நானாக நான்|கவிதை|மெ.அபிரக்ஷா

நானாக நான்-கவிதை-மெ.அபிரக்ஷா

இந்தச் சமூகம்


என்னை ஏற்றுக்கொள்வதற்காக
 

நான் விருப்பமில்லாமல்


நாள்தோறும் – அணியும்


முகத்திரை


உன்னைக் கண்டவுடன்


மட்டும் ஏனோ


தானாகவே மறைந்து போகிறது..!


 

நான் யாரென்ற


ரகசியத்தைப்


பல நேரத்தில்


நான் மறந்து போனாலும்


அந்த உண்மையை


உரக்கச் செல்ல


சிறிதளவும் – நீ


தவறுவதில்லை..!


 

உன் முன் –  நான்
மெ.அபிரக்ஷா

இருக்கையில்


என் மெய் நகலாக


மாறிப் போன நீ!


பல நேரம் என்னுடன்


செலவிடுபவர்களாலும்


கணிக்க முடியா


என் உணர்வுகளை


உன்முன் நான் நிற்கும்


அந்தக் கண நேரத்திலேயே


கண்டுபிடித்து வெளிப்படுத்தி விடுகிறாய்..!


 

இறுதியில் நான் நானாக


இருக்க இடமளித்து – என்னை


அவ்வாறே ஏற்றுக்கொள்ளும்


விந்தை நிறைந்த


நீதான் நான் !


தினமும் பார்த்து


ரசிக்கும் கண்ணாடி..!


 

கவிதையின் ஆசிரியர்


மெ.அபிரக்ஷா


B.A.Sociology


வி.இ.டி.கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி, 


திண்டல், ஈரோடு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here