♣ இந்தச் சமூகம்
என்னை ஏற்றுக்கொள்வதற்காக
நான் விருப்பமில்லாமல்
நாள்தோறும் – அணியும்
முகத்திரை
உன்னைக் கண்டவுடன்
மட்டும் ஏனோ
தானாகவே மறைந்து போகிறது..!
♣ நான் யாரென்ற
ரகசியத்தைப்
பல நேரத்தில்
நான் மறந்து போனாலும்
அந்த உண்மையை
உரக்கச் செல்ல
சிறிதளவும் – நீ
தவறுவதில்லை..!
♣ உன் முன் – நான்

இருக்கையில்
என் மெய் நகலாக
மாறிப் போன நீ!
பல நேரம் என்னுடன்
செலவிடுபவர்களாலும்
கணிக்க முடியா
என் உணர்வுகளை
உன்முன் நான் நிற்கும்
அந்தக் கண நேரத்திலேயே
கண்டுபிடித்து வெளிப்படுத்தி விடுகிறாய்..!
♣ இறுதியில் நான் நானாக
இருக்க இடமளித்து – என்னை
அவ்வாறே ஏற்றுக்கொள்ளும்
விந்தை நிறைந்த
நீதான் நான் !
தினமும் பார்த்து
ரசிக்கும் கண்ணாடி..!
கவிதையின் ஆசிரியர்
மெ.அபிரக்ஷா
B.A.Sociology
வி.இ.டி.கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி,
திண்டல், ஈரோடு.