ஆசிரியர்|முனைவர் இரா.செல்வராணி

ஆசிரியர் - முனைவர் இரா.செல்வராணி

✒️ அன்னையிடம் 


விடைபெற்று காத்திருப்பேன்


வகுப்பறையில் உனக்காக..!


 

✒️உன் முகம் காணும்


ஆவலில் – நீ


வகுப்பில் நுழைந்ததும்


மனம் துள்ளி விளையாடுதே..!


 

✒️அகம் மகிழ்ந்துதான் போவேன்


உன் புடவை நிறத்தாலும்


அழகாலும்


என்னை கவரச் செய்வாய்..!

✒️பேச்சால் சொக்கித்தான் போவேன்


பாடங்களால்,


பண்பாளன் ஆக்குவாய்..!


 

✒️நானும் பக்குவமாகக்


கற்றுக் கொள்வேன்


சிரித்த வார்த்தைகளால்


சிந்திக்க வைத்து விடுவீர்கள்..!


 

✒️மாலையில் நீ கிளம்ப


நான் கலங்குவேன்


இன்னும் சற்று நேரம்


உன்னுடன் இருக்கலாமென்று..!


 

✒️மறுநாள் காத்திருப்பேன்


வகுப்பறையில் உனக்காக


அன்பால் என்னைப்


படியத்தான் வைத்து விடுகிறீர்..!


 

✒️படிப்பிலும் பண்பிலும்


உயர்த்தி மகிழ்வாய்!


உனக்கும் எனக்கும் இருக்கும்


அன்பு விலை மதிப்பற்றது..!


 

✒️உன் தாய்மை உணர்வு


என்னை தலை நிமிர


வைத்து விடுகிறது..!


 

✒️கற்பித்த உன்னால்


பெற்றவளின்


மனம் குளிர்ந்துதான் போகிறது..!

✒️எனக்கோ பெருமை


பல வந்து சேருகிறது..!


கவிதையின் ஆசிரியர்

முனைவர் இரா.செல்வராணி

உதவிப் பேராசிரியர்

தமிழ்த் துறை

ஜெ.எச.ஏ.அகர்சன் கல்லூரி

சென்னை -60

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here