வறுமை என்பது சிறுமையா?|கவிதை|முனைவர் அ. அன்னமேரி

வறுமை என்பது சிறுமையா- முனைவர் அ. அன்னமேரி

📜 வறுமை என்பது சிறுமை அல்ல


வறுமைதான் வாழ்வின் பெருமை


வறுமையில் பிறப்பது தவறல்ல


வறுமையிலே வாழ்வது தவறு


வறுமையைப் பார்த்து பாவம் என்போர்


வளமையை பார்த்து வாழ்த்துவதில்லை


 

📜  நீ தாழ்ந்தால் சிரிக்கின்ற உலகம்


நீ உயர்ந்தால் படுத்தும் கலகம்


மூட மனிதர்கள் பார்வையிலே

முடங்கி கிடக்காதே மானிடா…

📜  உலக மனிதர்கள் பலவாகும்


உன்ன மனிதர்கள் சிலவாகும்


உலகப் போக்கில் வாழாதே


உன்னை புரிந்து வாழ்ந்திடு


உயர்க்கல்வி அறிவைப் பெற்றிடு


உழைப்பில் மேன்மை கண்டிடு


 

📜  உயர் லட்சியம் நோக்கிப் புறப்படு


உயர் வின்னையும் நீயும் தொட்டிடு


உலகம் திரும்பிப் பார்த்திடும்


உன் பிறப்பின் மகத்துவம் புரிந்திடும்..!

கவிதையின் ஆசிரியர்

முனைவர் அ. அன்னமேரி
உதவிப்பேராசிரியர்
புனித வளனார் கலை மற்றும்
அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
மஞ்சக்குப்பம், கடலூர்

 

Leave a Reply