Monday, June 29, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் திருமூலர் சித்தரின் வரலாறும் முதல் நான்கு வரிப்பாடல்களுக்கான விளக்கமும்

திருமூலர் சித்தரின் வரலாறும் முதல் நான்கு வரிப்பாடல்களுக்கான விளக்கமும்

திருமூலர் சித்தரின் வரலாறும் முதல் நான்கு வரிபாடல்களுக்கான விளக்கமும்
திருமூலர் சித்தர்
ஓம் திருமூலர் சித்தர் ஸ்வாமியே போற்றி…
ஸ்ரீதிருமூலர் சித்தசாமியின்  அடிபணிந்து திருமந்திரம் எழுத அருள்  புரிந்த திருமூலர் சித்தர் சுவாமியே போற்றி.
         
இவரது இயற்பெயர் சித்தசன் என்னும் முனிவர் ஆவார். அவர் ஈசனிடம்/ சிவபெருமானிடம் நேரடியாக தீட்சை பெற்ற முனிவர்களில் ஒருவர் ஆவார். மூலம் என்றால் மூலக் கருத்து, ஆதாரம், மூலப்பொருள்  என்பதாகும்.  எந்த ஒரு செயலுக்கும் ஒரு மூலம் ஆதாரம் வேண்டும் இந்த உலக மக்கள் வாழ்வதற்கு தேவையான அத்தனை ரகசியங்களையும் அவர் பல வருடங்களாக ஆராய்ந்து மனித உடற்கூறுகளை பற்றியும் மனிதனது மனதைப் பற்றியும் மனிதனுக்கு உண்டாகும் அனைத்து வகையான இன்னல்கள் நோய்கள் பற்றியும் அதை எப்படி சரி செய்வது என்ற முறையைப் பற்றியும் அருளியுள்ளார்.
குண்டலினி யோகம்
            குண்டலினி யோகம் என்னும் ஒரு ரகசியத்தை மனித உடலில் எத்தனை சக்கரங்கள் உள்ளது அவைகள் எப்படி இயங்குகின்றன அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றியும் விளக்கியுள்ளார்.  திருமூலர் இறைவனின் தூதராவார் அவர் எழுதிய திருமந்திரம் நூல் முழுவதும் இறைவனைப் பற்றியே எடுத்துரைத்துள்ளார். இறைவன் இருக்கும் இடத்தையும் அவரை அடையும் உண்மையான வழிகள் அனைத்தையும் விரிவாக எடுத்து உணர்த்துகிறார். அது மட்டுமல்லாமல் மனித உடலின் தத்துவம் உயிர் தத்துவம் சிவதத்துவம் என்று எல்லாத் தத்துவ உண்மைகளையும் உணர்த்துகின்றார் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நெறிகளையும் இயமம் நியமம் ஆசனம் பிரணாயாமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் சமாதி என்னும் அட்டாங்க யோகங்களையும் மிகத் தெளிவாக உணரும் வண்ணம் உணர்த்துகிறார் சைவத்தை கடைப்பிடித்து ஒழுகி சன்மார்க்க நெறியில் இருக்குமாறு வலியுறுத்துகிறார் உயிர்கள் பராசக்தியை பணிந்து வழிபட்டு பலன் அடைய நவாக்கரி மந்திரத்தை சொல்கின்றார் ஓங்காரம் ஓரெழுத்து என் உண்மையான இந்நூலைப் படிக்கும் அனைவரும் அறியும் வண்ணம் உபதேசித்துள்ளார்.
            திருமூலர் என்ற பெயர் எல்லா வகையான செயல்களுக்கும் உயிர்களுக்கும் மூலமான பொருள் என்ன என்பதை ஆராய்ந்து பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி உள்ளதால் அவருக்கு திரு என்ற மரியாதைக்குரிய சொல்லுடன் திருமூலர் என்று அழைக்கப்பட்டார். திருமூலர் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையையும் அறிந்துள்ளார். அதன்மூலம் அதனால் இந்த பூமியில் வாழ்ந்து தூய தமிழில் திருமந்திரம் என்ற ஒரு அற்புதமான நூலை எழுதுவதற்கு காரணமான ஒரு கதை உள்ளது.
திருமூலர் வரலாறு
            ஒரு சமயம் திருமூலர் ஆகாய மார்க்கமாக பூமியின் மீது வந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது  ஒரு மனிதனைச் சுற்றி பசுக்கள்  நின்று கண்ணீர் வடித்த வண்ணம் கத்தியும் நின்று கொண்டு இருக்கிறது. அதை பார்த்த திருமூலர் உடனே தனது ஞானதிருஸ்டியால்   தெரிந்துகொண்டு கீழே வருகிறார். அந்த பசு கூட்டங்களின் கண்ணீரையும் அந்த மாடு மேய்ப்பவன் மீது கொண்டுள்ள அன்பையும் கண்டு வியந்து அவர் தனது உடலை பத்திரமாக ஒரு குகைக்குள் வைத்துவிட்டு கூடுவிட்டு கூடுபாயும் முறையில் இறந்த அந்த இடையனின் உடலில் புகுந்து உயிர் கொண்டு எழுகிறார். அதை பார்த்தவுடன் பசுக்களெல்லாம் மிகவும். சந்தோசம் அடைந்தது. மாலை ஆனதால் பசுக்கள் அந்த கிராமத்தை நோக்கி செல்கின்றது. திருமூலர்   சரி இந்த மாடுகளை அந்த கிராமத்தில் விட்டுவிட்டு சென்று விடலாம் என்று நினைத்து செல்லுகிறார். அப்பொழுது அந்த ஊருக்கு சென்றவுடன் அந்த இடையனின் மனைவி தனது கணவன் ஏன் இவ்வளவு நேரம் கழித்து வருகிறார் என அழுது புலம்புகிறார். அதைப்பார்த்த திருமூலர் தான் உனது கணவன் அல்ல என்றும் அவன் இறந்துவிட்டான் என்றும் நான் கூடுவிட்டு கூடுபாயும் முறையில் இறந்த உனது கணவனின் உடலுக்குள் புகுந்து வந்துள்ளேன். இந்த மாடுகளை விட்டு விட்டு செல்லலாம் என்று வந்தேன் என்கிறார். ஆனால் அந்த இடையனின் மனைவி அதை நம்ப முடியாமல் ஊர் மக்களிடம். முறையிடுகிறார் சித்திரும் ஊர் மக்களிடம் நடந்ததை கூறுகிறார்.  எனது  உடலை காட்டுகிறேன் என்று கூறுகிறார். அதன்படி அவர் தனது உடலை விட்டுச் சென்ற இடத்தை நோக்கி சென்று பார்க்கும் பொழுது திருமூலரின்  உடல் அங்கே இல்லாமல் மறைந்து போய்விடுகிறது. அதைப்பார்த்த திருமூலர் இறைவனை / சிவபெருமானை நோக்கி வழிபடுகிறார். சிவபெருமான் அவரது வேண்டுகோளை ஏற்று சித்தரே நீ இந்த உலக மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், அறிவுறுத்த வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது அதை முடித்துவிட்டு வாரும். அதற்குப் பிறகு நீ என்னிடம் வந்து சேர்வாய் உன்னுடைய உண்மையான உடலுடன் என்று கூறிவிட்டு மறைந்து விடுகிறார். எனவே இடையன் உருவில் இருந்த சித்தர் பல ஆண்டுகள் அந்த இடத்திலேயே இருந்து தவம் புரிகிறார்.
கடவுள் வாழ்த்துக்குப் பிறகு தெய்வதூதர் திருமூலர் எழுதிய
முதல் நான்கு வரிப்பாடல் அதற்கான விளக்கம்
            திருமூலர் அருளிய தெய்வத்தமிழ் திருமந்திரம் 3000 பாடல்கள். 1 முதல் 112 வரை கடவுள் வாழ்த்து இந்த நான்கு வரி பாடல்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்களுக்கெல்லாம் சித்தர்  அகத்தியருக்கு பிறகு தோன்றிய தெய்வ அருள் பெற்ற மூலர் எனப்படும் ஒரு சித்தர் சித்தர்சாமி என்று அழைக்கப்படும் ஒரு சித்தர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பாடலை எழுதியுள்ளார் என்றால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  தமிழ்  எழுத்துக்களும் எண்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதனால் நாம் தெரிந்துகொள்வது உலகமொழிகளில் அனைத்து மொழிகளுக்கும்ம் தமிழ் அடிப்படை மொழியாக கொண்டும் தமிழ் எழுத்துக்களை அடிப்படையாக கொண்டும் எண்களையும் அடிப்படையாகக் கொண்டும் மற்ற இன மக்கள் பூமியில் உள்ள வேறு நாட்டு மக்கள் தங்களது ஒலிகளைக் கொண்டு உண்டான எழுத்துக்களை கண்டுபிடித்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
            இது போல வேறு எந்த மொழியிலும் இலக்கியமும், சித்தர்ககளுடைய வழிகாட்டுதல் உபதேசம் போன்றவற்றைக் கூற வேறு மொழிகளில் சித்தர் / மனிதர்கள் வேறு எந்த நாட்டிலும் இந்த பூமியில் பிறந்து உள்ள எந்த ஜீவராசிகளிடத்திலும் மனிதர்கள் இடத்திலும் இல்லை.  அதனால் உலக மக்களுக்கு அடிப்படையாக வாழ்ந்த சித்தர்கள் என சொல்லப்படும் தெய்வம் என சொல்லப்படும் இறைவன் கடவுள் தெய்வம் என சொல்லப்படும் எல்லாம் ஒன்றே அவரவர்கள் அவரவர்களுக்கு பிடித்த பெயரை எப்படி நாம் வைத்துக் கொள்கிறோமோ அது மாதிரி ஆதிகாலத்தில் மனிதன் தங்களது சுயநலத்திற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதம் என்று சொல்லக்கூடிய ஒன்றையும் அதைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு இன மக்களும் தங்களுக்கு தகுந்தார் போல பெயர்களை இட்டு வணங்கி வாழ்ந்தனர் என்பதற்கு இப்பொழுதுள்ள தற்போது வாழ்ந்து வரும் உலக மக்கள் தொகை உதாரணமாக உள்ளது எனத் தெரிய வருகிறது நன்றி
             திருமந்திரமே.  இந்த உலகத்தில் உள்ள அனைத்து சித்தர்களும் ஞானிகளும் அவரை குருவாக வணங்கி அவர் மூலம் உருவான அத்தனை மூலக் கருத்துக்களும் மனிதன் எப்படி வாழ வேண்டும் இறைவனை எப்படி வழிபட வேண்டும் நோய் நொடிகளிலிருந்து எப்படி காப்பாற்றுவது ஞானம் எப்படி அடைவது  போன்ற முலக் கருத்துக்களை உலகிற்கு எடுத்துக் கூறுவதால் *மூலர் திருமூலர் என்ற பெயர் வந்தது. மந்திரம் திருமூலரின் திருமந்திரம்  முதல் பாடல் முதல் இரண்டு வார்த்தைகள் விளக்கம்.

“ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ் உம்பர்ச்

சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே”

என்பது முதல் பாடலாகும்.
1.ஒன்றவன்தானே (இதற்கான விளக்கம்)
            இந்த உலகம் தோன்றியது முதல் ஒரே  ஒரு பிபஞ்சம் மட்டுமே உள்ளது. இதில்தான் சூரியன என்ற ஒரு பெரும் பெரிய தீப்பிழம்பு பிரபஞ்சத்தில் பல ஆயிரம் வருடங்கள் எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து வெடித்து சிதறி பிரிந்து  பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களும் நமது கண்களுக்கு தெரியக்கூடிய கோள்களும் அந்த தீப்பிழம்பிலிருந்து தான் உண்டானது. அந்த தீப்பிழம்பு தான் சூரியன். சூரிய பகவான் என்று சொல்லப்படும் இந்தக் கோள் மட்டுமே இந்த உலகத்தையும், உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும், கண்ணுக்குத் தெரிகின்ற தெரியாத எல்லா செடி கொடி மரம் மற்றும் அனைத்து உயிரினங்கள் என்று சொல்லப்படும் இந்தத் தாவரங்கள் கூட வாழ்வதற்கு தேவையான ஒன்று தேவை என்றால் இந்த சூரிய பகவான்தான். சூரியன் இல்லாவிட்டால் இந்த மண்ணுலகம் என்ற ஒன்று இல்லை என்பது உண்மையாகும். அதனால் ஒன்றவன் என்றால் சூரியன் ஆகத்தான் இருக்கவேண்டும். ஆதி பகவன் என்று அதனால் தான் திருவள்ளுவரும்  முதல் அதிகாரத்தில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் என்று எழுதி இருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஒன்றவன்தானே இவ்வுலகில் பிறந்த அனைத்து உயிரினங்களிலும் குடியிருப்பவன் ஈசன் ஒருவனே, ஒன்றவன்தானே நெற்றிக் கண்ணையுடைய அவன் இந்த உலகில் அவன் ஒருவனே. அதனால் ஒன்றவன்தானே.
ஞானத்தில் அறிவுக்கண் தொலைநோக்குப் பார்வையும் என அனைத்து உலகங்களின் தலைவன் ஒன்றவன்தானே ஈரேழுலோகம் என்று சொல்லக்கூடிய அனைத்து உலகங்களுக்கும் தலைவன் ஒருவனே. படைத்தவன் அவனே அதனால் அவன் ஒன்று  அவன் ஒருவனே. இந்தப் பிரபஞ்சத்தில் சூரியனும்  கோடான கோடி நட்சத்திரங்கள் இருந்தாலும் அந்த நட்சத்திரங்களால் இந்தப் பிரபஞ்சத்திற்கு எந்தப் பயனும் இல்லை ஆனால் ஆதிபகவன் என்று சொல்லக்கூடிய சூரியன் இந்தப் பிரபஞ்சத்திற்கு அவன் ஒருவனே அவன் இன்றி இந்த உலகம் இல்லை ஒன்றவன்தானே.  
ஒன்றவன் என்றால் சீவன், உயிர், தன்மை கொண்டவன் என விளக்கினார் . மேலும் கிடைத்துள்ள சங்ககால இலக்கியங்களின் அடிப்படையில் முதன்முதலில் திருமூலர் மட்டுமே சிவன் என்ற ஒரு வார்த்தையை எழுதியுள்ளார்.  அதை அடிப்படையாகக் கொண்டுதான் பிற்காலத்தில் வந்த அனைத்து சித்தர்களும் அவரது சிஷ்யர்களும் சிவன் என்ற ஒரு வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனுடைய சக்தியை உணர்ந்து வழிபாடு செய்தார்கள். சிவனுக்கு மூன்று கண்கள் உள்ளது நெற்றிக்கண் என்ற ஒரு அமைப்பு கொண்ட தெய்வம் கடவுள் சிவபெருமானுக்கு மட்டுமே உண்டு.
ஞானத்தில் அறிவுக்கண் தொலைநோக்குப் பார்வையும் என அனைத்து உலகங்களின் தலைவன் ஒன்றவன்தானே ஈரேழு லோகம் என்று சொல்லக்கூடிய அனைத்து உலகங்களுக்கும் தலைவன் அவனே படைத்தவன் அவனே அதனால் அவன் ஒருவனே 
உதாரணமாக. 0 என்ற இந்த சுழிக்கு மதிப்பு இல்லை. ஆனால் அதற்கு முன் ஒன்று என்ற எண்ணை சேர்த்தால் அதற்கு மதிப்பு அப்போது கிடைக்கும் எண்10. அதாவது இறைவன் ஒருவனே அவனே எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் இருந்து நிறைந்து இயக்குபவன் அவனே ஆகும். அருளியுள்ளார் அதையே திருவள்ளுவர் ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான்  அதை… உயிரினும் மேலாக வைத்தான்… 
“ஒழுக்கம் விழுப்பந் தரலான் 
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
2. இரண்டவன் இன்னருள் என்றால்
            அந்த ஈசன் எனப்படும் சிவபெருமான் தனக்குளமுழு சக்தியையும் அடக்கி வைத்துக் கொண்டுள்ளார். அதுதான் சக்தி எனப்படும் ஒரு தொலைநோக்கு அல்லது இந்த உலகை படைத்து காப்பதற்கும் அழிப்பதற்கும் ஒரு சக்தி தேவை என்பதால் தன்னையே அதாவது தனது உடலை இரண்டாக்கி சக்தியாக மாற்றி ஒரு பெண் உருவத்தை தனக்குள் உண்டாக்கி இரண்டாக உள்ளார் எனலாம்.  இந்த உலகத்தில் ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு கண்ணுக்கு தெரிவது எத்தனையோ நட்சத்திரங்கள் என்று பல விஷயங்கள் இந்த பிரபஞ்சத்தில் தெரிந்தாலும், இரண்டாவதாக மனிதனின் கண்ணுக்கு தெரிவது சந்திரன் என்று சொல்லப்படும் ஒரு கிரகம் ஆகும். அந்த சந்திரன் மூலம் மனிதர்களின் மனநிலையையும், உடல் நிலையையும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவதால் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.
            மேலும் இரவில்   அந்த சந்திரனுடைய ஒளி சூரியனிடமிருந்து வாங்கி பிரதிபலிப்பதால் அந்த இரவும் மனிதர்களுக்கு மிகவும் குளிர்ச்சியானதாகவும் இருப்பதற்கு காரணமாக அமைவது இந்த சந்திரன் எனப்படும் ஒரு கிரகம் ஆகும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள வேறு எந்த கோள்களும் எளிதாக மனிதர்களுடைய கண்ணுக்குத் தெரிவதில்லை.  (நட்சத்திரங்கள் புள்ளி புள்ளியாக தெரிந்தாலும் 27 நட்சத்திரங்கள் மட்டுமே மனிதர்கள் வாழ்க்கையில் தொடர்பு கொண்டுள்ளன.)
மனமும் ஆத்மாவும்
நம்முள் இருக்கும் இறைவனால் நாம் கண்காணிக்கப் படுகிறோம். இறைவனால் நாம் இயக்கப்படுகிறோம். ஆத்மா என்பது நம் உடலில் உயிராக உள்ளது. உடல் மேலும் உபயோகப்படுத்த முடியாது என்ற நிலைக்குத்  தள்ளப்படும்போது அதிலிருந்து உயிர் விலகி வேறு உடலை அடைகிறது. பிறப்பும் இறப்புமான இந்த 2 வாழ்க்கையைப் பற்றி – பிறப்பு, இறப்பிலிருந்து விடுபட வேண்டுமென்றால் இறைவனை சரணடைவது ஒன்றே வழி.  உயிரின் உறைவிடத்தையே ஆத்மா என்கிறோம். உயிர் செயலில் இல்லை என்றால் உயிர் பிரிந்து விட்டது அல்லது ஆத்மா பிரிந்து விட்டது என்று சொல்லுகிறோம்.
இரண்டானவன் என்ற வரிக்கு மற்றோர் விளக்கம்.
             உயிரும் மெய்யும் கலந்தால் தானே தமிழ் அதன் அடிப்படை என்ன தெரியுமா? சிவன் என்பது மெய். இதை உடல் எனக் கொள்ளலாம் உயிர் என்பது இந்த உடலை இயக்கும் உயிர் . உடலென்ற மெய் உயிரில்லாமல் இயங்குமா? எனவே தமிழுக்கும் உயிர் மெய் எழுத்துக்கள் அடிப்படை. ஆன்மா இயங்க வேண்டுமெனில் உயிரும் மெய்யும் அவசியமாகிறது. அது போல மெய் என்பது சிவன் அந்த மெய்யாகிய சிவன் இயங்க உயிராகிய சக்தி தேவை. உயிரில்லாத மெய் பயனற்றது. அது போலவே சக்தி இல்லாமல் சிவன் இயங்காது என்பதே அடிப்படை உண்மை.
            இந்த உலகம் இந்தப் பிரபஞ்சம் 2 அணுக்கள் சேர்ந்தால்தானே இந்த உலகம் இந்த பிரபஞ்சமே உள்ளது. அதுபோல ஆண்பெண் -இரண்டு பேர்களுடைய புணர்ச்சி ஒன்றுடன் ஒன்று கலப்பதால் தான் குழந்தை பிறப்பு. உதாரணமாக திருவள்ளுவர், குறள்.5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
2.இருவினையும் சேரா:- இருவினை என்றால் நல்வினையும்  தீவினையும் என்ற இரண்டு செயல்கள்  ஆகும். நல்லது நினைத்தால் நல்வினை அதாவது நல்ல செயல்களை அவனால் உலக மக்களுக்காக செய்து கொண்டே இருக்க முடியும். நல்ல செயல் என்றால் என்ன தூய சிந்தனையுடன் இருந்தால் தூய எண்ணங்கள் உண்டாகும் அதன்மூலம் தூய செயல்களை செய்ய முடியும். இது ஒருவனுடைய நேர்மறையான எண்ணங்கள் ஆகும். இதற்கு எதிர்மறையாக செய்யப்படும் செயல்கள் அனைத்தும் தீவினை ஆகும். எனவே இந்த இரு வினைகளையும் மனிதன் தீவிரமாக ஆய்ந்து அறிந்து தெளிந்து செயல்பட வேண்டும். வாழ்க்கையை இரண்டாக வகுத்தான். அகம், புறம் என கணவன் மனைவி வாழும் வாழ்க்கை அகத்தையும் புறத்தையும் சார்ந்துள்ளது. (திருவள்ளுவருடைய குருவும் திருமூலரே ஆவார் அதனால் தனது குறளிலும் இருவினை பற்றி எழுதியுள்ளார் எனலாம்)
மேலும் மூன்று என்ற எண்ணை, ஒரு குறியீட்டை பற்றி  சிந்தித்து பார்த்தால்  மூன்று காலங்களையும் நினைத்து இந்த மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. நிகழ்காலம்,கடந்த காலம், எதிர்காலம். இந்த மூன்றும் தான் உலகத்தில் வாழ்கின்ற அனைத்து வகையான உயிரினங்களும்  அடிப்படையாகக் கொண்டுதான் இருக்கிறது.
மூன்று என்பதற்கு காத்தல்  அழித்தல் படைத்தல் போன்ற மூன்று தொழிலையும் அல்லது செயல்களையும் சிவபெருமான் தன்னிடம் வைத்துக் கொண்டதால் மூன்றினுள் என்று எடுத்துக் கொள்ளலாம். இறைவனுடைய அருளைப்பெற வேண்டும். ஒன்றுக்கொன்று அந்த மூன்றாவது ஆக்கல் அழித்தல் காத்தல் இந்த மூன்றையும் தனக்குள் எடுத்துக் கொண்டு தேவைப்படும் பொழுது உருவாக்கி, வேண்டாத பொழுது அழிக்கிறான்.  அதனால் ஆக்கல் அழித்தல் காத்தல் என்ற மூன்று செயல்களுக்கும் நின்றனன். இதை அடிப்படையாகக் கொண்டுதான் உலகத்தை உலகத்தில் உள்ள உயிர்களை இயக்குகிறார். அதனால் மூன்று நின்றனன். மூன்று என்பதன் விளக்கத்தில்,
தோஷங்கள் மூன்று –  வாதம், பித்தம் சிலேத்துமம். மூன்றாகி நின்றனன் இந்த மூன்றும்தான் உலகத்தில் வாழ்கின்ற அனைத்து வகையான உயிரினங்களுக்கும்  அடிப்படையாக உள்ளது . இந்த உலகம் இயங்குகிறது.
மண்டலங்கள் 3 அக்கினி மண்டலம் ஆதித்த (சூரிய) மண்டலம், சந்திர மண்டலம்
குணங்கள் மூன்று சாத்துவிகம், இராசதம், தாமதம் .
மலங்கள் 3 ,ஆணவம் , கன்மம், மாயை  இதை ஒழிக்க அருள் புரிவாயாக.
மூன்றினுள் என்பதற்கு மூன்று வேல் திரிசூலம் போன்ற ஒரு அமைப்பை கொண்டது.  மனிதன் தனது மூன்று விரலால் தான் நெற்றியில் திருநீறு பூசுவதன் மூலம் இந்த உடம்பும் ஒருநாள் சாம்பலாகும் என்ற தத்துவத்தை உணர்ந்து உலகில் வாழ வேண்டும்.
நான்குணர்ந்தனன் என்றால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள பூமியை சார்ந்து வாழும் மக்கள் 4 பகுதிகளாகப் பிரிக்கிறார்கள் எனலாம். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்காக பிரித்து மக்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான்கு உணர்ந்ததன் என்கிறார்களாம்
4 திசைகள் நான்கு பாகமாககும் எனவே  நான்கு திசைகளையும் பார்த்துக் கொண்டிருக்குமாறு மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக நான்முகன் என்ற ஒரு கடவுளை படைக்கிறார்.
திசையைக் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எனவும். காற்றையும் நான்காக  பிரித்தார்.
தென்றல்,,வாடை , கோடை , கொண்டல் என்பதாகும்.
கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல்.
தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல்.
மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை .
வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை.
ஐந்து என்பதற்கு ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து செயல்களையும் என்பதற்கு எடுத்துக் கொள்ளலாம். 
ஐந்து வேள்விகள்:
1)கடவுள் வேள்வி, 2) பிரமவேள்வி, 3) பூதவேள்வி, 4)மானிடவேள்வி, 5)தென்புலத்தார்வேள்வி
ஆன்மீக ஒழுக்கத்தின் பொருட்டு ஒருவர் செய்யவேண்டிய ஐந்து யாகங்கள்: 1)கருமயாகம், 2)தவயாகம்,  3) செபயாகம்,  4) தியானயாகம், 5)ஞானயாகம்.
5 என்பதில் 
பூதங்கள் ஐந்து நீர், நிலம், நெருப்பு, காற்று,   ஆகாயம்.
பொறி 5 மெய்,வாய் கண், மூக்கு, செவி
ஐந்து.தொழில்கள்
5 தேவதானம், விசர்க்கம், ஆனந்தம், பயம். கோசம்.  அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம்.
சயம் 5 அமரசயம்,,.பக்குவாசயம் மலசயம், சிலசமயம் சுக்கிலசயம்.
புலன்கள் 5. சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்.
காமேந்திரியம் 5.வாக்கு,பாதம், பாணி ,பாயுறு ,உத்தமம்.
அவத்தை 5. சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், அதிதுரியும் இவையும் அடங்கும்.
ஐந்து எழுத்து மந்திரத்திலுள்ள ரகசிய என்னவென்று திருமூலர் அருளியுள்ள
சி வா ய ந ம 
சி என்றால் சிவன் என்றால் உயிர் அம்மா சக்தி என்றால் உயிர் சிவாய சிவனும் சக்தியும் ஒன்றே.
நிலத்தை ஐந்தாக பிரித்தான்… 
குறிஞ்சி  (மலைப்பகுதி) 
முல்லை   ( வனப்பகுதி) 
நெய்தல்  ( கடல் பகுதி) 
மருதம் ( நீர் மற்றும் நிலம்) 
பாலை  ( வறண்ட பகுதி)
ஆறு என்பதற்கு விளக்கம்
மனித உடலில் ஆறு சக்கரங்கள் உள்ளன.
1. மூலாதாரம்  2.அடிவயிற்றுக்கு கீழ் 3.தொப்புள்  4.தொண்டை குழி 5.நெற்றி 
6.உச்சந்தலை.
மனிதனுக்கு உள்ள  ஆறறிவைக் கொடுத்தான்.
1. கற்பூர புத்தி
2. கரி புத்தி
3. காரிய புத்தி
4. வாழைமட்டை புத்தி
5. சமயோஜித புத்தி
6. பகுத்தறிவு
இவைதான் மனிதனுக்கு வகைப்படுத்தப்பட்டுள்ள ஆறறிவு .
பருவ காலங்கள் ஆறு கோடை காலம், குளிர்காலம், முன்பணிக்காலம், பின் பணி காலம், இலையுதிர் காலம்,
மழைகாலம்.
மேலும் சுவையை ஆறாக பிரித்தான்… இனிப்பு,கசப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு  என அறுசுவையாகும்.
இசையை ஏழாகக் கொடுத்தான்… 
ச ரி க ம ப த நி
இசையை ஏழாக கொடுத்தார்.  நாட்களையும் ஏழாக பிரித்தார். 
ஏழு என்பதற்கு உலகங்கள் ஏழு.
நாட்கள் 7 திருக்குறளில் வெண்பா ஏழு
இந்த உலகத்தை ஏழு கண்டங்களாக பிரித்து உள்ளார்கள்.
எட்டு என்பதற்கு மனித உடன் தான் உடம்பு என்று கணக்குட்டுள்ளார். மேலும் 1.காமம் 2.குரோதம் 3.பற்று 4.சுவை 5.உணர்வு 6.ஒளி 7.ஒலி 8.கேட்டல் ஆன்மாவுடன் இந்த எட்டும் இருக்கும் ஐந்து மெய் உறுப்புகள் உணரக்கூடிய விஷயங்களும் அத்துடன் ஆணவம் புத்தி மனம் ஆகிய மூன்றும் சேர்ந்து எட்டாகும்.. ஒரு சில சித்தர்கள் செய்யக்கூடிய அஷ்டாங்க யோகம் என்னும் பயிற்சி மூலம் உடலை 8 பாகங்களாக பிரித்து விடுவார்கள்.
திசைகளை எட்டாகப் பிரித்தார்….
கிழக்கு,மேற்குவடக்கு, தெற்கு,வட கிழக்கு, வட மேற்கு,தென் கிழக்கு,தென் மேற்கு,
என முதல் பாடலில் ஒன்று முதல் எட்டு வரை உள்ள முக்கியத்துவத்தையும் சிறப்பையும் திருமூலர் உணர்த்துகிறார் என நினைக்கத் தோன்றுகிறது.
இப்பாடல் வரிகளின் ஆய்வு உரையாசிரியர்
குறளமுதம்
எம்எஸ்கே மனோகரன், கோவை.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »