மிட்டாயும் கசந்துப் போனது|கவிதை|மெ.அபிரக்ஷா

மிட்டாயும் கசந்துப் போனது - மெ. அபிரக்ஷா

🍬எனது பிள்ளை பிராயத்தில்


என் அம்மா என்னை அடிக்கடி


மளிகைக் கடைக்கு அனுப்பி 


மளிகை பொருட்களை


வாங்கி வரச் சொல்லுவாள்..!


 

🍬எப்போதாவது எனக்கு 


அதிஷ்டம் இருந்தால்


“சில்லறை இல்ல பாபா “


என்று சொல்லியபடி மிட்டாயை


என்னிடம் நீட்டுவார் கடைக்காரர்..!

🍬இப்போது நான் வளர்ந்து விட்டேன்,


என் பாலிய பருவத்தையும்


கடந்து விட்டேன்,


ஒரு ரூபாய் மிட்டாயும் கூட


இரண்டு ரூபாய் என்றானது,


ஏன், இப்போது –  நான்


வேலைக்கும் கூடச் செல்கிறேன்..!


 

🍬இப்போது எனக்குச் சில்லறைக்குப்


பதில் கடைக்காரர்


மிட்டாயைக் குடுக்கையில்


என் மனம் அந்த சில்லறைக்


காசை பெறுவதற்கே துடிக்கிறது..!

🍬வெறும் மிட்டாய்களுக்கான 


ஆசை சுமந்த நானோ இன்று


குடும்ப பாரத்தைச் சுமக்கின்றேன்..!


 

🍬மிட்டாய் கரைந்த பின்பு 


என் நாக்கில் – அன்று 


குடிகொண்ட வெறுமையே 


இன்று எனது வாழ்க்கையாய்


உருமாறிப் போனது,


மிட்டாயின் சுவையும் கூட


எனக்கு கசப்பாகிப் போனது..!


கவிதையின் ஆசிரியர்


மெ அபிரக்ஷா


II-B.A.Sociology


வி.இ.டி.கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி


திண்டல், ஈரோடு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here