📜 வறுமை என்பது சிறுமை அல்ல
வறுமைதான் வாழ்வின் பெருமை
வறுமையில் பிறப்பது தவறல்ல
வறுமையிலே வாழ்வது தவறு
வறுமையைப் பார்த்து பாவம் என்போர்
வளமையை பார்த்து வாழ்த்துவதில்லை
📜 நீ தாழ்ந்தால் சிரிக்கின்ற உலகம்
நீ உயர்ந்தால் படுத்தும் கலகம்
மூட மனிதர்கள் பார்வையிலே
முடங்கி கிடக்காதே மானிடா…
📜 உலக மனிதர்கள் பலவாகும்
உன்ன மனிதர்கள் சிலவாகும்
உலகப் போக்கில் வாழாதே
உன்னை புரிந்து வாழ்ந்திடு
உயர்க்கல்வி அறிவைப் பெற்றிடு
உழைப்பில் மேன்மை கண்டிடு
📜 உயர் லட்சியம் நோக்கிப் புறப்படு
உயர் வின்னையும் நீயும் தொட்டிடு
உலகம் திரும்பிப் பார்த்திடும்
உன் பிறப்பின் மகத்துவம் புரிந்திடும்..!
கவிதையின் ஆசிரியர்
முனைவர் அ. அன்னமேரி
உதவிப்பேராசிரியர்
புனித வளனார் கலை மற்றும்
அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
மஞ்சக்குப்பம், கடலூர்