Friday, September 12, 2025
Home Blog

The Poverty of the Ever-Flowing Vaigai|Dr.D.Sangeetha

வற்றாத வைகையின் வறுமை - முனைவர் த சங்கீதா
Abstract              
        Among the Sangam literature’s celebrated rivers, the Vaigai (Vaiyai) is the lifeline of Madurai. The Kaveri nourished the prosperity of the Chola kingdom, the Tamiraparani enriched the Pandya country, the Palar flowed in the northern direction, the Ponniyar was a branch of the Kaveri, and the Peraru is often mentioned in Sangam works. The Chengan River is also found in many distinguished Sangam verses. The river Aru is also seen in several ancient references
              
          The most frequently mentioned rivers in Sangam literature are the Vaigai, Kaveri, Tamiraparani, Ganga, Yamuna, Palar, Ponniyar, and Peraru. Rivers may originate from springs, lakes, melting snow streams, rainfall, or various other sources. Usually, other rivers join them, and these are called tributaries. The volume of water in a river is the sum of surface flow and the underground water flow unseen to the eye.
              
         From Sangam age poetry to modern times, hardly any poet has failed to sing of rivers. Our forefathers described rivers with the same beauty as they did women, highlighting their charm and significance. Yet today, due to human exploitation and pollution, their condition has become pitiable. The Vaigai, which once gave life to Madurai, enriched it, and brought glory to its name, played a major role in the prosperity of the Pandya land. Like a radiant maiden, she was celebrated for her fertility, expansiveness, and eternal fame. But now, that glory is fading away. Though people have eyes, they turn a blind eye; though they have ears, they refuse to listen. Indifferent, they continue on their way.
              
         The misery of the Vaigai, the sorrow of our rivers, and the future of our coming generations — these are matters we must reflect upon.


“வற்றாத வைகையின் வறுமை”

ஆய்வுச் சுருக்கம்
         
        சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட சிறப்பான ஆறு வைகை (வையை) – மதுரையின் உயிர் நதி.காவிரி – சோழநாட்டின் செழிப்பை அளித்த நதி.தாமிரபரணி – பாண்டிய நாட்டின் வளநதி. பாலாறு – வடக்கு பக்கம் பாய்ந்தது பொன்னியாறு – காவிரி கிளைநதி.பேராறு – சங்கத்தில் பல இடங்களில் வரும்.செங்கண் ஆறு – சிறப்பு வாய்ந்த சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.அறவாறு – பண்டைய குறிப்புகளில் சங்க இலக்கியங்களில் அதிகம் காணப்படும் ஆறுகள்:வைகை, காவிரி, தாமிரபரணி, கங்கை, யமுனை, பாலாறு, பொன்னியாறு, பேராறு ஊற்றுக்களில் இருந்தோ, ஏரிகளில் இருந்தோ, பனியாறுகள் உருகுவதன் மூலமோ, மழை நீர் வழிந்தோடுவதனாலோ அல்லது வேறு பல வழிகளிலோ ஆறுகள் உருவாகக் கூடும். பொதுவாக ஆறுகளுடன் வேறு ஆறுகள் வந்து இணைவது உண்டு. இத்தகைய ஆறுகள் சிற்றாறுகள் அல்லது துணையாறுகள் என அழைக்கப்படுகின்றன. ஆற்றில் கொண்டு செல்லப்படும் நீரின் அளவு. ஆற்றில் மேற்பரப்பில் செல்லும் நீரும், கண்ணுக்குத் தெரியாமல் நிலத்துக்குக் கீழ் செல்லும் நீரும் சேர்ந்தது ஆகும்.. சங்க கால பாடல்கள் முதல் இக்காலம் வரை ஆறுகளைப் பற்றி பாடாத கவிஞர்களே இல்லை. பெண்ணைப் போல ஆற்றையும் அதன் சிறப்புகளையும் எடுத்துக் கூறி உள்ளனர் நமது முன்னோர்கள் ஆனால், அதன் இன்றைய நிலை மனிதர்களால் மாசுபட்டும் அழிக்கப்பட்டும், அபகரிக்கப்பட்டும் வருகிறது.  வைகை நீர் வாழ்வில் மதுரையை செழிக்க வைத்து புகழ் பாட வைத்த சிறப்புகளில் மிகுந்த பங்கு வைகை நதிக்கும் உண்டு. பாண்டி நாட்டு சிறப்பைச்  சொல்லும் பைங்கிளி அவள். அதன் பரப்பும், செழிப்பும் ,வளமையும், மங்காத புகழும் மங்கிக் கொண்டிருக்கும் காலம்  வைகைக்கு வந்துவிட்டது.கண்கள் இருந்தும், பாராமுகமாய், செவிகள் இருந்தும், கேட்கும் மனமின்றி மக்கள் அவரவர்கள் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். வைகையின் அவலமும், நதிகளின் துயரமும், நாளைய எதிர்காலமும் சிந்திப்போம்.

முன்னுரை       
    நதிகளும் ஏரிகளும் குளங்களும் இயற்கை வளங்களுமே மனித சமுதாயத்தை மேன்மைப்படுத்தி மனிதனின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் எதிர்கால மக்களின் வாழ்வாதாரங்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது ஆனால் இன்று ஒவ்வொரு நதிகளும் விதவிதமான கழிவுகளோடும் வண்ணச் சாயங்களோடும் தன் நிலை பிறழ்ந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மனிதன் ஆக்கிரமிப்பாலும் அசத்தப்படுத்துவதாலும் அக்கறையின்மையாலும் அந்நியனாக மாறி நதிகளுக்கு கண்ணீரைப் பரிசாகத தந்து கொண்டிருக்கிறான். நதிகளில் நீராடி. அள்ளிக்  குடித்து அமுதுண்டு வாழ்ந்த காலம் போய் நதிகளில் கால் வைத்தால் நச்சுத்தன்மை நம்மைத்  தாக்கி விடும் என்ற பயத்தில் மனிதன் வாழும் நிலையை உருவாக்கி விட்டான். சங்க காலப் புலவர்கள் காதல, மரம் ,வீரம் ,கல்வி, கேள்வி, ஞானம், பக்தி, ஒழுக்கம் ,பண்பாடு மட்டும் பேசவில்லை எத்தனையோ சான்றோர்களும் கவி பெரும் மக்களும் நதிகளுக்கு  முக்கியத்துவம் கொடுத்து தெய்வமாகவும் புண்ணிய நதியாகவும் ,பாவங்களைப் போக்கும் ஆறாகவும் சங்க
 கால முதல் இக்காலம் வரை பாடி வந்துள்ளார்கள். மனிதனால் இன்று கண்ணீரோடு ஓடிக் கொண்டிருக்கிறது. கங்கை தூய்மையானது காவிரி அசுத்தமானது. வைகை வலுவிழுந்தது. வாழ்க்கையில் குடி  தண்ணீருக்கும் விலையானது. சங்ககாலத்தில் நதிகளுக்கு அளித்த முக்கியத்துவத்தை வைகை நதி பெற்ற சிறப்பையும் இவ்வாய்வு பகுதியில் அழிந்து வரும் இக்காலங்களில் மக்கள் நதிகளைக் காக்க வேண்டும்.நதிதான் அனைத்து உயிர்களின் வாழ்வாதாரம் என்பதை உணர வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும்.

தமிழகத்தில் ஓடும் சில ஆறுகள்        
         தமிழகத்தில் பல சிறிய, பெரிய ஆறுகள் பாய்கின்றன. அவற்றில் சில முக்கிய உயிர்நதிகள் ஆகும். காவிரி நதி தமிழகத்தின் மிகப்பெரிய பாசனநதியாக விளங்குகிறது. இது கர்நாடகத்தில் தோன்றி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளைச் செழிப்பாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. வைகை நதி மதுரை மாவட்டத்திற்கு உயிர்நதியாகும்; இது மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி மதுரையை ஊடறுத்து பாய்கிறது. தாமிரபரணி நதி திருநெல்வேலியும் தூத்துக்குடிப் பகுதிகளுக்கு வளம் தருகிறது.மேலும் பாலாறு வடமாநிலங்களிலிருந்து வந்து வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளில் பாசன வளம் வழங்குகிறது. பென்னாறு வட ஆந்திரா மாநில எல்லையிலிருந்து வந்து வடதமிழகத்தில் பாய்கிறது. வெள்ளாறு, மன்னாறு, பரமனாறு போன்ற ஆறுகள் கிழக்குக் கடலில் கலக்கின்றன. சரபணா ஆறு, சித்தாறு, குந்தாறு போன்ற பல சிறிய ஆறுகளும் கிராமப்புற பகுதிகளுக்கு குடிநீர், பாசனம் வழங்குகின்றன.இதற்குப் பிறகு நொய்யல், அமராவதி, மணிமுத்தாறு, நந்தி, வத்தாறு, பச்சை ஆறு, சிருவாணி போன்ற பல துணை ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இவ்வாறு, தமிழகத்தில் பாயும் ஆறுகள் விவசாயம், குடிநீர், மின்சாரம் உற்பத்தி, நீர்த்தேக்கம் போன்றவற்றில் மிகப்பெரும் பங்காற்றுகின்றன.
மணிமேகலையில் வைகை          
        முதல் காண்டம் (காஞ்சி காண்டம்) – காஞ்சிப் புறத்தில் வாழ்ந்த மணிமேகலை தன் தாயார் மாதவியுடன் மதுரைக்கு வருகிறார். அங்கு வைகை ஆற்றின் கரையில் மக்களின் செல்வச் செழிப்பு, வியாபாரம், மன்னன் செல்வம் முதலியவை வர்ணிக்கப்படுகின்றன.

மதுரை நகர வர்ணனை       
         மதுரையைச் சுற்றி ஓடும் வைகை ஆறு குறித்து விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.வைகை கரையில் செழித்து வளர்ந்த வியாபார நகரம்.ஆற்றின் கரையில் வணிகர்களின் அலைச்சல், மக்கள் கூடி வியாபாரம் செய்வது.
மூன்றாம் காண்டம் (அருகாண் காண்டம்) – மதுரையில் மணிமேகலை பிச்சை எடுக்கும் நிகழ்வில் வைகை ஆற்றங்கரையோரக் காட்சிகள் வருகிறது.
அமுதசுரபி நிகழ்வு          
       பசியால் வாடும் மக்களுக்கு உணவு அளிக்க,மணிமேகலை பெற்ற அமுதசுரபி (மந்திரக் கிண்ணம்) முதலில் மதுரையில், வைகை கரையோரத்தில் பிச்சை எடுத்து அனைவருக்கும் உணவளிக்கிறது..

மதுரைக் காஞ்சியில் வைகையின் சிறப்பு
“வைகை விரிந்த பெருநீர் வீழ்ந்து
கடற்கரை கலந்தன போன்றன;
நெய்தல் நுண்ணறிவினோடும்,
மருதம் மகிழ்ந்தன போலவும்,
பசும்புல் கொழித்தன பசும்பொன் சேர்த்தன,
மதுரை நகர் வைகைத் தண் நீரே.” (பா. 153–160) அடிக் (1) மது.காஞ்
       
வைகை பெருநீர் பாய்ந்து கடலில் கலக்கிறது. அதன் நீர் நெய்தலையும் மருதநிலத்தையும் வளமாக்குகிறது. பசும்புல் செழித்து பொன்னின் வளம் போன்றதாக விளங்குகிறது. அக்காலத்தில் பறந்து விரிந்த மக்களுக்குப் பசி இல்லா வாழ்வை வைகை தந்துள்ளதை அறிய முடிகிறது.

“வைகை அணையோடு வயல் மலர்ந்து,
பசும்பொன் துளித்தன பசும்பயிரே;
பாசறை பாடி வண்டுகள் சூழ்ந்து,
மணமிகு மலர்கள் மலர்ந்தனவே. (பா. 221–228) அடிக்(2) மது.காஞ்சி      
      வைகை அணைக்கு அருகே வயல்கள் மலர்ந்தன. பசும் நெற்பயிர் பொன்னின் துளி போலத் திகழ்கிறது. மணமிகு மலர்களில் வண்டுகள் இசை பாடுகின்றன. மலர் போல உள்ள வயல்கள் வறண்ட பாலைவனமாக மாறிக் கொண்டுள்ளது பொன்னிறமான நெற்பயிர்த் துளிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சோலை வளமான மதுரையின் வைகை நதிப் பகுதிகள் இன்று கட்டிடங்களால் உயர்ந்து நிற்கிறது.

“வைகையோடு விரிந்த மருதநிலத்து
உழவர் தொழுது பாடி உழுதனரே;
தண் நீர் பெருகி வற்றாத செழுமையால்
பசுந்தழை விரிந்து பரப்பினவே.” (பா. 301–310) அடிக் (3) மது.காஞ்சி         
      வைகை ஆற்றங்கரையின் மருதநிலத்தில் நீர் செல்லும் பொழுது வைகை கொண்டு வரும் மலர்களும் தாவர இலைகளும் போட்டு உழவர்கள் பாடலோடு உழுதனர். வைகைத் தண்ணீர் எப்போதும் பெருகி குறையாததால் பசுந்தழைகள் பரந்து விரிந்தன. வயல்வெளிகளிலும் செழித்து வளர்ந்தன. மண்ணின் மைந்தர்களான விவசாயிகளும் மனம் மகிழ்ந்து வாழ்ந்தனர். அன்றைய காலத்தில். ஆனால் இன்றோ அனைத்தும் பொய்த்துப் போய் வறண்ட நிலமாக நோய்வாய்ப்பட்டு புரையோடிக் காணப்படுகிறது  மதுரை மண்.

“வைகை வடியும் தண் நீர் சூழ்ந்து,
மதுரை மணிமாடம் விளங்கிய நகர்;
வளம் பெருகிய வளந்தோன்றல் போல
எல்லாம் இணைந்து எழிலுற்றதே.” (பா. 511–518) அடிக்(4) மது.காஞ்         
       வைகை தண்ணீர் சூழ, மணிமாடங்களால் விளங்கியது . ஆனால் இன்று வைகை நதி எல்லாம் மாடுகளும் ஆடுகளும் மனித கழிவுகளும் குப்பைக் கூலங்களும் நிறைந்து வைகையினுடைய பரப்பளவு குறைந்து வறுமையாய் போனால் வைகை அன்னை. மதுரை நகரம் எழிலுறத் திகழ்ந்தது. அது செழித்து வளம் தரும் வளந்தோன்றல் போல இருந்தது  வைகை ஆறு மதுரையின் உயிர்நாடியாகப் படைக்கப்பட்டுள்ளது.உழவுக்கும் வளத்துக்கும் ஆதாரமாக இருந்தது.மதுரை நகர அழகையும் வளத்தையும் வைகை பெருமிதமாக்கியது. மதுரை நகரத்தையும், அதனுடன் இணைந்த வைகை நதியையும் அழகாகப் புகழ்கிறது, மதுரைக்காஞ்சி. ஏடுகளில் மட்டுமே ரசிக்கக் கூடிய நிலையை இன்றைய மனித சமுதாயம் உருவாக்கி விட்டது நதிகளும், குளங்களுக்கும் ,நல்ல நீர் நிலைகளும்  அழிவின் விளிம்பில் உள்ளது.நல்ல நீர் என்பதும் நாம் பருகக்கூடிய தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

“ஆற்றினும் பெரிது மதுரை;

அங்கே வையை பாய்கின்றது;”
         
          அதனால் உழவர் வளம் பெருகி, வணிகரும் செழித்தனர். வைகை பாய்ந்து வந்ததால், மதுரை நிலங்கள் செழித்து, உழவர், வணிகர் அனைவரும் வளம் பெற்றனர் என்கிறது.மதுரைக் காஞ்சி (சிறப்புரை) மதுரைக்கு வைகை நதி உயிராக இருந்தது.நகரின் புறங்களில் வைகை வழியாக மண் வளம் பெற்றதால், அரிசி, பண்டங்கள் மிகுந்தன.வைகையைக் கடந்து வந்த வணிகர்கள் மதுரையைப் புகழ்ந்தனர்.

பதிற்றுப்பத்து
         
        பாண்டியர்களின் தலைநகராக இருந்த மதுரைக்கு வைகை முக்கியம் சில பாடல்களில் வைகை கரையில் பாண்டிய மன்னர்கள் யானை, குதிரைப் படையுடன் விளங்குவர் என வர்ணிக்கிறது.வைகையை அடிப்படையாகக் கொண்டு பாண்டியர் வளம் பெருகுவதாகக் கூறுகிறது.

அகநானூறு & புறநானூறு
         
       பல இடங்களில் “வையை” கரையில் நடந்த போர்கள், விழாக்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அகநானூறு பாடல்களில் காதல் பின்னணியில் வைகை கரையைச் சுட்டி, காதலர்கள் சந்திக்கும் இடமாகக் கூறப்பட்டுள்ளது.
புறநானூற்றில், வைகையைத் தாண்டி வந்த போர்த் தளங்கள், பாண்டியர் வெற்றி விழாக்கள் சொல்லப்படுகிறது.

சிலப்பதிகாரம்    
      சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தில் வைகை நதி பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் வைகையின் அழகும், நீரின் பெருக்குமும், மதுரையின் வளமும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் வரும் வைகை பற்றிய பாடல் வரிகள்,

சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் (வைகை நதி வர்ணனை)
“வைகையொடு புனல்படர் பாண்டிமதுரை
பூக்கள் தொடுத்து நிறைந்த புலி நகர் எய்தி
நீரில் உலாவிய நெடுங்குழல் யாழ் இசை
காணும் இடமெலாம் இனிதாகும்” சிலம்பு அடிக்(4)
வைகை வழியொடு வரும்பெருங் கணங்கள்
மதுரை மணிமாடம் சூழ்ந்து விரிந்தன
பெருகிய புனலினில் பெண்மணி கூத்தாட
கரையொடு கரையெனக் களிப்புற நின்றன
வைகைத் துறைமுகம் வாழ்விடம் பெற்றனர்
ஆயர்தம் குழுவினர் ஆட்டமாடினர்
மணியொலி முழங்கிய மதுரைத் துறைமுகம்
அணியொடு விளங்கிய அற்புத நகர்”
      வைகை நதியின் பெருக்கால் மதுரை வளமுடன் காட்சியளிக்கிறது. வைகையில் நீராடும் பெண்கள் பாடல் பாடி விளையாடுகின்றனர். நதிக்கரையில் யாழிசை, நடனங்கள், மக்களின் ஆனந்தம் நிறைந்து காணப்படுகிறது. வைகையால் மதுரை “மணிமாட நகரம்” எனப் பெருமைப்படுகிறது. கண்ணகி மதுரையைச் சுட்ட அத்தியாயத்தில், வைகையின் அருகிலுள்ள மதுரை நகரமே எரிந்து சிதைகிறது. வைகை நகரின் அடையாளமாகக் காணப்படுகிறது. தொல்காப்பியம் (செய்யுள் இலக்கணம்) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணையில் மருத நிலம் குறித்துப் பேசும்போது, வைகை நதியின் பாசன வளம், உழவர் வாழ்க்கை முதலியவை எடுத்துரைக்கப்படுகிறது. தவிர வைகை இடம் பெற்றுள்ளன.

மருதநிலத்தின் சிறப்பு ஆறுகள்
        
        ஆற்றின் மூலத்தில் இருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஆறுகள் பொதுவாகக் கடலிலோ அல்லது பெரிய ஏரிகளைப் போன்ற நீர் நிலைகளிலோ கலக்கின்றன. வரண்ட பகுதிகளில் ஆற்று நீர் ஆவியாவதன் மூலம் இவ்வாறான நீர் நிலைகளை அடையு முன்னரே வறண்டு விடுவது உண்டு. சில ஆறுகள் மண்ணுக்கு ஊடாகவோ, ஊடுசெல்லவிடும் பாறைகளூடாகவோ நிலத்துக்குள் உறிஞ்சப்படுவது உண்டு. இது நிலத்தடி நீராகத் தங்கிவிடுகிறது. தொழிற்சாலைகளுக்கும், நீர்ப்பாசனத் தேவைகளுக்கும் பெருமளவில் நீரை எடுப்பதனாலும் அதன் இயற்கையான முடிவிடத்தை அடையும்முன்பே ஆறு வற்றிவிடுவதையும் காணலாம். ஆற்றுக்கு நீரை வழங்கும் பகுதி அல்லது ஆற்றினால் வடியச் செய்யப்படும் நிலப்பகுதி வடிநிலம் அல்லது நீரேந்து பகுதி எனப்படுகின்றது. ஆறுகளுக்கு மலைகளுக்கும் இடையில் அன்று அணைகளை கட்டினார்கள் நம் முன்னோர்கள். மக்கள் பயன்படுத்தும் வாழ்வாதாரமாக நதிகள் இருந்தது. மனிதனின் ஆசைகளால் குளங்களும் ஆறுகளும் வறுமையாகி நிற்கிறது.

சங்க புலவனின் சிறப்பு        
           குறுநிலமன்னர்களையும், அரசர்களையும், புகழ்ந்து வந்தால் பொன் பொருள் கிடைக்கின்ற அக்காலத்தில் அதையும் தாண்டி நற்புலவர்கள் பல நமது நாட்டில் ஓடுகின்ற நதிகளையும், கடல்களையும், இயற்கையையும் பாடல்களில் பதிவு செய்தனர். நதிகளால் ஏற்பட்ட வளமை வாழ்க்கை, பொருளாதார நிலை, சமுதாய மேம்பாடுகள் வாழ்க்கைத்தரம் வாழ்வியல் சூழல் அமைதியாகவும், மகிழ்வாகவும் அமைந்திருந்தது.

வைகையின் வறுமையின் கொடுமை 
 
“வைகை பெருகப் பொழில்கொள் மதுரை”சிலம்பு அடிக்.குறி (5)
(மதுரையின் செழிப்பு வைகையின் நீரால் வளர்ந்தது எனக் கூறுகிறது)
வளமான சந்தை பற்றிய வரிகள்

“வைகைத் துறை வணிகம் வளர்ந்து”
(வைகைத் துறையில் வணிகம் மிகுந்தது)
வளம் குறையாத மதுரை வற்றாத வைகை வளம் குன்றா மதுரை”
(வைகை வற்றாததால் மதுரையின் வளமும் குறையவில்லை)

“வைகையருகின் மகிழ்ந்தோர்தம் விளையாட்டு”
       (வைகை கரையில் மக்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினர்)
 சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில், “வைகை” (அதாவது வைகை ஆறு) பற்றிய தொடர்ச்சி மற்றும் உள்தர்ம உணர்ச்சிகளை எழுத்தாளர்கள் அழகாகக் கேள்விப்பட்டுள்ளனர். குறிப்பாக, புலவர்கள் வர்ணிக்கும் விதத்தில்: கோவலனும் கண்ணகியும் மதுரையை அடைகின்றனர். வையை நதியைக் கடக்க அதனைச் சார்கின்றனர். பூக்கள் நிறைந்த அந்த ஆறு தன் நீரைக் கரந்து செல்கிறது. கண்ணகி கோவலனுக்காக வருந்தும் வைகை தன் கண்ணிரை உள்ளடக்கி மறைத்துச் செல்வதைப் போல அதன் நீர் வெள்ளம் மறைந்து கிடக்கிறது.” இதில்:   “பூக்கள் நிறைந்த உயர்ந்த அணை ஊற்று… தன் நீரைக் கரந்து செல்கிறது” — என்று சீரிய அழகுடன் செல்கிறது.,
“கண்ணகி கோவலனுக்காக வருந்தும் வைகை” என்று, மனிதன் (கண்ணகி) மற்றும் இயற்கை (வைகை ஆறு) ஒருங்கிணையும் உணர்ச்சியாக வெளிப்படுகிறது.அதன் நீர் “கண்ணிரை” (இரக்கத்தாலும் அன்பாலும்) மறைத்து செல்கிறது என்று எழுத்தாளர் சுட்டிக்காட்டுகிறார் — இது வைகையின் வறுமைக் காட்சியாகும்.இவ்வாறு, மனவியல் முகத்திலிருந்து விவசாய அல்லது இயல்பியலில் அமைந்த “வறுமை” அல்ல;இது உணர்ச்சி சார்ந்த உருவகம், வறுமையும் துயரமும் காட்டும் அழகிய மொழி வடிவமென பொருள் கொள்ளலாம் அன்றைய காலகட்டத்தில் இது பொருந்தும்.ஆனால் இன்றோ இதன் நிலை முற்றிலும் மாறுபட்ட அமைந்துள்ளது..
“கோவலனும் கண்ணகியும் மதுரையை அடைகின்றனர். வையை நதியைக் கடக்க அதனைச் சார்கின்றனர். பூக்கள் நிறைந்த அந்த ஆறு தன் நீரைக் கரந்து செல்கிறது. கண்ணகி கோவலனுக்காக வருந்தும் வைகை தன் கண்ணிரை உள்ளடக்கி மறைத்துச் செல்வதைப் போல அதன் நீர் வெள்ளம் மறைந்து கிடக்கிறது. ”சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் (புனைவியல் வர்ணனை ஆகும். இலக்கியத் தரம்  சங்க இலக்கியத்தின் அழகிய வடிவமான உணர்ச்சி எடுக்கும் உலக கோணத்தை நிறைவேற்று உள்ளது.

பரிபாடலில் வைகை நதி
      
     பரிபாடலில் வைகை நதியைப் புகழ்ந்து பாடியுள்ள பாடல்கள் சில உள்ளன. வைகையின் அழகையும், அதன் கரையோர வாழ்வையும், செழிப்பையும், சஞ்சாரிகளின் மகிழ்வையும் விவரிக்கின்றன.

“வைகை நீர் பரப்பின்

நளிர்நிறைத் தண் புனல்,

மைகொள் கமழ் தும்பை

மலரொடு படர்ந்தன,

அம்புயம் புனைசேர்

அன்னம் தம் குடியென

தும்பையொடு புணர்ந்து

சூழ்ந்தன கொக்குகள்.” அடிக்குறி.(6)பரி
         
    வைகை நதியின் நீரில் மிகுந்த குளிர்ச்சியுடனும் இனிமையுடனும் ஓடும் தன்மை சொல்லப்படுகிறது.அதன் கரையில் தும்பை மலர்கள் மலர்ந்து மணம்கொடுக்கின்றன.தாமரை மலர்கள் (அம்புயம்) மலர்ந்து நிற்க, அதனுடன் சேர்ந்து அன்னப்பறவைகள் குடியிருந்து விளையாடுகின்றன.தும்பை மலர்களோடு கூடியவாறு, கொக்கு பறவைகளும் அங்கங்கு சூழ்ந்து காணப்படுகின்றன.இதன் மூலம் வைகை நதி ஒரு சாதாரண நதி அல்லாமல், இயற்கையின் அழகை நிரப்பிய செழிப்பின் அடையாளமாகவும், பறவைகளின் வாழ்விடமாகவும், மணமிகு மலர்களின் பூங்காவாகவும் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்ட வைகை நதி இன்று வளமை குன்றி ,தன்னிலை பிறழ்ந்து, அளவில் சுருங்கி, அழகை இழந்து, அவலத்தைச் சுமந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

முடிவுரை
         
         வைகை நதி சங்க காலத்தில் உயிரோடு பாய்ந்து மதுரைக்கு செழிப்பையும் வளத்தையும் அளித்தது. புலவர்கள் பாடல்களில் வைகை இயற்கையின் அழகு, விவசாய வளம், வணிகச் செழிப்பு, மக்களின் ஆனந்தம் எனப் பல்வேறு பரிமாணங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் வைகை “மதுரையின் உயிர்நாடி” எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலையில், மனிதனின் அக்கறையின்மை, மாசுபடுத்தல், ஆக்கிரமிப்பு ஆகிய காரணங்களால் வைகையின் நீர்ப்பெருக்கு குறைந்து, அதன் இயற்கை வளமும், பழம்பெருமையும் சிதைந்து வருகிறது.ஆகவே, நதிகள் என்பது வெறும் நீரோட்டம் அல்ல; அவை மனித வாழ்வின் அடித்தளம், பண்பாட்டு அடையாளம், பசுமையின் மூலாதாரம். வைகை உள்ளிட்ட நதிகளைப் பாதுகாப்பது நம் வருங்கால சந்ததியின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் கடமையாகும். சங்க காலத்தில் புலவர்கள் வைகையைப் புகழ்ந்தது போல, இன்றைய காலத்தில் நாம் அதை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். “வைகை வற்றாதால் மதுரை வளம் வற்றாது” என்ற பழமொழி போல, நதிகளின் வளம் தான் நம் வாழ்வின் வளம் என்பதனை உணர்ந்து செயல்பட வேண்டியது நம் கடமை. எனவே, வைகையும், தமிழகத்தின் பிற நதிகளும் காக்கப்பட்டால் மட்டுமே நமது பண்பாட்டும், சமூக வளர்ச்சியும், எதிர்கால தலைமுறையின் வாழ்வாதாரமும் உறுதி பெறும்.

துணை நூற்பட்டியல்
1.மதுரைக் காஞ்சி, இளங்குமரன், இரா., பதிப்பாளர், புரட்சிக் கவிஞர் மன்றம் : மதுரை, பதிப்பு ஆண்டு, 2014

2.முனைவர் ரா. சீனிவாசன், சிலப்பதிகாரம் மூலமும் திறனாய்வும், அணியகம் 3, செல்லம்மாள் தெரு, செனாய் நகர், சென்னை.

3.முனைவர் இரா. சாரங்கபாணி, பரிபாடல், முல்லை பதிப்பகம் .

4. புலியூர்க் கேசிகன், பரிபாடல், திருமகள் நிலையம், கௌரா பதிப்பகம்.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் த.சங்கீதா
உதவி பேராசிரியர்,
தமிழ்த்துறை,
புனித பீட்டர் உயர்கல்வி மற்றும்
ஆராய்ச்சி நிறுவனம் ஆவடி, சென்னை.

 

The Sound of the Twisted Bow by Rama and the Distance it Reached|Dr.G.Mangaiyarkkarasi

இராமன் வளைத்த வில்லும், வில்லின் ஒலி கேட்ட தொலைவும் - முனைவர் க.மங்கையர்க்கரசி
Synopsis
        Rama, an incarnation of Thirumal, was born for Raavana’s demise only. Lord Rama will hold the Godandum (Bow) in his hand. He married Sita by twisting Lord Shiva’s Triyambaka bow, which was imposed as a precondition by King Janaka for the marriage of his lovely daughter Sita. The sound of twisting and breaking of that Divine bow was heard even in the heaven. It was heard even in Ayodhya, where Dasharatha ruled, and even in Mahendra Hill, where Parashurama lived, and even in Sri Lanka, where Ravana ruled. Kambar says that as  Sita  was in the palace of Mithila, she could not hear that sound and she came to know  that Rama had twisted and has broken  that  bow only after it was conveyed by her own  close associate  Neela Malai and the same has been elegantly expressed out in Ramayana by the legendary poet Kambar. Here it is imagined that   Sita did not hear that voice because of her ecstacy of love towards Rama her Life Partner.

Key words: Ram, Seetha, Breaking Sound o the Bow, Enthusiasm of the Divine Beings.


இராமன் வளைத்த வில்லும், வில்லின் ஒலி கேட்ட தொலைவும்

ஆய்வுச் சுருக்கம்
           திருமாலின் அவதாரமான இராமன் பிறப்பெடுத்ததே இராவண வதத்திற்காக தான். இராமன் கையில் எப்போதும் கோதண்டம் இருக்கும். திருமண நிபந்தனையாக ஜனகன் விதித்த சிவனின் திரியம்பகம் வில்லை வளைத்தே சீதையை மணம் புரிந்தார். அவன் வளைத்த வில்லின் ஓசை விண்ணுலகம் வரை கேட்டது. தசரதன் ஆட்சிபுரிந்த அயோத்தி வரை,பரசுராமர் வாழ்ந்து வந்த மகேந்திர மலை வரை, இலங்கை வேந்தன் இராவணன் ஆண்ட இலங்கை வரை கேட்டது என்றும், மிதிலையில் அரண்மனையில் இருந்த சீதைக்குக் கேட்கவில்லை, தோழி நீலமாலை வந்து சொன்ன பிறகுதான், இராமன் வில்லை வளைத்ததையே சீதை அறிந்து கொண்டாள் என்று கம்பர் தம் இராமாயணத்தில் சுவையாகக் கூறி சென்றுள்ளார். தலைவனைப் பற்றிய காதல் நினைவிலேயே இருந்ததால் அவளுக்கு அவ் ஓசை கேட்கவில்லை போலும்.

திறவுச் சொற்கள்: இராமன், சீதை, வில், ஒடித்த போது கேட்ட ஓசை,   தேவர்களின் மகிழ்ச்சி.

முன்னுரை
        இராமன் கையில் வில் (கோதண்டம்) எப்பொழுதும் நீங்கா இடம் பெற்றிருக்கும். வில்லேந்திய இராமனையை நாம் கம்பராமாயணம் முழுவதும் காண்கிறோம். தாடகை வதத்தில் ஆரம்பித்து இராவணவதம் முடிய நாம் கோதண்டராமனையேப் பார்க்கிறோம். ஒரு சொல், ஒரு வில், இரு இல் என்றே வாழ்ந்தவன் நம் கதாநாயகன் இராமன். நூல் முழுவதும் இராமபிரானின் அளவிடமுடியாத வில்லாற்றலை நம் கண்முன் காட்டுகிறார் கம்பர். கிடைத்தற்கரிய, சீதையைப் பெறவேண்டுமானால் சிவதனுசை வளைத்து நாணேற்ற வேண்டும் என்ற நிபந்தனையின்படி, வில்லை வளைத்து நாணேற்றி, திருமகளாம் சீதையை மணந்தான். வில்லின் பெருமையையும்,அதன் வரலாற்றையும், அதைச் சுமந்து வந்த வீரர்களின் எண்ணிக்கையையும், வில்லின் ஒலி எவ்வளவு தொலைவிற்குக் கேட்டது என்பது குறித்தும் கம்பர் தம் இராமாயணத்தில் கூறியுள்ள கருத்துக்களைக் இக்கட்டுரையில் ஆராய்வோம்.

வில்லின் வரலாறு
      வில்லின் வரலாற்றை சதானந்த முனிவர் கூற ஆரம்பித்தார். சிவன், உமாதேவியைத் தந்தையான தக்கன் இகழ்ந்தான் என்பதால், பொறுமை சிறிதுமற்று பொங்கிய சினத்தோடு இந்த வில்லைக் கையில் எடுத்துக்கொண்டு, தக்கன் வேள்வி செய்யும் இடத்துக்குச் சிவன்,  சென்றான். வேள்விக்கு வந்திருந்த தேவர்கள் சிலருடைய பற்களும், கைகளும் சிதறின. அதுவரை அவர்கள் புகுந்திடாத மறைவிடங்களில் எல்லாம் தேவர்கள் ஓடிப் புகுந்தனர். தக்கனது வேள்வி குண்டத்தில் இருந்த அக்னியும் அழிந்தது. பின்பே சிவன் சினம் தணிந்தான். அவர் கையில் இருந்த வில்லைக் கண்ட தேவர்கள் நடுங்கினார்கள். அவர்கள் இன்னும் வாழ வேண்டிய வாழ்நாளைப் பெற்றவர்கள். அதனால் வலிமை பொருந்திய அடிதண்டையும் கட்டமைப்பையும் பெற்ற தனது வில்லை  ஜனகனது குலத்திலே தோன்றிய வாள் கொண்டு உழும் வல்லமை பெற்ற தேவராஜன் என்னும் அரசனிடம் கொடுத்துவிட்டான். இத்தன்மை பெற்ற இவ்வில்லின் வலிமையை நான் எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ என்று சதானந்தர் கூறினார்.(கார்முகப்படலம் 628)

வில்லை வளைத்தவனுக்கே சீதை
 
            அழகுமிக்க சீதையை மணக்க ஜனகன் ஒரு நிபந்தனை விதித்திருந்தார். சிவபெருமான் கைக்கொண்டு போரிட்ட வில்லை வளைத்தவனே சீதையை மணப்பதற்கு உரிமை உடையவன் என்று நாங்கள் உறுதியாக உரைத்தோம் என்ற சதானந்தர் கூறினார். வில்லை 60,000 வீரர்கள் சுமந்து வந்து நில மகளின் முதுகு நெளிந்து போகும் படி கீழே வைத்தனர். இந்த வில்லை எடுத்து வளைக்கப் போகின்றவர் யாரோ என்று கூறி கை நடுக்கம் அடைந்தார். (கார்முகப்படலம் 624) பெண்ணைப் பெற்ற ஜனகர் தன் மகள் சீதைக்குத் திருமணம் செய்ய விரும்பினார். வில்லை வளைத்தவர்க்கே பெண் என்ற நிபந்தனையை விதித்திருந்தார். யாராலும் அந்த வில்லைத் தூக்கக் கூட முடியவில்லை. திருமணமும் தள்ளிப்போனது.
பருவமடைந்த பெண்ணுக்குத் திருமணம் தாமதமானால் அவள் தந்தையின் மனநிலை மிகவும் வருத்தமடையும். சிவதனுசின் வரலாற்றை சதானந்த முனிவர் அவையோர்க்கு சொல்லத் தொடங்குகிறார். இம்முறையாவது சிவதனுசை யாராவது முறித்தால் சீதைக்குத் திருமணம் நடைபெறும். நடைபெற வேண்டுமே என்ற கவலையோடு அந்த சிவதனுசை ஜனகர் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் கவனித்த சதானந்த முனிவர், கூறத்தொடங்கினார்.

“போதகம் அனையவன் பொலிவை நோக்கி அவ் 
வேதனை தருகின்ற வில்லை நோக்கித் தன் 
மாதினை நோக்குவான் மணத்தினை நோக்கிய
கோதமன் காதலன் கூறல் மேவினான்” (கார்முகப்படலம் 625)
இராமன் வில்லை வளைத்தல்
       விசுவாமித்திரரின் குறிப்பை உணர்ந்த இராமன் வில்லைப் பார்த்து அதை நோக்கி நடந்தான். சீதை என்பவளுக்குச் சூட்டும் பொருட்டு நீட்டுகின்ற இதழ் விரிந்த மாலை என்று எண்ணும் படி மிக எளிதாக அந்த வில்லை இராமன் கையில் எடுத்தான். அக்காட்சியைக் கண்டவர் தம் இமைகள் அசைவதைத் தடுத்து இமைக்காத விழிகளோடு மேலே நடக்கப் போவதைக் காண காத்திருந்தனர். ஆனாலும் அவர்கள் இராமன் அந்த வில்லின் ஒரு முனையைத் தன் காலின் கீழ் இருக்குமாறு மிதித்துக்கொண்டு, அதன் மற்றொரு முனையை வளைத்ததையும் அதில் நாணினைப் பூட்டியதையும் அச்செயல்கள் நிகழ்ந்த வேகத்தால் காணாதவரானார்கள். அவை நிகழ்ந்த தன்மையை மனதாலும் அவர்கள் அறியவில்லை. முதலில் இராமன் அந்த வில்லை எடுத்ததைக் கண்டார்கள். உடனே அந்த வில் இற்றதை முறிந்ததைக் கேட்டார்கள். அவ்வளவுதான்.

“தடுத்தது இமையாமல் இருந்தவர் தாளில் 
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் 
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் 
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்”  (கார்முகப்படலம் 648)
வில்லோசை கேட்ட தேவர்கள்
      வில் ஒடிந்த பேரோசையால் மூவுலகத்துக்கும் தோன்றிய அச்சம் வில்முறிந்த வல்லோசையைக் கேட்டதை இவர்கள் பிரம்மன் படைத்த பெருமை மிகுந்த அண்ட கோளம் பிளந்துவிட்டது என்று கருதி கவலை அடைந்து, இப்போது நாம் யாரிடம் அடைக்கலம் கேட்டு போவோம் என்று எண்ணி வருந்தினர். தேவர்களின் நிலை இவ்வாறானால் உலகத்து மக்கள் அடைந்த நிலையை வீணாக ஏன் சொல்ல வேண்டும். இந்த பூமியைத் தாங்கிக்கொண்டு, பூமி என்னும் மரத்தின் வேர் போல விளங்கும் ஆதிசேஷன் இடி தன்மையில் விழுந்துவிட்டது என்று நினைத்து பயந்தான். (கார்முகப்படலம் 649)
பகைவருக்கு அச்சமளித்து தனக்கு வெற்றியை அளிக்கும் வேலை உடைய ஜனகன் செய்த புண்ணியம் இன்று பயனளித்து விட்டது என்று எண்ணிய தேவர்கள் பூமழை சொறிந்தார்கள். (கார்முகப்படலம் 650)

வில்லோசை கேட்ட மிதிலை மக்கள்
       மேகங்கள் பொன் மழையைப் பொழிந்தன. உலகைச் சுற்றி பறந்துள்ள கடல்கள் பலவகையான சிறந்த ரத்தினங்களை அள்ளி வீசி ஆரவாரம் செய்தன. சிறந்த முனிவர்களில் குழுக்கள் எல்லாம் நல்வாழ்த்துக்கள் கூறினார்கள். மிதிலை நகரில் ஆரவாரம் மிகுந்திருந்தது. (கார்முகப்படலம் 650, 651)
 விரும்பி அருந்தத் தக்க கள்ளைப் பருகியவர்கள் போல சிவந்து காணப்படும் கரிய மைப்பூசிய கண்களை உடைய மகளிர் தம் மனதிற்கு புண்ணைத் தந்த ஊடல் நீங்கியதால் தன் கணவரைத் தழுவிக்கொண்டனர். வீசும் அலைகளால் பரப்பளவை மேலும் விரியச் செய்யும் கடலிலே வெண்மேகங்கள் தண்ணீரைப் பருகுவது போல வறுமையுடையவர்கள் இவ்வுலகில் குவிந்திருக்கும் ஜனகனது பெருஞ்செல்வதை அவரது ஆணையின்படி வாரி சென்றார்கள்.

மிதிலை நகரத்தார் கூறிய உவகை மொழிகள்
         மிதிலை நகரத்து மக்களில் சிலர் இவன் தசரதன் புதல்வன் என்று கூறுவர். சிலர் செந்தாமரைக் கண்ணனான பெருமாளே இவன் என்று சொல்லுவர். சிலர் இவனது திருமேனி ஒரு கருமேகமே என்று உரைப்பர். சிலர் அத்திருமேனி காயாம்பூ வண்ணத்தையும் ஒத்தது என்று புகழ்வர். சிலர் இவன் மனிதன் அல்லன் என்று உறுதி செய்வர். சிலர் கயல் மீன்கள் வாழும் பாற்கடலில் வாழும் பெருமாளே இவன் என்று ஐயம் இன்றி அறைவர். சிலர் இவனை மானுடன் என்று கூறும் உலகத்தினர் அறியாமை பெற்றவர் என்று கூறுவர். (கார்முகப்படலம் 656)
இராமனின் அழகைக் காண்பதற்கு சீதைக்கு ஆயிரம் கண்கள் வேண்டும். சீதையை ஒவ்வொரு முறைக் காணவும் அதைப்போல இராமனுக்கும் ஆயிரம் கண்கள் வேண்டும். இந்த அழகனின் தம்பியினுடைய அழகையும் பாருங்கள் என்று சிலர் சொல்லுவர். அந்த அழகர்களை பெற்றுள்ள இவ்வுலகம் தவம் பெற்றுள்ளது என்பவர். சிலர் இவ்வுலகில் தோன்றிய அழகர்களான இவ்விருவரையும் நாம் காணுமாறு இந்த மிதிலை நகருக்கு அழைத்து வந்த விசுவாமித்திரனை வணங்குங்கள் என்பார் சிலர். (கார்முகப்படலம் 657)
இவைஎல்லாம் இராமன் வில்லில் நாணேற்றிய ஒலியைக் கேட்டவுடன் மிதிலை மக்கள் அடைந்த மகிழ்ச்சியைக் குறிப்பிடுகிறது.

அயோத்தியில் கேட்ட வில்லின் ஒலி
        ஜனகனின் தூதர்கள் திருமண ஓலையை எடுத்துக் கொண்டு சக்கரவர்த்தி தசரதனின் அரண்மனையை அடைந்து ஓலையை வணங்கி வழங்கினர். அதைப் படித்து செய்தியை அறிந்த மன்னன், வெற்றி பெற்ற வேலை உடைய தசரதன் தொகுதியான நீண்ட ஜடை முடியை உடைய சிவபெருமான், தக்கனது வேள்வியை அழித்த போது, ஏழு உலகங்களையும் வெற்றி கொண்ட வலிமையான அந்த வில்லை இராமன் முறித்த போது உண்டான பேரொளி தானா? அன்று இங்கே இடிஒலியாகக் கேட்டது என்று கூறினான்.               

“வெற்றிவேல் மன்னவன் தக்கன் வேள்வியில் 
கற்றை வாறு சடை முடிக் கணிச்சி வானவன் 
முற்ற ஏழ் உலகையும் வென்ற மூரி வில்
இற்ற பேர் ஒலிகொலாம் இடித்தது ஈங்கு என்றான்” (எழுச்சிப் படலம் 685)       
        மிதிலையில் இராமன் ஒடித்த வில்லின் ஒலியானது அயோத்தியில் கேட்டது என்று தசரதன் குறிப்பிடுகிறான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 

மகேந்திர மலையில் கேட்ட ஒலி
        பரசுராமர் படலத்தில் திருமணம் முடித்து அயோத்தி செல்லும் வழியில் தசரதனையும், அவருடன் வந்தவர்களின் எதிரில் வந்த பரசுராமர் மறித்தார். நான் வென்ற உலகம் முழுவதையும் காசிப முனிவருக்கு தானமாகத் தந்துவிட்டேன். வெளிப்பகைகளை அடக்கி வென்ற நான், உட்பகைகளை வெல்வதற்காக மகேந்திர மலையில் தங்கி அளவில்லாத பெரிய தவங்களைச் செய்து வந்தேன். நீ சிவன் வில்லை முறித்த ஓசை, அங்கிருந்த என் செவியில் பட, சினம் கொண்டு இங்கு வந்தேன். உனக்கு வலிமை இருக்குமானால், உன்னுடன் நான் போரிடுவேன். முதலில் இந்த திருமாலின் வில்லை வாங்கி வளைத்திடு என்றான் பரசுராமன்.

“உலகமெல்லாம் முனிவதற்கு ஏந்தேன். ஒரு பகை ஒடுங்கிப் போந்தேன் 
அலகு இல் மாதவங்கள் செய்து ஓர் அருவரை இருந்தேன் ஆண்டை 
சிலையை நீ இறுத்த ஓசை செவியுறச் சீறி வந்தேன் 
மலைகுவென் வல்லை ஆகின் வாங்குதி தனுவை என்றான்”(பரசுராமப் படலம் 1242)
         
       மிதிலையில் இராமன் ஒடித்த வில்லின் ஒலியானது மகேந்திர மலையில் கேட்டது என்று பரசுராமன் குறிப்பிடுகிறான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இலங்கையில் கேட்ட ஒலி
        நிந்தனைப் படலத்தில் சீதை, இராவணனிடம் கயிலை மலையை நீ எடுத்த போது கால் விரலால் அழுத்தி உன்னை வென்ற சிவபெருமான், திரிபுரங்கள் தீ பற்றி எரியும் பொருட்டு ஒப்பற்ற ஒரு அம்பை செலுத்துவதற்கு வில்லாக இருந்தது மேருமலை. அந்த மேரு மலையாகிய சிவனது வில் என் கணவனின் வலிமையைத் தாங்கும் வல்லமை அற்றதாய் முறிந்து வீழ்ந்த போது எழுந்த பேரொளியினை நீ கேட்கவில்லை போலும். அது என்ன அதிசயம் என்று கேட்கிறாள்.

“குன்று நீ எடுத்த நாள் தன் சேவடிக்கொழுந்தால் உன்னை 
வென்றவன் புரங்கள் வேவத் தனிச்சரம் துரந்த மேரு 
என் துணைக் கணவன் ஆற்றற்கு உரன் இலாது இற்று வீழ்ந்த 
அன்று எழுந்த உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா”  (நிந்தனைப் படலம் 450)
         
        படைக்காட்சிப் படலத்தில் மூலப்பல சேனைகள் இலங்கை வந்து சேர்ந்தன. அவர்களை வரவேற்று நலம் விசாரித்தான் இராவணன். இராம லக்ஷ்மணர்கள் குறித்து  புஷ்கர தீவின் மன்னன் வன்னி வினவிய போது பகைவரின் வலிமையை மாலியவான் எடுத்துக் கூறுகிறான். நீங்கள் இராம லக்ஷ்மணரின் வலிமையினைப் பற்றி இங்கு வந்து கேட்பது ஏன்? இராமனின் அக்னி ஆஸ்திரத்தால் அலை வீசுகின்ற கடல் அங்கு வேகவில்லையா அது இராமனால் ஏற்பட்டது என்பதை நீங்கள் சிறிதும் அறியவில்லையோ, கங்கையில் தலையில் கொண்டுள்ள சிவனது கடுமையான வில்லை சீதையின் பொருட்டு அக்காலத்தில் முறித்ததினால் உண்டான பேரொலி உங்களது செவியில் புகவில்லையோ என்று கேட்டான்.

“இங்கு வந்து நீர் வினாயது? என் எறி திரைப் பரவை
அங்கு வெந்திலதோ சிறிது அறிந்ததும் இலிரோ,
கங்கை சூடி தன் கடுஞ்சிலை ஒடித்த அக்காலம்
உங்கள் வான்செவி புகுந்திலதோ முழங்கு ஓதை”(படைக்காட்சிப் படலம் 3,227)
         
    மிதிலையில் இராமன் ஒடித்த வில்லின் ஒலியானது இலங்கையில் கேட்டது என்று  மாலியவான் குறிப்பிடுகிறான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

வில் ஒடித்த செய்தியை நீலமாலை சீதைக்குத் தெரிவித்தல்
         சீதையின் தோழி நீலமாலை மலையை ஒத்த சிவனது வில் முறிந்த செயலை நேரில் கண்டாள். அதை சீதையிடம் சொல்வதற்காக விரைவாக ஓடி வந்தாள் அந்த நீலமாலை. வந்த உடனே வழக்கம் போல சீதையின் திருவடிகளை வணங்கவில்லை. மாறாக ஆரவாரம் செய்தாள். எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டவளாக ஆடினாள். பாடினாள். அதைக் கண்ட சீதை அழகு மிக்க தோழியே, உன் மனமகிழ்ச்சியையும், அந்த மகிழ்ச்சி தோன்றியதற்கான காரணமான செய்தியையும் சொல்லுக என்று கேட்டாள். உடனே நீலமாலை செய்தியை வணங்கிச் சொல்ல தொடங்கினாள். யானை, தேர், குதிரை ஆகிய படை கடல்களைப் படைத்தவனும், கல்விக் கடலை உடையவனும் மாரி போல வாரி வழங்கும் நீண்ட கைகளை உடையவராகிய தசரதன் என்னும் பெயரை உடையவன். இந்த உலகம் முழுவதையும் ஒப்பற்ற முறையில் ஆட்சி செய்து வருகிறான். அவனுடைய புதல்வன் மலர் அம்புகளைக் கொண்டு காதல் மயக்கம் உண்டாகும் மன்மதனை விட, சிறந்த அழகைப் பெற்றவன். இவை மராமரங்கள் என்று சொல்லத்தக்க தோள்களை உடையவன். பாம்பணையில் துயிலும் பரந்தாமனோ என்று ஐயுறச் செய்யும் ஆற்றலை உடையவன். அவன் பெயர் இராமன். அவன் தன் தம்பியோடும் போற்றுதலுக்குரிய விசுவாமித்திரோடும் நம் நகருக்கு வந்துள்ளான்.  வலிமை மிகுந்தவனான அந்த இராமன், புனிதராகிய சிவபெருமான் எழுத வில்லை காணும் பொருட்டு வந்துள்ளார் என்று விசுவாமித்திரர் உரைத்தான். உடனே ஜனக மன்னனின் கட்டளையின்படி வில் வந்தது. வில்லை வளைத்து மிக எளிதாக நாண் ஏற்றினான். அதைக் கண்டு விண்ணுலகம் நடுங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வில்லின் ஒரு முனையைக் காலின் கீழ் மிதித்து முன்பு தனக்கு பழக்கமான படை கருவி இது என்று கண்டோர் கூறும் படி தன் தோள் வலிமையால் அதை வளைத்துவிட்டான். உடனே தேவர்கள் இராமனைப் புகழ்ந்து பூ மழை சொறிந்தார்கள். அவர்கள் அரசவை நடுக்கம் அடைய அந்த வில் முறிந்து விழுந்தது என்று நீலமாலைக் கூறி முடித்தாள். விசுவாமித்திர முனிவருடன் வந்த மேகம் போன்றவன் என்று கூறிய பிறகு அவன் செந்தாமரை கண்ணனான திருமாலைப் போன்றவன் என்றும், நீலமாலை கூறியதால், நான் காதல் கொண்ட அந்த நம்பியே அவன் என்று துணிந்து அவன் தானோ என்று முதலில் பிறந்த ஐயத்தை அகற்றிக் கொண்டாள். தாமரையை விட்டு தரணிக்கு வந்த திருமகளாகிய சிறப்பு மிக்க சீதை,

“மாத்திரை அளவில் தாள் மடுத்து முன் பயில்
சூத்திரம் இது எனத் தோளின் வாங்கினான்
ஏத்தினர் இமையவர் இழிந்த பூ மழை
வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே” (கார்முகப்படலம் 675)         
     மிதிலையில் இராமன் வில்லை ஒடித்து போது எழுந்த ஓசை, அதே மிதிலையில் அரண்மனையில் இருந்த சீதைக்கு கேட்கவில்லையாம். இராமன் மேல் அவள் கொண்ட காதல் மயக்கத்தில் இருந்ததால் வில் ஓடித்தபோது எழுந்த ஓசை சீதைக்குக் கேட்கவில்லை போலும். தோழி நீலமாலை வந்து சொன்ன பின்புதான் தெரிந்தது என்று கம்பர் நாடகநயம் போலும் குறிப்பிடுகிறார். (காதல் மயக்கத்தில் அவன் நினைவிலேயே இருந்ததால் கேட்காதோ என்னவோ)

முடிவுரை 
         ஜனகனின் அரண்மனை மண்டபத்தில் இருந்த சிவபெருமான் வைத்திருந்த திரியம்பகம் என்ற வில்லை இராமன் எடுத்து வளைத்தான். வில்லும் முறிந்தது. அந்தப் பேரொலியைக் கேட்ட வானத்து தேவர்களும் நடுங்கினர் என்று கூறுகிறார் கம்பர். அப்படியானால் அந்த பேரொலி விண்ணுலகம் வரை கேட்டது என்று ஆகிறது. தூதர் கொண்டு வந்த ஓலையைப் படித்து விவரம் அறிந்த மன்னன் தசரதன் அன்று கேட்ட ஒலி இதுதானோ என்ற போது மிதிலையில் ஒடித்த வில்லோசை அயோத்தி வரை கேட்டது என்பது புலப்படுகிறது. பரசுராமன் மகேந்திரமலையில் தவம் செய்து கொண்டிருந்தபோது வில்லோசை கேட்டதால் தான் நான் இங்கு வந்தேன் என்ற போது, மிதிலையில் ஒடித்த ஓசை மகேந்திரமலை வரை கேட்டது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. அசோகவனத்தில் இருந்த சீதை இராவணனிடம் இராமன் வளைத்த வில்லோசை உனக்கு அன்று கேட்கவில்லையோ (காட்டிற்கு இராமருடன் சீதை வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. அத்தனை வருடங்களுக்கு முன் கேட்கப்பட்ட ஓசை உனக்கு  கேட்கவில்லையோ என்கிறாள்). படைக்காட்சிப் படலத்தில் இராவணனின் பாட்டனார் புஷ்பகர தீவின் மன்னன் வன்னியிடம் சீதையை மணக்கும் பொருட்டாக அன்று இராமன் சிவபெருமானின் வில்லை வளைத்த ஓசை உங்களுக்கு கேட்கவில்லையோ என்று கேட்கிறான். இதிலிருந்து இராமன் வளைத்த வில்லின் ஓசை இலங்கை வரை கேட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதே மிதிலையின் அரண்மனையில் இருந்த சீதைக்கு, இராமன் வில்லை வளைத்த போது எழுந்த பேரொலி குறித்த செய்தியை தோழி நீலமாலை  அவளுக்கு கூறினாள் என்றும், கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்
1.செல்வம்.கோ,கம்பன் புதையல்,   சாரு பதிப்பகம், சென்னை 2016.     

2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், சாரு பதிப்பகம், சென்னை,2016.

4.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி  2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர்

அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II)

மீனம்பாக்கம்,
சென்னை 600061.

 

ஆசிரியர்|முனைவர் இரா.செல்வராணி

ஆசிரியர் - முனைவர் இரா.செல்வராணி

✒️ அன்னையிடம் 


விடைபெற்று காத்திருப்பேன்


வகுப்பறையில் உனக்காக..!


 

✒️உன் முகம் காணும்


ஆவலில் – நீ


வகுப்பில் நுழைந்ததும்


மனம் துள்ளி விளையாடுதே..!


 

✒️அகம் மகிழ்ந்துதான் போவேன்


உன் புடவை நிறத்தாலும்


அழகாலும்


என்னை கவரச் செய்வாய்..!

✒️பேச்சால் சொக்கித்தான் போவேன்


பாடங்களால்,


பண்பாளன் ஆக்குவாய்..!


 

✒️நானும் பக்குவமாகக்


கற்றுக் கொள்வேன்


சிரித்த வார்த்தைகளால்


சிந்திக்க வைத்து விடுவீர்கள்..!


 

✒️மாலையில் நீ கிளம்ப


நான் கலங்குவேன்


இன்னும் சற்று நேரம்


உன்னுடன் இருக்கலாமென்று..!


 

✒️மறுநாள் காத்திருப்பேன்


வகுப்பறையில் உனக்காக


அன்பால் என்னைப்


படியத்தான் வைத்து விடுகிறீர்..!


 

✒️படிப்பிலும் பண்பிலும்


உயர்த்தி மகிழ்வாய்!


உனக்கும் எனக்கும் இருக்கும்


அன்பு விலை மதிப்பற்றது..!


 

✒️உன் தாய்மை உணர்வு


என்னை தலை நிமிர


வைத்து விடுகிறது..!


 

✒️கற்பித்த உன்னால்


பெற்றவளின்


மனம் குளிர்ந்துதான் போகிறது..!

✒️எனக்கோ பெருமை


பல வந்து சேருகிறது..!


கவிதையின் ஆசிரியர்

முனைவர் இரா.செல்வராணி

உதவிப் பேராசிரியர்

தமிழ்த் துறை

ஜெ.எச.ஏ.அகர்சன் கல்லூரி

சென்னை -60

 

முருங்கை கீரையும் அம்புஜம் மாமியும்|ரா. ஷர்மிளா

முருங்கை கீரையும் அம்புஜம் மாமியும் - ரா. ஷர்மிளா
       “டம் டம் டமார்” காலை ஐந்து மணிக்கு ஒரே சத்தம். அம்புஜம் மாமி சமையல் வாசனை தெரு முழுக்க வரும். ஆனால் கொஞ்சம் சவுண்ட் பார்ட்டி. கையும் வாயும் சும்மா இருக்காது. பாத்திரம் எடுத்தா கீழே போடாம வேலை நடக்காது. சுறுசுறுப்பும், ரசனையும் மாமிக்கு ரொம்ப ஜாஸ்தி.
       
       நாராயண சாமி தூங்கி எழுந்தவுடன் மாமி பேச்சு ஒரு கும்மி பாட்டு மாதிரி இருக்கும். ராத்திரி தாலாட்டு பாட்டு கேட்பதும் காலைல கும்மி பாட்டு கேட்பதும் நாராயண ஸ்வாமிக்கு பழக்கமான ஒன்று.
       
      பெருமாளுக்கு காலைல சுப்ரபாதம், இரவு லலிதா சஹஸ்ரநாமம் மாதிரி. நாராயண ஸ்வாமி வீட்டுல காலைல கும்மி இரவு ரம்யமான தாலாட்டு. அந்த இட்லி, கொட்சு, தோசை, குருமா, சப்பாத்தி, பருப்பு எல்லாம் நினைத்தாலே தூக்கம் வரும். அது ருசியா மயக்கமானு யாருக்கும் தெரியாது. தரமான சாப்பாடு சாப்பிட்டால் தூக்கம் தானே வரும். இது அனுபவத்தில் உண்மை. அம்புஜம் மாமி குரல் கேட்டது.
       
     “வந்துட்டியா எனக்கும் உனக்கும் என்ன ஒரு பொருத்தம். நீயும் நானும் இல்லேன்னா சமையல் இல்லை. நான் எத்தனை நேரம் கஷ்டப்படணும் உன்னோட. நான் மனசுல நினைச்ச உடனே வந்துடரியே. காலைல உன் கலர் எவ்வளவு பிரெஷ் சா இருக்கு. உன் பெயர் கேட்டால் எனக்கு என் காலை வேலைகள் நியாபகம் வருது. பிள்ளையார் மாதிரி நீ தான் என் முதல் வேலை. நீ ஏன் இவ்வளவு வேலை குடுக்கறே? சில பேர் வீட்டுல வேலை கம்மி எங்க வீட்டுல உன்னால தான் வேலை ஜாஸ்தி”.
       
        நாராயண ஸ்வாமிக்கு கோவம் வந்தது. தினமும் இப்படி மகன் ரமேஷ்சை வசை பாடி எழுப்புவது தப்பு. அவன் காலை நேரம் இனிமையாக இருக்க வேண்டும். சரியான நேரம் வந்தால் அவளிடம் சொல்லணும்னு நினைத்தார்.  அம்புஜம் மாமி, நாராயண ஸ்வாமிக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் பெயர் ரமேஷ். இரண்டாம் மகன் பெயர் கிரிஷ். ரெண்டு பெரும் ஸ்கூல் படிக்கறாங்க. நாராயண ஸ்வாமி ஆடிட்டர் வேலை பார்ப்பதால் தனி ரூம் ல படுப்பார். ராத்திரி லேட்டா டா படுப்பார். ஆபீஸ் வேலை அதிகமா இருக்கும்.
       
      குழந்தைகள் தனி ரூம்ல படுப்பாங்க. அம்புஜம் மாமி அந்த ஏரியால பேமஸ். அவங்க ஊறுகாய், கருவேப்பிலை போடி, முருங்கை கீரை போடி, பருப்பு போடி செய்து சேல்ஸ் பண்ணுவாங்க. கை மணம் அதிகம்.
நாராயண ஸ்வாமி கிண்டல் அடிப்பார் “நீ பெரிய பிசினஸ் வுமன். உன் பிசினஸ் மைண்ட் சும்மா இருக்காது”.
       
அம்புஜம்: நான் டீச்சர் ட்ரைனிங் எடுத்து டீச்சர் ஆகணும் ன்னு நினைச்சேன். என்ன பண்றது! கடமை வீட்டிலேயே என்னை கட்டி போட்டு விட்டது. சமையல் பிசினஸ் பண்ண எனக்கு ரொம்ப புடிச்சு இருக்குங்க.
       
நாராயண ஸ்வாமி: இந்த கம்ப்யூட்டர் காலத்துலே வேலை பண்றத விட பிசினஸ் பண்றது தான் பெஸ்ட், அம்புஜம். ஊறுகா போட்டு குழந்தைகளை டாக்டர் படிக்க வச்ச பெண் இன்னிக்கு நியூஸ்பேப்பர் ஹெட்லைன்ஸ் ல பார்த்தேன்.
  
அம்புஜம்: பெண்கள் சுயமாக இருப்பது பெரிய விஷயம்.
       
நாராயண ஸ்வாமி: பெண்கள் அறிவால் சாதிப்பது அழகு தான். வள்ளுவர் சொல்லி இருக்கார்: “பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
  பெண்ணே பெருமை உடைத்து”. இதற்கு அர்த்தம், ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்.
       
அம்புஜம்: உண்மை தான். ஒரு ஆண் தன் குழந்தைகளை கண்டிப்பாக வளர்ப்பான். பெண் மானமுள்ளவர்களாக வளர்ப்பாள். தாய், தந்தை இருவரும் ஒரு குழந்தைக்கு முக்கியம்.
சரி, சரி நேரம் ஆச்சு நான் குளிக்க போறேன். எனக்கு வேலை இருக்கு.
நாராயண ஸ்வாமி அலுவலக வேலைகளில் மூழ்கி போனார்.
அம்புஜம் சமையல் மற்றும் குழந்தைகள் வேலையில் கவனம் செலுத்தினாள்.
 ரமேஷ், கிரிஷ் இருவரின் ஸ்கூல் பிரண்ட்ஸ் வீட்டுக்கு வந்தார்கள். ரூம்ல ஒரே சத்தம். லேப்டாப் வச்சிட்டு ஹாட்ஸ்டார்ல ஏதோ பார்த்துட்டு இருந்தார்கள்.

ரமேஷ்: கிரிக்கெட் ல ஆல் ரவுண்டர் தான் பெரிய விஷயம்.
கிரிஷ்: எனக்கு பேட்டிங் தான் புடிக்கும்.

ரமேஷ்: எனக்கு ரவீந்திர ஜடேஜா தான் புடிக்கும். அவரு மேட்ச் சூப்பர் ரா இருக்கும்.
கிரிஷ்: பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் எப்படி ஆடினார் இல்ல. அவரு ஒரு சூப்பர் பிளேயர் டா.

கிரிஷ்: இந்தியன் பிளேயர் ரோஹித் ஷர்மாவும் சூப்பர் தான். அவரு மேட்ச் பார்க்க செமயா இருக்கும். எல்லாரும் சந்தோசமாக பேசிக் கொண்டு இருந்தார்கள்.
  நாராயண ஸ்வாமி ஆபீஸ் வேலை ஒரு புறமும் மகன்கள் பேசுவது ஒரு புறமும் கேட்டு கொண்டு இருந்தார். அடுத்த நாள் ஞாயிறு. குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவு. லீவு அன்னிக்கு வெங்காயம் போட்டு சாம்பார், கருவேப்பிலை சட்னி, கீரை கூட்டு, அவியல், பருப்பு உசிலி, உருளை கரி ன்னு நிறைய மெனு இருக்கும். பார்ப்பனர்கள் குடும்பத்தில் சாம்பார், சட்னி, உருளை கரி தான் ஸ்பெஷல் மீல்ஸ்.
நாராயண ஸ்வாமி ஆடிட்டர் வேலை பார்ப்பதால் வெளி ஊருக்கு போவார். ஹோட்டலில் சாப்பிடுவார். வீட்டு சாப்பாடு அவருக்கு ரொம்ப பிடிக்கும். ஹோட்டல் சாப்பாடு வேற வழி இல்லாம சாப்பிடுவார். கஷாயம், லேகியம், சாலட், பழம்ன்னு ஹெல்த்தியா சாப்பிடுவார். ஹோட்டல் சாப்பாடு ஜீரணம் ஆகாது. சத்தும் கம்மியா இருக்கும். வீட்டு சாப்பாடு ருசி அதிகம், சத்தும் அதிகம். சாம்பார், பொரியல், கூட்டு, துவையல் ன்னு நல்லா சாப்பிடுவார்.
       
ரமேஷ், கிரிஷ் காலைல லேட்டா எழுந்துப்பாங்க. எழுந்த உடனே அப்பா வோட கிரிக்கெட் விளையாட்டு, அப்புறம் சாப்பாடு, அம்மா வோட கதை நேரம், பிரண்ட்ஸ் வீடு, பிரண்ட்ஸ் கூட அரட்டைனு ஓடி போய்டும். ஞாயிறு காலை ஐந்து மணி
       
அம்புஜம் மாமி சவுண்ட் குடுக்க ஆரம்பிசுட்டாங்க. கும்மி பாட்டு ஆரம்பிச்சாச்சு. “என்னை பார்த்தால் உனக்கு எப்படி இருக்கு. நான் என்ன வேலைக்காரி ‘யா? உன் ஒருத்தனால மத்த வேலை செய்ய முடியல. இப்படி என்ன ஏன் கஷ்டப்படுத்தறே?”
நாராயண ஸ்வாமிக்கு கோவம் வந்தது. சும்மா குழந்தைகளை கறிச்சு கொட்டறா. அம்மா அப்படினா வேலைக்காரி தான். இதுல என்ன குறைஞ்சி போரா இவ. சும்மா ஏதாவது வாய்க்கு வந்தபடி பேசரா. இன்னைக்கு சொல்லணும். இப்படி பேசாதேன்னு. மனதில் ஒத்திகை பார்த்து விட்டு ரூம் வெளியில் வந்தார் நாராயண ஸ்வாமி.
நாராயண ஸ்வாமி: ஏண்டி அம்புஜம், ஏன் இப்படி சத்தம் போடறே? காலை வேலைல தூங்க விட மாட்டியா?

அம்புஜம்: நீங்க ஏன் என் பேச்சை கேட்கறீங்க. ஏதாவது பா ட்டு போட்டு கேளுங்க.
நாராயண ஸ்வாமி: உன் பாட்டு கேட்டா தான் சுறுசுறுப்பா இருக்கு.

அம்புஜம்: சரி அப்போ கேளுங்க.
நாராயண ஸ்வாமி: நீ ஏன் குழந்தைகளை காலை நேரத்தில் திட்டுறே? காலைல நல்ல வார்த்தை பேசணும்னு உனக்கு உங்க வீட்டுல சொல்லி தரலையா?
அம்புஜம்: அது சரி, நான் என் சொந்த கதை சோக கதை சொன்னா, நீங்க குழந்தைகளை திட்டறேன்னு நினைச்சுட்டீங்களா. நான் இந்த முருங்கை கீரையோட பேசினேன்.

நாராயண ஸ்வாமி: என்ன? கீரையோட பேசினாயா?
அம்புஜம்: ஆமாம் நான் கீரை கூட, பாத்திரம் கூட பேசுவேன். என் வேலை அவங்களோட தானே.

நாராயண ஸ்வாமி: சரி, ஆனால் ஏன் அழகா பிரெஷ் சா இருக்கேனு சொன்னே? ன்னு கேட்டுட்டு சிரித்தார்.

அம்புஜம்: ஆமாம், முருங்கை கீரை பிரெஷ் சா இருந்தா காலைல வாங்கி கூட்டு பண்ணுவேன். இரும்பு சத்து இருக்கு. ரொம்ப நல்லது. கீரை அழகா இருக்கு. ஆனால் வேலை அதிகம் ஆகிடுது. அதான் சொன்னேன்.

நாராயண ஸ்வாமி: ஆமாம், நீ சொல்றதும் சரி தான்.  நாம வேஜிடெரியன் சாப்பாடு சப்படறோம். கீரை சாப்பிட்டா நல்லது.

அம்புஜம்: சுதந்திரம், பாதுகாப்பு இரண்டுல ஏதாவது ஒன்னு தான் வாழ்க்கைல இருக்கும்ன்னு நான் ஒரு நீதி கதை படிச்சேன். அது தான் எனக்கு ஞாபகம் வருது. வேலை செய்யாம சுதந்திரமா இருந்தால் சோம்பேறித்தனமா இருக்கு. வேலை செஞ்சா அலுப்பா இருக்கு. நான் சுதந்திரமா இருக்கறத விட அங்கீகாரத்துடன் இருப்பது தான் பெரிசுன்னு நினைக்கறேன்.

நாராயண ஸ்வாமி: நீ குழந்தைகளை தான் திட்டறேன்னு  நினைச்சு நான் வருத்தப்பட்டேன். உன் அன்பான கண்டிப்பு “மழை சாரல்” மாதிரி. அது கஷ்டமான சுகம் என்றார்.
இவர்கள் பேசுவதை கேட்ட ரமேஷ் தூக்கத்தில் இருந்து எழுந்து ரூம் வெளியில் வந்தான். அப்பா, அம்மா திட்டினால் சிரிப்பு தான் வரும். கோவம் வராது என்றான்.

நாராயண ஸ்வாமி: உண்மை தான். அவள் திட்டும் பொழுது “வஞ்சப்புகழ்ச்சி அணி” உபயோகிப்பாள். சொல்ல வந்ததை அழகும், அன்பும் கலந்து சொல்வாள்.

ரமேஷ்: கரெக்ட்டா சொன்னீங்கப்பா. அம்மா திட்டினால் கோவம் வராது. அப்பா திட்டினால் தான் கோவம் வரும்.

அம்புஜம்: அம்மாவின் கண்டிப்பு ஆர்வத்தையும், அப்பாவின் கண்டிப்பு வேகத்தையம் தரும். அது தான் கடவுளின் படைப்பின் ரகசியம் என்றாள்.

ரமேஷ்: உண்மை தான், அம்மா, என்றான். அம்மாவை கட்டி அணைத்து முத்தம் இட்டான்.

அம்புஜம்: இந்த முருங்கை கீரை ஒரு உண்மை கதையை உருவாக்கிவிட்டது என்றாள் சிரித்துக்கொண்டே.
நாராயண ஸ்வாமி: ஆமாம், “முருங்கை கீரை கதை” நல்ல கதை என்றார். சொந்தக் காரங்க வீட்டுக்கு வந்தா சொல்ல இன்டெரெஸ்ட்டிங்கா ஏதாவது வேணுமே. சும்மா இருந்த வாய்க்கு அவல் நான் குடுத்துட்டேனா? சிரித்து கொண்டே குளிக்க சென்றார் நாராயண ஸ்வாமி.
அம்புஜம் மாமிக்கு சமையல் வேலையும், குடும்ப பேச்சும் தான் சந்தோஷம். அவள் உலகம் அது தான். ஆனால் தன் உலகத்தை அழகாகவும், சுறுசுறுப்பாகவும் அவள் வைத்து கொண்டு இருந்தாள். அதனால் தான் அனைவரும் அவளை விரும்பினார்கள்.

சிறுகதையின் ஆசிரியர்
ரா. ஷர்மிளா,
ஆதம்பாக்கம்.

 

Aadhavan Pataippukalil Kataimantarkalum Katcimoliyum|Dr.S.Balaraman

Abstract
               
         Visual language penetrates and moves the limbs of every viewer in society. The consciousness of our society living in this environment is reflected through the characters of novels. The creators and the characters are deeply involved in the background of the screen by their nature. Therefore, we have been encouraged to talk about psychological theory. The film industry seeks to explain the characters based on this theoretical understanding. The characters who are exposed to the screen are united under general psychology. This article attempts to see the effect of the visual on the characters’ shape and behavior and the creators’ perspective on the characters. One of the characteristics that is inseparable from the activities of the characters in the works is visual language. They actively follow this visual language. The creators reflect the internal and external environmental changes that occur due to the penetration and intense exposure of the screen. Visual language is used as a tool to determine the environment through the actions of the characters in the story and to evaluate the characters through that action. The creators stand as a document to destroy what has been transformed into an inevitable consumer commodity. Visual language has been of great help in building the character of the characters. Visual language is a weapon that the creators have taken to create a specific environment or a specific environment by contrasting the character’s character and good and bad. They give visual language to the characters in a way that suits the central theme and make them travel. Although the screen plays an important role in building the character field and determining the environment, it is fabricated in direct opposition to the screen.

Keyword               
Kataimantarkal, Katcimoli, Aadhavan, My Name is Ramasesh, Paper Flowers, Screen, Cinema, Storytellers, Novel


ஆதவன் படைப்புகளில் கதைமாந்தர்களும் காட்சிமொழியும்
         

     ஆதவனின் ‘என் பெயர் ராமசேசன்’, ‘காகித மலர்கள்’ ஆகிய இரு புதினங்களை முன்வைத்து இக்கட்டுரை பேச முனைந்துள்ளது. “நிஜத்தின் சாயல் உள்ள – ஆனால் நிஜமற்ற – நினைவுகளில் அவன் அடிக்கடி முழ்கிப் போகிறான். பரிட்சைக்குப் படிக்கும் நிர்பந்தத்தினால் அவன் பல மணிநேரம் தணித்து விடப்படுவதுதான் காரணம். வெளியே சுற்றிக்கொண்டு புதிய புதிய காட்சிகளில் தன்னை ஆழ்த்திக்கொள்ள முடிந்தால் நினைவுகள் இப்படித் தொந்தரவு செய்யாது. திடீர் திடீரென்று என்னவெல்லாம் பழைய காட்சிகள் அவன் மனத்தளவிலிருந்து மேலே கிளம்புகின்றன! இவை தன் மனத்திலிருந்ததுகூட அவனுக்கு தெரியாது. அவன் பார்த்திருந்த பல படங்களின் காட்சிகள் சம்மந்த சம்மந்தமில்லாமல் கோணல் மாணலாக நினைவு வருகின்றன. பாலைவனம், கடற்கரைகள்,சோலைகள், பனிமலைகள், அடர்ந்த காடுகள், சமவெளிகள், சூறாவளியில் தத்தளிக்கும் ஒரு கப்பல், குண்டு பட்டு எரிந்தவாறே விழும் விமானம், மூர்க்கமான வேகத்துடன் ஓடி வரும் ஒரு காண்டாமிருகம், பியூகிள் ஒலி குதிரைகளின் மேல் ஆரோகணித்து எதிர்ரெதிர் திசைகளில் இருந்து வேகமாக ஒருவரையொருவர் நெருங்கி போரிடத் தொடங்கும் படைகள், ஓடி வரும்போதே பீரங்கி குண்டு பட்டு சாயும் குதிரைகள், வீரர்கள், வரிசையாக சகதியிலும் மேடுபள்ளங்களிலும் ஊர்ந்து செல்லும் டாங்குகள், குண்டு மலை பொழிந்த வாறே பறந்து செல்லும் விமானங்கள், வலது புறமும் இடது புறமும் கைகளை வீசி சுழ்ற்றி ஓரே சமயத்தில் ஐந்தாறு பேறை வீழ்;த்தி விட்டு ஓட்டல் அறையிலிருந்து ஜன்னல் வழியே குதித்து ஓடும் ஒரு சீக்ரெட் ஏஜென்ட் கிரிச் கிரிச் என்று வளைந்து வளைந்து திரும்பிப் படு வேகமாக ஒன்றையொன்று துரத்திச் செல்லும் கார்கள், எல்லா உடைகளையும் களைத்து விட்டு கட்டிலில் போர்வைக்குள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி காதல் ஹிரோவும், ஹிரோயினும், நீச்சல் உடையணிந்த அழகிகள், நாஜிகாலின் கைதி முகாமிலிருந்து தப்பி ஓடும் அமெரிக்க, பிரிட்டிக்ஷ், பிரென்சு வீரர்கள், அப்படி ஓடும்போது சுடப்பட்டு விழும் ஒருவன் போரில் இறந்த காதலனுக்காக கண்ணீர் விடும் காதலி, குளிக்கும் தொட்டிக்குள் சோப்பு நுரைகளுக்கு மேலாக மார்பகங்களின் தொடக்கம் லேசாக ஆவலைத் தூண்டும் வண்ணம் தெரியும் படி ஒரு அழகி,வால்டஸ் இசைக்கு ஏற்ப  மெல்ல நடனமாடும் பதினெட்டாம் நூற்றாண்டு நாயகியும்; நாயகனும் பாப் இசைக்கு ஏற்ப துரித கதியில் நடனமாடும் இருபதாம் நூற்றாண்டு நாயகனும், நாயகியும், கஃபேயில் உட்கார்ந்து இருக்கும் நாயகனும், நாயகியும், படகில் செல்லும் நீச்சல் அடிக்கும், பணியில் சரிக்கி விளையாடும் திடிர திடிரென்று ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு முத்தமிடும் நாயகனும் நாயகியும், டிக்ஷ்யூ, டிக்ஷ்யூ என்று ஸ்டைலாக சுடும்  ‘வெஸ்டர்ன்’  கதா நாயகர்கள் ஸ்டெஜ் கோச் சிவபிந்தியர்கள், புழுதியைக் கிளப்பி கொண்டும் ஓடும் குதிரைகள் விர் விர் என பாயும் அம்புகள், வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் பாலங்கள், தண்டவாளங்கள், அலங்கோலமாக சரிந்து விழும் ஒரு ரயில் வண்டி, அழும் குழந்தையொன்று, இரத்தம், ஆம்புலன்ஸ், சைரன் ஒலி, ஏர் ரெயிட் க்ஷெல்டர்களை நோக்கி ஓடும் மனிதரர்கள், மது கோப்பையை உயர்;த்தி டேஸ்ட் செய்யும் ஒர் கர்ணல், யுனிபாரம் விசலாமான டைனீங் ஹால், நீண்ட வராந்தாக்கள், எண்ணற்ற படிக்கட்டுகள், அல்கேக்ஷன்நாய், பியானோ வாசிக்கும் ஒருவன், நடனமாடும் மிலிட்டரி ஆபிசர்களும் அவர்களுடைய மனைவியரும் அவசரமாக ஓடிவந்து சலியுட் அடித்து நிற்கும் ஒருவன், மலை சரிவில் இருந்து கீழே கீழே விழுந்து நொறுங்கும் ஒரு ஜீப், அடர்த்தியான பனியில் திறந்த வெளியின் நெருப்பு மூட்டி இறைச்சுடும் குளிர்காயும் மனிதர்கள், விறக்தியுடன் சிரிக்கும் ஒரு தாடிக்காரன்.

          இப்படி எத்தனை எத்தனை காட்சிகள்! பல  மாலை நேரங்களில் பகல் நேரங்களில், காலை நேரங்களில் சினிமா தியேட்டரின் இருட்டுக்குள் அமர்ந்து அவன் பார்த்த காட்சிகள். காலை  ஆட்டம் வெளியே வரும்போது பளிச் என்று வெயில் கண்ணை  கூசும் பரபரப்புடன் வாகனங்களும் மக்களும் விரைந்து கொண்டிருப்பார்கள். மேட்டனி ஆட்டம் முடிந்து வெளியே வரும் போது வெயில் மறைந்து தெரு விளக்குகளும் கடை விளக்குகளும் ஏற்றப்பட்டு ஜே, ஜே என்று இருக்கும். மக்கள் பரபரப்பின்றி நிதானமாக நகர்ந்து கொண்டிருப்பார்கள். மாலை ஆட்;டம் முடிந்து வெளியே வரும் போது சாலையில் வண்டி போக்குவரத்து குறைந்து இருக்கும். சிக்னல் விளக்குகள் அணைந்து இருக்கும். கடைகள் மூடியிருக்கும். மக்கள் நடமாட்டம் அடங்க தொடங்கியிருக்கும். ஆனால் இந்த வெளியுலக சூழ்நிலையில் உடனடியாக தன்னை ஆழ்த்திக் கொள்ள அவனால் முடியாது. அநேகமாக அந்த நாளின் எஞ்சிய பகுதியில் அவன் பார்த்த சினிமாவின் சூழ்நிலையிலேயே தான் அவன் – மனதளவில் – அவன் வாழ்ந்து கொண்டிருப்பான். எனவே அவனைச் சுற்றியுள்ள நிஜங்களை தவறவிடுவான் என்று காகித மலர்கள் பிரதியில் ஆதவன் கூறுகிறார்.

நுகர்வும் காட்சிமொழியும்         
     காட்சிமொழியானது உணர்ச்சிகளில் ஊடுருவுகின்றது. மனமானது போதைகளுக்கு அடிமைபடுவது போல காட்சிக்கும் அடிமையாகுகிறது. போதையை ஏற்றும் அல்லது போதைக்குச் சமானமாகக் காட்சிமொழியைக் காண்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். காட்சிமொழிக்கு மனம் வயப்படுதல் என்பது நரம்பியல் செயல் திரிபுகளாகப் பார்க்கப்படுகின்றது. இது நனவிலி மனத்தின் வெளிப்பாட்டு முறையாகவே உள்ளது. காட்சி மொழிகளால் அமுக்கப்பட்டவற்றை நுகர்ந்தவற்றை மீண்டும் மீண்டும் சுய நினைவால் நுகர்ந்து புளகாங்கிதம் அடைகின்றது மனம். இதனால் காட்சி மொழிக்கும் ஆழ்மனதுக்கும் ஊடாடல் வலுப்பெறுகின்றது. காட்சி மொழிப் படைப்பும் அதுசார் செயலிகளும் மோகத்தின் உச்சமாகும். பார்வையாளனை நரம்பியல் செயல் திரிபு கொண்டவனாக விநோதப்படுத்துகின்றது காட்சிமொழி. புறவுலகத் தூண்டுதல்களின் வலிமையினால் மட்டும் தூங்கும் ஒருவன் எழுந்து விடுவதில்லை. அவனை எழுப்ப உளவியல் ரீதியான மனதோடு சம்பந்தப்பட்ட ஒரு சூழல் தேவைப்படுகிறது. தூங்கும் ஒருவனை ஏதோ ஒரு வார்த்தையைச் சொல்லி எழுப்ப முடியாது. ஆனால் அவன் பெயரைச் சொல்லி கூப்பிட்டால் எழுந்து விடுவான். அவனுக்கு மிகவும் பிடித்த சினிமா நடிகையின் பெயரைச் சொன்னாலும் எழுந்து விடலாம். ஏனெனில் அவர் அவள் மனதோடு சம்பந்தப்பட்டவர்கள் என்கிறது உள அலசல். காட்சிகள், கருத்துகள், உணர்ச்சிகள், வசனங்கள், எல்லாம் திரைப்படங்களில் ஒன்றோடொன்று கோர்க்கப்பட்டு வரிசைக்கிரமாக இருப்பதும் அதனை ஆழ்மனம் நினைவு கொள்வதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். விழிப்பு நிலையில் ஏற்படும் ஒரு விருப்பம் ஆழ்மனதில் உள்ள விருப்பத்தோடு ஒன்றுபடும்போது தான் அது விருப்ப நிறைவேற்றக் கனவை உருவாக்கும் என்று ஃராய்ட் கூறுவது கவனத்திற்குரியது.
கனவுக்காட்சியும் காட்சிமொழியும்
         
       ‘கனவு என்பது அமுக்கப்பட்ட விருப்பத்தின் புனைவேட நிறைவேற்றம்’ என்கிறது ஃப்ராய்டியம் கனவுகள் ஒவ்வொன்றும் புதிர்மைப் பண்புள்ளவை. கனவுகளைக் காட்சிப்புதிர் என்றும் கூறுகிறார். கனவு எண்ணங்கள் காட்சிப் படிமங்களாக வெளிப்படும் செயல் கனவு உருவாக்கத்திற்கு சிறப்பு மிக்கது. நனவிலி வேட்கைகள் பாலுணர்ச்சியின் படைப்புகளாகும். அதனால் நனவிலியை ‘வேட்கைகளின் கிடங்காக’ ஃப்ராய்ட் காண்கிறார். இந்த வேட்கைகள் தான் விருப்பங்களை உற்பத்திச் செய்கின்றன. ஆனால் விருப்பங்கள் அமுக்கத்திற்குள்ளாகின்றன. அமுக்கப்பட்ட விருப்பங்கள் தம்மை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என்ற ஊக்கப்பாட்டை பெற முயல்கிறது. விருப்பங்களை செயல் வடிவில் வெளிப்படுத்த முடியா விட்டாலும் உருவெளி தோற்றத்தில் வெளிப்படுத்துகின்றது. நனவிலி இச்செயல்பாடுகளே கனவுகாட்சிகளாக மாறுகின்றன.
         
       கனவுகாட்சிகளில் குறியீட்டாக்கம் நனவிலிக் குறியீட்டாக்கத்தின் மறுசொல் என்பர். நனவிலி எண்ணங்களை மாற்றத்தின் வழியாக வெளிப்படுத்துவதால்தான் கனவுக் குறியீட்டாக்கங்கள் நிகழ்கின்றன. நனவிலி எண்ணங்கள் என்று சொல்லப்படுகின்ற கனவு எண்ணங்கள் தம்மை நேரடியாக வெளிப்படுத்த முடியாததால் மற்ற எண்ணங்களை தமக்கு பதிலாக கொண்டு வெளிப்படுகின்றன. கனவு குறியீட்டாக்கத்தின் பதிலீட்டு உருவாக்கம் நிகழ்கின்றது. குறியிடுகள் ஒவ்வொன்றும் நனவிலி மூலகங்களின் நினைவுச் சின்னங்களாக விளங்குகின்றன. இக்குறியீட்டாக்கத்தின் அமுக்கப்பட்ட பால் உணர்ச்சியும் பால் உறுப்புகளும் முக்கிய பங்காற்றுகின்றன.
         
        ஃப்ராய்டியக் குறியிட்டின்படி சமதளப் பொருட்கள் அனைத்தும் பெண்ணைக் குறிப்பதாகும். கனவுக் காட்சியில் பீரங்கி, ஏவுகணை, உடையில் கோட், துப்பாக்கி, பாலம், அம்பு, விமானம், கப்பல், வாள் போன்றவை வந்தால்  அவை ஆண்குறி குறியீடுகளாகும். மேலும் விலங்குகள் அனைத்தும் ஆண் குறியைக் குறிக்கும். குதிரை சவாரி, நடனம், இசை, பறந்து செல்வதால் கலவிக்கான குறியீடாகும். கப்பல், பெட்டி, சூ, சுரங்கம், கால்வாய், வாய்க்கால், பை, செருப்பு, மோதிரம் போன்றவை பெண் குறியீடுகளாகும். இப்படி கனவு காட்சியில் வரும் குறியீடுகள் எண்ணலடங்காதவை என்று ஃப்ராய்ட் கூறுகிறார்.
         
     ஆதவனின் பிரதியில் கனவு காட்சி, கற்பனைக் காட்சி பதிவுகளில் காட்சிமொழியே பிரதானமாக இடம்பெற்றுள்ளன. இக்காட்சி மொழியில் ஃப்ராய்டின் கனவு காட்சி குறியீடுகளோடு பொருத்தி பார்க்கலாம். காட்சி மொழியில் கனவு காட்சி குறியிடுகளே முழுமையாக நிறைந்துள்ளன. அக்குறியீடுகளே மீண்டும் கனவு காட்சிகளாக வெளிப்பட்டுள்ளன. இங்கு கனவுக்காட்சி குறியீடுகளும், காட்சி மொழிக் கூறுகளும் பின்னிப் பிணைந்து பயனிக்கின்றன என்பது கண்கூடு. அமுக்கப்பட்ட நிறைவேற்றப்படாத கனவு காட்சிகளையும் அதன் குறியீட்டுத்தன்மையும் உற்பத்தி செய்யும் சாதனமாக உள்ளது. காட்சி மொழி, காட்சிமொழியில் வெளிப்படுகின்ற உருப்படிமங்களை உள அறிஞர்கள் நனவிலியில் அமுக்கப்பட்ட விருப்பத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றாகப் பார்க்கின்றனர் நனவிலியில் உள்ள பால் உணர்ச்சியின் மறைமுக வெளிப்பாடாகக் காட்சிமொழி வினையாற்றுகின்றது என்கின்றனர். இக்காட்சி மொழியில் ஃப்ராய்டின் கனவுக் காட்சி குறியீட்டாக்கங்கள் கலவை பண்டமாகக் காட்சி படுத்தப்படுகின்றது. நனவிலியே கலவைப் பண்பாக இருப்பதால் நனவிலிக் கூறுகளை மையப்படுத்தி வெளிப்படுகின்ற காட்சி மொழி கூறுகளும் கலவைப் பண்பாகக் தொழிற்படுகின்றன.

ஆதவனும் மாந்தர்களும்
         
        ஆதவன் வாழ்க்கை பயணத்தில் காட்சி மொழியை ஒருசேர இணைந்து வருகின்ற சூழலை அன்றாட நடத்தைகளின் வாயிலாகப் பிரதி பலிக்கிறார். நகரங்களின் காட்சி மொழி தான் பெரும் பொழுது போக்கு அம்சமாக திகழ்ந்துள்ளது. வாழ்வில் டாக ஊடுருவி அங்கம் வகித்து இயல்பாக பீடுநடை போடுகின்ற அம்சம் இக்காட்சி மொழியை ஊடிழையாக வைத்து கதா மாந்தரின் இயல்பை பிரகடனப்படுத்த படைப்பில் காட்சி மொழியை முக்கிய பண்டமாக வைத்து பின்னி உள்ளது கவத்திற்குரியது. சமூகத்தில் காட்சி மொழி ஏற்படுத்திய அபரிவிதமான அலைக்கு எவரும் தப்ப முடியாது என்கின்ற எச்சரிக்கையாக இருக்கின்றது. ஒரு மனிதனிடத்து காட்சி மொழியின் பாச்சல் எவ்வளவு கூர்மையாக வினையாற்றுகின்றது என்பதை வெளிக்கொணர்வதாக உள்ளது. திரைத்துறைச் சார்ந்த திரைமறை மற்றும் போதாமையைச் சுட்டிக்காட்டி மனித மனதினை அவர்கள் அறியச்செய்துள்ளார். காட்சி மொழியை வைத்து மனித உளத்தை ஒரு சட்டகத்துக்குள் நிறுத்த இயலும் என்பதை உறுதிபடுத்தியிருக்கிறார். மாந்தர்களோடு இழையோடும் காட்சி மொழியின் தாக்கம் படைப்பாளியின் ஆழ் மனதிலும் அது பெற்றுள்ள இடத்தினையும் கண்டறிய வழிவகை செய்கின்றது. கதைக்களத்தில் விரிந்த பரப்பில் காட்சி மொழியின் வினையைப் பதினைந்து இருபது வரிகளில் மிகாமல் பேசுகிறார் ஆதவன். இவரது இப்பிரதியில் காட்சி மொழியும் மாந்தர்களும் கொண்டுள்ள உறவு உரையாடல் இன்னும் பரந்த தன்மை கொண்டுள்ளது. இவர் படைத்த எண் பெயர் ராமசேசன், காகித மலர்கள் ஆகிய இரு பிரதிகளிலும் இத்தன்மை உளரீதியாக அணுகிய பாங்கு மிக நேர்த்தியானது.
         
     தலைநகரினை மையப்படுத்தி புனைந்துள்ளார் ஆதவன். அந்நகர மானிடத்தின் தின பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளவர்களில் மிக முக்கிய ஆளுமைகள் அயல் தேசத்தில் இருந்து வரும் எந்த ஒன்றும் இந்தியாவின் தலை நகரில் தாக்கம் பெற்று ஏனைய பிரதேசத்திற்கும் செல்லும் நவீனத்தை முதலில் உள்வாங்கும் பெரு நகரங்களில் தலைநகர் டெல்லியைச் சேர்க்கலாம். அப்படியானதொரு நகரங்களில் வாழும் மானிடர்களை கதாமாந்தர்களாக வளர்த்துள்ளதில் ஆதவனின் கனவு நுன்மையே தனித்துவமாகின்றது. பெருநகரங்களில் நவீன கலாச்சாரத்தில் நவீன வடிவ காட்சி மொழியால் யதார்த்தமாக உள்ளீழுக்கப்பட்ட மாந்தர்களே அரிதி பெரும்பான்மையாக உள்ளனர். என் பெயர் ராமசேசன் பிரிதியில் முதன்மை மாந்தரின் பார்வையிலேயே கதை பரப்பை முழுவதுமாக நகர்த்தியிருக்கிறார். இம்மாந்தர்களில் தவிர்க்க இயலாத ஒன்று சதா காட்சி மொழி காண்பது என்ற ஒன்று. தனிமையாக அல்ல. தோழர், தோழிகளுடன் நவீனக் காட்சி மொழியைப் புறந்தள்ளுவது இயலாது. ஏனென்றால் அது தொற்றிய நோய் போல பரவி முற்றியுள்ளது. இந்த நோயுடன் தான் வாழ்க்கை கடத்தியாக வேண்டும் என்ற சூழல். நவீன வடிவத்தினை ஒற்றுக்கொண்டு அதன் உள்ளடக்க பிரதிகளையும் பிம்பங்களையும் விமர்சித்து அலட்சியப்படுத்தும் போக்குகளைக் கொண்டவர்களும் எவ்வித விமர்சனமுமின்றி முழுமுற்றாக ஊறுகாய் போல ஊறும் மாந்தர்களும் உள்ளனர்.
         
     முதன்மை பாத்திரத்தின் இயல்பில் பால் பல்வேறு பின்னணிகளைக் கவனப்படுத்த முயற்சித்தாலும் படைப்பிற்கும் படைப்பாளிக்கும் ஆதர்சனம் இம்மாந்தரே மையத்திற்கு நகர்த்திச் சென்று நம்பகத்தன்மையோடு முடிவை நோக்கிப் பயணிக்க வைப்பதில் இம்மாந்தரின் பங்கு அளவிட முடியாது. வாசகர்களுக்கு முதன்மைப் பாத்திரத்தின் வாயிலாகப் படைப்பாளியின் மனதை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. கதைகளைக் சூழலுக்கு பின்னணிக்கு இவர்களின் நோக்கில் சமூக இயங்கியலைப் பதிவாக்க இம்மாந்தரின் குணாம்சம் கவனப்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கம். பிரத்தியோகமாக வெளிப்படுத்துவதும் உண்டு. இக்குணாம்சம் நடத்தைகளின் மூலம் தக்க சூழலில் தீர்மானித்து இயல்பாக்குகின்றனர். சமூக சூழலில் இயங்குபவனைக் காட்சி மொழியோடு ஊடாட்டம் பெற வைத்து அதன் வாயிலாக குணாம்சத்தை சித்தரித்து வெளிக்கொணர்வது ஆதவனின் நுண்ணியத் தன்மை. சுமூக நிகழ்வுகளில் எண்ணற்ற கூறுகள் தாக்கம் பெற்றாலும் காட்சி மொழியின் தாக்கத்தைப் பயன்படுத்தி மாந்தர்களின் குணாம்சத்தினை மதிப்பிடுதலில் ஆதவனுக்கு நிகராக எவரும் இல்லை என்று கூறலாம். காட்சி மொழிக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பரிமாற்றம் ஆரோக்கியமாக நிகழ்ந்துள்ளது. இப்பரிமாற்றம் படைப்பாளிகளை தாக்கிய ஒன்றாக உள்ளது.
         
      முதன்மை மாந்தர், துணை மாந்தருடன் காட்சி மொழிக் காண செல்வதால் தன்னுடன் உள்ளவர்களையும் மதிப்பீடு செய்கிறது. உடன் உள்ளவர்களைச் சுட்டிக்காட்டுவதன் வாயிலாக முதன்மை மாந்தரின் சுயத்தை அறிய முடிகின்றது. இதனால் சுற்றியுள்ள சூழலையும் மக்களையும் கிரகிக்க முடிகின்றது. திரைப்படங்கள் பார்த்தல் என்பதான நிகழ்வில் பிறருடைய அந்தரங்களை அலசி ஆராய முனைகின்றது இம்முதன்மை பாத்திரம்.  இச்சமூக நிகழ்வை மையப்படுத்தி இதில் இணைத்துக் கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயல்கின்றது. காட்சி மொழியில் அனைவரும் ஒன்றிய நிலையில் தான் மட்டும் ஒன்றாத மனோ பாவத்தைக் காட்டுவது அனைத்து செயல்களிலும் காட்சி மொழி தாக்கம் அபரிவிதமாகி மூழ்கித் திளைப்பது என்கிறதான மனோபாவத்தை காட்டுவது ஆதவனின் முதன்மைப் பாத்திரப் பண்பில் பிரவேசிக்கின்றது.

திரை பற்றிய வெளி         
     திரைத்துறையை முதன்மை பாத்திரம் மதிப்பீடு செய்யும் போது நடிப்பதற்கு வாய்ப்புக்கிடைத்தால் இந்த முட்டாள்களை விட நன்றாக நடிப்பேன் என்பதும் இயக்குநர்களை மட்டப்படுத்தி தான் படம் எடுத்தால் இதைவிட நன்றாக எடுக்க முடியும் என்று கூறுவது இம்மாந்தர் திரைத்துறைப்பால் முரண்பாடு கொள்கிறதை வெளிச்சமிடுகின்றது. பிரதி முழுக்க இவ்வபிப்ராயத்தை வெளிப்படுத்திக் கொண்டே செல்லும் இப்பாத்திரம். இப்படியான குணாம்சத்தை ஏற்றியிருக்கிறார் ஆதவன். படைப்பாளி நா.பார்த்தசாரதிக்கு நடிகர் சிவாஜிகணேசனின் நடிப்பின் மீது கடுமையான விமர்சனம் உண்டு. இவரை என்னால் நன்றாக நடிக்க இயலும் என்று சூலுரைத்தார். கணேசனின் சாயலைக் கொண்டவர் சாரதி. சிவாஜியின்  மேல் ஒருவித போட்டியுணர்வுடன் இருந்துள்ளார். இம்மனத் தோற்றத்தின் வெளியாகச் சமுதாய வீதி படைப்பைப் படைத்தார் என்று இலக்கிய விமர்சகர் ராமன் கூறுகிறார். திரைத்துறைக்கு எதிரான மனோபாவத்தில் ஆதவனின் முதன்மைக் கதாமாந்தர் கட்டுமானம் அவதானிக்கத்தக்கது. திரையினருக்கு எதிராக பிறந்த படைப்புபோல மாந்தரையும் எதிராகப் பேச வைத்துள்ளனர்.
         
        ஆதவன் பிரதியின் மையம் முகத்தை மாற்றி மாற்றி நடமாடுபவர்களை அப்பட்டமாக்குவது எவருக்கும் சுய பிம்பம் ஒன்று இல்லை. அனைவருக்கும் நிலையில்லாத மனம் எல்லோருமே சுய வாழ்வில் நடிப்பவர்கள் என்கிற உள ஆய்வை முன்னெடுக்கின்றது. இம்மைய கதையாடலுக்கு மாந்தரின் தேர்ந்த குணாம்சத்தை யதார்த் சூழலை அமைப்பதில் கவனம் செலுத்தியுள்ளார். இவற்றிற்குக் காட்சிமொழியையும் அதுசார் சூழலையும் தேர்வு செய்து பொருத்திச் செல்கின்றது. திரைப்படங்கள் மிகைப்புனைவைக் கொண்ட கதையாடல்களைச் சித்திரிக்கின்றன. இக்கதையாடல்கள் யதார்த்தத்திலிருந்து விலகிய ஒன்று. இதில் காட்டும் மாந்தர்களும் அவர்களது நடிப்பும் சமூகத்தோடு ஒத்து போகாதத் தன்மை கொண்டது. திரை என்பதே போலியானது. இக்கருத்தியலைக் கதையின் மைய நீரோட்டத்திற்குப் பயன்படுத்துகிறார். திரை போலியானது போலவே மானிட வாழ்வும் போலியானது. நுடிகர்கள் திரையில் நடிக்கிறார்கள் மனிதர்கள் எதார்த்த வாழ்வில் நடிக்கிறார்கள் என்கிற கருத்தோட்டத்திற்கு வந்தடைகிறார் ஆதவன். திரை என்பதே போலியானது. இக்கருத்தியலை கதையின் மைய நீரோட்டத்திற்கு பயன்படுத்துகிறார்;. திரை போலியானது போலவே மானிட வாழ்வும் போலியானது. நுடிகர்கள் திரையில் நடிக்கிறார்கள் மனிதர்கள் எதார்த்த வாழ்வில் நடிக்கிறார்கள். என்கிற கருத்தோட்டத்திற்கு வந்து சேர ஆதவன் முனைந்துள்ளார். மனித மனத்தை முக பாவனையை திரையோடு ஒப்புமைபடுத்திக் கதாபாத்திரங்களையுமும் கதைக் களத்தையுமும் கட்டுருவாக்கம் செய்துள்ளார் ஆதவன்.
         
      திரைப்படக்காட்சிகளிலே ஒன்றிய மனப்போக்கும் ஒன்றாத மனப்போக்கும் கொண்ட பாத்திரங்கள் உள்ளன. இரு மனநிலை கொண்ட மாந்தர்களை இணைத்து பயணப்பட வைத்துள்ளார். ஒன்றாமல் தப்பித்தலுக்கு முனைகிறது என்பதில் சில கூறுகள் உள்ளடங்கியுள்ளன. தன்னை ஈரக்கின்ற அளவிற்கு இப்படங்களில் அப்படி ஒன்றும் இல்லை. என்னுடைய ரசனைத் தளம், சுவைப்பு சராசரி மானிடத்திலிருந்து வேறானது. என்னை ஏமாற்ற முடியாது. கவர்ச்சியைக் காட்டிப் போலி மயக்குகளை வண்ணப்படுத்திக் காட்டினாலும் அடிமையாகாத மனத்தினைவு வேற மாதிரியான ஆளுமையைக் காட்ட தழைபடுவதற்கு திரைச்சூழல் நன்கு பயன்படுகின்றது. பழைமைக்கும் புதுமைக்கும் இடையே ஊசலாட்டம் கொண்ட இரட்டை மனநிலையில் வாழும் மானிடக் கூட்டத்தின் மத்தியில் அசலை தேடிப்போகும் தேடி அலையுமும் மாந்தராக அடையாளப்புடுத்தும் முயற்சிதான். மெய்யான தேடலுக்கு வழித்தடம் அமைக்க திரையை ஊடிழையாகக் கோர்க்கிறார். இவ்விடத்தில் காட்சிமொழி பற்றி படைப்பாளியிடம் உள்ள புரிதலில் தெளிவு பிறக்கின்றது. கதாமாந்தர்களின் இயல்பிற்கும் பிரதியின் மையச் சரடிற்கும் காட்சி மொழியை ஊடிழையாக்கி சமைத்திருப்பது ஆதவனின் கலைநேர்த்தியை மகத்துமாக்கிக் காட்டும் முகமானாலும் திரைக்கு நேர்மாறான பொருண்மையையும் அழுத்திச் செல்கின்றது.

துணை நின்ற நூல்கள்
1.ஆதவன், என் பெயர் ராமசேசன், சென்னை உயிர்மைப் பதிப்பகம், 2004.

2.ஆதவன், காகித மலர்கள், சென்னை உயிர்மைப் பதிப்பகம், 2007

3.இரவிச்சந்திரன், சிக்மண்ட் ஃராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல், சென்னை அலைகள் வெளியீட்டகம், 2005

4.சீனிச்சாமி. தமிழ் நாவல்களில் உளச்சித்திரிப்பு, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகம், 2004

5.நாகூர் ரூபி, சிக்மண்ட் ஃப்ராய்ட் கனவுகளின் விளக்கம், சென்னை, பாரதி புத்தகாலயம், 2013
6.தமிழ்த் திரைப்பட ஆய்விதழ், 2014 ஜனவரி, ஆகஸ்ட் காட்சிப்பிழை, சென்னை.

Iniyavaikatral peer reviewed ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சு.பலராமன்,
தமிழ் உதவிப் பேராசிரியர்,

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்

அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்,

இராமாபுரம், சென்னை – 089.

 

அழகான ராட்சசி|கவிதை|முனைவர் த.மகேஸ்வரி

அழகான ராட்சசி - முனைவர் த. மகேஸ்வரி

🧚‍♀️அப்பா


உன் ஆசை மகள்


எழுதுகிறேன்..!


🧚‍♀️ வர்ணனையில் கூட


உனக்குப் பிடிக்காத


வார்த்தைகளைக் கூற மாட்டேன்..!


🧚‍♀️ என்னை தேவதை என்று


மற்றவர் கூறும்போது


மார்தட்டி கூறுவாய்!


அவள் தேவதை இல்லை


என் செல்ல ராட்சசியென்று,


அர்த்தம் புரியவில்லை அன்று..!


🧚‍♀️ புராண இதிகாச கதைகள் கூறும்


பாட்டியிடம் இருந்து விடுவித்து


ஆறு வயதிலேயே


அண்ணாவின் ஆரிய மாயைக்கு


அர்த்தம் சொன்னவர் தாங்கள்..!


🧚‍♀️பட்டுப் பாவாடை அணியவிடாமல்


கால் சட்டையும் பனியனும்


அழகு என்பாய்..!


🧚‍♀️ வாடா போடா என்று


உரையாடும் உன்னிடம்


ஆண்மகன் இல்லை என்ற


ஆதங்கத்தை


ஒருபோதும் கண்டதில்லை..!


🧚‍♀️ அப்பா உன்


மூச்சுக் காற்றுக்கு


முகவரி தொலைந்ததால்


உன்னால் அடைக்கப்பட்ட


நாக்குகள் எல்லாம்


விலங்குடைத்து வீறுகொண்டன..!


🧚‍♀️ பெண்மை இடுகாட்டிற்குச் செல்வது


பெரும் குற்றமென கங்கணம் கட்டும்


சமூகத்தின் மத்தியில்


நான் ஆண்மகனின்


அடையாளத்தை தேடினேன்..!


🧚‍♀️ நீ இல்லை என்று


நிலைகுலைந்து நிற்கும் என்னிடம்


எங்கிருந்து வந்தது


அந்த ஆண்மை!


முந்திக்கொண்ட தீக்கிரையாக்க


அந்த ஒரு நொடி


நான் ராட்சசியானேன்..!


கவிதையின் ஆசிரியர்

முனைவர் த. மகேஸ்வரி

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி,

பெரம்பலூர்

 

சிந்தனைச் சிறகுகள்|காஞ்சி கிருபா

சிந்தனைச் சிறகுகள் - காஞ்சி கிருபா
🦋 எந்தச்சலசலப்பும்

இல்லாத

ஓர் அதிகாலை

மௌனத்தில்

என்னை நானே

தொலைத்துவிட்டு 
மீண்டு வருவதற்குள்

சிறகுகளை விரித்து

எங்கெங்கோ

பறந்து செல்கிறேன்..!
🦋 ஆள் நடமாட்டம்

இல்லாத

பாலை வனத்தில்

எனக்கான

பாடலை இசைத்துக் கொண்டு

செல்கையில்

வண்ணத்துப்பூச்சிகள்

என் அருகில்

வந்து செல்கின்றன..!
🦋 லேசான மழைத் தூறலில்

தெருவோர

தேநீர் கடைத் தேடி

நடந்து சென்ற நேரம்

மழையில் நனைந்த

ஒரு குட்டி நாயின்

சிலு சிலுப்பைக் கண்டு

பொழுது விடியாத

அந்தக் கணத்தில்

தூக்கிக் கொஞ்சுகிறேன்..!


 

🦋 அலைகள் வந்து

மோதுகின்ற
கடற்கரை மணலில் 
நடந்து செல்கிறேன்

என் தனிமையை உணர..!
🦋 தனிமையின்

மௌனத்தில்

மூழ்கும்போது

ஆழமான கவிதைகளை

மொண்டு வருகிறேன்..!


 

🦋 அதோ அந்தப்

பூஞ்சோலையின்

நறுமணமுகர்ந்து

என் விரல்களால்

எழுதி வைக்கிறேன்

முகர்ந்து கொள்ளுங்கள்

முடித்து விடாதீர்கள்..!


 

🦋 நிலாவின் வெளிச்சத்தில்

விண்மீன்களை

இரசித்துக்கொண்டு

மேகங்களிடம்

என் கவிதைகளைச்

சொல்லிக் கொண்டிருந்தேன்
 
காதல் மோகமெடுத்து

அவைகள்

ஒன்றாக கலந்து விட்டன..!
🦋 விண்மீன்கள்

மறியல் செய்தன

இவன் ஒரு

காதல் குற்றவாளி..!
🦋 என் சிறகுகளைத் திருப்பி

மீண்டும் வந்து சேர்கையில்

பாலைவனத்தைத்

தெருவோரத்தைக்

கடற்கரையைப்

பூஞ்சோலையைத்

தொலைத்துவிட்ட
சோகத்தில்

அழுது கொண்டிருக்கின்றன

என் விழிகள்..!

கவிதையின் ஆசிரியர்
காஞ்சி கிருபா
528/1 கட்டபொம்மன் தெரு,
விஷ்ணு நகர், தேனம்பாக்கம்,
சின்ன காஞ்சிபுரம், 631501

 

Thamilar Vaalviyalil Ariviyal|Dr A.Parimala

தமிழர் வாழ்வியலில் அறிவியல் - முனைவர் ஆ.பரிமளா
Abstract         
           In the life of the ancient Tamils, science was intricately woven into every aspect, extending from the atom to the universe. Tamil literature was not composed merely for aesthetic pleasure, but rather as a synthesis of experience and scientific thought. The visions conceived by the Tamils of the past are now materializing as present-day realities. Indeed, it would not be an exaggeration to assert that the very foundation of modern scientific advancement can be traced to the life and knowledge of the ancient Tamils, as reflected in their literary works. For instance, with reference to natural science, a verse states:

“Splitting the atom could stir even the seven seas.”
               
          This highlights the profound foresight regarding scientific principles. The concept of the atom as an indivisible, minute particle, invisible to the naked eye, is recognized as a discovery of modern science. However, it is astonishing that Avvaiyar, who lived more than a millennium ago, not only identified the atom but also articulated the idea of splitting it in her poetry. Similarly, Subramania Bharathi vividly illustrates the dynamic nature of atomic motion in his verse:

“We have heard scholars proclaim that atoms ceaselessly move in orbits.”
               
            Thus, Tamil literature serves as a remarkable testimony to the scientific acumen of the Tamils. This essay, therefore, seeks to analyze and emphasize the scientific insights embedded within Tamil literary traditions.

KEYWORDS: Ancient Tamils, Science, Literature, Atom, Avvaiyar, Innovation, Scientific knowledge


தமிழர் வாழ்வியலில் அறிவியல்

அறிமுகம்        
     பழந்தமிழரின் வாழ்வில், அணுவில் தொடங்கி அண்டம் வரையிலும் அறிவியல் பரவிக் கிடக்கின்றது. இலக்கியங்கள், வெறும் இரசனைக்குரிய ஒன்றாக மட்டுமல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்த படைப்பாகவே ஆக்கப்பட்டுள்ளன. அன்றைய தமிழர் கண்ட கனவுகளே இன்றைய நிஜங்களாக உருவாகி வருகின்றன.  இன்று நம் வாழ்வின் அறிவியல் வளர்ச்சியின் ஆணிவேராக பழந்தமிழர் வாழ்க்கை அமைந்துள்ளது என்றால் மிகையில்லை. இதனைத் தமிழ் இலக்கியங்கள்  பறைசாற்றுகின்றன. இயற்கை அறிவியல்,

அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகட்டி
குறுகத் தெறித்த குறள்.
         
         என்று அறிவியலின்  பெருமையை உரைக்கிறது. அணு என்பது கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய மூலக்கூறு என்பது அறிவியலின் கண்டுபிடிப்பு. ஆயினும் பன்னூறு ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த ஔவை அதனை அறிந்திருந்ததும் அணுவைப் பிளப்பது குறித்து பாடலில் கூறியிருப்பதும் வியப்பிற்குரியது.

இடையின்றி அணுக்க ளெல்லாம் சுற்றுமென
இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்
         
       என்று பாரதி அணுக்களின் அசைவுகள் குறித்து அழகு தமிழ் படைக்கின்றார். அவ்வகையில் தமிழ் இலக்கியங்களில் அறிவியலின் ஆற்றல் பற்றி இக்கட்டுரை ஆய்கிறது.

முன்னுரை 
      
    ஐம்பூதங்களால் உருவானது இவ்வுலகம். அதனை,

நுண்முறை வெள்ள முழ்கியார் தருபு
உள்ளிபிகிய இருநிலத் தூழியும் (பரி.2:5- 12)
         
     என்று பரிபாடல் விளக்குகிறது. இதில் வானிலிருந்து காற்றும் காற்றிலிருந்து தீயும் தீயிலிருந்து நீரும் நீரிலிருந்து நிலமும் தோன்றிய நிலைகளைப் புலவர் கூறியுள்ளார். இவை மட்டுமன்றி கதிரவனில் பிரிந்து பூமி நீண்ட காலத்திற்கு நெருப்புக் கோளமாக இருந்தது என்றும் அது  காலப்போக்கில்   சிறிது   சிறிதாக    குளிர்ந்து    பனிப்படலமாக   மாறி, பின் நிலம் தோன்றியது என்றும், உலகத்தின் தோற்றம் குறித்த பல அறிவியல் உண்மைகளை விளக்குகிறது, பரிபாடல்.  மேகம் கடல் நீரை பெற்று மழையாகப் பொழிகிறது என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. அதனை ,

நிறைகடல் முகந்துராய் நிறைந்து நீர்தளும்பும் தன்
பொறை தவிர்பு அசைவிட (பரி. 6:1 – 2)
         
     என்று பாரிபாடலில்,  முகில்கள் கடலின்கண் நீரை முகந்து கொண்டு வந்து ஊழி முடிவின்கண் முழுகுவிக்க முயன்றது போல் மழை பெய்தது என்ற கருத்து, கூறப்பட்டுள்ளது. மேலும், இன்றைய மருத்துவ உலகம் மனிதனைக் காப்பாற்ற மரணத்தின் வாயில் வரை செல்கிறது. மருத்துவப் படிப்புகளோ, செயல்முறைப் பயிற்சிகளோ இல்லாத அந்தக் காலகட்டத்திலும் சித்தர்களும், சிறந்த வைத்தியர்களும் வாழ்ந்துள்ளதை அவர்கள் படைத்த  இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன.                                                       
மாதா உதிரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதிரத்தில் வைத்த குழவிக்கே  (திருமந்திரம்)
         
      என்று திருமூலர் இயற்றிய திருமந்திரப் பாடல் விளம்புகின்றது. தாயின் உதிரத்தில் மலம் மிகுந்தால் பிறக்கும் குழுந்தை மந்தபுத்தி உடையதாகவும், நீர் மிகுந்தால் குழந்தை ஊமையாகவும் மலம், நீர் இரண்டும் மிகுதியாக இருந்தால் குழந்தை குருடாகப் பிறக்கும், என்ற கருத்துக்கள் இப்பாடலில் பயின்று வருகின்றன. இக்கருத்துக்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளிலும் அமைந்திருப்பதை அறிய முடிகிறது. மேலும், பழுதுபட்ட ஒரு உடல் உறுப்பை எடுத்துவிட்டு வேறொரு உறுப்பினைப் பொருத்துதல் என்பது இன்றைய மருத்துவ உலகின் சாதனை. அதனை,   

நாடுவிளங் கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன்
ஆடு மழைத் தடக்கை யறுத்து முறைசெய்த
பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் (சிலப்பதிகாரம்)
என்ற சிலப்பதிகாரப் பாடலின்வழி உணரமுடிகிறது.  பெரியபுராணத்திலும்,

மதர்த்தெழும் உள்ளத்தோடு மகிழ்ந்துமுன் இருந்து தங்கண்
முதற்சர மடுத்து வாங்கி முதல்வர்தங் கண்ணில் அப்ப (பெ.பு.2)
         
       என்ற அடிகளில் விளக்கப்படுகின்றது. இன்று கண்பார்வையற்றவர்க்கு பிறருடைய கண்ணினை வைத்து அறுவை சிகிச்சை செய்து பார்வை பெற வைக்கும் மருத்துவ அறிவினை மிக எளிமையாக கண்ணப்பர் கதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார் சேக்கிழார். மேலும்,  அறிவியல் உலகின் அறிய சாதனையான அறுவைச் சிகிச்சையினை பதிற்றுப்பத்தில்,

அம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது
தும்பை சூடாது மலைந்த மாட்சி (பதிற்றுப்பத்து 42: 2 – 6)
         
       என்று ஐந்தாம் பத்தின் இரண்டாம் பாடலடியில் போரில் வெட்டுண்ட உடலை வெள்ளுசி கொண்டு தைத்த மருத்துவன் செயலை விளக்குகின்றன. இன்றைய மருத்துவ முறையின் அறிவியல் சார்ந்த சிகிக்சைகள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழரால் கையாளப்பட்டு வந்துள்ளன என்பது பெருமை கொள்ளச் செய்கின்றன.

ஆய்வுநோக்கம்
             நம் முன்னோர்களின் வாழ்வில் அனு முதல் அண்டம் வரை அறிவியல் எல்லா நிலைகளிலும் பரவியிருக்கிறது இலக்கியத்தினை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் தன்னுடைய அனுபவங்களையும் அறிவியலையும் கலந்து, படைப்பாகவே நல்கி இருக்கின்றனர். அன்றைய நம் சான்றோர்கள் கண்ட கனவுகளே இன்று பல நிலைகளில் நிஜங்கள் ஆக வலம் வருவதைக் காணமுடிகின்றது. இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலையின் ஆதாரத்தினை நாம் நம்முடைய சான்றோர்களின் வாயிலாகவே பெற்றிருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். அத்தகைய அறிவியல் அறத்தினை, இத்தலைமுறை  செம்மொழியுடன் இணைத்துப் பாதுகாத்துப் பயில வேண்டும் என்பதே இவ்வாய்வின் நல்நோக்கம் ஆகும்.

பழந்தமிழர் வாழ்வியலில் அறிவியல்         
         அமுதாம்பிகை பிள்ளைத் தமிழில் ஊசற் பருவத்தில், அமுதாம்பிகை ஊசலாடும் நிகழ்வினைக் குறிக்கும்போது சிவஞான முனிவர்,

நின்னகை நிலவெழிலுக்கு அவர் முகத்
திங்கள் சாய (அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் – ஊசல் பருவம்)
         
       என்ற அடிகளில் அமுதாம்பிகை ஆடும் ஊசலின் கயிறு  நீளமாக இருந்ததால் மெதுவாக ஆடுகிறது என்றும் ஆனால் அவள் காதில் அணிந்திருக்கும் குண்டலம் குறைவான நீளத்தில் தொங்குவதால் விரைவாக ஆடுகிறது என்றும் கூறியுள்ளார். இதனையே கலிலியோ ஊசலின் நீளம் குறித்த தம் ஆய்வில் ‘‘ஊசலின் நீளம் குறைவாக இருந்தால் விரைவாக ஆடும். ஊசலின் நீளம் அதிகமாக இருந்தால் மெதுவாக ஆடும்’’ என்றும் கூறியுள்ளார்.  இவ்வாறு ஆய்வுகளின் மூலமாக அறியப்பட்ட பல அறிவியல் உண்மைகள் வெறும் அனுபவத்தின் மூலமாகவும்,  பண்டைய தமிழர்களின் அறிவுத் தேடலின் விளைவுகளாகவும் பெறப்பட்டவை என்பதனை உணரலாம். அன்றைய மனிதன் கண்ட கனவை  இன்றைய அறிவியல் முன்னேற்றம்  நிஜமாக்கியது.   தேடல் இருக்கும் இடத்தில்தான் வெற்றி  கிடைக்கிறது.  பறவையைக் கண்ட மனிதன் தானும் பறக்க நினைத்தான். இறக்கைகள் இல்லாதபோதும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. விளைவு விமானத்தின் துணையோடு விண்ணில் பறந்தான் என்பதனை,   

வலவன் ஏவ வானவூர்தி (புறம் 27)
         
என்ற குறிப்புகள்  சங்கப் பாடல்களிலேயே பயின்று வந்துள்ளமையைக் காண முடிகிறது. மேலும், சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோவலனோடு ஆகாயத்திலிருந்து வந்திறங்கிய விமான ஊர்தியில் ஏறிச் சென்றதாக அமைந்த  காட்சியினை  இளங்கோவடிகள்,

வானவூர்தி ஏறினள் மாதோ
கானமலர் புரிகுழல் கண்ணகி தானென் (3:196 – 200 )
         
        என்ற வரிகளில் கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணியில், கட்டியங்காரன் போருக்கு வந்ததால் சச்சந்தன் தன் மனைவியை காப்பாற்ற அவளை மயிற்பொறியில் ஏற்றி அனுப்பினான் என்பது செய்தி.  கட்டியங்காரனின் வெற்றி முழக்கத்தை வான் வழியே கேட்டு விசயை மயங்கி வீழ்ந்தாள். மயிற்பொறி இடப்புறமாகத் திரும்பி ஒரு சுடுகாட்டில் இறங்கி கால் ஊன்றி நின்றது என்பதாக அமைந்துள்ளது. இதனை,

வெஃகிய புகழிவால தன் வென்று வெம்முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பினையின் மாழ்கி மெம்மறந்து சோர்ந்தாள் (நா.இ., பா. 299)
என்றும்,

பல் பொறி நெற்றிக்
குஞ்சிமா மஞ்சை வீழ்ந்து கால்குவித்து இருந்து (நா.இ., பா,30)         
        போன்ற வரிகளிலும் வானவூர்தி பற்றிய செய்திகளைக் காண முடிகிறது. இத்தகைய இலக்கியங்களை நோக்கும்போது தொகையும் பாட்டுமாக, சித்தர்களின் அரிய பொக்கிஷமாக, நாட்டுப்புற இலக்கியமாக இன்னும் எண்ணற்ற அறிவியல் உண்மைகள் இவற்றுள் பொதிந்து கிடக்கின்றன என்பதை உணர முடிகிறது. இவற்றுள் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின்வழி  மனித இனத்திற்குத் தேவையான மகத்தான  அறிவியல் அறிவும் பல மருத்துவத் தீர்வுகளும் கிடைக்கும் என்பது தெளிவாகிறது.
 மண்ணிலிருந்து எடுக்கப்படும் பொன் முழுவதும் தூய்மையானது அல்ல அதில் இடம்பெற்றுள்ள வேண்டாத பொருள்களை அகற்றினால் மட்டுமே தூய்மையான பயன்பாட்டிற்கு உடைய நிலையில் தங்கம் கிடைக்கும். அவ்வாறு பயன்பாட்டிற்கு உரிய நிலையில் தங்கத்தை மாற்றுவதற்கு முக்கிய இடத்தைப் பெறுவது நெருப்பாகும். தங்கத்தை நெருப்பினால் உருக்கித் தேவையில்லாத கழிவுகளை நீக்கியதும் தங்கம் தன்னுடைய ஒளியைப் பெற்று விடுகிறது இதனை வள்ளுவர்
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோக்கில் பவருக்கு. (குறள்-267)
         
      என்ற பாக்களின் வாயிலாக எடுத்துரைத்துள்ளார். இயற்பியலின் ஒரு பிரிவாக விளங்குவது அணுவியல். அண்மைக்கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான வளர்ச்சி பெற்று இருப்பது அணுவியலாகும். முதலில் அணுவைப் பிளக்க இயலாது என்ற கொள்கை தோன்றியது. மேலும், சந்திர கிரகணத்தைக் குறிக்க வந்த புலவர்கள், திங்களைப் பாம்பு விழுங்கியது என்று குறித்துள்ளனர்.  அக்காலத்தில் ராகு கேது என்றும் பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுங்க முயல்வதாக மக்கள் கருதியிருந்த கருத்தே அதற்குக் காரணமாகும்.  பழங்காலத்தில் மேகம் கடலுக்கு சென்று நீரை முகந்து கொண்டு வானத்தில் ஏறிவந்து மழை பொழிவதாக மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதனை,

விசும்புஇவர் கல்லாது தாங்குபு புணரி
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே (குறுந்தொகை: 287)
         
         என்ற பாடலின்வழி அறியலாம். தமிழர் மரபுப்படி சனிக்கிழமை நீராடுவது வழக்கம், இதன் பொருள் சனிக்கிழமை மட்டும் நீராடுவது அல்ல.  உடல் ஆரோக்கியத்துடன் இருக்க கந்தகத்தன்மை சேர்ந்த தண்ணீரில் குளி என்பது பொருள்படும்.  இதன்படி சனிக்கோளில் (கரிக்கோள்), கந்தகத்தன்மை உள்ளதாக அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  பலகோடி விண்மீன்கள் விண்வெளியில் உள்ளன. அதன்வழி 12 வட்டங்களாக ராசி என்ற பெயரிட்டு அழைத்தமையை,

தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற் றிருக்கையுள்
உருகெழு வெள்ளிவந்த தேற்றியல் சேர (பரிபாடல் 11,1-4) 
என்ற பாடல் விளக்குகின்றது.

தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கோட்பாடுகள்
            
          தமிழிலக்கிய வரலாற்றில் பல அறிவியல் கோட்பாடுகள் பொதிந்துள்ளன. அவற்றில் சங்க கால இலக்கியங்களின் சான்றுகள் உள்ளன.  கரு, முதல் மாதத்தில் கரு 4.மி.மீ உள்ளதாக இருக்கும்.  இது இருபது நாட்களில் வளர்ச்சியுற்று இருதயம் துடிக்கச் செய்யும். இரண்டாவது மாதத்தில் கருவானது கருமுட்டையை விட 40,000 மடங்கு அதிகரிக்கும், என்கிறது கருவியல் நூல், அதனையே,

வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது
பகைவருண்ணா வருமண்ணினையே (புற:20 14.15)
         என்ற பாடல் விளக்குகின்றது. மேலும், மூன்று மாதத்தில் கரு அசைவு, நான்காம் மாதத்தில் பார்வைப்புலன் வளர்ச்சி அடையும் என்பதை மணிவாசகர்,

“பேரிருள் பிழைத்தும்”
      என்று விளக்குகிறார். இந்தப் படிநிலைகள் பல விஞ்ஞான வளர்ச்சியடைந்த போதிலும் கருவியல் கூறும் படிநிலைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது என்பது கருவியலில் உள்ள ஆச்சரியமாகும். மேலும், அறிவியல் மின்னனுக்களுடன் தொடர்புடைய துறையாக உள்ளது எனலாம். மூலக்கூறு என்பது அந்த பொருள்களில் உள்ள அணுக்களைப் பொருத்து அமைந்துள்ளது என்பதனை

தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும்நீ (பரி: 3,63-64)
         
       என்கிறது இப்பாடல். உலகத்தில் அழிவு ஒன்று உண்டு அழிந்து மீண்டும் தோன்றும் என்று பழமை நூல்களும், வேத சாஸ்திரங்களும் கூறுகின்றன.  கிருத்துவ புனித நூலான விவிலியத்தில் உலகம் பல்வேறு மாற்றங்களால் அழிவு நேரிடும் என்று கூறுகின்றது. இயற்கையின் பேரழிவால் உலகம் அழிய வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்த உலகம் அழிந்து மீண்டும் தோன்றும் முறையினை,

பசும்பொன் னுலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல(பரி:2, 1-4)
என்று பரிபாடல் கூறுகிறது. மேலும், அறத்துப்பாலில் வான்சிறப்பு எனும் அதிகாரத்தில்,

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்(குறள்-17)         
     என்ற குறட்பா வாயிலாகக்  கடல் நீர் ஆவியாகி மழையாகிப்  பெய்கின்ற நிகழ்வினை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார், வள்ளுவர். இதுவே இன்று நாம் நம் கல்வி முறையில் பயிலும் வாட்டர் சைக்கிள் (எவாபொரேஷன் ) ஆகும். விஞ்ஞானத்தைக் கூட அறம் வாயிலாக சுட்டி உரைத்தது நம் இலக்கியங்களில் மிகப்பெரிய தலையாயப் பண்பாகும். அறிவியலை வாழ்வியலுடன் இணைத்துக் கூற, தமிழால் மட்டுமே முடியும். கணிதம், மக்களின் வாழ்வோடு ஒட்டியது. கணிதம் இல்லாமல் வாழ்வியல் முறை இல்லை என்றே கூறலாம்.

நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மைஇல் கமலமும் வெள்ளமும் நுதலிய (பரி:2,13-14)
         
          என்கிறது பரிபாடல். இப்பாடலில்,  கணக்கற்ற பல ஊழிகள் பலகோடி ஆயிரம் காலத்தை குறிக்கின்றது.  இதில் ஆம்பல் என்பது ஆயிரம் கோடி என்ற பேரியல் எண்ணைக் குறிக்கின்றது. வெள்ளம் என்பது கோடி கோடியையும், கமலம் என்பது நூறு ஆயிரம் கோடியையும், பத்மம் என்பது சங்கம் பத்து நூறாயிரம் கோடி, நெய்தல் அல்லது குவளை நூறுகோடி எனவும், பாழ் என்பது பூஜ்யம் என்பது முதல் பல் அடுக்கு ஆம்பலான ஆயிரம் கோடி வரையிலும். ஆதற்கு மேலும் கணிதமுறையில் பின்னல்கள் முறையிலும் தனித் தனி பெயர்களைத் தமிழர்கள் கையாண்டு வந்திருக்கின்றனர் என்பது இதன் மூலம் நாம் அறியமுடிகிறது.

தொகுப்புரை
         
        20-ஆம் நூற்றாண்டை, “அறிவியல் யுகம்’ என்று கூறலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கணக்கில் அடங்காதவை. அறிவியல் வளர்ச்சி பெற்று விளங்கும் கருத்துகளுக்கான வித்துக்களைப் புராண இதிகாசங்கள், சங்க இலக்கியம் தொடங்கி ஆரம்பகாலக் கண்ணாடியான இலக்கியத்தில் காணலாம். மேலும், இந்நூற்றாண்டில் ஈடு இணையற்ற கவி பாரதியார் ஆவார். எதிர்காலச் சமுதாயம் அறிவியல் துறையில் என்னென்ன சாதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்னும் தம் கனவினை,

வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்…         
என்று தம் பாடல் வழி உணர்த்துகிறார். இத்தகைய ஆய்வுகளின் வாயிலாக வரும் தலைமுறையினர் தம்முடைய எதிர்காலத்திற்குத் தேவையான அறிவியல் அறிவினையும் அதற்கான தீர்வையும் நம் சான்றோர்கள் முன்கூட்டியே சுட்டிக்காட்டி இருப்பார்கள் என்பதனை தெள்ளத்தெளிவாக அறியமுடிகின்றது.

துணைநூற்பட்டியல்
1.wikipedia

2.google

3.தமிழ் அகராதி – தமிழ் அகரமுதலி, சென்னைப் பல்கலைக்கழக அகராதி.

4.தமிழ் இலக்கிய வரலாறு – மு. வரதராசன்

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர். ஆ. பரிமளா
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
கே. பி. ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, கோவை.

 

தலைமுறை இடைவெளி|சிறுகதை|ரா.ஷரஂமிளா

தலைமுறை இடைவெளி - சிறுகதை - ரா.ஷரஂமிளா
     மாலா தனஂ அமஂமாவிடமஂ கேடஂடாளஂ “அமஂமா இனஂனைகஂகு ஸஂகூலஂ லீவு போடவா”. சீதா மகளை அனஂபாகவுமஂ, ஒழுகஂகமாகவுமஂ வளரஂகஂகுமஂ ஒரு தாயஂ. மகளினஂ எணஂண ஒடஂடதஂதைப் புரிநஂதவளாக நடிதஂதாளஂ. “ஸயினஂஸஂ மிஸஂ பரீடஂசைனஂனு சொனஂனாஙஂகௗா? பயமா இருகஂகா, கணஂணா! நானஂ சொலஂலி தரேனஂ”. “சரி போமஂமா” எனஂறு பளஂளி கிளமஂபினாளஂ.
மாலாவிறஂகு தமிழஂ மறஂறுமஂ கணகஂகு பாடஙஂகளஂ மிகவுமஂ பிடிகஂகுமஂ. அறிவியலஂ பாடமஂ பிடிகஂகாது. மாலா, ஒர் உணரஂவு பூரஂவமான பெணஂ. பாடமஂ நடதஂதுமஂ ஆசிரியரைப் பிடிதஂதாலஂ பாடமஂ பிடிகஂகுமஂ. ஆசிரியரைப் பிடிகஂகாவிடஂடாலஂ பாடமஂ பிடிகஂகாது.

       கலஂவி, திருமணமஂ, மறஂறுமஂ உறவுகளஂ தலைமுறை இடைவெளி எனஂற ஒனஂறை வாழஂகஂகை ஏடஂடிலஂ பதிவு செயஂது விடுகினஂறது. மாலா ஒனஂபதாமஂ வகுபஂபு படிகஂகிறாௗஂ. புதிய தலைமுறையைச் சேரஂநஂதவளஂ. பழையக் காலதஂதிலஂ இருநஂதவரஂகளஂ உணஂமையையுமஂ, மனதினஂ ஓடஂடதஂதையுமஂ புரிநஂது வாழஂநஂதாரஂகளஂ. இநஂதக் காலதஂதுக் குழநஂதைகௗஂ மனதை ஆராயஂசஂசி செயஂகிறாரஂகளஂ, உணஂமையைப் புறகஂகனிகஂகிறாரஂகளஂ. மாலா இயறஂகையாகவுமஂ, எளிமையாகவுமஂ வாழஂபவௗஂ. ஏனோ தெரியவிலஂலை ஆடமஂபர பொருடஂகளைக் கடின உழைபஂபை அவளஂ விருமஂபவிலஂலை.

       தமிழஂ ஆசிரியைத் தோழமையுடனுமஂ நகைசஂசுவையுடனுமஂ பேசுவாரஂ. கணகஂகு ஆசிரியையுமஂ நடஂபாகப் பேசுவாரஂ. அறிவியலஂ ஆசிரியை யதாரஂதமானவரஂ. இளமஂ வயது மாணவரஂகளஂ உழைகஂக வேணஂடுமஂ எனஂற கொளஂகை உடையவரஂ.
ஒருநாௗஂ அறிவியலஂ பாடமஂ நடதஂதுமஂ ஆசிரியரஂ மாலா ஆரஂவமஂ இலஂலாமலஂ இருபஂபதை சுடஂடிக்காடஂட நினைதஂது ஒரு கேளஂவியைக் கேடஂகிறாரஂ.
         “இநஂதக் கேளஂவியை எடஂடாமஂ வகுபஂபு மாணவுயிடமஂ கேளஂ. அவளஂ கூறுவதை எனஂனிடமஂ கூறு எனஂகிறாரஂ”.
மாலா எடஂடாமஂ வகுபஂபிலஂ பயிலுமஂ மாணவியிடமஂ விடை கேடஂகிறாரஂ. அறிவியலஂ ஆசிரியரஂ, “உனஂனைவிட வயதிலஂ சிறியவளஂ அறிவிலஂ பெரியவளாக உளஂளாளஂ. நீ எனஂறு வளர போகிறாயஂ” எனஂறு கேடஂகிறாரஂ.
இநஂதச் சமஂபவமஂ மாலாவினஂ மனதிலஂ வெறுபஂபை விதைகஂகிறது.

        சீதா பலமுறை கூறியுளஂளாளஂ, “பாடமஂ கேடஂகுமஂ பொழுது அறிவுபூரஂவமாகச் சிநஂதிகஂக வேணஂடுமஂ. உணரஂவுபூரஂவமாகச் சிநஂதிகஂக கூடாது”. புதிய தலைமுறை புதிய பாதையிலஂ நடபஂபது இயலஂபான மாறஂறமஂ தானே. மாலா தனஂ எணஂணமஂ போல வாழஂபவளஂ. பிடிதஂததைச் செயஂவாளஂ. “எனஂ வாழஂகஂகை, எனஂ ரூலஂஸஂ” எனஂறு ஆஙஂகிலதஂதிலஂ கூறுவாளஂ. ஆனாலஂ ஆசிரியரஂகளிடமஂ ஒழகஂகமான பெணஂணாகக் காடஂடிகஂகொளஂவாளஂ.
அவௗஂ அநஂதரஙஂகமஂ தாயஂகஂகுமஂ தநஂதைகஂகு மடஂடுமே தெரியுமஂ. “படஂடாதானஂ புரியுமஂ”னஂனு ஒரு வசனமஂ சொலஂவாஙஂகளே அதுதானஂ சீதாவிறஂகு ஞாபகமஂ வருமஂ. காலமஂ பதிலஂ சொலஂலுமஂ எனஂறு நமஂபினாளஂ தாயஂ. தாயினஂ கணகஂகு தபஂபாகாதே. அநஂதநாளஂ வநஂதது.
 தமிழஂ ஆசிரியரஂ வனஜாவுமஂ அறிவியலஂ ஆசிரியரஂ கிரிஜாவுமஂ மாணவிகளைப் பறஂறி பேசிகஂ கொணஂடு இருநஂதாரஂகளஂ.

கிரிஜா: எனகஂகு மாலாவை நினைதஂதாலஂ வருதஂதமா இருகஂகு. மறஂற பாடதஂதிலஂ இருகஂகுமஂ ஆரஂவமஂ அவளுகஂகு எனஂ பாடதஂதிலஂ இலஂலை.

வனஜா: விளையாடஂடுப் பருவமஂ. வேகமஂ உளஂள அளவுகஂகு விவேகமஂ இலஂலை. நானஂ அவளுகஂகு அறிவுரை கூறவா மிஸஂ?

கிரிஐா: “எதை கேடஂடாலுமஂ சமாளிபஂபாளஂ. வெளிபஂபடையா பேசினாலஂ, கலஂவியினஂ மகதஂதுவதஂதை அவளுகஂகு புரிய வைகஂகலாமஂ. நீஙஂக டஂரை பணஂனுஙஂக மிஸஂ” எனஂறாரஂ.
தமிழஂ பாடமஂ படிகஂகுமஂ பொழுது ஆசிரியரஂ கேடஂடாரஂ மாலா, உனஂ அமஂமா வீடஂடிலஂ எனஂன வேலை செயஂகிறாரஂ.

மாலா: எனஂ அமஂமா சமையலஂ செயஂவாரஂ. தாதஂதா, பாடஂடி, தமஂபியைப் பாரஂதஂதுகஂ கொளஂவாரஂ. மாலை நேரதஂதிலஂ கணகஂகு பாடமஂ டியூசனஂ எடுபஂபாரஂ. ஏனஂ கேடஂகறீஙஂக மிஸஂ?

வனஜா: நீ அமஂமாவுகஂகு உதவி செயஂவியா?

மாலா: இலஂல மிஸஂ. சமையலஂ செயஂய எனகஂகு பிடிகஂகுமஂ. ஆனா, நேரமஂ இருகஂகாது.

வனஜா: சுடு தணஂணீரஂ வைகஂக தெரியுமா?
மாலா: சிரிசஂசுடஂடே தெரியுமே எனஂறாளஂ.

வனஜா: எபஂபடி சுடு தணஂணீரஂ வைபஂபதுனஂனு எனகஂகு சொலஂலு எனஂறாரஂ.

மாலா: சினஂன பாதஂதரதஂதிலஂ தணஂணீரஂ எடுதஂதுச் சிநஂதாமலஂ அடுபஂபிலஂ வைகஂகனுமஂ. பெரிய பாதஂதிரதஂதிலஂ வசஂசா தூகஂகுறது கஷஂடமஂ.

வனஜா: சரி, அடுபஂபு பறஂற வைகஂக உனஂ தோழி வரனுமா? எனஂறு நகைசஂசுவையாகக் கூறினாரஂ.

மாணவிகளினஂ சிரிபஂபு விணஂணை கிழிதஂதது.

வனஜா டீசஂசரஂ மாலாவிடமஂ கூறினாரஂ, “நாமஂ கணஂகளாலஂ பாரஂதஂதுத் தெரிநஂது கொளஂளுமஂ விஷயஙஂகளை விட சிநஂதிதஂதுப் புரிநஂது கொளஂளுமஂ விஷயமஂ ஆழமானது. நீ உலகை கணஂகளாலஂ புரிநஂது கொளஂகிறாயஂ. சநஂதிதஂதுப் பாரஂ உணஂமையுமஂ, வேறஂறுமைகளுமஂ புரியுமஂ” எனஂறாரஂ.
மாலா மொளனமாகச் சிநஂதிதஂதாளஂ. தமிழஂ ஆசிரியரஂ குறிபஂபிடஂடுப் பேசுவது அவளுகஂகுப் புரிநஂதது.
அடுதஂதநாளஂ தமிழஂ ஆசிரியரஂ, “நானஂ எனஂன சொனஂனேனஂஂனு புரிஞஂசதா? எனஂறு கேடஂடாரஂ.
மாலா தெரிநஂதுமஂ தெரியாதவளஂ போல சொனஂனாளஂ. “நீஙஂக நலஂலா பேசறீஙஂக, மிஸஂ”.

வனஜா: உனகஂகு எநஂத உடை அலஙஂகாரமஂ மிகவுமஂ பிடிகஂகுமஂ.
மாலா: எனகஂகு படஂடுப் பாவாடை ரொமஂப பிடிகஂகுமஂ.

வனஜா: உனஂகிடஂட எவஂவளவு படஂடுப் பாவாடை இருகஂகு.
மாலா: இரணஂடு மிஸஂ. நானஂ அதுல அழகா இருகஂகேனஂனு அமஂமா சொலஂவாஙஂக எனஂறாளஂ பெருமையாயஂ.

வனஜா: படஂடுப் பாவாடை போடுமஂ பொழுது எனஂன நகை போடுவாயஂ.
மாலா: அழகான கலஂ வலையலஂ, ஆரமஂ, ஜிமிகஂகி கமஂமலஂ போடுவேனஂ.

வனஜா: நலஂல ரசனை உளஂள பெணஂ நீ. அநஂத அழகான உடைகஂகு காதிலஂ எதுவுமஂ அணியாமலஂ இருநஂதாலஂ எபஂபடி இருகஂகுமஂ.
மாலா: நலஂலா இருகஂகாது மிஸஂ. உடையுமஂ நகையுமஂ அகஂகா, தஙஂகை மாதிரி.

வனஜா: உடை, நகை இரணஂடுமஂ சேரஂநஂதாலஂ உனஂ அழகு கூடுகிறது. அதுபோல தமிழஂ, கணகஂகு, அறிவியலஂ அனைதஂதிலுமஂ நீ கவனமஂ செலுதஂதினாலஂ நீ சகலகலா வலஂலியாக மாறுவாயஂ.

மாலா: நீஙஂக சரியா சொளலஂறீஙஂக, மிஸஂ.
மாலா: நானஂதானஂ தமிழஂல முதலஂ மதிபஂபெணஂ எடுதஂதிருகஂகேனஂ. அடுதஂத முறையுமஂ கணஂடிபஂபா முதலஂ மாரஂகஂ எடுகஂகறேனஂ. மறஂற பாடதஂதிலுமஂ கவனமஂ செலுதஂதறேனஂ, மிஸஂ.

வனஜா: எனஂ பாடமஂ மடஂடுமஂ அலஂல அனைதஂதுப் பாடதஂதையுமஂ ஆரஂவமுடனஂ படிகஂக வேணஂடுமஂ. நீ சகலகலாவலஂலி ஆக வேணஂடுமஂ, எனஂறாரஂ.
தமிழஂ ஆசிரியரினஂ அறிவுரையுமஂ, அறிவியலஂ ஆசிரியரினஂ அறிவுமஂ மாலாவை மாறஂறியது.

       மாலா பதஂதாமஂ வகுபஂபிலஂ முதலஂ மதிபஂபெணஂ எடுதஂதாரஂ. மாலாவினஂ வெறஂறிகஂகு பினஂனாலஂ தமிழாசிரியரினஂ அறிவுரையுமஂ, அறிவியலாசிரியரினஂ அனஂபுமஂ இருபஂபது மாலாவினஂ தாயஂ சீதாவிறஂகஂகு தெரியுமஂ. சீதா மனதிறஂகுளஂ இறைவனுகஂகுமஂ, ஆசிரியரஂகளுகஂகுமஂ நனஂறி கூறினாளஂ.
ஒவஂவொரு மாணவரஂகளையுமஂ உருவாகஂக ஆசிரியரஂகளஂ தானஂ எதஂதனை பாடுபடுகிறாரஂகளஂ எனஂறு சீதா வியபஂபடைநஂதாளஂ.

சிறுகதையின் ஆசிரியர்
ரா.ஷரஂமிளா,

ஆதமஂபாகஂகமஂ,
செனஂனை.

 

Padinilai Koorugalaga Thalattuppadalgal|M. Chitra Priya

படிநிலைக் கூறுகளாகத் தாலாட்டுப்பாடல்கள்
Abstract
            Lullabies are songs sung by mothers for their children. The aim of this study is to find out whether lullabies are still oral songs in folk songs. Lullabies are related to human emotions. Singing lullabies makes the child forget himself and fall asleep. Lullabies are not only for this time but also for all times, although they have changed slightly. The ideas of this article are that lullabies are always in stages.

படிநிலைக் கூறுகளாகத் தாலாட்டுப்பாடல்கள்
ஆய்வுச்சுருக்கம்
          தாலாட்டுப் பாடல்கள் என்பது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காகப் பாடும் பாடல்கள். இந்த ஆய்வின் நோக்கம், நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டுப் பாடல்கள் இன்னும் வாய்மொழிப் பாடல்களாக இருக்கிறதா என்பதைக் கண்டறிவதாகும். தாலாட்டுப் பாடல்கள் மனித உணர்வுகளுடன் தொடர்புடையவை. தாலாட்டுப் பாடல்களைப் பாடுவது குழந்தை தன்னை மறந்து தூங்கச் செய்கிறது. தாலாட்டுப் பாடல்கள் இந்தக் காலத்திற்கு மட்டுமல்ல, எக்காலத்திற்கும் சிறிது மாறுப்பட்டாலும் படி நிலைகளாக இருந்து வருகிறது.

குறியீட்டுச் சொற்கள்
: தாலாட்டு, செல்வம், முத்து, படிநிலை, பவளம்

முன்னுரை         
       படிநிலைக் கூறுகளாக தாலாட்டுப்பாடல்கள் தாலாட்டு என்பது குழந்தைகள் தூங்க வைக்கும் போது பாடப்படும் பாட்டு ஆகும். இது குழந்தைகளின் அழுகையை நிறுத்தவும் குழந்தைகளை மகிழ்விக்கப் பாடப்படும் பாட்டுக்கள் ஆகும். தாய்மார்களின் மனதில் இருந்து குழந்தைகளுக்காக பாடப்படும் பாடல் வரிகள் ஆகும். தாலாட்டு பாடலின் மூலம் குழந்தை தன்னை மறந்து தூங்குகிறது.

தாலாட்டுப் பாடல்களின் படிநிலைகள்
         
        தாலாட்டுப் பாடல்கள் இன்ஸ்டாலமும் குழந்தைகளுக்காக நாட்டுப்புறங்களில் பாடப்பட்டு வருகின்றன. இன்றளவும் குழந்தைகளுக்குத் தொட்டில் கட்டி அதில் குழந்தையை இட்டு தாலாட்டுப்பாட்டினைக் குழந்தைகளுக்குப் பாடி வருகின்றனர். தாலாட்டுப்பாடல் மனிதனின் உணர்வுகளோடு தாய் மற்றும் சேய் தொடர்பான தொடர்புடையது எனலாம். வாய்மொழி சார்ந்த கூறுகளாக இன்றளவும் தாலாட்டுப் பாடல்கள் இருந்து வருகிறது. தாலாட்டுப் பாடல்களின் தன்மை தாய் மற்றும் சேய் எக்காலத்திற்கும் பொருந்தும் உணர்ச்சிப் பாடல்களாக இருந்து வருகின்றது.
தாலாட்டு
         
தால் என்பது நாவை குறிக்கும் நாவினால் குரல் ஓசையை எழுப்புவதன் மூலம் குழந்தையைத் தொட்டிலில் இட்டு ஆட்டுதல் என்பதால் தாலாட்டு என்று பெயர் பெற்றது. தாலாட்டுத் தொடக்கத்திலும் இறுதியிலும் ராரோ ஆரிரரோ ஆரிரரோ என்று பாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தாலாட்டுப் பாடுகிற பொழுது முதலில் ராரி ராரி ரா ரராரோ ரார் என்றும் தூரி தூரி ரா ரா தூரி என்றும் தொடங்குவது எச்சக் கூறுகளாக உள்ளது. ரா ரா ரி ரி என்று தொடங்குவதால் தாய்மார்கள் பாட்டை எளிதில் பாட முடிகிறது. ஆனால் அவர்கள் இதற்கென்று பயிற்சி பெறுவதில்லை. இந்தத் தாலாட்டு பாடல்களில் குழந்தைகளுக்குத் தேவையான பால் கறக்கும் மாட்டையும், குழந்தை விளையாடுவதற்குத் தேவையான விளையாட்டுப் பொருட்களையும் வாங்கி வந்து கொடுக்கும் மாமனை புகழ்ந்தும் பாடி வருகின்றனர்.

தாலாட்டுப்பாடல்கள்
கண்ணா சிறு சலங்கை
எனக்கு காலு அழுந்ததுன்னு
தங்க சிலுசலங்க
இந்த தங்கம் ஏன் அழுகுது 
தார உழுந்து போகும்னு
கழட்டி வைப்பான்
உன்மாமா உன்மாமா
என் தங்கம் நடக்கும் இடத்தில்
தாமரை வெப்பா உன் மாமா..!
குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாடல்கள்
         
     குழந்தைக்குப் பசி ஏற்பட்டுப் பசிக்கு அழுதாலும் தூக்கத்திற்காக அழுதாலும் தாய்மார்கள் குழந்தையைத் தொட்டிலில் இட்டு தாலாட்டுகின்றனர். தாலாட்டுப் பாடுகின்ற வழக்கம் தமிழகத்தில் கிராமங்கள் மட்டுமின்றி நகரங்கள் என வேறுபாடு இன்றி இவ்வழக்கம் உள்ளது.  தாலாட்டுப் பாடல்களின் செல்வம், முத்து, பவளம் போன்ற வளம் தரும் சொற்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு வளம் தரும் சொற்களைப் பயன்படுத்துவதால் குழந்தை வளம் பெற்று வளரும் என்ற நம்பிக்கை எச்சக்கூறுகளாக இன்றளவும் தாலாட்டு பாடல்களில் இடம்பெற்று வருகின்றது. குழந்தை நன்றாக வளர வேண்டும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தால் இப்பாடல்கள் இன்றளவும் பாடப்பட்டு வருகிறது.

முடிவுரை
      குழந்தைகளுக்காகத் தாலாட்டுப்பாடும் பழக்கங்கள் பழங்காலங்கள் தொட்டு இன்றளவும் இருந்து வருகின்றன. மேலும் தாலாட்டுப்பாடல்கள் எக்காலத்திற்கும் படிநிலை கூறுகளாக இருந்து வருவது மிகவும் போற்றுத்தக்கதாகும்
துணைநூற்பட்டியல்
1. கள ஆய்வு

2. கோவைக் கிழார், எங்கள் நாட்டுப்புறம்.

3. சண்முகசுந்தரம் க, தமிழக நாட்டுப்புற பாடல்கள்

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
மு.சித்ரப்ரியா
உதவிப் பேராசிரியர்
கோபி கலை அறிவியல் கல்லூரி
கோபிசெட்டிபாளையம் – 638453.

 

Ilakkiyangalil Naattar Valakkatriyal|Dr.A.Janarthali Begam

இலக்கியங்களில் நாட்டார் வழக்காற்றியல் - முனைவர் அ. ஜனார்த்தலி பேகம்
Abstract
               
          The lore of the countryman is today known as ‘Folklore’. This article is designed to show that oral story-telling and story-songs expressing the natural feelings and celebrations of the people living in the rural villages while man lived harmonious with music, the expression of the history of the ancestors through the play and dance, the worship of the deities in the ancestral way and the celebration by offering what is necessary for those gods, the riddle proverb of the village and so on spread out as unwritten poetries in folklore.
Keywords: Verbal, Proverb, Riddle, Song, Dance


இலக்கியங்களில் நாட்டார் வழக்காற்றியல்

ஆய்வுச்சுருக்கம்
         
       நாட்டார் வழக்காற்றியல் இன்று நாட்டுப்புறவியல் என்று அழைக்கப்படுகிறது. இசைக்கு மனிதன் இசைந்து வாழ்ந்த காலம் நாட்டுப்புற கிராமங்களில் வாழும் மக்களின் இயற்கை உணர்வுகளையும் கொண்டாட்டங்களையும் வெளிப்படுத்தும் விதமாக வாய்மொழியாக கதை சொல்லல் கதைப் பாடல்கள், முன்னோர் வரலாற்றை நாடகம் மற்றும் கூத்தின் வழி வெளிப்படுத்துதல், முன்னோர் வழியில் தெய்வ வழிபாடு செய்து அத்தெய்வத்திற்கு தேவையானவற்றைப் படைத்து மகிழ்தல், விடுகதை, பழமொழி போன்றவை ஏட்டில் எழுதாக் கவிகளாக வலம் வந்தது நாட்டுப்புறவியலில் தான் என்பதை எடுத்துக் கூறும் வகையில் இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கலைச்சொற்கள்
         
வாய்மொழி, பழமொழி, விடுகதை, பாட்டு, ஆடல்.

முன்னுரை
         
        மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்துரைப்பது இலக்கியங்களாகும். அத்தகைய இலக்கியங்களில் ஒன்றுதான் நாட்டுப்புறவியல் இவ்விலக்கியங்கள் எண்ணங்களை எவ்வகை நாகரீகமும் கலவாது இயற்கையான வழக்குச் சொற்களாகவே இடம்பெறுகின்றது. ஒரு நாட்டின், ஒரு சமூகத்தின், ஒரு மொழியின் பண்பாட்டுக் கூறுகள் நாட்டுப்புற இலக்கியத்தில் குறிக்கப்படுவதுபோல் வேறு எந்த இலக்கியத்திலும் குறிப்பிடுவதில்லை என்பதே உண்மை. உழைப்புக்கிடையே உவகை பெறவும் களைப்புக்கிடையே களிப்பை அடையவும், சோர்வை அகற்றிச் சுறுசுறுப்புறவும் இன்ப துன்பங்களை வெளிப்படுத்தும் விதமாக ஆடல்களாலும் பாடல்களாலும் நாட்டு மக்களின் மன மகிழ்ச்சிக்காக ஆக்கப்பெற்றவை நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகும்.

தொல்காப்பியமும் நாட்டுப்புறவியலும்
         
      பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் நாட்டுப்புறவியல் கூறுகளைப் பற்றி தொல்காப்பியர் கூறியுள்ளார். அகத்தியம் முதலாவதாகத் தோன்றிய நூல் எனினும் நமக்கு முழுமையாகக் கிடைத்த நூல் தொல்காப்பியமே. மரபு வழித்தோன்றி வாய்மொழி இலக்கியம் செழித்து வளர அடிப்படையாக அமைந்தது தொல்காப்பியமாகும்,
          இலக்கண நூலாயினும் இது இலக்கியச் சிறப்புகளையும் உள்ளடக்கியது. செய்யுளியலில் யாப்பின் வகைகளைக் கூறவந்த தொல்காப்பியர்.
         
“பாட்டு உரைநூலே வாய்மொழி பிசியே       
அங்கதம் முதுசொலோடவ் வேழ்நிலத்தும்       
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்       
நாற்பே ரெல்லை அகத்தவர் வழங்கும்       
யாப்பின் வழியது என்மனார் புலவர்”(தொல்-பொருள்-செய்யுளியல். 79)
     என்று எடுத்துரைக்கிறார். பாட்டு, உரைநூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் ஆகியன தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வழக்கில் இருந்தமையை அறியமுடிகின்றது.
தொல்காப்பியர் குறிப்பிடும் பண்ணத்தி இன்றைய நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றான நாட்டுப்புறப் பாடலைக் குறிக்கிறது. இசையுடன் கற்பனை கலந்து வாய்மொழியாக வழங்குவதைப் பண்ணத்தி எனக் குறிக்கப்படுகிறது. பண்ணத்தியை பிசியோடு ஒப்பிட்டு கூறுகிறார். இம்மரபை பின்பற்றியே சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட பாணர், பாடினியர், விறலியர், போன்றோர் வளர்ந்து வந்துள்ளது தெளிவாகின்றது. நாட்டுப்புற இலக்கியம் குறித்து, “நாட்டுப்புற இலக்கியம் ஆழங்காண இயலாத ஆழி போன்றது. இன்னும் எல்லா நாட்டுப்புறக்கலைகளையும் இலக்கியங்களையும் அறிந்துவிட்டோம் என்ற நிலை இல்லை. சிற்றூரில் விளையாடும் சிறுவர்களிடையே பயிலும் சில பாடல்கள் பலரறியாதவாறு பாடப்பெற்றும் வரலாம். நாட்டுப்புற இலக்கியத்தினைப் பாடல், ஆடல், கதைகள், கதைப்பாடல்கள், ஆடல்பாடல்கள், கூத்துகள், விடுகதைகள், பழமொழிகள் என்ற பிரிவுகளில் பெரும்பான்மையானவற்றை அடக்கிவிடலாம். இப்பிரிவுகள் அனைத்தும் ஆடல், பாடல் என்ற இருவகையுள் அடங்கும்”(அ.ஆறுமுகம், நாட்டுப்புற இலக்கியமும் பண்பாடும், பக்.12)
         என்று நாட்டுப்புறவியலுக்கு ஆறுமுகம் விளக்கமளிக்கின்றார்.
“பண்ணத்தி என்ற சொல்லுக்குப் பண்ணை விரும்புவது என்று பொருள். இசைப்பாட்டில் வரையறையான பொருள் அமைந்திருக்கும். இப்பாட்டிலும் இன்னோசை இருப்பினும் இசைப்பாட்டிற்குரிய வரையறையில்லை. ஆதலின் பண்ணமைந்த பாடல் எண்ணாமல் பண்ணத்தி என்றார்”(கி.வா.ஜகந்நாதன், மலையருவி, ப.9)
என்று கூறுகிறார். பண்ணத்தியை,
       
“பாட்டிடைக் கலந்த பொருளவாகியது”(தொல். பொருள். செய்யுளியல். 180)
         
        பாட்டின் இயலது, பிசியொடு மானும், அடி நிமிர்கிளவி ஈராறு ஆகும், அடியிகந்து வரினும் கடிவரையின்றே என ஐவகைத் தன்மைகளைக் குறிப்பிடுகின்றார். பேராசிரியர் தனது உரையில் மெய் வழக்கில்லாத புறவழக்குடையது என்றும் எழுதும் பயிற்சி இல்லாத புறவுறுப்புப் பொருட்களை உடையது என்றும் பண்ணத்திக்கு விளக்கம் சொல்வார். கற்பனை நிறைந்தது என்றும் வாய்மொழியாக வருவது என்றும் பொருள் கொள்ளலாம்.
         
பாட்டுமடை                    – கூடத்தினிடையில் வருவது
         
வஞ்சிப்பாட்டு                 – ஓடப்பாடல்
         
மோதிரப்பாட்டு            – நாடக நூல் வகை
         
கடகண்டு                       – பழைய நாடக நூல்

      ஆகிய நான்குமாம். ‘பண்ணத்தி என்றால் சிற்றிசையும் பேரிசையும் முதலாக இசைத்தமிழில் ஓதப்படுவன’ என்கிறார் இளம்பூரணர். மேலும்,
        “தொல்காப்பியர் கதைகளைப் பொருளொடு புணராப் பொய்மொழி என்று குறிப்பிடுகின்றார். பேராசிரியர் இதற்கு உரை எழுதும் போது, ‘யானையும் குருவியும் தம்முள் நட்பு கொண்டு இன்ன இடத்திற்குப் போய், இன்னவாறு செய்தன என்று ஒருவன் புனைந்துரைக்கும் வகையெல்லாம் இதன்பால் அடங்கின’ என்று விளக்குகின்றார்”(டாக்டர் சு.சண்முக சுந்தரம், நாட்டுப்புற இலக்கிய வரலாறு, பக்.70)
  இதனால் தொல்காப்பியர் காலத்தில் கதைகள் வழங்கப்பட்டன என அறியமுடிகின்றது. சங்கப் பாடல்களில் செறிந்துள்ள குன்றப்பாடல், குரவைப்பாடல், வேலன் பாடல், வள்ளைப் பாடல், சடங்குப்பாடல், துணங்கைப்பாடல், உழவர் பாடல், நீர் இறைப்போர் பாடல், ஊசல் பாடல் போன்றவை நாட்டுப்புறப் பாடல்களாகும். காப்பியங்களில் வரிப்பாடல்கள், குரவைப் பாடல்கள், உழவர் பாடல்கள், மன வாழ்த்துப் பாடல்கள், பந்தாட்டப் பாடல், ஊசல் பாடல், ஓலுறுத்தல் என்னும் தாலாட்டுப் பாடல், வள்ளைப் பாடல் போன்றவை இடம்பெற்றுள்ளன.
          கம்பரின் ஏற்றப் பாடல்களை வியந்து கூறுவர். மணிக்கவாசகர் ஊசல், சுண்ணம், சாழல், அம்மானை போன்ற நாட்டுப்புறப் பாடல்களைத் தழுவிப் பாடியுள்ளார். இவ்வாறு பாரதி காலம் வரை பல புலவர்கள் நாட்டுப்புறப் பாடல்களைச் சுவைத்தும், தொகுத்தும் வைத்துள்ளனர்.

சங்க இலக்கியத்தில் நாட்டுப்புறவியல்
         
             சங்க இலக்கியங்களில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலங்களிலும் வாழும் மக்கள் அந்தந்த நிலங்களுக்கு ஏற்றவகையில் பாடியும் ஆடியும் இன்புறும் காட்சிகள் இடம்பெறுகின்றன. ஆடலுடன் பாடிய பாடல்களும் கூறப்பட்டுள்ளன. நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கினைப் பாரி மகளிரின் ‘அற்றைத் திங்கள்’ பாடலிலும் மாண்ட மன்னனுக்காகப் பாடும் ‘முல்லையும் பூத்தியோ’ பாடல் ஒப்பாரியின் சாயலை உடையன. நாட்டுப்புறப் பாடல்களில் ராசாத்தி, தங்கரத்தினமே என்ற சொற்கள் அடிக்கடி மீண்டும் வருவது போன்று ஐங்குறுநூற்றுப் பாடல்களில் வேழம், எருமை, கள்வன் போன்ற சொற்கள் மீண்டும் வருகின்றன.
       
“பறத்தெரு வீதியிலே – கண்ணே அங்கே               
பறச்சி கூடி நிற்கையிலே       
இடைத்தெரு வீதியிலே – கண்ணே அங்கே               
இடைச்சி கூடி நிற்கையிலே       
வலைத்தெரு வீதியிலே – கண்ணே அங்கே               
வலைச்சி கூடி நிற்கையிலே”(கி.வா.ஜகந்நாதன். மலையருவி, 223)
          என்ற நாட்டுப்புறப் பாடலில் மூன்றடுக்கு வருவது போன்று கலித்தொகை சங்க இலக்கியமானக் படலிலும் இடம்பெற்றுள்ளன. உடன்போக்கு போன தன் மகளைத் தேடி செல்கிறாள் செவிலி பாலை நிலத்தின் தன்மையைக் கூறி உவமையுடன் கூடிய இத்தகைய பாடலில் நாட்டுகப்புறக் கூறுகள் இடம்பெறுவதை அறிந்துகொள்ள முடிகின்றது.
       
“பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை       
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதா மென்செய்யும்       
நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே;       
சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை       
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செய்யும்;       
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே       
ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை       
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யும்,       
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே”(கலித்தொகை, பாலைக்கவி. 9)
     நும்மகள் நுமக்குமாங் கனையளே என்று மும்முறை திரும்ப வருகின்ற காரணத்தால் இங்கு நாட்டுப்புற வடிவம் இடம்பெற்றுள்ளதை உணரமுடிகிறது.

காப்பியங்களில் நாட்டுபுறவியல்
         
      காப்பியங்களிலும் நாட்டுபுற இலக்கியக் கூறுகள் செறிந்து காணப்படுகின்றன. ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், கம்பராமாயணம், மகாபாரதம், புராணம் போன்றவற்றில் நாட்டுப்புறவியலின் செல்வாக்கினைக் காணமுடிகின்றது.
          சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையானது. ‘கோவா மலையாரம்’ என்றும் குன்றக் குரவையானது, ‘எற்றொன்றும் காணேம் புலத்தல்’ என்று தொடங்குகின்றன.
       
“எற்றொன்றும் காணேம் புலத்தல் அவர் மலைக்       
கற்றீண்டி வந்தப் புதுப்புனல்       
கற்றீண்டி வந்தப் புதுப்புனல் மற்றையார்       
உற்றாடின் நோம் தோழி நெஞ்சன்றே”           (சிலப்பதிகாரம், குன்றக் குரவை. 24:3)
       என்று குன்றக்குரவையில் இரண்டு மற்றும் மூன்றாவது அடியில் கற்றீண்டி வந்தப் புதுப்புனல் திரும்ப வருகின்றது. வரியும் குரவையும் பாடல்களாக மட்டுமல்ல செய்திகளாகவும் பல இடங்களில் காண முடிகிறது. மணிமேகலை மணிபல்லவத்தில் இருக்கும் போது தந்தையின் நினைவால் துயருறுகின்றாள்.
         
“கோற்றொடு மாதரொடு வேற்று நாடடைந்து       
வைவாழ் உழன்ற மணிப்பூண் அகலத்து ஐயாவே”(மணிமேகலை. 41-43)
என்று பாடுவது ஒப்பாரிச் சுவையை உணர்த்துவதாகும்.
       
“மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும்       
ஆடிய குரவை இஃதாமென நோக்கியும்”(மணிமேகலை.19: 65-66)
என்ற குரவைப் பாடல் வழி அறியமுடிகிறது.
விசயைக்குச் சுடுகாட்டில் பிள்ளை பிறக்கிறது. அதே நேரத்தில் கணவனின் இறப்பிற்கு அறிகுறியான ஓசை விண்ணில் எழுகின்றது. இச்சூழலில்,
       
“இவ்வாறாகி பிறப்பதோ இதுவோ மன்னர்க்       
கியல் வேந்தே”(சீவக சிந்தாமணி, நாமகள் இலம்பகம். பா.309)
என்று புலம்புவதன் மூலம் இதில் தாலாட்டு ஒப்பாரி இரண்டும் நிறைந்திருப்பதைக் காணமுடிகிறது. பெருங்கதையில் ஊசலாடிப் பாடும் பாடலை,
       
“வேங்கையொடு தொகுத்த விளையாட் டூசற்       
றூங்குபு மறலு குழைச்சிறு சிலதியல்       
பாடற் பாணியொ டளைஇ”(கம்பராமாயணம், உஞ்ஞைகாண்டம் மாலை. 23-25)
என்று குறிப்பிடுகிறது. வள்ளைப் பாட்டு, அம்மானை, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி, பந்து விளையாட்டு ஆகியவை கூறப்படுகிறது. இராமாயணம் நாட்டுப்புற இலக்கியக் கூறுகளை மூலமாகக் கொண்டது. ‘மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே’ என்ற ஏற்றப் பாடல் சிறப்பு வாய்ந்தது.
       
“கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலிற்       
கன்றுறக்குங் குரவை”(கம்பராமாயணம், பாலகாண்டம். 65)
         
    காப்பிய இலக்கியங்களில் காணப்படுகிறது. இதேபோன்று பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், இக்கால இலக்கியங்கள் என நாட்டுப்புறவியலின் செல்வாக்கு மிகுந்து காணப்படுகின்றன.

பழமொழி
         
          நாட்டுப்புற இலக்கியத்தில் பழமொழி ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. பேச்சு வழக்கில் வாழ்க்கையின் சாராம்சத்தை எடுத்துக் கூறவும், வாழ்க்கையின் அர்தத்தையும் தத்துவத்தையும் அதனுடன் உண்மையான எதார்த்தங்களைத் தெரிந்து கொள்ளவும் பழமொழி பயன்படுகிறது.
    மக்களின் அனுபவப் பெருமைகளின் சுருக்க வடிவமே பழமொழி. சமுதாயத்தின் தோற்றக் காலத்திலிருந்து தொடர்ந்து வருவது. ஏட்டிலக்கியத்திலும் எடுத்தாளப் பெறுவது, நுட்பம், சுருக்கம், அழுத்தம். எளிமை ஆகிய பண்புகளை உடையது. தொல்காப்பியம் பழமொழியை ‘முதுமொழி’ என்கிறது. பழஞ்சொல், முதுசொல், வசனம், சொலவு, சொலவடை போன்ற சொற்கள் பழமொழியைக் குறிக்கின்றன. ‘பல்லோர் கூறிய பழமொழி’, ‘தொன்றுபடு பழமொழி’ எனப் பழமொழிகளைப் பற்றி அகநானூறு கூறுகின்றது. பின்னர் தோன்றிய இலக்கியங்களிலும் பழமொழியின் வழக்கு காணப்படுகிறது. பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழி நானூறு பழமொழிகளைத் தொகுத்துத்தரும் நூலாக விளங்குகிறது. தண்டலையார் சதகம் என்னும் சதகநூல் பழமொழியின் களஞ்சியமாக விளங்குகிறது.
      பழமொழியைப் பற்றி பல்வேறு அயலக அறிஞர்கள் தத்தம் கருத்துக்களை தங்களது ஆய்வு நூல்களின் வழி வெளியிட்டுள்ளனர். பழமொழியானது, பழமையான நம்பிக்கைகளையும் வரலாற்றினையும் பண்பாட்டினையும் மனித உணர்வுகளையும் காட்டுபவையாக இருக்கின்றன. பழமொழிகள் சமுதாயத்தின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுக் கூறுகளையும் விளக்கும் சான்றாகத் திகழ்கின்றன.
       
“பழமொழி என்ற சொல்லே பழமொழி பற்றிய சிறந்த       
வரையறையாக அமைந்துள்ளது என்கிறார் ஜான் லாசரஸ்”       
“பழமொழி என்பது உலகுக்கு உணர்த்தும் உண்மையை       
ஒரு சிறிய வாக்கியத்தின் மூலம் சுருக்கி கூறுவது ஆகும்.       
அப்பழமொழி முழுமையாக இல்லாவிடினும் அதை       
விளக்கிக் கூறும்போது முழுக்கருத்தும் வெளிப்படும்என்கிறார் துர்கா பகவத்” 
“பழமொழியானது எளிதில் கவனிக்கக்கூடிய, சேகரிக்கக்கூடிய       
தொன்மை வாய்ந்த கருத்தாகும். இருப்பினும் எளிதில்       
புரிந்து கொள்ள கடினமானது என்கிறார் ரிச்சார்டு டார்சன்”
                                                (டாக்டர் சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, ப.103)
            என்று பழமொழிகள் பற்றிய அறிஞர்கள் கருத்தினை அறிந்து கொள்ள முடிகின்றது.
 இறைமை சார்ந்த பழமொழிகள், இல்லறம் சார்ந்த பழமொழிகள், திருமணம் பற்றிய பழமொழிகள், உறவு முறைப் பழமொழிகள், பெண்மை நிலை பற்றிய பழமொழிகள், உழவியல் பழமொழிகள், மருத்துவப் பழமொழிகள், அறிவுரைப் பழமொழிகள், நம்பிக்கைப் பழமொழிகள், அறிவியல் பழமொழிகள், காலப் பழமொழிகள், தத்துவப் பழமொழிகள், பொருளியல் பழமொழிகள், சாதிப் பழமொழிகள், நகைச்சுவைப் பழமொழிகள், உளவியல் சார்ந்த பழமொழிகள், வரலாற்றுப் பழமொழிகள் என்று பழமொழிகள் பல்வேறு வகைப்படும். அவற்றில் ஒரு சில பழமொழிகளைப் பின்வருமாறு காணலாம்.
       
“அவனன்றி ஓரணுவும் அசையாது       
இல்லறம் பெரிது, துறவறம் சிறிது       
பெண்ணுக்குப் பெண்தான் சீதனம்       
தோட்டி போல் உழைத்துத்               
துரைபோல் சாப்பிட வேண்டும்       
நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால்               
கிடைக்கு இரண்டாடு கேட்கும்       
காடுகாத்தவனும் கச்சேரி காத்தவனும்               
பலனடைவான்”
     (அ. ஆறுமுகம், நாட்டுப்புற இலக்கியமும் பண்பாடும், பக்.143)
      என்று குறிப்பிடுகிறது. தத்துவத்துடன் கூடிய நகைச்சுவை மிகுந்ததாக பழமொழிகள் விளங்குகின்றன. ஒருவர் கூற்றுக்குச் சான்றாகத் திகழ்வது ‘பழமொழி’ என்று பொருள் தரும். பழமொழி என்ற சொல்லாட்சி தொல்காப்பியத்தில் இல்லை. பழமொழிக்கு விளக்கம் கூறுகையில் தொல்காப்பியர்.
       
“நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்       
மென்மை என்றிவை விளங்கத் தோன்றிக்       
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்       
ஏது நுதலிய முதுமொழி”(தொல். பொருள், செய்யுளியல். 177)
    என்று குறிப்பிடுகிறார். கருதிய பொருளை விளக்கும் வகையில் நுண்மை, சுருக்கம், தெளிவு, மென்மை ஆகிய பண்புகளுடன் பழமொழி விளங்கும் என்பது இதன் பொருளாகும். சங்க இலக்கியங்களிலும் பழமொழிகள் சொல்லாட்சி மிகுந்து காணப்படுகிறது. பழமொழியை தொன்றுபடு பழமொழி என்று அகநானூறு குறிப்பிடுகிறது.
         
“நன்று செய் மருங்கில் தீது இல் என்னும்       
தொன்றுபடு பழமொழி இன்று       
பொய்த்தன்று கொல்?”(அகநானூறு. 101:2-4)
நன்மை செய்தால் தீமை வராது என்னும் பழமொழி உண்மையாய் நிகழ்வதை என் வாழ்வில் கண்டுகொண்டேன் என்று தலைவி தோழியிடம் கூறுவதாக இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது.
    பதிணென் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றான பழமொழி நானூறு வாழ்க்கைக்குத் தேவையானவற்றை விளக்கும் வகையில் அமைந்த நூலாகும். உறவினர் இல்லா ஊரும் ஒரு காடே என்பதை உணர்த்தும் பழமொழி,
       
“கல்வியால் அய கழிநுட்பம் கல்லர்முன்       
சொல்லிய நல்லவும் தீயவாம் – எல்லாம்       
இவர் வரைநாட! தமரை இல்லார்க்கு       
நகரமும் காடுபோன் றாங்கு”(பழமொழி நானூறு. 15)
         
பல நூல்களைக் கற்றறிந்து பெற்ற பயனால் அறிந்த பல நுணுக்கமான செய்திகளையும், கல்வி அறிவு இல்லாதவர்கள் முன்னே சொன்னால் அவையாவும் பொருளற்றவையாகத் தீய விளைவுகளையே உண்டாக்கும். எல்லாப் பொருள்களும் செறிந்து, சிறந்து விளங்குகின்ற மலைநாட்டு மன்னவனாயினும் தமரை – அதாவது சுற்றத்தார்கள் எவரையும் பெற்றிராத ஒரு நகரில் வாழ்பவனுக்கு அந்நகரமும் காடு போலவே இருக்கும். சுற்றத்தார் இல்லாத ஒருவன் தனிமைப்பட்டு துன்பப்படுவான் என்பதை பழமொழி நானூறு இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான ஒன்றினை அன்றே உணர்த்தியது சிறப்பிற்குரியதாகும்.

விடுகதை
         
தொல்காப்பியம் குறிப்பிடும் பிசி என்பது விடுகதை ஆகும். விடுவிக்கப்பட வேண்டிய புதிர்கள் விடுகதை. இவற்றுக்குப் புதிர், அழிப்பின் கதை, வெடி, நெடி என்ற வேறு பெயர்களும் உண்டு. தொல்காப்பியம்,
       
“ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்       
தோன்றுவது கிளந்த துணிவினானும்       
என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே”(தொல். பொருள், செய்யுளியல். 169)
         
இரு பொருள்களுக்கு உள்ள ஒப்புமைக் குணத்தோடு பொருந்தி வருகின்ற உவமைப் பொருளால் கூறுதல், உள்ளத்தில் தோன்றுகின்ற ஒன்றைக் கூற அதனால் மற்றொன்று தோன்றும் துணிவுடைய சொல்லால் கூறுதல் என்னும் இரண்டு வகையால் அமையும் என்கிறார்.
       
“நீராடான் பார்ப்பான் நிறம்செய்யான் நீராடில்       
ஊரொடு நீரில்காக் கை”(ச.திருஞானசம்பந்தம், தொல்காப்பியம் பொருளதிகாரம். 330)
என்பது தோன்றுவது கிளந்த துணிவினான் நெருப்பைக் குறித்தது எனப் பிசி வகை இரண்டிற்கும் சான்று காட்டி விளக்குகிறார். பிசி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயல்பாகத் தங்களது பொழுதுபோக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
       
“பொட்டுப்போல இலை இருக்கும், பொரிபோல் பூப்பூக்கும்       
தின்னக் காய் கொடுக்கும் தின்னாப் பழம் பழுக்கும்”
                                   (ச.திருஞானசம்பந்தம், தொல்காப்பியம் பொருளதிகாரம். 330)
     என்பது ஒப்பொடு புணர்ந்த உவமமாய் முருங்கை மரத்தைக் குறித்தது. சங்கப் புலவர்கள் விடுகதைப் பண்புடன் பல பாடல்களை இயற்றியுள்ளனர். குறுந்தொகைப் பாடலொன்றில், தலைவன் பரத்தையோடு வாழ்ந்து தன் தவறை உணர்ந்து மீண்டும் தலைவியுடன் வாழ நினைக்கிறான். இதனை,
       
“மலையிடை இட்ட நாட்டரும் அல்லர்       
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்”(குறுந்தொகை. 203: 1-2)
தலைவன் இருக்கும் ஊருக்கும் நான் இருக்கும் இடத்திற்கும் இடையே மலைகள் ஏதும் இல்லை. அவரிருக்குமிடத்தில் மரங்கள் நிறைந்த காடுகள் இருப்பதால் காணமுடியாத ஊராரும் அல்லர் என்று தன் கணவன் அருகில் இருந்தும் காண வர இயலாததை தலைவி எடுத்துரைக்கின்றாள். மேலும்,
        “ஐதேய்ந்தன்று பிறையுமன்று       
மைதீர்ந்தன்று மதியுமன்று       
வேயமன்றன்னு மலையுமன்று       
பூவமன்றன்று சுனையுமன்று       
மெல்ல இயலும்இ மயிலுமன்று       
சொல்லத் தளரும் கிளியுமன்று”(கலித்தொகை. 55:9-14)
சங்க இலக்கிய காலகட்டங்களில் வழங்கப்பட்டவையாகும். தலைவியை நிலவு, மலை, மூங்கில் என்றெல்லாம் கூறி அவளற்றை வி நீ சிறந்தவள் என்று தலைவியின் அழகு நலன்களைப் புகழ்வதில் அழகிய நாட்டுப்புறக்கூறுகள் இடம்பெற்றுள்ளதை உணர முடிகிறது.

நாப்புறப் பாடல்களும், கதைகளும்
         
      நாட்டுப்புறப் பாடல்களில் இரண்டு வகையான உத்திகளைப் பின்பற்றுகின்றனர். ஒன்று நீண்ட பாடல்களை உருவாக்குதல் சூழலுக்கேற்பப் பாடலை மாற்றல். நாட்டுப்புறப் பாடலானது தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரை பல நிகழ்வுகளில் பாடப்படுகின்றன.
          காற்றிலே மிதந்த கவிதை நாட்டுப்புறப் பாடல்களின் முதல் தொகுப்பு நூலாகும்.
        “ஆரியக் கூத்தர் கழையிற் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடினர். அப்பொழுது பறை கொட்டப்பட்டது. தெருவில் ஆடவர்கள் மகளிரொடு கலந்து குரவைக் கூத்தாடினர். அப்பொழுது தொண்டகப்பறை கொட்டப்பட்டது”(ஆர்.ஆளவந்தார், தமிழர் தோற்கருவிகள், பக். 21)
நாட்டுப்புறப் பாடல் வடிவங்கள் குறிக்கப்படுகின்றன. ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பாடப்படுவதாகும். நாட்டுப்புறப் பாடல்களில் பாடப்படும் சூழலின் தேவையைக் கருதி வேண்டுமளவு அடுக்கிப் பாடப்படும். தாலாட்டின் தொடக்கமான ‘ஆராரோ’ போன்ற ஒலிக்குறிப்பு வாய்ப்பாட்டை முதலில் இட்டு, குழந்தையை விளிக்கும் ‘கண்ணே’ போன்ற சொற்களை ஆங்காங்கே கூறுவதன் வாயிலாகக் கதைப் பாடல்களுக்குத் தாலாட்டு வடிவம் கிடைக்கிறது.
          இதே போன்று சரோசா அவர்கள் பாடிய கும்மிப்பாடல் ஒன்றில்,
         
“கூடையிலே கல்பொறுக்கி       
கூடையிலே கல்பொறுக்கி       
கூடையிலே கல்பொறுக்கி       
கோவிரங்கள் உண்டுபண்ணி       
கோவிரத்தின் உள்ளாலே       
கோவிரத்தின் உள்ளாலே       
கோவிரத்தின் உள்ளாலே       
குயிலுவந்து முட்டையிடும்”(ஆறு. இராமநாதன், தமிழர் கலை இலக்கிய மரபுகள், பக்.183)
         
நாட்டுப்புறப் பாடல்களை ஒருவர் பாடுவதைப் போலவே மற்றவர் பாடுவது கிடையாது. ஒருவரே ஒரு பாடலை மறுமுறை பாடும்போது மாற்றம் ஏற்படுகின்றது.
       “தமிழ் மனத்தின் ஆதி நிலையில் தொன்மங்களுக்கான அறிதிறன் கூறுகள் பல்வேறு தளங்களில் விரிவு பெற்றன. பலதார மணத்திற்குப் பாரதக் கதை. ஒருதார மனத்திற்கு இராமகதை. திருமாலின் பத்து அவதாரங்களும் பூவுலகின் பத்துத் தனித்தனியான சூழல்களுக்குத் தகவமையும் படிமலர்ச்சி நிலையாகும். கதைகள் அமைந்து காணப்படுகிறது”(பக்தவத்சல பாரதி, இலக்கிய மானிடவியல், பக். 194)
          பல்வேறு கதைப்பாடல்கள் கூறப்பட்டுள்ளன. ஆதி மனிதன் காட்டில் வேட்டையாடிச் சென்று திரும்பியவுடன் தன் அனுபவங்களை மற்றவர்களுக்குச் சொன்னதிலேயே கதையின் தொடக்கத்தைக் காணமுடிகிறது. தொல்காப்பியர் கதைகளைப் பொருளொடு புணராப் பொய்மொழி என்று குறிப்பிடுகின்றார். கதா சிந்தாமணி, கதாமஞ்சரி, விநோதரச மஞ்சரி, திராவிட மத்திய காலக் கதைகள், தக்காண பூர்வக் கதைகள், பூலோக விநோதக் கதைகள் போன்ற கதைகள் உருவாயின.

முடிவுரை
         
     நாட்டுப்புற இலக்கியம் மனிதன் வாய்மொழி தொடங்கிய காலம் முதலே தோன்றியது. வாய்மொழி தொடங்கி தங்களது உணர்வுகளின் வெளிப்பாடாகவே நாட்டுபுற இலக்கியம் இருந்து வந்தமையை அறிய முடிகிறது. பழமொழி, விடுகதையின் வாயிலாக வாழ்க்கையின் தத்துவங்களையும், எதிர்கால வாழ்வின் உண்மை நிகழ்வுகளையும் அறிகிறோம். புராணங்களையும் இதிகாசங்களையும் தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பும் கதைப் பாடல்களின் வழி அறிந்து கொள்ள முடிகிறது. ஆடல், பாடல் என்ற பொழுதுபோக்குகளும் நிறைந்து காணப்படுகின்றன. இத்தகைய நாட்டார் வழக்காற்றியலை போற்றிப் பாதுகாத்திடல் நம் கடமையாகும்.

துணை நூற்பட்டியல்
[1] அ. ஆறுமுகம், நாட்டுப்புற இலக்கியமும் பண்பாடும், தேன்தமிழ்ப் பதிப்பகம், 85, சுப்பிரமணியம் பிள்ளைத்தெரு, சேலம்-1, முதற்பதிப்பு செப்டம்பர், 1984

[2] அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும், உ.வே.சா. பதிப்பகம், சென்னை, ஏழாம் பதிப்பு, 1960

[3] அ.மா. பரிமணம், கு.வெ. பாலசுப்பிரமணியன், கலித்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-98, 2014

[4] உ.வே. சாமிநாதைய்யர், குறுந்தொகை, கபீர் அச்சுக்கூடம், சென்னை, முதற்பதிப்பு, 1937

[5] ஆர்.ஆளவந்தார், தமிழர் தோற்கருவிகள், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், அடையாறு, சென்னை – 20, முதற்பதிப்பு டிசம்பர், 1981

[6] ஆறு. இராமநாதன், தமிழர் கலை இலக்கிய மரபுகள், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் – 1, முதல் பதிப்பு, டிசம்பர், 2007

[7] கி.வா.ஜகந்நாதன், மலையருவி, ப.9 சரசுவதி நூலகம், தஞ்சை – 1958 முதற்பதிப்பு

[8] ச.திருஞானசம்பந்தம், தொல்காப்பியம் பொருளதிகாரம், கதிர் பதிப்பகம், தெற்குவீதி, திருவையாறு-24, முதற்பதிப்பு மார்ச், 2020

[9] ஞா.மாணிக்கவாசன், பழமொழி நானூறு மூலமும் – தெளிவுரையும், உமா பதிப்பகம், மண்ணடி, சென்னை – 1, மூன்றாம் பதிப்பு, பிப்ரவரி, 2021

[10] டாக்டர் சு.சண்முகசுந்தரம், நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு, 89 லிங்கிச் செட்டித்தெரு, சென்னை – 1, இரண்டாம் பதிப்பு. டிசம்பர் 1980

[11] டாக்டர் சு.சண்முகசுந்தரம், நாட்டுப்புற இலக்கிய வரலாறு, மணிவாசகர் நூலகம், சென்னை – 1, முதற் பதிப்பு, டிசம்பர், 1980

[12]மு.ந. வெங்கடசாமி நாட்டார், அகநானூறு, வையைப் பதிப்பகம், சென்னை, 1966

[13] டாக்டர் சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, ப.103, மணிவாசகர் நூலகம், சிங்கர்தெரு, பாரிமுனை, சென்னை – 1, இருபத்தி இரண்டாம் பதிப்பு, டிசம்பர், 2015

[14] டாக்டர். ரா. சீனிவாசன், கம்பராமாயணம், அணியகம், செனாய் நகர், சென்னை-30, மூன்றாம் பதிப்பு, 2000

[15] தேன்தமிழ்ப் பதிப்பகம், 85, சுப்பிரமணியம் பிள்ளைத் தெரு, சேலம் – 1, முதற்பதிப்பு, செப்டம்பர் 1984

[16] பக்தவத்சல பாரதி, இலக்கிய மானிடவியல், புத்தாநத்தம், திருச்சி.

[17] ஜெ. ஸ்ரீசந்திரன், மணிமேகலை மூலமும் தெளிவுரையும், தமிழ் நிலையம், உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை-17, முதற்பதிப்பு, 1996

[18] ஜெ. ஸ்ரீசந்திரன், சீவகசிந்தாமணி, தமிழ் நிலையம், உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை-17, முதற்பதிப்பு, 1996

Reference:
[1] A. Arumugam, Folk literature and culture, p. 143, published by Thenmozhi Press, 85, Subramaniam Pillayathru, Salem-1, first edition September, 1984

[2] Adiyarkku nallar, Silappathikaram, Text and Glossary, Vu. Ve. Sa. Publishing house, Chennai, seventh edition, 1960

[3] A.Ma. Parimanam, Ku.Ve. Balasubramanian, Kalitogai Source and text, New Century Book House, Chennai-98, 2014.

[4] Vu. Ve. Saminathayar, Kurunthogai, published by Kabir Press, Chennai, Frist edition, 1937.

[5] R. Aalavanthar, Leather Instruments of Tamil, World Tamil Research Institute, Athiyar, Chennai – 20, first edition, December, 1981 6.

[6] Aaru. Ramnathan, Tamil art and literary traditions, Meyyappan Publishing House, 53, New Street, Chidambaram – 1, first edition, December, 2007

[7] Ki.VA. Jagannathan, Malaiyaruvi, P. 9 Saraswati Library, Thanjavur – 1958 first edition.

[8] Sa. Tirunyanasampantham, Tholkappiyam, Porulathikaram, Kadir Publishing House, South Street, Thiruvaiyaru-24, first edition March, 2020

[9] Ya. Manicavasan, Proverb four hundred Text – Explanation, Uma Publishing House, Manadi, Chennai – 1, Third Edition, February, 2021

[10] Dr. Su. Sanmugasundharam, The influence of folk literature, 89 Lingich Chettitheru, Chennai – 1, second edition. December 1980.

[11] Dr. Su. Sanmugasundharam, History of folk literature, Manivasagar Library, Chennai – 1, first edition, December, 1980

[12] Mu. Na. Venkatasamy Nadar, Agananuru, Waiyai Publishing House, Chennai, 1966

[13] Dr. Shaktivel, Folklore Studies, p.103, Manivasagar Library, Singartheru, Pasis corner, Chennai – 1, 22nd edition, December, 2015

[14] Ra. Sinivasan, Kambharamayanam, Aniyagakam, Senoi Nagar, Chennai Nagar, Chennai-30, third edition, 2000

[15] ThenThamizh Press, 85, Subramaniam Pillai Street, Salem – 1, first edition, September 1984 The first edition.

[16] Bhaktavadsala Bharati, literary anthropology, Butthanatham, and Tirupati.

[17] J. Srichandran, Mani Maigalai – Text and explanation, Tamil Station, Usman Road, Thiyagaraya Nagar, Chennai-17, first edition, 1996.

[18] J. Srichandran, Sivagashintamani, Tamil Station, Usman Road, Diackara Nagar, Chennai-17, first edition, 1996

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் அ. ஜனார்த்தலி பேகம்,

உதவிப் பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,

ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி),
திருச்சிராப்பள்ளி – 620 020, தமிழ்நாடு, இந்தியா.

 

A Comparative study of Silappathikaram and Eriyum Panikkadu|R.Subashini

ஒப்பீட்டு நோக்கில் சிலப்பதிகாரம் மற்றும் எரியும் பனிக்காடு - இரா, சுபாஷினி
Abstract
      From a global perspective, the pursuit of universality and tolerance within literary creations constitutes the field of Comparative Literature. Within this framework, Silappathikaram by Ilango Adigal and Red Tea, an English novel authored by P.H. Daniel and translated into Tamil as Eriyum Panikkadu by R. Murugavel, are taken for comparative analysis.
Elango Adigal, belonging to the Chera dynasty and the younger brother of Cheran Senguttuvan, composed Silappathikaram in epic form. Through the life story of Kovalan and Kannagi, who hailed from the merchant community, he sought to unite the three Tamil dynasties as well as diverse religious traditions, while simultaneously imparting three essential truths of worldly existence to society. In 1969,  Paul Harris Daniel authored the novel Red Tea, which vividly portrayed the socio-economic hardships of tea plantation workers. Its Tamil translation, Eriyum Panikkadu, published in 2007, recounts the untold story of thousands of oppressed laborers whose lives were consumed on the enchanting yet famine-stricken slopes of the hill regions, which today stand as centers of beauty and as significant contributors of foreign exchange through tea estates. The novel underscores the brutalities jointly perpetrated by the British colonial administration and the allied industrial establishments of that period.
This paper seeks to undertake a comparative study of the lives of Karuppan and Valli, as depicted in Eriyum Panikkadu, with those of Kovalan and Kannagi in Silappathikaram, particularly examining the disparities in their socio-economic conditions.

KEY WORD 
Silapathikaram,Red tea,Eriyum Pani Kadu,Elangovadikal,R.Murugavel,porulvayin pirivu,


ஒப்பீட்டு நோக்கில் சிலப்பதிகாரம் மற்றும் எரியும் பனிக்காடு

அறிமுகம்
     உலகளாவிய நோக்கில் இலக்கியப் படைப்புகளில் பொதுமையையும் பொறுமையையும் காண முயல்வது ஒப்பிலக்கிய ஆய்வாகும். இவ்வகையில் இளங்கோவடியின் சிலப்பதிகாரமும் பி. எச். டேனியல் Red Tea என ஆங்கிலத்தில் எழுதி இரா.முருகவேள் அவர்களால் தமிழில்  எரியும் பனிக்காடு என மொழிபெயர்க்கப்பட்ட நாவலும் ஒப்பாய்விற்கு உட்படுத்தப்படுகின்றன.
 இளங்கோவடிகள் சேர மரபில் தோன்றியவர். சேரன் செங்குட்டுவனின் தமையன். இவர் மூவேந்தர்களையும் பல சமயங்களையும் இணைத்து உலகியல் உண்மை மூன்றையும் மக்களுக்கு உணர்த்தும் வகையில் வணிகக்குலம் சேர்ந்த கோவலன் கண்ணகியின் வாழ்க்கையைக் காப்பியமாக வடித்துள்ளார். 1969 ஆம் ஆண்டு பி.எச்.டேனியல்  அவர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியல் சிக்கல்களைப் படம்பிடித்துக் காட்டும் வகையில் எழுதிய Red Tea நாவலின் மொழிபெயர்ப்பாக தமிழில்  2007 ஆம் ஆண்டு வெளியான எரியும் பனிக்காடு, இன்றைய எழில் மிகுந்த மலை நகரங்களையும் அன்னியச் செலவாணியை அள்ளித்தரும் தேயிலை தோட்டங்களையும் கட்டி அமைக்கக் கூட்டம் கூட்டமாகப் பலிக் கொடுக்கப்பட்ட அந்தக் கண் கவரும் பசிய சரிவுகளில் புதையுண்டு போன ஆயிரம் ஆயிரம் ஒடுக்கப்பட்ட மக்களின் கதை தான். பிரிட்டிஷ் அரசும் அந்நாட்டுத்தொழில் நிறுவனங்களும் வேறு வேறு அல்ல என்றிருந்த காலத்தில் அவை ஒன்றிணைந்து அரங்கேற்றிய கொடுமைகள் தான் இந்நாவல். எரியும் பனிக்காடு நாவல் கூறும் கருப்பன் வள்ளியின் வாழ்வியலையும் சிலப்பதிகாரம் கூறும் கோவலன் கண்ணகியின் வாழ்வியலையும் இவர்களின் பொருள்வயின் பிரிவினையும்  ஒப்பிட்டு ஆராய இக்கட்டுரை முயல்கிறது.

ஆய்வு நோக்கம்
           
         பொருள் வயிற் செலவில் மக்களின் வாழ்வியலை சிலப்பதிகாரம் மற்றும் எரியும் பனிக்காடு நாவல் வழி ஒப்பிட்டு ஆராய்ந்து கூறுவதே நோக்கமாகும்

ஆய்வு அணுகுமுறை
      இவ்வாய்வானது இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தையும் பி எச் டேனியல் ஆங்கிலத்தில் எழுதி  இரா.முருகவேல் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட எரியும் பனிக்காடு நாவலையும் ஒப்பாய்வு அணுகுமுறைக்கு உட்படுத்தப்பட்டு  ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாய்விற்குச் சிலப்பதிகாரம் மற்றும் எரியும் பனிக்காடு முதன்மை தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது இவை சார்ந்த கட்டுரை நூல்கள் இதழ்கள் மின்னுலகக் கருத்துக்கள் முதலியவை ஆய்வு தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குடும்ப நிலை
 
“போகமும் நீள் புகழ் மன்னும் புகார் நகர் “ (சிலம்பு.மங்கல வாழ்த்துப் பாடல்: பா.வரி 22)        
      என்ற சிறப்புக்குரிய நீண்ட புகழும் போகமும் கொண்ட பூம்புகார்கண் அரசர்களும் விரும்பக்கூடிய பெரும் செல்வம் கொண்ட வணிகக் குலம் சார்ந்த மாநாய்கன் மகள் கண்ணகியும் ஒப்பற்ற குடிகளாகிய தன் கிளைகளோடு கூடி மிக்கோங்கிய செல்வத்தை உடையவனான மாசாத்துவானின் மகன் கோவலனும் திங்கள் ரோகிணியோடு கூடும் நல்ல நாளிலே மணம் புரிந்தனர்.

உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவிற்பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்
(சிலம்பு.மனையறம்.பா.வரி.2)
        
       எல்லையற்ற சிறப்பைக்  கொண்ட பூம்புகார் நகரிலே கோவலனும் கண்ணகியும்  ஏழு நிலை கொண்ட மாடத்தில் இன்புற்று வாழ்ந்தனர். அரசர்கள் விரும்பக் கூடிய அளவிற்குச்  செல்வங்களைக் கொண்டவர்களாக வணிகர்கள் இருந்துள்ளனர். மனையறம் படைத்த காதை, கோவலன் கண்ணகியின் செல்வ நிலையைத் தெளிவாக விளக்குகிறது. மேலும், மாதவியுடன் இன்பத்தில் திளைத்து மீண்டும் வந்த கோவலன் கண்ணகியிடம்

குலந்தருவான் பொருள் குன்றந் தொலைந்த
இலம்பாடு நாணு த் தருமெனக் கென்ன (கனாத்திறம் உரைத்த கதை:பா.வரி.70)
         
     எனக் கூறும் செய்தியானது கோவலன் முன் மலை போன்ற செல்வத்தைக் கொண்டிருந்தான் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு புகார் நகரில் பெரும் செல்வம் கொண்ட வணிகக் குடும்பத்தைச் சார்ந்த கோவலன் கண்ணகியின் செல்வ நிலையினையும் பின் மாதவி மீது கொண்ட மையலினால்  செல்வம் இழந்து நின்ற வறுமை நிலையையும் சிலப்பதிகாரம் தெளிவாக விளக்குகிறது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மயிலோடை கிராமத்தில் மொத்தம் 30 வீடுகள் மட்டுமே உள்ளன அதில் ஒரு வீடு மட்டுமே செங்கல்லால் கட்டப்பட்டது ஊர் மக்கள் அனைவரும் பக்கத்து ஊர்களில் உள்ளவர்களின் நிலத்தில் கூலி வேலை செய்பவர்கள். இதில் இருந்தே ஊர் மக்களின் வறுமை நிலையை அறிய முடிகிறது. மயிலோடை கிராமத்தைச் சேர்ந்த கருப்பன், தனது அக்கா மகளான வள்ளியைத் திருமணம் செய்து கொண்டு மூங்கிலும் பனையோலையும் கொண்ட கூரை வீட்டில்  பசியின் கோரத்தாண்டவத்தின் நடுவே  வாழ்ந்து வந்தான். கருப்பன் ஒரு கிழிந்த பாயில் சுருண்டுப் படுத்துக் கொண்டிருந்தான். ஊமை எரிச்சலாக இருந்த பசி அதிகாலையில் புது வேகம் பெற்றுக் கருப்பனைப் படுத்தியது.

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.  (குறள்:1029)
         
      என்ற திருவள்ளுவரின் வாக்குப் படி, தான் பசி துன்பத்தில் இருந்தாலும் தன் குடியைக் காக்க கருப்பனின் மனம் மட்டும் குடும்பத்தின் அவசரத் தேவைக்காக இரண்டு மூன்று ரூபாய் புரட்டத் திட்டம் தீட்டிக்கொண்டு, தன் பசியைப் பொருட்படுத்தாமல்  அதிகாலையே கழுத்தாறு நோக்கி செல்கிறான். கருப்பன் கடுமையாக உழைக்கும் உழைப்பாளி. வறட்சியால் ஏற்பட்ட வறுமையினால் வேலை கிடைக்காமல் குடும்பத் தேவையை நிறைவேற்ற  போராடிக் கொண்டிருந்தான். குடும்பத்தின் பசி துன்பத்தைப் போக்க  கால் கொலுசையும் வீட்டிலிருந்த மண்சட்டிகளையும் அடகு வைத்து  நிறையத் தண்ணீருடன் ஒரு கைப்பிடி ராகி மாவு கலந்த கஞ்சியை ஒரு நாளிற்கு ஒரு வேலை மட்டும் உண்டு வாழ்ந்து வந்தனர்.
“கூரையாக வேயப்பட்டிருந்த பனை ஓலை ஏறக்குறைய இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. அதில் எண்ணற்ற ஓட்டைகளின் வழியே அறைக்குள் புகுந்த நிலவொளியில் எதிர் மூலையில் கிழிந்த நாராகக் கிடந்த அம்மாவின் உருவம்” (இரா.முருகவேள்,எரியும் பனிக்காடு, பக்:15)
          இவ்வாறு கருப்பனின் குடும்ப நிலையானது, ஓட்டை நிறைந்த வீடும். வீட்டிலிருந்த பொருட்களை அடகு வைத்து ராகிக் கலந்த ஒரு வேலை மட்டும் உண்ணக்கூடிய நிலையுமான வறுமை, அவனையும் அவன் குடும்பத்தையும் ஆட்டிப் படைத்திருந்தது.

பொருள்வயிற் பிரிவு
         பண்டையக் காலந்தொட்டு மக்கள் ஓர் இடத்தில் நிலைத்துத் தங்காமல் உணவு தேடி இடம் விட்டு இடம் நகர்ந்து கொண்டே இருந்தனர். மக்கள் நாகரிகம் பெற்று கூடி வாழத் தொடங்கிய பின் கல்வி, பொருளீட்டுதல், போர் போன்ற காரணங்களுக்காகத் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு இடம்பெயர்ந்தனர். இத்தகைய இடம்பெயர்வினை தொல்காப்பியர்,

ஓதல் பகையே தூது இவை பிரிவு    (தொல்.பொருளதிகாரம்:27)
         
என இடம்பெயர்வினைப் பிரிவு எனக் குறித்துள்ளார். கல்வி, பகை, தூது மட்டும் இன்றிப் பொருள்வயிற் பிரிவினையும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
 
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே (தொல்.பொருளதிகாரம்:30)
         
இதன்மூலம் மக்கள் பொருளீட்டுவதற்காக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்தனர் என்பதை அறியலாம். இவ்வாறு பொருளீட்டுவதற்குச் செல்லும் தலைவன் தலைவியை உடன் அழைத்துச் செல்வதும் உண்டு.

குலந்தருவான் பொருள் குன்றத் தொலைந்த
இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன   (கனாத்திறம் உரைத்த கதை:பா.வரி70)

    சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகியை மணந்து இன்புற்று வாழ்ந்தான். பின் அரங்கேற்றக்காதையில் மாதவியின் மீது கொண்ட மையலினால் கண்ணகியை மறந்து மாதவியுடன் வாழ்ந்தான். பின் மாதவியிடம் ஊடி கண்ணகியை நாடி வந்து  மாதவியின் தாயான சித்திராபதியால் தனது செல்வங்களை எல்லாம் இழந்த நிலை எண்ணி நாணம் அடைந்து நிற்கிறான்.

நலங்கேழ் முறுவல்  நகைமுகங் காட்டிச்
சிலம்புளக் கொண்மெனச் சேயிழை கேளி  (கனாத்திறம் உரைத்த கதை:பா.வரி72)

   கோவலனின் நிலையைக் கண்ட கண்ணகி, மாதவிக்குக் கொடுக்கப் பொருள் இல்லாத காரணத்தினால் கோவலன் வருந்துகிறான் என்று எண்ணிச் சிறுநகைப் புரிந்து  தனது காற்சிலம்பினை கோவலனிடம் தருகிறாள்.

சிலம்பு முதலாகச் சென்ற கலனே
டுலந்தபொரு ளீட்டுத லுற்றன்  மலர்ந்த சீர்
மாட மதுரை யகத்துச் சென்றேன்   (கனாத்திறம் உரைத்த கதை:பா.வரி74)
         
     சிலம்பினைப் பெற்றுக் கொண்ட கோவலன், கண்ணகியை நோக்கி இக்காற் சிலம்பைக் கொண்டு மதுரைச் சென்று இழந்த செல்வங்களை மீண்டும்  பெற்று விடலாம் என்று கூறி, விடியற் பொழுதிலே கோவலன்  கண்ணகியை மதுரை நோக்கி அழைத்துச் சென்றான். போகும் வழியில் சமணத் துறவியான  கவுந்தியடிகளிடம்  ஆசிப் பெற்று. வரைபொருள் வேட்கையின் காரணமாக மதுரைச் செல்லும் செய்தியைக் கூறினர்.

பாடகச் சீறடி பறப்பகை யுழலா
காடிடை யிட்ட நாடுநீர் கழிதற்கு
அரிதிவள் செவ்வி  அறிகுறிநா யாரோ   (நாடு காண் காதை:52)
         
     எனக் கவுந்தியடிகள்  கண்ணகியின் மென் பாதங்கள் மதுரை செல்வது கடினம் என்றார். கோவலன்,கண்ணகி இருவரும் பொருள் செலவுப் போக்கொழுக்கவில்லை. கவுந்தியடிகள், கோவலன் கண்ணகியுடன் மதுரை நோக்கிச் சென்றார். போகும் வழியில்

கழனிச் செந்நெற் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியுங் கனைக்குர னுரையுந்   (நாடு காண் காதை:113)         
       எனப் பல்வேறு இயற்கை காட்சிகளை ரசித்தவாறு மதுரை நோக்கிச் சென்றனர். போகும் வழியில் பல இடங்களில் தங்கி இளைப்பாரி, பல இன்னல்களைக் கடந்து மதுரையை அடைந்தனர். கவுந்தியடிகள், கோவலன்  கண்ணகி இருவரையும் மாதரிடம் அடைக்கலம் புக செலுத்துகிறார். வணிகக் குலத்தில் பிறந்து, பொருள்வயிற் பிரிந்து, மதுரை அடைந்து, கால் சிலம்பினை விற்கும் பொருட்டுப் பொற்கொல்லனை அடைந்து, கோவலன் திருட்டுப் பழிக்கு ஆளாக்கப்பட்டு இறந்துப்படுகிறான். கண்ணகி வழக்குரைத்து அரசனை எதிர்க்கிறாள் அரசன் தவறு உணர்ந்து இறக்கிறான். பின் சேர மன்னன் கண்ணகிக்குச் சிலை எழுப்புவதாகக் காப்பியம் நிறைவுறுகிறது.

🎯 சிலப்பதிகாரத்தில் மாதவிடம் கொண்ட காதலின் காரணமாகக்  கோவலன் மலைபோல் குவிந்த செல்வத்தை இழக்கிறான். கருப்பன் வறட்சியின் காரணமாக வீட்டில் இருந்த பொருட்களை இழந்து வறுமையில் அல்லற்படுகிறான்.

🎯 கண்ணகி கோவலனின் கவலையைப் போக்க கால் சிலம்பினை  வறுமை சூழலில் அளிப்பதைப் போலவே வள்ளி, வறுமை சூழலில் கருப்பனிடம் கால் கொலுசு கொடுத்து குடும்பத்தின் பசியாற்றினாள்.

🎯 கண்ணகியின் பாதம் கதா தூரம் செல்ல தயங்கும் என்பதைக்  கவுந்தியடிகள் கூறியதை போலக் கருப்பனின் தாய் முத்தாத்தாள் வள்ளி கருப்புனுடன்  செல்லும் பொருள் வயிற் பிரிவை ஒழிக்க முற்படுகிறாள்.

🎯  கோவலன் கவுந்தியடிகள் வார்த்தையை வணங்கி மறுப்பது போலவே கருப்பனும் தாயின் சொல்லை மறுத்து தாயின் மனதை மாற்றுகிறான்.

🎯  மதுரையை நோக்கி செல்லும் வழியில் கண்ட அனைத்து காட்சிகளையும் ரசித்துக்கொண்டே கோவலனும் கண்ணகியும் பெரு நம்பிக்கையுடன் பயணம் செய்தனர் அதுபோலவே கருப்பனும் வள்ளியும் பெரு நம்பிக்கையைச் சுமந்து தேயிலை தோட்டம் நோக்கி சென்றனர்.”புதிய நட்பும் நம்பிக்கையும் தந்த இன்பமான மனநிலையில் அவர்கள் சிரித்து பேசியும் நையாண்டி செய்து கொண்டும்  வாக்களிக்கப்பட்ட நிலத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர்”( இரா.முருகவேள்,எரியும் பனிக்காடு, பக்:63)

🎯 கோவலனும் கண்ணகியும் செல்லும் வழியில் பல இடங்களில் தங்கி இளைப்பாறினர் இதுபோலவே கருப்பன் வள்ளி மற்றும் உடன் சென்ற பலரும் பல்வேறு இடங்களில் தங்கி, நடந்து நடந்து கால் ஓய்ந்து தேயிலை தோட்டம் அடைந்தனர்.

🎯  கோவலனுக்கும் கண்ணகிக்கும் மாதரி அடைக்கலம் அளித்து, தனி இடம் கொடுத்து தேவையான பொருட்களையும் கொடுத்ததைப் போன்று தேயிலை தோட்டத்தில் கருப்பனுக்கும் வள்ளிக்கும் கால்நீட்டி படுக்க முடியாத அளவிற்குத்  தனியிடம் வழங்கப்பட்டுச்  சமையலுக்குத்  தேவையான பொருட்கள் போர்வை போன்றவை வழங்கப்பட்டது.”அரிசியும் மற்றவைகளும் வாங்கிக் கொண்டு லைனுக்கு திரும்பியதும் அவர்களுக்கு இருப்பிடங்கள் ஒதுக்கி தரப்பட்டன. கருப்பனுக்கும் வள்ளிக்கும் மட்டும் அதே லைனில் ஒரு அறையின் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது”(இரா.முருகவேள்,எரியும் பனிக்காடு,பக்:72)

🎯 கோவலன் காற்சிலம்பினைப் பொற்கொல்லனிடம் கொண்டு சென்று பொய் வழக்கு சாற்றப்பட்டு இறந்து படுகிறான்.  கருப்பன் வள்ளி இருவரும் கங்காணியின் பொய்வாக்கால் தேயிலை தோட்டம் அடைந்து பல இன்னல்களை எதிர்கொள்ள முடியாமல் வலிகளைப் பொறுத்து இறுதியில் வள்ளி நோய்வாய்ப்பட்டு இறக்கிறாள்.

🎯 தன் கணவன் கள்வன் இல்லை என வழக்காற்றி மன்னனின் தவறினை உணர்த்தி வெற்றி காண்கிறாள் கண்ணகி.

🎯 வணிகக்  குலப்  பெண் கண்ணகி, தன் கணவனுக்கு ஒரு நாட்டின் அரசனால் ஏற்பட்ட  அநீதியை எதிர்த்து போராடும் சுதந்திரம் இருந்தது. கருப்பன் தன் மனைவி போதிய உணவு  இல்லாமலும், மருத்துவ வசதி இல்லாமலும், போதிய ஓய்வு கிடைக்காமலும் இறந்து பட்டால் என்று தெரிந்தும் அவனது உரிமை குரல் ஊமையாகவே  இருந்தது.
பொருள்வயின் பிரிவானது வணிகருக்கும் வேளாளருக்கும் உரியது எனத்  தொல்காப்பியர் கூறுகிறார்.

பொருள்வயின் பிரிதலும் அவர்வயின்ன் உரித்தே (தொல்.பொருளதிகாரம்:35)         
       பிரிவு மட்டுமே இருவருக்கும் உரியது போலும். வாதிட்டு  நீதி பெறும் உரிமை வணிகக் குலத்துடன் நின்று விட்டது. போலும் எனவேதான், தன் மேலதிகாரி ஒருவரையும் எதிர்த்துக்  கேள்வி கேட்கும் உரிமை வேளாள பொருளீட்டு வந்த மக்களிடம் பாதிக்கப்பட்டுள்ளது. “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என இறைவனை எதிர்த்து எரியூட்டப்பட்ட நக்கீரர், தவறு இழைத்த அரசனைத் தட்டிக் கேட்கும் பெண்கள் என அநீதியை எதிர்த்து குரல் கொடுக்கும் உரிமையைப் பெற்றிருந்த தமிழ் மக்களின் வாழ்க்கை சூழல் காலப்போக்கில் மாறியது. வியப்பே. அரசர்,அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் பிரிவு பெயரளவில் இருந்த காலத்தில் மக்கள் நீதியைச் சரியான முறையில் பெற்றனர். இந்த நான்கு வர்ணப் பாகுபாடு மக்களின் ஆழ்மனம் சென்று வெவ்வேறு இனமாகக்  காண நேரிட்ட காலச்சூழலில் மக்கள் நீதி பெற அல்லலுற்றனர். அநீதிகளை எதிர்த்துக்  கேள்வி எழுப்பும் தன்மை இழந்தனர். இறைவனின் தவறினைச் சுட்டிக்காட்டும் மக்களின் மனநிலை மாறி. இறைவன் தானே என எண்ணி ஆதிக்கம் செலுத்த,உழைக்கும் மக்களின் ஆவி அவர்களின் உள்ளங்கையில் சிக்குண்டது.

இன்னல்கள்
      செல்வம் நிறைந்த வணிகக் குடியில் பிறந்து பொருள்களை இழந்து ஊழ்வினைக் காரணமாக மதுரை புறப்பட்டு மலர் போன்ற கண்ணகியின் பாதங்கள் பல இன்னல்களை அடைந்தது.

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு   (குறள் 1029)
         
        தன் குடிக்குக் குற்றம் வராமல் தடுக்கப் புகாரைத் தகர்ந்து. பொருளீட்டிக் குடி பெருமையைக் காக்க மதுரை அடைந்து. ஏழு மாடத்தில் இருந்த கோவலன் கண்ணகி இருவரும் சிறுவீட்டில் தங்கி. புது வாழ்க்கைக்குத் தயாராகிய வேளையில் பொற்கொல்லனால் பொய் வழக்கில் சிக்குண்டு மன்னரின் ஆணை கோவலனின் உயிரைப் பறித்தது. இவ்வாறு கண்ணகி கணவனைப் பிரிந்து அறம் செய்ய முடியாமல் பல துன்பங்களை அடைந்தாள். கணவன் மீண்டும் வந்தபின் பொருள் இல்லாமையைப்   பொருட்படுத்தாமல் காற்சிலம்பு கொடுக்க. மதுரை வந்து மீண்டும் கோவலனைப்   பிரிந்து பெரும் துன்பத்தை அடைந்து அழற்பட்டாள்.
 கருப்பனும் வள்ளியும் கங்காணியின் வார்த்தைகளை நம்பி குடும்பத்தின் வறுமை நிலை மாற்றத் தேயிலை தோட்டம் செல்ல முடிவு செய்து செல்லும் வழியில் எல்லாம் பல துன்பங்களை எதிர்கொண்டு பசி மற்றும் கூட்ட நெரிசலில் சிக்குண்டு தேயிலை தோட்டம் அடைந்து.”அரிசியும் மற்றவைகளும் வாங்கிக் கொண்டு லைனுக்கு திரும்பியதும் அவர்களுக்கு இருப்பிடங்கள் ஒதுக்கி தரப்பட்டன. கருப்பனுக்கும் வெள்ளிக்கும் மட்டும் அதே லைனில் ஒரு அறையின் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது”. (இரா.முருகவேள்,எரியும் பனிக்காடு,பக்:72)
          ஓர் அறையில் சிறு பகுதியில் கால் நீட்டிப் படுக்க இயலாமல் துன்புற்று இருந்தனர்.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் (56)
         
        எனத்  திருவள்ளுவர் கூறும் வாழ்க்கைத்  துணை நலத்தின் கூறினைக் கொண்டவளாக வள்ளி, தன் கற்பு நெறியில் தன்னையும் காத்துக் கொள்ளவும் தன் கணவனான கருப்பனை காப்பாற்றிக் கொள்ளவும் தகுதி அமைந்த தன் புகழையும் காப்பாற்றிக் கொள்ளவும் ஒவ்வொரு நாளும் போராடி வெற்றி கண்டாள்..“வேலை செய்யும்போது கம்பளில் சுற்றிக் கொண்டாலும் கூட சில நிமிடங்களில் உடல் முழுவதும் மழையில் நனைந்து ஊறிப் போனது”.(இரா.முருகவேள்,எரியும் பனிக்காடு,பக்:135)
 இப்போராட்டத்தில் கருப்பனும் வள்ளியும் பல நாள் நோயுற்று பல ஏசல்களையும் சாட்டையடிகளையும் அப்போது சிறு பரிசாகப் பெற்று  கால் நீட்டி படுக்க இயலாத சிறு அறையில் தங்கி சத்தான உணவு கிடைக்காமல் கொட்டும் மழையில் அட்டைகளின் நடுவில் ரத்த சுவடுகளுடன் உழைத்தனர். கற்பு காக்க காட்டுமிராண்டிகளிடம் உதைப்பட்டு, “ரத்தம் வழிவதை தடுக்க அவர்கள் கொழுந்து இலைகளையோ,மெல்லிய காகிதத் துண்டுகயோ அட்டை கடித்த இடத்தில் ஒட்டிக்கொண்டனர்”. இறுதியாகப் போராட்டத்தின் பெரும்பரிசாக வள்ளி மரணம் அடைந்தாள். கருப்பனின் வேதனை பெருகி வீடு திரும்ப முடியாமல் மீண்டும் வாழ்க்கை போராட்டத்தில் குதித்தான்.

தொகுப்புரை
      இளங்கோவடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரமும் பி.எச்.டேனியல் அவர்களால் எழுதப்பட்டுத் தமிழில்  மொழிபெயர்க்கப்பட்ட எரியும் பனிக்காடு இரண்டும் வெவ்வேறு காலங்களில் தோன்றினாலும் சொல்லப்பட்ட செய்திகள், மக்கள் அடைந்த துன்பங்களில் தாக்கமானது புத்தகங்களின் பக்கங்களின் வழியை நிறைந்து வந்து மனதில் சில கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாக உள்ளது. சிலப்பதிகாரத்தில் குன்று போன்ற செல்வம் குறைந்ததை எண்ணி கோவலனே மதுரைச் செல்ல கண்ணகியை உடன் அழைக்கிறான். எரியும் பனிக்காடு நாவலிலும் கருப்பனே வள்ளியிடம் குடும்பச்  சூழலை விளக்கி தேயிலை தோட்டம் செல்ல உடன் அழைக்கிறான். இவ்விரு நூல்களிலுமே  பொருள்வயின் பிரிவின் போது இரண்டு தம்பதியரும் ஞாயிறு உதிப்பதற்கு முன் தம் ஊரை விட்டு வெளியேறுகின்றனர். கோவலன் பொருள் இல்லாமையை எண்ணி வருந்தும் வேளையில் கண்ணகி தன் காற்சிலம்பைத் தருகிறாள். வள்ளியும் தனது குடும்பச்  சூழ்நிலை உணர்ந்து தனது கொலுசை அடகு வைத்துக்  குடும்பத்தைக்  காக்கிறாள். இவ்விரு பெண்களின் மன ஓட்டம் ஒன்றாகவே உள்ளது. இருவரும் தன்னை மட்டும் காத்துக் கொள்ளாமல் தன் குடும்பத்தைக்  காப்பதில் கருத்து ஒற்றுமை உடையவர்களாக உள்ளனர். இவ்வாறு இக்கட்டுரை, பல்வேறு ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் கொண்ட இவ்விரு நூல்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்து விளக்குகிறது.

துணைநூல் பட்டியல்
1.திருஞானசம்பந்தம்,ச.தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் உரையும். கதிர் பதிப்பகம், 2020.

2. முருகவேள், இரா. எரியும் பனிக்காடு. ஐம்பொழில் பதிப்பகம்( ம ) சீர் வாசகர் வட்டம்,2007.

3. காசி விசுவநாதன், வெ. பெரி. பழ. மு. (பதிப்பாசிரியர்). சிலப்பதிகார மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார்  உரையும். தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1953.

4. திருக்குறள் பரிமேலழகர் உரை, சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1951.

5. முருகையா சதீஸ்.  “ஔவையாரும் வள்ளுவரும் வலியுறுத்தும் நீதிக்கருத்துக்கள்: திருக்குறள் மற்றும் ஆத்திசூடியை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஒப்பாய்வு”.தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்.(2022):102-109

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
இரா, சுபாஷினி,
உதவிப் பேராசிரியர்,
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா பல்கலைக்கழகம்,
காஞ்சிபுரம்.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »