Saturday, June 27, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் இதழியலின் தொழில் வாய்ப்புக்கள் என்னென்ன?

இதழியலின் தொழில் வாய்ப்புக்கள் என்னென்ன?

இதழியலில் தொழில் வாய்ப்புகள் என்னென்ன

இதழியலின் தொழில் வாய்ப்புக்கள்

I. வளர்ந்து வரும் இதழியல் பணிகள்

II.இருவகை இதழியலாளர்கள்

I. வளர்ந்து வரும் இதழியல் பணிகள்


            இதழியல் பணி தற்கால உலகில் போற்றுதலுக்கும் புகழுக்கும் உரிய ஒன்றாகி வருகின்றது. வளர்ச்சி பெற்ற நாடுகளில் இதழியல் துறையில் வேலைவாய்ப்புக்கள் பெருகி வருகின்றன. புதுப்புது தொழில் நுட்பங்களை இதழ்களின் வெளியீட்டுத் துறையில் பயன் படுத்துவதால், தொழில் நுட்ப வல்லுநர்களும், இதழ்களின் வீச்சு விரிவடைவதால், பல்வேறு பணிகளைச் செய்பவர்களும் நாள்தோறும் கூடி வருகின்றனர். இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் இதழியல் பணிகள் இதழ்களோடு சேர்ந்து வளர்கின்றன.


இதயம் ஒன்றிய ஈடுபாட்டோடு இதழியல் பணியை மேற்கொள்கின்றவர்கள், அதிலிருக்கும் தீரச்செயல்களுக்கும், சாகசச் செயல்களுக்கும் உள்ள வாய்ப்புக்களில் தனி இன்பமும், உள்ளார்ந்த மனநிறைவும் காண்பார்கள். மக்களாட்சியில் வரலாறு படைத்த இதழியலாளர்களை நாடு என்றும் மறப்பதில்லை.


இப்பொழுது புதுப்புது நாளிதழ்களும், இதழ்களும் தோன்றுகின்றன. நாளிதழ்கள் வெளியிடும் பிரதிகளின் எண்ணிக்கையும் வியக்கத்தக்க அளவில் மிகுந்துள்ளன. செய்திகளை சேகரிப்பதிலும், அச்சுக்கலையிலும், இதழ்களின் தோற்றப் பொலிவிலும் அவற்றைப் புழக்கத்திற்குக் கொண்டு வருவதிலும் புதுப்புது மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை எல்லாம் இதழியலில் வேலை வாய்ப்புப் பணிகளை பல்கிப் பெருகத் துணை செய்கின்றன.

ஒரு காலத்தில், “இதழியலாளர்கள் பிறவியிலேயே அதற்குரிய திறமைகளைப் பெற்றிருக்க வேண்டும்,” என்று கருதினர். இப்பொழுது இக்கருத்து மாறிவிட்டது. யார் வேண்டுமானாலும் ஆர்வம் இருந்தால், இதழியல் கல்வியும் பயிற்சியும் பெற்று இதழியலாளராகத் திகழமுடியும் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.


II.இருவகை இதழியலாளர்கள்:

 இதழியலில் பணி செய்பவர்களைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.

இதழியலாளர்கள்
(Journalists)


தொழில்முறை இதழியலாளர்கள்                                                      சுதந்திர இதழியலாளர்கள்

       (Professional Journalists)                                                                           (Free-lance Journalists)

இந்த இருவகை இதழியலாளர்களையும் பற்றித் தனித்தனியாக விளக்கலாம்.


தொழில்முறை இதழியலாளர்கள் :

            ஏதாவது ஒரு இதழில் மாத ஊதியம் பெற்றுக் கொண்டு பணி செய்கின்றவர்களைத் தொழில் முறை இதழியலாளர்கள் என்கின்றோம். இவர்கள் சேகரிப்பவர்களாகவோ, எழுதுகின்றவர்களாகவோ,
துணையாசிரியர்களாகவோ, செய்திகளைச் செய்திகளை-சிறப்புக் கட்டுரைகளை எழுதியவற்றைச் செப்பனிடும் இதழ்களுக்கு முழுவடிவம் தருகின்ற ஆசிரியர்களாகவோ, ஒவியர்களாகவோ, புகைப்படக்காரர்களாகவோ பணியாற்றுவார்கள்.


பொதுவாக, தொழில் முறை இதழியலாளர்கள் முறையான பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் பணியாற்றும் இதழ்களே அவர்களுக்குப் பயிற்சிக்களமாக இருக்கும் காலப் போக்கில் தொழில் திறன் பெற்று விளங்குவார்கள்.


தொழில்முறை இதழியலாளர்கள் தங்களது விருப்பம் போல் செயல்பட முடியாது. தேவைகளுக்கேற்பச் செயல்படுவது இவர்களது கடமையாகும். பெரிய தாங்கள் பணியாற்றும் இதழ்களின் இதழ்களில் பணியாற்றும் இதழியலாளர்களின் பெயர்கள் வெளியிலேயே தெரியாமல் போகலாம்.

சுதந்திர இதழியலாளர்கள்:

எந்த ஒரு தனி செய்தித்தாளோடும், தங்களைப் பிணைத்துக் கொள்ளாமல், தங்களது இதழோடும் விருப்பம்போல் இதழ்களுக்கு எழுதவோ, ஒவியம் தீட்டவோ, புகைப்படம் எடுக்கவோ, வேறு தேவையான பணியையோ செய்வார்கள். இவர்கள் மாத ஊதியம் பெறாமல், இதழ்களிலிருந்து செய்யும் பணிக்குத் தனித்தனியான அன்பளிப்புப் போல ஊதியம் பெறுவார்கள்.


நமது நாட்டில் சுதந்திர இதழியலாளராகப் பணியாற்றிக் கொண்டு வாழ்வதென்பது மிகவும் சிரமமானது. தொடக்ககாலத்தில் இதழ்களில் இடம் பிடிக்கவே போராட வேண்டியதிருக்கும். ஆனால், பெயரும் புகழும் பெற்றுவிட்டால் சுதந்திர இதழியாளர்களாலும் வளமாக வாழமுடியும்.

குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

மேலும் பார்க்க,

1.இதழியலாளரின் தகுதிகள் யாவை?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »