Saturday, June 27, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு |Inductive Criticism

செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு |Inductive Criticism

படைப்புவழித் திறனாய்வு

       ஓர் இலக்கியத்தை ஆய்வு செய்யும்போது அதனிலுள்ள நிறை, குறைகளை ஆய்வதற்கு முன்னர் அதற்குரிய வழிமுறைகளை வகுத்துக் கொண்டு செயல்படுவது செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு (Inductive Criticism) ஆகும். திறனாய்வின் முடிவானது ஒருபுடை ஒப்புமையுடையதாக அமையும். ஆனால் இத்திறனாய்வு முறையானது இது உயர்ந்தது, இவை தாழ்ந்தது என்று கூறும் தீர்வு முறையிலிருந்து (Judicial Method) முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. ஒரு வரையறை உடைய அல்லது கலைஞனின் வழிமுறையை உடைய படைப்பை வேறொரு கலைஞனின் படைப்பில் பொருத்திப் பார்த்தல் என்பது படைப்புவழி திறனாய்வில் வேண்டத்தகாது ஆகும்.

செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு

       படைப்புப் பற்றியோ, படைப்பாளிப் பற்றியோ பேச விழைவோர், அவரவரின் விதிமுறைக்கு ஒட்டியே பேசுதல் வேண்டும். அதனையும் மீறி செலுத்துமுறைத் திறனாய்வினை மேற்கொள்கின்ற திறனாய்வாளர்கள், படைப்பின் வளர்நிலையையும், தனித்தன்மையும் எடுத்துக்காட்டுவது கவனத்திற்குரியது ஆகும். எல்லா வகையான திறனாய்வு மேற்கொள்வதற்கும் செலுத்துநிலை (Indefine Method ) யாகிய திறனாய்வின் பங்களிப்பினை மேற்கொள்ளாமல் இருக்கமுடியாது.

         ஆனால் மதிப்பீட்டு முறை, ஒப்பீட்டு முறை மற்றும் தீர்வுமுறைத் திறனாய்வு என்ற மூன்றையும் செலுத்துநிலை ஆய்வு தவிர்க்கிறது. ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டு அதனுடைய எல்லைத் தன்மைகளில் இத்திறனாய்வு அமைகிறது.

செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »