Medical thoughts Inspired by Sirupanchamoolam|M.Gohila

சிறுபஞ்சமூலம் உணர்த்தும் மருத்துவ சிந்தனைகள்
Abstract
      
      Sirupanchamoolam consists of five roots which cure the diseases of the human body and similarly this book is a miracle medicine for curing the diseases of the human body. In today’s time, there are many diseases related to the heart. This book plays a big role in reducing them. This article will be useful for everyone.
                        

 “சிறுபஞ்சமூலம் உணர்த்தும் மருத்துவ சிந்தனைகள்”
 

முன்னுரை
          
      சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து வகையான வேர்களைக் கொண்டுள்ள ஒரு மருத்துவ நூலாகும் இதன் ஆசிரியர் காரியாசன் ஆவார் என்னுள் தமிழர்களின் மருத்துவ சிந்தனைகளையும் இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும் ஒத்திருக்கிறது  இவற்றில் உள்ள ஐந்து வேர்களும் உடலுக்கு நன்மை பயக்கும் மருத்துவ குணங்களாகும்.

பஞ்ச மூலத்தில் உள்ள ஐந்து வேர்கள்
1.சிறுவழுதுணை

2. நெருஞ்சி

3. சிறு மல்லி வேர்

4. பெருமல்லி வேர்

5. கண்டங்கத்திரி வேர்
        
       இந்த ஐந்து வேர்களும் பல்வேறு நோய்களை குணப்படுத்தவும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது தமிழர் மருத்துவத்தில் முக்கிய நூலாக கருதப்படுகிறது இதன் மூலம் இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவமும் பண்டைய தமிழரின் மருத்துவ அறிவும் வெளிப்படுகிறது.

நோய் பற்றிய சொற்குறிப்புகள்
        
         நோயின் குணத்தை கண்களால் காண , கருத்தினால் மட்டுமே அறிய முடியும்.
  
“நோயும் வேட்கையும்  
நுகர்வும் என்று அங்கு  
ஆவியின் வருவோம் கிளவி எல்லாம்  
நாட்டிய மரபின்   
நெஞ்சு  கொனின் அல்லது   
காட்ட லாகப் பொருள் என்பர்”   (பொருளியல்53)
         
மேலும், வயா என்பது கருவுற்றிருக்கும் வேளையில் வரும் நோயைக் குறிக்கிறது.
 
“வயா என் கிளவி வேட்கை பெருக்கம்” (சொல் உயிர்854)
                
அதாவது இந்நோய் விலங்கு, தாவரம், பெண் ஆகியோருக்கு ஏற்படும் நோயாகும்.

மருத்துவர்         
        நோய்க்கு மருந்து கொடுப்பவரை அறிஞர் என்றும் மருத்துவர் என்றும் குறிப்பிடுவர்.
 வாயுறை என்பது வாய் வழியே 
 அருந்துகின்ற மருந்து என்னும் 
பொருள் தரும்.
 உறை என்பது மருந்தை குறிக்கும்.

“உற நோய் தீர்க்கும் மருந்துஉறை என்ப”  (நிகண்டு.2788) 
மருத்துவ முறைகள் மூன்று
  
1.ஒப்புறை
 
2.எதிர் உறை
 
3.களப்புறை
           
ஆகிய மூன்றும் தமிழ் மருத்துவத்தில் மருத்துவ முறைகளாகும்.
 
திருக்குறள் கூறும் மருத்துவம்
          
     நல்ல மருத்துவம் என்பது நோயை நீக்குவது அன்று நோயே வராமல் தடுப்பது என்ற கருத்தாக்கமே வள்ளுவனின் சிந்தனையாகும்.உணவு செரித்த பின் அடுத்த வேலை உணவு உண்பவனுக்கு மருந்தே வேண்டாம் என்பது, புது சிந்தனையாகும்.              

“மருந்தென வேண்டாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி   யுனின்” குறள்
            
     அளவு அறிந்து உண்பவன் நெடுநாள் உயிர் வாழ்வான் அனைத்து நோய்களின் பிறப்பிடம் முறையற்ற உணவு முறை என்று வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளான்.

உணவே நோய்            
        பெரும்பாலான நோய்களுக்கு மூல காரணமாக உணவு அமைகிறது உணவு காரணமாக நோய் கிருமிகள் பரவி உடலின் நோயை ஏற்படுத்துகின்றன. நாம் உண்ணும் உணவு தூய்மையானதாக இருப்பின், அவற்றினை உடலுக்கு ஏற்றவாறு உண்ண வேண்டும். சுவையுடன் இருப்பதற்காக, அதிக அளவில் உணவு உண்டால் நோயை உண்டாக்கும். செரிமானம் ஆனப்பின்பு  உண்பதே சிறந்த முறையாகும்.

சங்ககாலத்தில் மருத்துவ முறை 
            
        மருத்துவ அறிவோடு பலர் நல்ல இலக்கியத்தில் அறிஞர்களாகவும் திகழ்ந்துள்ளனர். என்பதற்கு மருத்துவன் தாமோதரனார் என்றும் சான்றாவார். புலவராக திகழ்ந்தமையால் இன்று அவர் பெயர் மட்டும் அறியப்படுகிறது. அன்று எண்ணற்ற மருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள் “ நீர் வேட்கையும் உணவு பசியும்” கூட பிணி என்கின்றனர்.

“வருந்திய செல்லல் தீர்த்த திறனறி ஒருவன்
மருத்துவக்  கோடலின் கொடிதே”( கலி)
               
       என்ற கலித்தொகை பாடல் அடிகள் இதற்கு சான்றாகும் நோயாளி கேட்டதை கொடுக்காது அவனுக்கு எது நல்லது என்பதை ஆராய்ந்து  மருந்து அளிக்கவேண்டும் என்பார். தமிழர்கள் மருத்துவத்திற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர் என்பது எட்டுத்தொகை வழி அறிய முடிகிறது.
சிறுபஞ்சமூலம் மருத்துவ பயன்பாடு
         
      சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து  மூலிகை கொண்ட ஓர் இயற்கை மருந்து.அதுபோல் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகளை தொகுத்து கூறப்பட்டுள்ளது. அதாவது ஐந்து ஒழுக்க நெறிகள் இடம் பெற்றுள்ளன.

ஐந்து ஒழுக்க நெறி 
 
1.கொலை செய்யாமை
 
2.பொய் கூறாமை
 
3.புலால் உண்ணாமை
 
4.களவு செய்யாமை
 
5. நல்லொழுக்கம்
           
       ஆகிய ஐந்தும் ஒரு மனிதனின் நல் வாழ்விற்கு இன்றியமையாதவை  என்று கூறுகிறது. இவற்றினை கடைபிடித்தால் மனிதன் வாழ்வில் சிறந்த வழியை அடைய முடியும் என்று சிறுபஞ்சமூலம் கூறுகிறது. மனிதன் வாழ்நாளில் உணவு என்பது முக்கியமான அங்கம் அவற்றோடு மட்டுமல்லாமல் எண்ணமும் தூய்மையாக இருக்க வேண்டும் நல் ஒழுக்கங்களையும் பின்பற்ற வேண்டும் என்னும் அறச்  சிந்தனையை வலியுறுத்துகிறது. தரத்தின் வழி வாழ்ந்தால் நற்பயனை அடைய முடியும்.

கொன்றான் கொலைஐய் உடன்பட்டான், கோடாது
கொன்றதனை கொண்டான், கொழிக்கும் கால்
கொன்றதனை அட்டனிவுண்டா அனைவரின்னும்
ஆகுமாயெனகட்டதெரிந்த பாவம் கருது    (சிறுபஞ்சமூலம் 70)
       
       புலால் உணவு தீங்கானது அது பல தீமைகளுக்கு அடிப்படையான தாகும் ஊன் உண்டவன் நல்  மனதினைத் தளர்த்தி உடலை வளர்த்து கூட ஒழுக்கத்திற்கும் புகுத்திவிடும். என்று குறிக்கப்படுகிறது உயிர்கொலைக்கு உடன்படுவதும் ,கொன்ற ஊனை விலைக்கு வாங்குவது ,சமைப்பதும் பரிமாறுவதும் ஆகிய எல்லா நிலையிலும் ஊன் வருவதாக உள்ளது. இந்த வரிகள் உயிர்கொலை செய்வதிலும் கொலைக்கு உடன்படுவதிலும் கொல்லப்பட்ட உயிரின் ஊனை உண்பதிலும் உள்ள பாவத்தை சுட்டுகிறது. கொலைத் தொழிலைசெய்யாமல் இருப்பது நல்லது என்பதையே இந்தப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

முடிவுரை
          
      இத்தலைப்பானது மனிதனின் மனநிலையானது இன்றய காலகட்டத்தில் ஒருநிலையாக இல்லை. மனிதனின் மனநிலையையும் சிந்தனையும் நன்னெறிப்படுத்துவதாக இவை அமைகிறது. மருத்துவம் சார்ந்ததோடு மட்டும்மின்றி மனிதனின் மனதையும் ஒருநினைப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.

துணை நின்ற நூல்கள்
1.தொல்காப்பியம் சொல்லதிகாரம்-திருஞானசம்பந்தம், கதிர் பதிப்பகம் திருவையாறு.

2.தொல்காப்பியம் பொருள்- திருஞானசம்பந்தம், கதிர் பதிப்பகம் திருவையாறு.

3.  தமிழ் நிகண்டுகள் வரலாற்றுப்பார்வை -டாகடர் பி.மாதையன் ,தஞ்சை தமிழ் பதிப்பகம் தஞ்சாவூர்.

4 திருக்குறள் – தேவிரா உரை -ஸ்ரீ நந்தினி பதிப்பகம் 38/16முதல் தெரு  அண்ணா நகர்மேற்கு விரிவாக்கம் சென்னை .

5. சிறுபஞ்சமூலம்- மூலமும் உறையும் கௌர பதிப்பகம்.  

6. இலக்கியவரலாறு- பேரா டாக்டர் பாக்கியமேரி ,பாரிநிலையம் சென்னை.  

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்  

Iniyavaikatral peer reviewedம.கோகிலா
முனைவர் பட்ட  ஆய்வு மாணவர் (பகுதி நேரம்)

(பதிவு எண் BDU2120632778825)

தேசியக் கல்லூரி (தன்னாட்சி),
(பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவுப் பெற்றது),
திருச்சி.

ஆய்வு நெறியாளர்

முனைவர் நா. மாணிக்கம்

 இணைப் பேராசிரியர், தமிழ் ஆய்வுத்துறை, 

 தேசியக் கல்லூரி (தன்னாட்சி), 

(பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவுப் பெற்றது),

திருச்சி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here