✒️ அன்னையிடம்
விடைபெற்று காத்திருப்பேன்
வகுப்பறையில் உனக்காக..!
✒️உன் முகம் காணும்
ஆவலில் – நீ
வகுப்பில் நுழைந்ததும்
மனம் துள்ளி விளையாடுதே..!
✒️அகம் மகிழ்ந்துதான் போவேன்
உன் புடவை நிறத்தாலும்
அழகாலும்
என்னை கவரச் செய்வாய்..!
✒️பேச்சால் சொக்கித்தான் போவேன்
பாடங்களால்,
பண்பாளன் ஆக்குவாய்..!
✒️நானும் பக்குவமாகக்
கற்றுக் கொள்வேன்
சிரித்த வார்த்தைகளால்
சிந்திக்க வைத்து விடுவீர்கள்..!
✒️மாலையில் நீ கிளம்ப
நான் கலங்குவேன்
இன்னும் சற்று நேரம்
உன்னுடன் இருக்கலாமென்று..!
✒️மறுநாள் காத்திருப்பேன்
வகுப்பறையில் உனக்காக
அன்பால் என்னைப்
படியத்தான் வைத்து விடுகிறீர்..!
✒️படிப்பிலும் பண்பிலும்
உயர்த்தி மகிழ்வாய்!
உனக்கும் எனக்கும் இருக்கும்
அன்பு விலை மதிப்பற்றது..!
✒️உன் தாய்மை உணர்வு
என்னை தலை நிமிர
வைத்து விடுகிறது..!
✒️கற்பித்த உன்னால்
பெற்றவளின்
மனம் குளிர்ந்துதான் போகிறது..!
✒️எனக்கோ பெருமை
பல வந்து சேருகிறது..!
கவிதையின் ஆசிரியர்
முனைவர் இரா.செல்வராணி
உதவிப் பேராசிரியர்
தமிழ்த் துறை
ஜெ.எச.ஏ.அகர்சன் கல்லூரி
சென்னை -60