Saturday, June 27, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் பக்தி நெறியில் சைவமும் வைணவமும்|ஆய்வுக்கட்டுரை| ச.குமார்

பக்தி நெறியில் சைவமும் வைணவமும்|ஆய்வுக்கட்டுரை| ச.குமார்

பக்தி நெறியில் சைவமும் வைணவமும் - ச.குமார்
முன்னுரை
               
பக்தியின் மொழி தமிழ் என்பதினால். தமிழ் இலக்கியங்களில் சமயக் கருத்துக்கள் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன. தமிழை அனைத்து சமயங்களும் வளர்த்தன. அதேப் போன்று சமயங்கள் தமிழால் வளர்ச்சிக் கண்டது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் கல் நெஞ்சையும் கனிவிக்கும் பக்திப் பாடல்களை இயற்றிப் பரம்பொருளை வழிபடும் மரபைத் தோற்றுவித்தனர்.  சைவமும் வைணவமும் செல்வாக்கு பெற்றன இவ்வாறு சமயச் சான்றோர்களாம் ஞானச் செல்வர்கள் அருளியவை சமய இலக்கியங்களாம்

பக்தி நெறி
               
கடவுள் மீது கொண்ட காதலைப் பாடும் பாடல்களாக வளர்ச்சிபெற்றன. மன்னர்களின் வீரம் மற்றும் கொடைகளைப் பாடிய பாடல்கள்இ இறைவனின் திருவிளையாடல்களையும் கடவுளின் அருட்செயல்களையும் பாடும் பாடல்களாக காலப்போக்கில் மாறின. தாங்கள் இயற்றிய செய்யுளில் கற்பனைக் காதலுக்குப் பின்னணியாக இயற்கைச் சூழல் அழகாக வருணிக்கப்பட்டது போலவே இறைவனிடத்தில்  செலுத்தும் பக்திக்குப் பின்னணியாகக் கோவில் தலங்களைச் சூழ்ந்த அவ்வூர்களின் இயற்கையழகைப் பாடும் நிலையே உருவானது.
               
நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி பக்தி இலக்கியத்தை செம்மையாக வளர்த்தனர் “உலக இன்பங்களைத் துய்த்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம்;என்பதே அவர்களின் நோக்கமாக அமைந்தது எனில் அது மிகையல்ல .இறைவன் என்பவன் அன்பின் வடிவானவன்; அன்பு ஒன்றே அவனை அடையும் உயர்ந்த வழி என இல்லறத்திற்கும் அவர்கள்  முதன்மை கொடுத்தனர்.
              
  தாங்கள் செல்லும் ஊர்கள் தோறும் அங்குள்ள கோவில்களுக்குச் சென்று இசைப்பாடல்களால் மனமுருக இறைவனைப் பாடிப் பரவசப்பட்டனர். நாளையடைவில் அப்பாடல்கள் கற்றவர்களோடு மற்றவர்களும் கூடிப் பாடுமாறு எளிய இனிய தமிழில் பக்திப்பாடல்களாய் இடம் பெற்றன..
இறைவனை ஆண்டான், தந்தை, தோழன், நாயகன் என பல பரிமாணங்களில் கண்டு அவர்தம் இசைப்பாடல்களின் வழியே போற்றினர். இவற்றையே தாச, சற்புத்திர,  சக, ஞான மார்க்கங்கள் என்று பக்தி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றது

ஆண்டான் (அடிமை) ஸ்ரீ தாச மார்க்கம்

தந்தைஸ்ரீ சற்புத்திர மார்க்கம்

தோழன் ஸ்ரீ சக மார்க்கம்

நாயகன் ஸ்ரீ ஞான மார்க்கம்

என்பனவாகும்.

அடிமை நெறி
               
சைவ இவைணவ இலக்கியங்களில் பெரிதும் போற்றப்படும் திருநாவுக்கரசர், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் போன்றோர் அடிமை நெறியை கொண்டிருந்தனர் என பக்தி இலக்கியங்கள் சுட்டுகின்றது.

பிள்ளைமை நெறி
               
சைவ பற்றானரான திருஞானசம்பந்தர் பிள்ளைமை நெறியை கொண்டிருந்தார் வைணவ பற்றாளரான பெரியாழ்வார் இறைவனைக் குழந்தையாகக் கருதித் தாலாட்டுப் பாடல்கள் பலவும் பாடியுள்ளார்.

தோழமை நெறி

தம்பிரான் தோழர் என்றழைக்கப்படும் சுந்தரர் மற்றும் வைவ ஆழ்வாரில் ஒருவரான திருமழிசையாழ்வார் போன்றோர் தோழமை நெறியை கொண்டு ஒழுகினர்.

நாயகன் நாயகி நெறியை பாடியவர்கள்
               
சைவ சமய குரவர் நால்வரில் ஒருவரான நம் மாணிக்கவாசகர்இ மடல் இலக்கியம் தந்த நம் திருமங்கையாழ்வார் போன்றோர் நாயகன் நாயகி நெறியை தத்தம் பாடல்களில் சிறப்பாக அருளிப் போந்தனர். பெரியாழ்வார் வளர்ப்பு மகளான ஆண்டாள் இறைவனையே தன் தலைவனாகப் பாவித்து வாழ்ந்தாள் என்பதற்கு திருப்பாவை  சான்றாக அமைந்தது. சைவ சமய நூல்களும் அவற்றை பாடிய நாயன்மார்களும் பன்னிரு திருமுறை அட்டவணையாக கீழே தரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »