சிந்தனைச் சிறகுகள்|காஞ்சி கிருபா

சிந்தனைச் சிறகுகள் - காஞ்சி கிருபா
🦋 எந்தச்சலசலப்பும்

இல்லாத

ஓர் அதிகாலை

மௌனத்தில்

என்னை நானே

தொலைத்துவிட்டு 
மீண்டு வருவதற்குள்

சிறகுகளை விரித்து

எங்கெங்கோ

பறந்து செல்கிறேன்..!
🦋 ஆள் நடமாட்டம்

இல்லாத

பாலை வனத்தில்

எனக்கான

பாடலை இசைத்துக் கொண்டு

செல்கையில்

வண்ணத்துப்பூச்சிகள்

என் அருகில்

வந்து செல்கின்றன..!
🦋 லேசான மழைத் தூறலில்

தெருவோர

தேநீர் கடைத் தேடி

நடந்து சென்ற நேரம்

மழையில் நனைந்த

ஒரு குட்டி நாயின்

சிலு சிலுப்பைக் கண்டு

பொழுது விடியாத

அந்தக் கணத்தில்

தூக்கிக் கொஞ்சுகிறேன்..!


 

🦋 அலைகள் வந்து

மோதுகின்ற
கடற்கரை மணலில் 
நடந்து செல்கிறேன்

என் தனிமையை உணர..!
🦋 தனிமையின்

மௌனத்தில்

மூழ்கும்போது

ஆழமான கவிதைகளை

மொண்டு வருகிறேன்..!


 

🦋 அதோ அந்தப்

பூஞ்சோலையின்

நறுமணமுகர்ந்து

என் விரல்களால்

எழுதி வைக்கிறேன்

முகர்ந்து கொள்ளுங்கள்

முடித்து விடாதீர்கள்..!


 

🦋 நிலாவின் வெளிச்சத்தில்

விண்மீன்களை

இரசித்துக்கொண்டு

மேகங்களிடம்

என் கவிதைகளைச்

சொல்லிக் கொண்டிருந்தேன்
 
காதல் மோகமெடுத்து

அவைகள்

ஒன்றாக கலந்து விட்டன..!
🦋 விண்மீன்கள்

மறியல் செய்தன

இவன் ஒரு

காதல் குற்றவாளி..!
🦋 என் சிறகுகளைத் திருப்பி

மீண்டும் வந்து சேர்கையில்

பாலைவனத்தைத்

தெருவோரத்தைக்

கடற்கரையைப்

பூஞ்சோலையைத்

தொலைத்துவிட்ட
சோகத்தில்

அழுது கொண்டிருக்கின்றன

என் விழிகள்..!

கவிதையின் ஆசிரியர்
காஞ்சி கிருபா
528/1 கட்டபொம்மன் தெரு,
விஷ்ணு நகர், தேனம்பாக்கம்,
சின்ன காஞ்சிபுரம், 631501

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here