மேலும் மணிமேகலையில்,

சுடுமண் ணோங்கிய நெடுநிலை மனைதொறும்

மையறு படிவத்து வானவர் முதலா

எவ்வகை யுயிர்களு முவமங் காட்டி

வெண்சுதை விளக்கத்து வித்தக ரியற்றிய

கண்கவ ரோவியங் கண்டு நிற்கு நரும்
 

என்று செல்வர் வாழும் வளமனைச் சுவர்கள் மீதும், மாடங்கள் மீதும் வானவர் முதல் எல்லா உயிர்களையும் குறிக்கத்தக்க ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தது என்பதை சங்க இலக்கியங்களின் மூலம் நாம் அறியலாம். சுடுமண் சுவர்கள் மீது வெண்சுதை பூசினர். வெண்சுதை மீது செஞ்சாந்து கொண்டு பூசினர். இதன் மேல் அழகிய பூங்கொடிகளை ஓவியமாகத் தீட்டினர் இத்தகைய சுவர்கள் செம்பைப் போன்று உறுதி படைத்தும், கழையழகு கொண்டதுமாக அமைந்திருந்ததை இலக்கியங்களின் மூலம் நாம் அறியலாம்.
 

சுவர்களில் மட்டுமல்லாது திரைச் சீலைகளிலும் கிழிகளிலும் கவின் மிகுக் காட்சிகள் தீட்டப்பட்டிருந்தன. நாடக அரங்குகளில் திரைச் சீலைகளில் பல வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. இதனை ‘ஓவிய எழினி’ என்று இலக்கியம் கூறும். மணிமேகலை ஆசிரியர்


செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்

எரிமல ரிலவனும் விரிமலர் பரப்பி

வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச்

சித்திரச் செய்கை படாம்போர்த் ததுவே

ஒப்பத் தோன்றிய உவவனம்    (மணி. மலர் வனம் : 165-69)

என்கிறார்.           

ஓவிய நாகரிகமும் - பாறை ஓவிய நாகரிகமும்
குகை ஓவியங்கள்

               

திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலைப் பகுதியில் பல ஓவியங்கள வரையப்பட்டுள்ளன. இத்தகைய ஓவியங்களில் வேட்டையாடுதல், விலங்குகளின் சண்டை, மனிதர்களின் சமய சடங்குகளில் ஈடுபட்டிருத்தல், காட்டுப் பூனை ஒன்றைப் பலியிடுதல் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள மானின் உருவ அமைப்பு பிற குகை ஓவிய அமைப்பினை ஒத்துள்ளது.  இக்கண்டுபிடிப்பினைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கிடாரிப்பட்டி, அழகர் மலை, திருமலை, கருங்காலக்குடி, திருவாதவூர், நாகமலை, திருமயம் கோட்டை போன்ற பகுதிகளில் குகை ஓவியங்களும், பாறை ஓவியங்களும், குகைத்தள ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது சிறப்புக்குறிய செய்தியாகும்.

புனையா ஓவியம்
                       

வண்ணங் கலவாமல் வடிவம் மட்டும் கரித்துண்டுகளால் கோடுகளாகக் காட்டப்படுதலைப் புனையா ஓவியம் என்பர். கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில் பின்பற்றப்பட்ட இம்முறை (கரித்துண்டு ஓவியம்) இன்றைய 20-ஆம் நூற்றாண்டில் ‘மென் கோட்டு ஓவியம்’ என்ற பெயரில் நடைமுறையில் இருத்தல் குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஓவியன் தான் எண்ணிய படத்தை வண்ணம் புனைந்து தீட்டுவதற்கு முன் கற்பனை ஓவியத்தைப் புனையா ஓவியமாகத் தீட்டுதல் பண்டைய வழக்கமாக இருந்தது. இத்தகைய புனையா ஓவியத்தைப் ‘புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்’  என நக்கீரரும், புனையா ஓவியம் போல நிற்றலும்’ எனச் சாத்தனாரும் கூறியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.
                       

சங்ககால மக்கள் வீட்டையும் ஓவியங் கொண்டு அலங்கரித்தனர். ‘ஓவத்து அன்ன வினைபுனை நல் இல்’ (அகம் 98:11) என்று செல்வர் தம் இல்லம் என்று சிறப்பிக்கப்பட்டிப்பதைக் காணலாம். ‘ஓவத்தன்ன இடனுடைவரைப்பிற் புறம்’ என்று புறநானூறும் புகழ்ந்து கூறும். மேலும் சங்ககால ஓவியர்கள் இயற்கைக் காட்சிகள், சமுதாய வாழ்க்கை என்றிவற்றை மட்டுமின்றி, சோதிட, வான சாஸ்த்திர நூல் மற்றும் புராண இதிகாசங்களையும் கற்றறிந்து அழகுறத் தீட்டினர். ஆடு முதலான பன்னிரண்டு ராசிகளையும், விண் மீன்களையும் வரைந்ததை,


புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்

திண்ணிலை மருப்பி னாடு தலையாக

விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலன் மண்டிலத்து

முரண்மிகு சிறப்பின் செலவனோடு நிலைஇய

உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிதுயிரா

என்று நெடுநெல்வாடை கூறுகிறது.
  சங்க காலச் சாதாரண நிலையில் இருந்த மகளிரும், பெருங்குடிப் பெண்டிரும், ஆடல் அணங்குகளும் ஓவியம் தீட்டினர். நாட்டிய மகள் மாதவி ஓவியக் கலையை நன்கு அறிந்திருந்தாள் எனச் சிலம்பதிகாரம் எடுத்துரைக்கின்றது.


முடிவுரை
 

சங்க காலத்தில் தொல் மாந்தர்கள் தங்களது பண்பாட்டு வரலாற்றை இத்தகைய ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தினர் என்பதோடு மட்டுமல்லாமல் பண்பாட்டுப் பாதையில் அடியெடுத்துவைத்த நம் முன்னோர் ஓவியத்தின் வழியேதான் முதன் முதலில் தம் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள் என்பதும் அதன் வெளிப்பாடே பண்டைய மாந்தர்களையும் அவர்களின் நாகரிகப் பின்புலத்தையும் அறிந்துகொள்ள சிறந்ததோர் சான்றாக அமைந்துள்ளது என்பது சிறப்பிற்குரியது.

துணை நின்ற நூல்கள்

1.சாமி.சிதம்பரனார் (2011) : தமிழர் வாழ்வும் பண்பாடும், சாரதா பதிப்பகம், சென்னை – 600 014


2.முனைவர் அ. பாண்டுரங்கன் (2016) : சங்க இலக்கியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். 41-டீ, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098


3.முனைவர். அ.தட்சிணாமூர்த்தி (2019) : தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஐந்திணைப் பதிப்பகம், AP 1108, தென்றல் காலனி, மேற்கு அண்ணாநகர், சென்னை – 600 040


4.இரா.பவுந்துரை : தமிழகப் பாறை ஓவியங்கள் பக் – 79.


5.நா.சுலைமான் : பாண்டி மண்டலத்தில் குகை ஓவியங்கள் – நுண் கலை, மலர் 7 – இதழ் 2 பக் 26,32.


 

                          ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

           

தையும் வழியும்|கவிதை|சு.தமிழ்ச்செல்வன்

தையும் வழியும்-சு.தமிழ்ச்செல்வன்

கவிதையின் ஆசிரியர்

மேலும் பார்க்க..

சு.தமிழ்ச்செல்வன் கவிதைகள்

மரங்கள் பேசினால்|கவிதை|த.பிரகாஷ் ராஜ்

மரங்கள் பேசினால் - த.பிரகாஷ் ராஜ்

‌         

இலக்கணக்குறிப்பு அறிதல்|இலக்கணக் குறிப்பு வகைகள்

இலக்கணக் குறிப்புகள்

கல்லறை வாயில்|கவிதை|சு.தமிழ்ச்செல்வன்

கல்லறை வாயில்_ சு.தமிழ்ச்செல்வன்

மௌனமே சிறந்த பதிலடி|தன்னம்பிக்கை கட்டுரைகள்|முனைவர் ஈ.யுவராணி

மௌனமே சிறந்த பதிலடி
கௌதமபுத்தர், ஒரு வழியில் நடந்து சென்றார்.  அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காரி எச்சிலை துப்பினான். தன் மேல்துண்டால் துடைத்து விட்டு. “இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?” என்றார் புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் “ஆனந்தா.  இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார். ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார். வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்ற உணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்.. அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்.  “இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!” என்றார். அவன் எழுந்து கேட்டான். “நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?” என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.  “நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?”

உனக்கு நீயே கேட்டுப்பார்
    
ஒரு கனவை நீங்கள் மட்டும் கண்டுகொண்டிருப்பது வெறும் கனவாகத்தான் இருக்கும். கனவோடு இணைந்து பயணம் செய்தால்தான் அது நிஜமாகும்’ என்கிறார் ஜப்பானைச் சேர்ந்த நடிகையும் அமைதிப் போராளியுமான யோகோ ஓனோ (Yoko Ono). இதற்கு எல்லோருக்கும் தெரிந்த சாவியைத் தொலைத்த முல்லர்வின் கதையை உதாரணமாகச் சொல்லலாம். ஒருநாள் ஊருக்கு வெளியே எதையோ தேடிக்கொண்டிருந்தாராம் முல்லா நஸ்ருதீன். ஒருவர் அவரிடம், என்ன தேடுகிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். என் சாவியைத் தேடுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார் முல்லா. எங்கே தொலைத்தீர்கள்?’ என்று அவர் கேட்டதற்கு, வீட்டுக்கருகில்’ என்று பதில் சொன்னாராம். ஆச்சர்யப்பட்டுப் போன அந்த ஊர்க்காரர், வீட்டுக்கருகே சாவியைத் தொலைத்துவிட்டு இங்கே வந்து தேடுகிறீர்களே?’ என்றாராம். இங்கேதானே வெளிச்சமாக இருக்கிறது?’ என்று ஒரு போடு போட்டாராம் முல்லா. இது போலத்தான். நம்மில் பலருக்கும் பல லட்சியங்கள் இருக்கும்; அதை அடைவதற்கான முயற்சியில்தான் பலரும் தோற்றுப் போகிறார்கள். வாழ்வில் நம் இலக்கை அடைவது எப்படி என்று யாரும் வந்து நமக்குப் பாடம் எடுக்க மாட்டார்கள்; கற்றுக் கொடுக்கவும் மாட்டார்கள். நாம்தான் நமக்கான குறிக்கோளை வகுத்துக்கொண்டு இலக்கை அடையப் போராட வேண்டும். அதற்கு அத்தியாவசியமாக ஒன்று வேண்டும். அது இருந்தால் வெற்றி எளிது. அது என்ன? தன்னம்பிக்கை. நம் பலம் நமக்கே தெரியாதது. அதனால்தான் வெற்றி கைநழுவிப் போகிறது; பலரால் இலக்கை எட்ட முடியாமல் போகிறது. அந்த யதார்த்தத்தை விளக்குகிறது இந்தக் கதை.
    
ஒரு மனிதருக்குப் பெரிய கனவு இருந்தது. அது என்ன கனவு என்பது இங்கே முக்கியமில்லை. வேண்டுமானால், சினிமாவில் ஹீரோவாக வேண்டும்’, சென்னை அண்ணாசாலையில் எல்.ஐ.சி மாதிரி ஒரு கட்டடம் கட்டி அதற்கு உரிமையாளராக வேண்டும்’, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிவிட வேண்டும்’. இப்படி ஏதோ ஒரு பெருங்கனவு என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், அந்த மனிதர் ஒரு கட்டத்தில் தன் கனவு நனவாகும் என்கிற நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டார். தன் கனவை அடையத் தன்னிடம் போதுமான பலம் இல்லை என்று கருதினார். யாரிடமாவது உதவி கேட்க வேண்டும் என்றும் அவருக்குத் தோன்றியது. முதலில் அந்த மனிதருக்கு நினைவுக்கு வந்தது வயதான அவருடைய அம்மா. அவரிடம் கேட்டுவிடுவது என்று முடிவெடுத்தார்.
     
ஒருநாள் தன் அம்மாவோடு அவர் கிளினிக்குக்குச் செல்லவேண்டியிருந்தது. அது வீட்டுக்கு அருகிலேயே இருந்ததால், இருவரும் நடந்தே சென்றார்கள். மருத்துவரைப் பார்த்து, வழக்கமான சில பரிசோதனைகளை அம்மா செய்துகொண்ட பிறகு இருவரும் வீடு திரும்பினார்கள். வழியில் அவர், அம்மாவிடம் மௌனப் பேச்சை ஆரம்பித்தார்.  அம்மா, என் கனவு என்னனு உங்களுக்குத் தெரியும்தானே?’’ ஆமாம்ப்பா. அதுக்கென்ன இப்போ…’’  இல்லம்மா. அந்தக் கனவை நனவாக்குறதுக்கான பலம் என்கிட்ட இல்லைனு தோணுது. அதுக்கான சக்தியை எனக்குக் குடுங்களேன்…’’  அம்மா சொன்னார்… உனக்கு உதவி செய்யறதுல எனக்கு சந்தோஷம்தான். ஆனா, அந்த அளவுக்கு சக்தி என்கிட்ட இப்போ இல்லை.  இருந்த எல்லாத்தையும் உன்கிட்ட ஏற்கெனவே குடுத்துட்டேனேப்பா.’’
    
அந்த மனிதர் இதைக் கேட்டு துவண்டு போனார். ஆனால், கனவை நிறைவேற பலம் வேண்டுமே… யாரிடமிருந்தாவது, எந்த வழியிலாவது பெற்றுத்தானே ஆக வேண்டும்? ஒவ்வொருவரிடமாகக் கேட்டுப் பார்ப்பது என்று முடிவு செய்துகொண்டார். தனக்குத் தெரிந்த ஒரு ஞானியிடம் போனார். விஷயத்தைச் சொன்னார். ஐயா. எனக்கு சக்தி வேண்டும். அது எங்கே கிடைக்கும்?’’ என்று கேட்டார்.  ஞானி சொன்னார், இமயமலையில் நமக்கு வேணுங்கிற சக்தியெல்லாம் கிடைக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். நானும் இமயமலைக்குப் போயிருக்கேன். ஆனா, அங்கே பனியையும் குளிரையும் தவிர வேற எதையும் நான் பார்த்ததில்லை. எனக்கும் சக்தி எங்கே கிடைக்கும்னு சரியா சொல்லத் தெரியலையேப்பா…’’
    
அடுத்து அந்த மனிதர் ஒரு துறவியிடம் போனார். விஷயத்தைச் சொன்னார். குருவே, என் கனவு நிறைவேறுவதற்கான சக்தி எனக்கு எங்கே கிடைக்கும்?’’ என்று கேட்டார்.
   
நீ செய்யும் பிரார்த்தனையால்தான் சக்தி கிடைக்கும். அதே நேரத்தில் நீ கண்டுகொண்டிருப்பது தவறான கனவு என்றால் அதையும் நீ தெரிந்துகொள்வாய். எனவே, அமைதியாக பிரார்த்தனையில் ஈடுபடு’’ என்றார் துறவி.
    
அவர் சொன்னது ஒரு வழி என்றாலும், அதுவும் அந்த மனிதருக்குக் குழப்பத்தையே தந்தது. ஏதேதோ சிந்தனையில் வீடு நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது வழியில் அவருக்குத் தெரிந்த முதியவர் ஒருவர் எதிர்ப்பட்டார்.  என்னப்பா. ஏதோ யோசனையோட போற மாதிரி தெரியுது!’’  அவரிடமும் அந்த மனிதர் விஷயத்தைச் சொன்னார். என் கனவு நிஜமாறதுக்கு சக்தி வேணும். அது எங்கே கிடைக்கும்னு ஒவ்வொருத்தரா கேட்டுக்கிட்டிருக்கேன்.  ஆனா, யாராலயும் எனக்கு உதவி செய்ய முடியலை.’’ ஒருத்தரால கூடவா முடியலை?’’ ஆமா.’’  அந்த முதியவர் கேட்டார்! சரி, உனக்கு நீயே கேட்டுப் பார்த்துக்கிட்டியா?’’ அந்த மனிதருக்கு இதைக் கேட்டதும் ஏதோ தெளிவு கிடைத்ததுபோல இருந்தது.
ஆசிரியர்
முனைவர் ஈ.யுவராணி,

இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

பி.கே.ஆர் மகளிர் கல்லூரி,

கோபிச்செட்டிபாளையம்,

ஈரோடு – 638 476


 

ஆசிரியரின் படைப்புகளை மேலும் பார்க்க..
1.கற்பதை கசடற கற்க

2.தாத்தாவின் பழைய வீடு

3.நீதிக்கு அடிபணி

 

ஆகுபெயர் என்றால் என்ன? ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

ஆகுபெயர் வகைகள்
ஒரு பொருளின் இயற்பெயர், அதனை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்குத் தொன்று தொட்டுப் பெயராகி வருவது ஆகுபெயர் எனப்படும்.

(எ.கா)  ஊர் சிரித்தது
எங்கும் ஊர் சிரிக்காது. ஊரிலுள்ள மக்கள்தான் சிரிப்பார்கள். நேரிடையாக மக்கள் சிரிப்பதைச் சொல்லாமல் மக்கள் வசிக்கின்ற (தொடர்புடைய) ஊரைச் சொல்லியது ஆகும்.

“பொருள்முதல் ஆறோடு அளவை சொல்தானி
கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்
தொன்முறை உரைப்பன ஆகுபெயரே”   – நன்னூல்.290
என்பார் நன்னூல் ஆசிரியர் பவனந்தி முனிவர்.


ஆகுபெயர் பதினாறு வகைப்படும்.

1.பொருளாகு பெயர்
ஒரு முழுப்பொருளின் பெயர் தன்னைச் சுட்டாது அதன் உறுப்புக்கு ஆகி வருவது பொருளாகுபெயர் எனப்படும். இதனை முதலாகுபெயர் எனவும் கூறுவர்.

(எ.கா) தமிழரசி மல்லிகை சூடினாள்
இத்தொடரில் உள்ள மல்லிகை என்னும் சொல் வேர், கொடி. இலை, பூ ஆகிய உறுப்புகள் அனைத்தும் சேர்ந்த முழுப்பொருளைக் குறிக்கிறது ஆனால் அடுத்துள்ள சூடினாள் என்னும் பயனிலையால் மல்லிகை என்னும் பெயர், முழுப்பொருளை உணர்த்தாது, அதன் ஓர் உறுப்பாகிய மலரை மட்டும் உணர்த்துகிறது. எனவே இது பொருளாகு பெயர்.
(எ.கா) பூசணிச்சாம்பார் சுவையாக இருந்தது.
2. இடவாகு பெயர்
ஓர் இடத்தின் பெயர் அந்த இடத்தோடு தொடர்புடைய வேறு பொருளுக்கு ஆகி வருவது ‘இடவாகு பெயர்’ எனப்படும்.

(எ.கா)    கிரிக்கெட்டில் இந்தியா வென்றது.
இந்தச் சொற்றொடரில் உள்ள இந்தியா என்னும் இடப்பெயர் அப்பெயரால் அமைந்த நாட்டைக் குறிக்காது அந்நாட்டிற்காக விளையாடிய வீரர்களைக் குறிக்கிறது. எனவே இது இடவாகு பெயர் ஆகும்.
(எ.கா) காஞ்சிபுரம் என்ன விலை?
3. காலவாகுபெயர்
காலப்பெயர் காலத்தோடு தொடர்புடைய வேறு பொருளுக்கு ஆகி வருவது காலவாகுபெயர் எனப்படும்

(எ.கா) மார்கழி சூடினாள்
மார்கழி என்னும் சொல் தமிழ்த்திங்களைக் குறிக்கும் காலப் பெயராகும். ஆனால் சூடினாள் என்னும் குறிப்பால் மார்கழித் திங்களில் மலர்ந்த மலரை (டிசம்பர் பூ எனப்படும் நீலக்கனகாம்பரம்) உணர்த்துகிறது. எனவே இது காலவாகுபெயர் ஆகும்.
(எ.கா)  கோடை நன்றாக விளைந்துள்ளது. 
4.சினையாகு பெயர்

ஒரு சினையின் (உறுப்பு) பெயர், அதனோடு தொடர்புடைய முழுப்பொருளுக்கு ஆகி வருவது சினையாகுபெயர் எனப்படும்.

(எ.கா) ஆசிரியர் தலைக்கு ஒரு வினாத்தாள் தந்தார்.

‘தலை’ என்பது நம்முடலின் ஓர் உறுப்பு இத்தொடரில் உள்ள ‘தலை’ என்னும் உறுப்பின் பெயர், ஆனால் அடுத்துள்ள குறிப்புச் சொற்களால் மாணவனைக் குறிக்கின்றது. எனவே இது சினையாகுபெயர் எனப்படும்.

(எ.கா) தலைக்கு ஒரு பழம் கொடு
5. பண்பாகு பெயர்
ஒரு பண்புப்பெயர், அப்பண்பைக் கொண்ட பொருளுக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும். இது ‘குணவாகு பெயர்’ என்றும் வழங்கப் பெறுகிறது.

(எ.கா) இளங்கோ இனிப்பு வழங்கினான்

இத்தொடரில் இனிப்பு என்னும் பண்புப்பெயர், ‘வழங்கினான்’ என்னும் குறிப்பால் இனிப்புச் சுவையுடைய பொருளை உணர்த்துகிறது. எனவே இது பண்பாகுபெயர் எனப்படும்
(எ.கா) செவலையை வண்டியில் பூட்டு
6. தொழிலாகுபெயர்

ஒரு தொழிற்பெயர், அத்தொழிலிருந்து பெறப்படும் பொருளுக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.
(எகா) அழகன் அவியல் உண்டான்.

இத்தொடரில் அவியல் என்னும் சொல் காய்கறிகளை என்னும் பொருளைத் தருகிறது. எனவே இது தொழிலாகுபெயர் எனப்படும். அவித்தலாகிய தொழிலைக் குறிப்பதாகும். ஆனால் ‘உண்டான்’ என்னும் பயனிலையால் அவிக்கப்பட்ட காய்கறியினை உண்டான்.
(எ.கா) பொரியல் சுவையாக இருந்தது.
7. தானியாகுபெயர்
ஓர் இடப்பெயர். அவ்விடத்திலுள்ள பொருளுக்கு ஆகிவருவது இடவாகுபெயராகும். ஓரிடத்திலுள்ள பொருள் அவ்விடத்திற்கு ஆசி வருவது தானியாகுபெயர் எனப்படும்.

(எ.கா) பாலை வண்டியில் ஏற்று
பால் என்னும் நீர்மப்பொருள் ஏற்றும் என்னும் குறிப்பால், பால் வைக்கப்பட்டிருக்கும் தானமாகிய (இடமாகிய) குடத்திற்கு ஆகி வந்து தானியாகு பெயர் ஆயிற்று (தானம் – குடம், தானிக் பால்

8. உவமையாகு பெயர்

உவமானப் பெயர், தொடர்புடைய உவமேயப் பொருளுக்கு ஆகி வருவது உவமையாகுபெயர் எனப்படும்.

(எ.கா)  காளை வந்தான்
காளை மாட்டைக் குறிக்கும் பெயராகிய காளை என்பது காளை மாடு போன்ற வலிமையும் வீரமும் வாய்ந்த ஆண் மகனுக்கு ஆகி வந்தது. காளை போன்றவன் வந்தான். எனவே இது உவமையாகுபெயர் ஆயிற்று
(எ.கா) பாவை ஆடினாள்
9. கருவியாகுபெயர்
ஒரு கருவியின் பெயர், அதனால் உண்டாகிய காரியப் பொருளுக்கு ஆகி வருவது கருவியாகுபெயர் எனப்படும்.

(எ.கா) குழல்கேட்டு மகிழ்ந்தான்.
குழல் என்னும் இசைக் கருவியின் பெயர், அதனால் உண்டான இசைக்கு ஆகிவந்து குழலோசை கேட்டு மகிழ்ந்தான் என்றானதால், இது கருவியாகுபெயர் ஆயிற்று

10. காரியவாகு பெயர்
ஒரு காரியத்தின் பெயர், அது உண்டாவதற்குக் காரணமான கருவிப் பொருளுக்கு ஆகிவருவது காரியவாகுபெயர் எனப்படும். இது கருவியாகு பெயர்க்கு எதிர்மறையாகும்.
(எ.கா)  களவியல் படித்தான்.
களவியல் என்றும் காரியத்தின் பெயர் அதனை  உணர்த்துவதற்குக் கருவியாகிய நூலிற்கு ஆகி வந்தது, களவியல் என்னும் அகத்திணை இலக்கணத்தைப் படித்தான் என்றானதால் இது காரியவாகு பெயர் ஆயிற்று.

11. கருத்தா ஆகுபெயர்
ஒரு கருத்தாவின் பெயர், அவரால் இயற்றப்பட்ட நூலிற்கு ஆகிவருவது கருத்தா ஆகுபெயர் எனப்படும்.

(எ.கா) அழகனுக்குத் திருவள்ளுவர் மனப்பாடம்
திருக்குறளை எழுதிய கருத்தாவின் பெயர் திருக்குறள் என்பதாகும். இத்தொடரில் திருவள்ளுவர் என்னும் பெயர் அவரைக் குறிக்காது அவரால் எழுதப்பட்ட காரியமாகிய திருக்குறளுக்கு ஆகிவந்ததால் இது கருத்தாகுபெயர் ஆயிற்று.

12. சொல்லாகுபெயர்
ஒரு சொல்லின் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகிவருவது சொல்லாகுபெயர் எனப்படும்.

(எ.கா) தம்பி என் சொல்லைக் கேட்டான்

’சொல்’ என்னும் பெயர், கேட்பான் என்னும் குறிப்பால், எழுத்துகளாகிய சொல்லைக் குறிக்காது அறிவுரைக்கு ஆகிவந்ததால் சொல்லாகுபெயர் ஆயிற்று.

(எ.கா) பாட்டுக்கு உரை எழுதுக.
13. எண்ணல் அளவை ஆகுபெயர்
எண்ணைக் குறிக்கும் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது எண்ணல் அளவை ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா) நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

இத்தொடரில் உள்ள நான்கு, இரண்டு என்னும் சொற்கள் எண்ணிக்கைப் பொருளை உணர்த்தாது. நான்கு அடிகளாலான நாலடியாரையும், இரண்டடிகளாலான திருக்குறளையும் குறிக்கின்றன. இவ்வாறு எண்ணலளவைப் பெயர் தொடர்புடைய நூல்களுக்கு ஆகிவருவதால் இஃது எண்ணலளவையாகுபெயர் எனப்படும்.
(எ.கா)  தலைக்கு ஒன்று கொடு
14. எடுத்தல் அளவை ஆகுபெயர்
எடுத்தல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது எடுத்தல் அளவை ஆகுபெயர்.

(எகா) கிலோ என்ன விலை?
‘கிலோ’ என்னும் எடுத்தலளவைப் (நிறுத்தலளவை) பெயர், தொடர்புடைய பொருளுக்கு (அரிசி, பருப்பு, சர்க்கரை ) ஆகி வந்ததால் இது எடுத்தலளவையாகு பெயர் எனப்படும்.

15. முகத்தல் அளவை ஆகுபெயர்
முகத்தல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகிவருவது முகத்தல் அளவை ஆகுபெயர் எனப்படும்.

(எ.கா) இரண்டு லிட்டர் கொடு
லிட்டர் என்னும் முகத்தல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு (பால், மண்ணெண்ணெய்) ஆகி வந்தது. எனவே இது முகத்தளலவையாகு பெயர் எனப்படும்.

16. நீட்டல் அளவை ஆகுபெயர்
நீட்டல் அளவைப் பெயர் தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது நீட்டல் அளவை ஆகுபெயர் எனப்படும்.

(எ.கா) சட்டைக்கு இரண்டு மீட்டர் வேண்டும்.
மீட்டர் என்னும் நீட்டல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு (துணி) ஆகி வந்தது. எனவே இது நீட்டல் அளவையாகுபெயர் எனப்படும்.

 

நற்றமிழ் வளர்த்த நாடகக்கலை |கவிஞர்.ச.குமார்

நற்றமிழ் வளர்த்த நாடகக்கலை கவிஞர்.ச.குமார்

முத்தகவிஞர்.ச.குமார்மிழில் பலரும் விரும்புவது  நாடகமே


நாட்டை அகத்துள் கொள்வாய் கலையாய்


நடிப்பில் உலகியல் பார்வை தெரியுமே


கூத்துக்கலை நடிகர்மக்களை ஈர்த்திடுவார்


உணர்வில் உரைவசனம் மெய்சிலிர்க்க செய்திடுமே


போலச்செய்தல் தனித்துவம் வாய்ந்தது அல்லவா?


தொன்மை இலக்கணம் மெய்ப்பாடு கூறுமே


சிலம்பிலே அரங்கேற்றம் நாடகம் பேசிடுமே


நாடகக்கலை வளர்த்த பரிதிமாற் புகழுக்குரியவரே


மதங்க சூளாமணிக்கு  விபுலானந்தர் பெருமையுற்றார்


சாகுந்தலத்திற்கு மறைமலையடிகள் சிறப்பு செய்தாரே


குறவஞ்சி நாடகம் தமிழின் சிறப்பல்லவோ..


மன்னன் வேத்தியல் மக்கள் பொதுவியல்


நாட்டின் கலையில் நடிப்புச் செல்வர்களே


பார்ப்பவன் பார்த்து பாராட்ட மறவாதே


நடப்பியல் தெரிய நாடகத்தை  காணச்செல்


கலைகள் உன்னால் வளர்ச்சி அடைந்திடுமே


படைப்பாக்கம்


கவிஞர்.ச.குமார்

உதவிப் பேராசிரியர்


இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி

வல்லினம் மிகா இடங்கள் / ஒற்று மிகா இடங்கள்

வல்லினம் மிகா இடங்கள்

1.வல்லினம் மிகும் இடங்கள்

வல்லினம் மிகும் இடங்கள்| ஒற்று மிகும் இடங்கள்

வல்லினம் மிகும் இடங்கள்
           தமிழ் மொழியில் எழுதும்போது எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுதுவதே மிக நன்று. பிழைகளோடு எழுதினால் நாம் சொல்ல வந்த கருத்துக்கு மாறாகவும் வேறொரு செய்தியாகவும் மாறக்கூடும். அதனால் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுதல் வேண்டும்.
           
      இவற்றில் முதலாவதாகச் சந்திப்பிழைகளைப் பார்க்கலாம். தேவையான இடத்தில் மட்டுமே ஒற்றுகளைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஒருசில விதிமுறைகளும் உண்டு.  அவற்றை மட்டும் பார்த்தால் இச்சந்திப்பிழைகளைத் தவிர்க்கலாம்.
 
           இதற்கு நாம் இரண்டு இடங்களை மட்டும் உற்று நோக்கினால் போதுமானது.

1.நிலைமொழி மற்றும் நிலைமொழியின் ஈற்றெழுத்து

2.வரும்மொழியின் முதலெழுத்து க,ச,த,ப – ஆக இருக்க வேண்டும்.

       ( க்,ச்,ட்,த்,ப்,ற் என்ற 6 வல்லின எழுத்துகளில் க,ச,த,ப என்ற 4 எழுத்துகளும் வரும்மொழியில் முதலாவதாக வந்தால் மட்டுமே அவ்விடத்தில் ஒற்று மிகும் என்பது விதி. அதனால்தான் இதற்கு வல்லினம் மிகும் எழுத்துகள் என்கிறோம். அந்த 4 எழுத்துகளின் ஒற்று க்,ச்,த்,ப் என்று வரும்)

இராமனை + கண்டேன் = இராமனைக் கண்டேன் (க் – என ஒற்று மிகுந்தது)

இங்கு,

இராமனை என்பது நிலைமொழி (நிலையாக நிற்கும் சொல்)

கண்டேன் என்பது வரும்மொழி (நிலைமொழியோடு சேர வரும் சொல்)

       இராமன் + ஐ என்பதில், நிலைமொழி ஈற்றெழுத்து இரண்டாம் வேற்றுமை உருபு    ன் +ஐ = னை என்று வருகிறது.  வரும்மொழியின் முதலில் ”க” என்று வல்லினம் வருவதால் இவ்விடத்தில்  ”க்”  என்ற ஒற்று வரும்.

     கீழ்க்கண்ட அனைத்து விதிகளும் நிலைமொழிக்கு மட்டுமே பொருந்தும்.  வரும்மொழியில் முதலெழுத்து – க,ச,த,ப என இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்தால் போதும்.  வல்லினம் மிகும் இடங்கள், ஒற்று மிகும் இடங்கள் என்றும் அழைப்பர்.

1.நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்க, வருமொழி முதலில் வரும் வல்லினம் மிகுந்து ஒலிக்கும். (உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்)
 
நிலா + சோறு = நிலாச்சோறு

மழை + காலம் = மழைக்காலம்

பனி + துளி =பனித்துளி


 

2.அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் ‘எ’ என்னும் வினா எழுத்திற்குப் பின்னும் வலி மிகும்.

அ+ குடம்  = அக்குடம்

இ+ புத்தகம்  =இப்புத்தகம்

உ +  சிறுவன் =உச்சிறுவன்

எ + தொழில் =எத்தொழில்


 

3.அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

அந்த + கிணறு = அந்தக்கிணறு  

இந்த + தோட்டம் = இந்தத்தோட்டம்

எந்த + செயல் = எந்தச்செயல்


 

4.அப்படி, இப்படி எப்படி என்னும் சொற்களின் பில் வல்லினம் மிகும்.

அப்படி + கூறினான் = அப்படிக்கூறினான்

இப்படி + சொன்னான் = இப்படிச்சொன்னான்

எப்படி + தந்தான் = எப்படித் தந்தான்


 

5.அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களின் பில் வல்லினம் மிகும்.

அங்கு +சென்றான் =அங்குச்சென்றான்

இங்கு +போனான்  = இங்குப்போனான் 

எங்கு + தேடினான் = எங்குத்தேடினான்


 

6.ஆறாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும்.

தாமரை+ பூ = தாமரைப்பூ (தாமரையின் பூ)

குதிரை +கால் = குதிரைக்கால் (குதிரையினது கால்)

 

7. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்

குடி +பிறந்தார் =  குடிப்பிறந்தார் (குடியின்கண் பிறந்தார்)

வழி +சென்றார் = வழிச்சென்றார் (வழியின்கண் சென்றார்)


 

8.இரண்டாம் வேற்றுமை உருபிற்குப்பின் வல்லினம் மிகும்.

கடையை + கண்டேன் = கடையைக் கண்டேன்

பொருளை + தேடு = பொருளைத் தேடு

புலியை + கொன்றான் = புலியைக் கொன்றான்

நூலை + படி = நூலைப் படி


 

9.நான்காம் வேற்றுமை உருபிற்குப்பின் வல்லினம் மிகும்

பள்ளிக்கு + சென்றான் = பள்ளிக்குச்சென்றான்

கடைக்கு + போனான் = கடைக்குப்போனான்

 

10.வன்றொடர்க் குற்றுயலுகரத்தின் பின் வல்லினம் மிகும்

பாக்கு + தூள்  = பாக்குத தூள்

தச்சு  + தொழில் = தச்சுத்தொழில்

கேட்டு + சொல் = கேட்டுச்சொல்

எட்டு + தொகை = எட்டுத்தொகை

பத்து + பாட்டு = பத்துப்பாட்டு


 

11. மென்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் சில இடங்களில் வல்லினம் மிகும்.

மருந்து + கடை =  மருந்துக்கடை

பண்பு + தொகை = பண்புத்தொகை

கன்று + குட்டி  = கன்றுக்குட்டி


 

12.இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம்  மிகும்

சாரை + பாம்பு = சாரைப் பாம்பு

மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள்

மல்லி + பூ. =மல்லிப்பூ


 

13.பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.

சதுரம் + பலகை = சதுரப்பலகை

வட்டம் + பாறை = வட்டப்பாறை

பச்சை + பட்டு = பச்சைப்பட்டு

நீல + கடல் = நீலக்கடல்


 

14.அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்

தேட + சொன்னான் = தேடச்சொன்னான்

என + கூறு = எனக்கூறு

நன்றாக + படிப்பான் = நன்றாகப் படிப்பான்

பாட +தெரியுமா?  = பாடத்தெரியுமா?


 

15.ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்

பூ + பறித்தான் = பூப்பறித்தான்

கை + காசு = கைக்காசு

தை + திங்கள் = தைத்திங்கள்


 

16.ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும்.

நன்றாய் + பேசினார் = நன்றாய்ப் பேசினார்

போய் + தேடு = போய்த்தேடு


 

17.இனி, தனி என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.

இனி + காணலாம் = இனிக் காணலாம்

தனி + தமிழ்  = தனித்தமிழ்


 

18.என, ஆக என்னும் சொற்களுக்குப்பின் வரும் வல்லினம்

என + கூறினான் = எனக்கூறினான்

ஆக + சொன்னான் = ஆகச்சொன்னான்

 

19. சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.

சால +  சிறந்தது = சாலச்சிறந்தது

தவ + பெரிது = தவப்பெரிது

 


20.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வரும் வல்லினம் மிகும்.

உண்ணா + சோறு = உண்ணாச்சோறு

ஓடா + குதிரை = ஓடாக்குதிரை

அழியா + புகழ் = அழியாப்புகழ்


 

21.தனிக்குறிலையடுத்து வரும் ஆ என்னும் நெடிலுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.

பலா சுளை  = பலாச்சுளை

இரா+ பகல் =  இராப்பகல்

கனா + காலம்  = கனாக்காலம்


 

22. இனி, தனி, மற்று, மற்ற, மற்றை எனும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

இனி + போகலாம் = இனிப்போகலாம்

தனி + காடு = தனிக்காடு

மற்று + கண்டவை = மற்றுக்கண்டவை

மற்ற+பொருட்கள் = மற்றப்பொருட்கள்

மற்றை + கூறுகள் = மற்றைக்கூறுகள்


 

23.முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
 
திரு + குறள் = திருக்குறள்

பொது + சொத்து = பொதுச் சொத்து


 

24.இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகையில் வல்லினம்மிகும்.

தண்ணீர்+ குடம் = தண்ணீர்க்குடம்

மலர் + கூடை = மலர்க்கூடை


 

25. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

மரம் + பெட்டி = மரப்பெட்டி

இரும்பு + சாவி = இரும்புச்சாவி

 

26.நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

சட்டை + துணி = சட்டைத்துணி

குடை + கம்பி = குடைக்கம்பி


 

27.ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

அடுப்பு + புகை =அடுப்புப்புகை

விழி + புனல் = விழிப்புனல்


 

28.உவமைத்தொகையில் வல்லினம் மிகும்

பவளம் + செவ்வாய் = பவளச் செவ்வாய்

மலர் + கண் = மலர்க்கண்

 

29.நெடில் தொடர் குற்றியலுகரத்திற்குப் பின் வல்லினம் மிகும்.

நாடு + பற்று = நாட்டுப் பற்று

வயிறு +போக்கு = வயிற்றுப்போக்கு

முரடு + காளை = முரட்டுக்காளை

காடு + தேன்   = காட்டுத்தேன்.


 

30. ய்,ர்,ழ் என வரும்போது ஒற்று இரட்டிக்கும்

வாய்ப்பு, வார்ப்பு, வாழ்க்கை

 

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »