Sunday, June 21, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home கவிதைகள் நிலாப்பெண்ணாகிய கொற்றவை|கவிதை|முனைவர் சாரதா சுப்பிரமணி

நிலாப்பெண்ணாகிய கொற்றவை|கவிதை|முனைவர் சாரதா சுப்பிரமணி

நிலாப்பெண்ணாகிய கொற்றவை-கவிதை-முனைவர் சாரதா சுப்பிரமணி
📍 என்னம்மா ஒசரம்மா பனைமரம் தோற்றுப்போகும்

நெடுக வளர்ந்த நெஞ்சுரத்த ரோசக்காரி

எல்லா வேலைகளையும் தான் மட்டுமே

தனி ஒருத்தியாக நின்று செய்யும்

சீலைக்காரி சீலை அவளுக்குப் பிந்தததோ

இல்லை அவளே சீலைய விரும்பி உடுத்தினாளோ

பொருத்தம்னா பொருத்தம் வானுக்கும் நிலவுக்குமானது..!


 

📍 கருங்குவளை கண்ணழகி

ரோசாஇதழ் உதட்டழகி

கைவீசி பூமி மேல நடந்தா

என் ஆத்தா மதுரை மீனாட்சியம்மனே

தேரில் உலா வருவது போல

கண்டோர்கள் கைகூப்பி வணங்கும் கைக்காரி..!


 

📍 காணி நிலம் என்றாலும் தன்

உடல் உழைப்ப மட்டுமே நம்பும்

தன்னம்பிக்கையின் தகவிடம் சுறுசுறுப்பின் ஊற்றிடம்

அவள் கொலுசும் கெட்டிக்கொலுசுச் சத்தமும்

அவளின் இரும்பு இதயத்தை உடைப்பதற்கு

உரசி காலிலேயே தோற்றுப் போய்விடும்..!


 

📍 நீ அன்பு எனும் பூவுக்கு

மட்டுமே முகம் மலர்வாய் புன்னகைப்பாய்

அடுப்பங்கரையினிலே அஞ்சு வகை செய்யியல

நான் உன் முந்தானை பிடிக்கையிலே

என்னை அள்ளி எடுத்து உன்

மார்பக வியர்வைத்துளியோடு ஈரமாக எனை

அனைத்து சமையல் சுவைக்கும் விஞ்சிய

முத்தமிடுவாயே முத்தத்தில் உன் மெய்

முத்தத்திற்கு என்மெய் எல்லாம் பொய்யாகி

உசுறு கொடுத்த நேரத்தை விட

நீ அள்ளி அனைக்கும் ஒவ்வொரு

நொடியும் நான் மீண்டும் பிறக்கிறேனடி உன்

முத்தமழையில் நனைந்து நான் நனைக்கும்

மூத்திரமும்  கழிக்கும் மலமும் முகம்

கோணாமல் வாரி எடுப்பாயடி அன்றலர்ந்த மலராய்..!


 

📍 நான் உணவு உண்ணவில்லை நிறௌய உண்ணவில்லை

என்று கோபப்படும் உன் பொய்

கோபத்தில் கூட என்னையே சுற்றி

எனக்காகவே வாழும் கண்கண்ட தெய்வமடி..!


 

📍 உலகம் சுற்றுது என்பார்கள் நீ எனக்காக

பத்துக்குப் பத்தடி வீட்டையே சுற்றிச்சுற்றி

ரங்கராட்டினத்தையே உன் தோற்கடிக்க வைப்பாயடி

ஒரு கையில் கரண்டி ஒரு கையில்

விளக்குமாறு காலில் சக்கரம் சுழலும்

காலைக் கதிரவனின் ஒளியை உன்

கரங்கள் எதிர்கொண்டழைக்கும்

கொற்றவையாய் நிலாப்பெண்ணே..!


 

📍 அன்னையே எனக்கு உசுறு கொடுத்தவளே

உன் உழைப்பும் தன்னலம் கருதா

மனமும் எடுத்துச் சொல்ல சொற்கள்

இன்றி பிறவியின் பயன் உன்னால்

என்னும் நன்றியோடு அன்பு எனும்

இதய ஆன்மாவிற்கு கவிமாலை சொல்மாலையாய்

இன்னும் நிறைய சொல்வேன் நிரம்பச் சொல்வேன்..!


 

📍 என் ஆத்தா ரோசக்காரி பாசக்காரி

ரோசாப்பூ ரவிக்கைக்காரி

நேர்மைக்காரி வீரமங்கைகாரி..!

கவிதையின் ஆசிரியர்

முனைவர் சாரதா சுப்பிரமணி

உதவிப் பேராசிரியர்

தமிழ்த்துறை

எஸ். எஸ். எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பெருங்களத்தூர்,
சென்னை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »