Bharathi’s Journalistic Work|Dr.V.Kalaiyarasi

பாரதியின் இதழியல் பணி
Abstract
         Bharathiar created social awareness among Tamilans ​​through magazines since 1904. Bharathi made a big change in the 20th century. He raised his voice for women through the magazine. Bharathi worked in various magazines. Bharathi was the one who eliminated the system of heading in English. This article explains the impact Bharathiar made on journalism.


“பாரதியின் இதழியல் பணி”

ஆய்வுச்சுருக்கம்           
      பாரதியார் தமிழர்களிடையே 1904 ஆம் ஆண்டு முதல் சமுதாய விழிப்புணர்வை இதழ்கள் மூலமாக ஏற்படுத்தினார். 20 ஆம் நூற்றாண்டில் பாரதி பெரும் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளார். பெண்களுக்காக இதழின் வழியே உரிமைக்குரல் எழுப்பினார். பாரதி பல்வேறு இதழ்களில் பணியாற்றினார். ஆங்கிலத்தில் தலைப்பிடும் முறையை நீக்கியவர் பாரதி. இவ்வாறு பாரதியார் இதழியலில் ஏற்படுத்திய தாக்கங்களை இக்கட்டுரை விளக்குகிறது.

முன்னுரை
      தொன்மையும், வரலாற்றுப் பெருமையும், பண்பாட்டுச் செழுமையும் கொண்டு உலகில் இன்று வாழும் மக்கள் இனங்களில் தமிழினத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. தமிழ் இலக்கிய உலகின் சூரியனாகச் சுப்ரமணிய பாரதியார் தோன்றினார் இந்து பத்திரிகை ஆசிரியர் சுப்பிரமணிய அய்யரின் அழைப்பின் காரணமாக பத்திரிகை உலகில் அடியெடுத்து வைத்தார். பாரதியின் இதழியல் பணி பற்றி கட்டுரையில் காண்போம்.

      மதுரை சேதுபதிப்பள்ளியில் தமிழாசிரியராகத் தமது பணியைத் தொடங்கிய பாரதி பின்னர் இந்து பத்திரிகையில் நுழைந்தார். இதன் மூலம் அரசியல் நோக்கும் இலக்கிய நோக்கும் விரிவடைந்தன என்று கூறலாம். மக்களைக்கவரும் வகையில் சிந்து தெம்மாங்கு முதலிய யாப்பு வகைகளை கையாண்டு பாடல்களைப் பாடினார்.

     1904இல் கல்விச்சக்கரவர்த்தி பாரதியார் சுதேசமித்திரன் நாளிதழில் ஆசிரியராக பொறுப்பேற்றார். இதன் மூலம் தூக்கத்தில் இருந்த தமிழர்களைத் தட்டி எழுப்ப நாளிதழை பயன்படுத்தினார். இதழ்களின் மூலம் சமுதாய விழிப்புணர்வும் அரசியல் விழிப்புணர்வையும் எழச்செய்தார். தமிழில் முதல் அரசியல் இதழ் என்ற பெருமைப்பெற்றது. சுதேசமித்திரன் இதழ் முதலி 1889 இல் வார இதழாக தொடங்கப்பட்டு பின்னர் 1889 இல் நாளிதழாக மாற்றப்பட்டது. தினசரிப் பத்திரிக்கைகளில் முக்கியமான வேலை ஆங்கிலத்தில் வரும் செய்திகளை தமிழில் வேகமாக மொழிபெயர்ப்பது. கடினமான செய்தி, நீளமான பிரசங்கம் போன்றவற்றை தமிழில் எளிய நடையில் பாரதியார் மொழிபெயர்த்தார். 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இலக்கியப் போக்கு திருப்புமுனையை உருவாக்கினார் பாரதி.

      தேசப்பற்று பாடல்களைப் பாடி வந்த அவர் 1907ல் மூன்று பாடல்கள் அடங்கிய நான்கு பக்க கவிதை நூலை கதேச கீதங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டார். 1908ல் துவக்கத்தில் சுதேச கீதங்கள் முதற்பாகமும், புதிய கட்சியின் கொள்கைகள் காங்கிரஸ் யாத்திரை ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டார்.

பெண் முன்னேற்ற பத்திரிக்கை
     சக்கரவர்த்தினி என்ற இதழில் 1905 ஆகஸ்ட் மாதம் யார் ஆசிரியராக பொறுப்பேற்று நடத்தினார். இந்த இதழ் முழுக்க பெண்கள் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட இதழ் ஆகும். மாதர்களுக்கு என தனியாக மாதப் பத்திரிகை தொடங்கப்பட்டது.
தன் அதிபதி வைத்தியநாதையர் ஆவார். இது மாதர் பத்திரிகை என்பதால் பாரதியார் மாதர் சுதந்திரங்கள், மாதர்களின் நிலையான பாரத குமாரிகள் முதலிய தலைப்புகளில் மாதர் முன்னேற்றத்துக்கான கட்டுரைகளை எழுதினார். சக்கரவர்த்தினி 13 மாதங்கள் ஆசிரியராக பணியாற்றிய பாரதி. இவ்வித சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை வரதட்சணை, கைம்பெண் கொடுமை இளமை மணம் ஆகியவற்றை எதிர்த்துப் பெண்கல்வி. பெண்ணுரிமை பற்றிய கட்டுரைகளை வெளியிட்டார்.

இந்தியா இதழில் பாரதியின் பங்கு
        நாட்டு விடுதலைக்காக தம்மால் முடிந்தவரை வீரச்சுவை மிக்க பாடல்கள், கட்டுரைகள், கேலிச்சித்திரங்கள், தலையங்கங்கள் மூலமாக “இந்தியா” என்ற பத்திரிகையில் பாரதியார் தம்முடைய சுதந்திர வேட்கையை துணிவுடன் மக்கள் மத்தியில் பரப்பினார். இதன் காரணமாக பாரதி மீது வாரண்ட் இருப்பதாக நண்பர்கள் சொல்ல அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாரதியார் புதுவைக்கு சென்றார். அங்கேயும் போலீஸ் கெடுபிடி இருந்தது. இருப்பினும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் புதுவையில் இருந்த படி இந்திய இதழை தொடர்ந்து துணிவுடன் நடத்தினார்.
1906 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ் வார இதழாக ஆரம்பமாகிய இவ்விதழ் 1908ல் பெரிய அளவில் 8 பக்கங்களுடன் வந்தது. தென்னாட்டில் இதழ்தோறும் கார்டன் வெளியிட்ட முதல் பத்திரிகையாக இந்தியா விளங்கியது. அரசியல் கட்சி கட்டுரைகள் தவிர பாரதியின் பாடல்களும் கதைகளும் இதழில் வெளிவந்தன “ஞானரதம்” இந்தியாவில் தொடர்கதை போல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது

பாரதி பணியாற்றிய இதழ்கள்
      அரவிந்தர் கல்கத்தாவில் நடத்திவந்த தர்மா என்ற இதழை அடியொட்டி புதுவையில் பாரதி தர்மம் என்ற இதழை நடத்தினார். வ.வே.சு.ஐயர், பாரதி, நீலகண்ட பிரம்மச்சாரி ஆகிய மூவரும் சேர்ந்து தர்மம் என்ற இதழை வ.வே.சு.ஐயர் வீட்டு முகவரியில் நடத்தி உள்ளனர். இவ்விதழ் ஆர்.கிருஷ்ணசாமி அய்யர் என்பவரால் வெளியிடப்பட்டது. இவ்விதழின் வாயிலாக பாரதியார் சுதேசியம் சம்பந்தப்பட்ட படைப்புகளை மக்களுக்காக வெளியிட்டு வந்தார்.

       சென்னையில் புகழ்பெற்ற டாக்டராக விளங்கிய டாக்டர் நஞ்சுண்டராவ் பாரதிக்கா நடத்திய இதழ் தான் பால பாரதா அல்லது யங் இந்தியா என்ற பத்திரிக்கை. தத்துவம். தேசியம், மக்கள் வாழ்வியல் புனரமைப்பு, வேதாந்தம் குறித்த செய்திகள் இம்மாத பத்திரிகையில் வெளிவந்தன. இதன் முழு பெயர் பாலபாரதம் பாலபாரதி என்று குறிப்பிடுகின்றனர். இப்பத்திரிகையில் பாரதி சுவாமி விவேகானந்தரின் எழுச்சி உரைகளையும் தேசபக்தி என்னைப் பற்றி எழுதிய கட்டுரைகளை இதில் வெளியிட்டிருந்தார். இவ்விதழின் முகப்பு அட்டையில் பால பாரதா அர் இங் இண்டியா என்பதை விவேகானந்தரின் குறிக்கோளை அடையும் வரை நில்லமின் என்னும் கருத்து மொழி ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்தது.

      பாரதி சொந்தமாக தாமே நடத்திய பத்திரிக்கை கர்மயோகி இப்பத்திரிகை 1907 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்ட இதில் ஆரிய தர்மம், பாரத நாட்டு பாரம்பரியமிக்க கலைகள், தொழில்கள், காவியங்கள், சாஸ்திரங்கள், அரசியல் விஷயங்கள் போன்ற பல செய்திகளை விவரிக்கும் வகையில் இப்பத்திரிகை இருந்தது இது ஒரு மாதப் பத்திரிகை ஆகும்.

புனைப்பெயர்
        ஞான பாது இதழில் பாரதியார் தம்முடைய படைப்பான கவிதைகளை எழுதினார். 1913 முதல் 1915 வரை நடந்த இவ்விதழில் சொந்தப் பெயரிலும் புனை பெயரிலும் எழுதியுள்ளார். அன்றைய காலகட்டத்தில் பாரதியின் எழுத்துக்களை வெளியிட இதழ்கள் அஞ்சிய போது துணிந்து வெளியிட்டவர் சுப்பிரமணிய சிவா. இவர் பாரதி எழுதிய “ஒளியும் இருளும்” மது கண்ணன் என் தாய் யோகசித்தி, இரவாமை, பாப்பா பாட்டு இவை போன்ற பிற கவிதைகள் ஞானபாது இதழில் வெளிவந்தன.
1909ஆம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதியில் இருந்து வெளியான விஜயா இதழ் 1910ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் வாரம் வரை வெளிவந்தது. இவ்விதழ் சென்னையில் திருவல்லிக்கேணி ஹைரோட்டில் இருந்து வெளிவந்தது. திருமலாச்சாரிய ராவ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இவ்விதழ் தினசரி பத்திரிகையாக வெளிவந்தது. பாரதி தன்னுடைய படைப்புகளை இதில் வெளியிட்டார். 
கருத்து படமும் கேள்வி படங்களும்
      ஹிந்தியில் வெளிவந்த பஞ்ச் என்ற இதழ் பாரதிக்கு தூண்டுகோலாக இருந்ததால் அவர் சித்திரவல்லி என்ற இதழில் சித்திரங்களும் கருத்து படங்களையும் கேள்விப்படுகிற நிறைந்ததாக இருந்தது. படிக்காத பாமர மக்களுக்குப் புரியும் வகையில் படித்தவர்களும் சிறுவர்களும் இன்புறும் வகையில் இவ்விதழின் படைப்புகள் இருந்தன. பாரதியின் கருத்து படங்கள் புதுமையை மட்டுமல்லாது தேசிய எழுச்சியை இந்திய மக்களிடையே தட்டி எழுப்பக் கூடிய வகையில் இருந்தன.
அன்றைய காலகட்டத்தில் செய்திகளுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு எழுதி கீழே தமிழில் தலைப்பு இடுவது அக்கால இதழ்களில் வழக்கம். இவ்வாறு ஆங்கிலத்தில் தலைப்பிடும் முறையை நீக்கியவர் பாரதியார். அதுமட்டுமன்றி தமிழ் ஆண்டு மாதம் நாள் ஆகியவற்றையும் பாரதியார் பயன்படுத்தியுள்ளார்.

முடிவுரை
      இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு உரமிட்டு நீர் பாய்ச்சிய பெருமை தமிழில் வெளிவந்த இதழ்கள் ஆகும். அதில் பாரதியாரின் இதழியல் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. தம்முடைய விடுதலை வேட்கையை கவிதைகள், கட்டுரைகள் மூலம் மக்களிடையே ஒரு புரட்சியை விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்றால் மிகையாகாது. இன்றைய செய்தி நாளைய வரலாறு. எனவே செய்தித்தாள்கள் தரம் வாய்ந்ததாக இருந்தால் அது சரியான வரலாற்றை தரமுடியும் என்பதை தமிழர்கள் மூலம் நிரூபித்து காட்டியவர் பாரதியார்.

பார்வை நூல்கள்
1.பாரதி இந்தியா – சிலம்பு நா.செல்வராசு.

2.பாரதியார் இதழியல் புதுமையாளர் – தமிழ் இந்து, 2021.

3.பாரதி பயிலகம், இந்தியா இதழ், எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர் குறிப்பு.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் வ. கலையரசி, 
உதவிப் பேராசிரியர்,
பதிப்புத் துறை, 
திராவிடப் பல்கலைக்கழகம்,
குப்பம், ஆந்திரா -517426.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here