Tuesday, July 21, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் ஆசாரக்கோவையில் உணவு உண்ணும் முறையும் நடைமுறைத் தேவையும்

ஆசாரக்கோவையில் உணவு உண்ணும் முறையும் நடைமுறைத் தேவையும்

மனித வாழ்விற்கு உணவு, உடை, உறைவிடம் மிகவும் இன்றியமையாத ஒன்றாக கும் விளங்குகின்றது. இவற்றுள் முதலிடம் பெறுவது உணவாகும். “பசிவந்தால் பத்தும் பத்துபோகும்” என்று பசியின் கொடுமையைக் கூறுவர். தீரா பசித்துன்பத்தில இருக்கும் ஒருவன முன் பணமும், உணவும் இருக்குமானால் பசிப்பவளது கைமட்டுமல்ல உயிரும் சேர்ந்து உனவின் பக்கம் ஈர்க்கும். எனவே உயிர் வாழ உணவானது மிகவும் இன்றியமையாத ஒன்றாகின்றது. ஒருமனிதன் உடையும், உறைவிடமும் இல்லாமல் உயிர் வாழ முடியும் ஆனால் உணவில்லாமல் உயிர் வாழ முடியாது. இதன் விளைவாகவே உணவை முன்வைத்து வகைபாடு செய்துள்ளனர். உயிர் வாழத் தேவையான இவ்வுணவிற்கு நம் முன்னோர் முக்கியத்துவம் அளித்திருப்பதை இலக்கியங்கள் காட்டுகின்றன. ஆசாரக்கோவை என்னும் நீதி நூல் நாள் தோறும் கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகளை அல்வகையில் றிவு பற்றி கூறும் பொழுது உணவு உண்ணும் முறை பற்றியும் குறிப்பிடுகின்றது. அக்கருத்துக்கள் எவ்வகையில் வாழ்விற்கு விழுமியங்களாகின்றன என்பதை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உணவு உண்ணும் முறையில் ஒழுக்கம்

ஆசாரம் என்பது ஒழுக்கத்தைக் குறிப்பதாகும். மனித வாழ்விற்குத் தேவையான ஒழுக்கங்களைக் கோவையாகக் கூறுவதால் இது ஆசாரக்கோவை எனப்பட்டது. இதில நன்நடத்தை, உடை உடுத்தல், உறங்குதல் மற்றும் உணவு உண்ணும் முறை பற்றி கூறப்படுகின்றது. இவற்றுள் உண்ணும் முறை பற்றி ஆசாரக்கோவை பல ஒழுக்க நெறிகளைக் குறிப்பிடுகின்றது. சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து காலைக் கடன்களை முறையாக முடித்தபின் குளிர்ந்த நீரினால் குளித்தல் வேண்டும். உடலில் உள்ள ஈரத்தன்மை உஉலர்ந்தும் உலராமல் இருக்கும் முன் காக்கும் கடவுளுக்கு வழிபாடு செய்தல் இன்றியமையாததாகும். இதனை,

“நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்து

உண்டாரே உண்டாரெனப்படுவர்” (ஆ கோ-18)

காலினீர் நீங்காமை உண்டிடுக” (ஆ.கோ-19)

என்னும் இப்பாடலடிகள் தெளிவுபடுத்துகின்றன. பின் விருந்தினருக்கும், நம்மை ஈன்றவர்களுக்கும், நாம் ஈன்ற குழந்தைகளுக்கும் மற்ற அறிணை விலங்குகளுக்கும் உண்ணப்போதுமான அளவு உணவை மன நிறைவோடு அளித்தல் வேண்டும் என்பதனை,

விருந்தினர் மூத்தோர் பசுசிறைபிள்ளை – (ஆகோ-21)

இப்பாடலடி விளக்குகின்றது. உண்ணத்துவங்கும்முன தூய்மையாகவும், எச்சில் படாதவகையிலும் முறை சமைக்கப்பட்ட உணாவை அருகில் வைத்து உண்ணுதல் வேண்டும். அவ்வாறு உண்ணும் பொழுது நீர் அருந்தும் நிலை ஏற்படின் ஒரு கையால் மட்டுமே நீர் அருந்தகல் வேலு எச்சூழலிலும் உணவு அருந்தும் பொழுது மகிழ்ச்சியோடு ஆடி அசைந்தோ, மனசோர்வுன் உறங்கும் நிலையிலோ, வேளைப் பளுவின் காரணமாக நின்றுகொண்டோ உல அருந்துதலைத் தவிர்த்தல் நலமாகும். என ஆசாரக்கோவை வழியுறுத்துகிறது.

பண்பாடும் உணவும்

பல வகைக் காய்கறிகளை வேக வைத்துச் சமைப்பது சமையல் அதேனோ வாழ்கையின் பல சூழ்நிலைகளில் அனுபவமடைந்தோ, மதியால் அறிந்தோ, மன பக்குவமடைகின்றது. இதனை ஒரு குழுவோ இனமோ ஏற்று வழி வழியாக கடைபிடிப்பதும் மூலம் பண்பாடு உருவாகின்றது. அவ்வாறு காண்கையில் ஆசாரக்கோவை வடமொழி நூல்ன் இருந்து கருத்தை உள்வாங்கிக் கொண்டுள்ளமையால் இந்த நூல் ஆரிய சமுதாயத்தில் பண்பாட்டுக் கூறுகள் காணப்படுகின்றன. சார்ந்ததன வண்ணமாதல் என்ற சித்தாங்பு கருத்திற்கிணங்க ஆரிய மரபை மற்ற இனத்தவரும் நன்மை கருதி பின்பற்ற தொடங்கில் எனலாம். ஆரியாகளது வருகையால் இவர்களுடைய பண்பாடானது தமிழாகளுடைய பண்பாட்டோடு கலந்தது. அதனால் தமிழர்கள் ஆரிய மரபுப்படி சில பழக்கங்களை நாள்தோறும் கடைபிடிக்கலாயினா. அதிகாலை எழுந்து தன் காலைக் கடன்களை முடித்து இறைவனுக்கும் மூத்தோர்க்கும். விருந்தினருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தனர். பிறகு தன் வயிற்றுக்கு உணவு அளிக்கும் பழக்கம் இன்றளவிலும் உள்ளது. இது மற்ற இனத்தவர் ஆரிய மரபைக் கடைபிடிப்பதற்கான சான்றாதாராமாகிறது.

அறிவியல்தன்மை

அறிவியல் என்பது உண்மைத்தன்மையை புலப்படுத்துவது. அறிவியல் வளர்ந்த கொண்டு செல்லும் பொழுது, கண்டு பிடிக்கப்படும் பொருளின் அளவு சிறிதாகிக் கொண் (Micro/Nano/Femto) போவதைக் காணமுடிகின்றது. அறிவியலின் நோக்கம் உண்மை. தன்மையை வெளிப்படுத்துவதாகும். இதில் காணக்கூடிய உண்மைகள் இலக்கியங்களிலு காணக்கிடக்கின்றன என்பதை நாம் அறிய முடிகிறது. அவ்வகையில் ஆசாரக்கோவை கூறு. உண்ணும் முறையில் சில அறிவியல் தன்மைகளை காணமுடிகின்றது.

மற்ற விலங்குகளிலிருந்து மனிதன் உண்ணும் முறையில் மாறுபடுகிறான். உண உண்பதற்கு காலநேர அடிப்படை வைத்து உண்பவன் மனிதன் மட்டுமே முறையாக உண உண்ணாததால் ஏற்படும் மலச்சிக்கலைக் இரவில் பாலியல் உறவில் இன்பம் துய வருந்துபவனது நிலைக்கு ஒப்பிடலாம்.

“இரவில் மனச்சிக்கல்

காலையில் மலச்சிக்கல்

மனிதனுக்கு கொடிய நோய்”

என்று கூறும் அளவிற்கு மலச்சிக்கல் கொடுமையானது. பலர் இந்நோயால் துபைப்பட கொண்டிருப்பதை அறிய முடிகிறது. இனிப்பை முதலில் உண்ணும் பொழுது இதில் சுரக்கு “சிலிவிரிக்” என்ற அமிலம் ஏற்கனவே இருக்கும் உணவுடன் கலப்பதற்கு பயன்படுகின்றன. இறுதியில் கசப்புச் சுவை உண்ணும் பொழுது இதில் உள்ள கிரிமி நாசினி குடலில் உள்ள புழக்களை அளிக்கின்றது. இதனால் வயிற்றுக் கோளாறுகள் தடுக்கப்படுகின்றன. எனவே கோளாரு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

நமது கவனம் சிதறும்படியாக, ஆடி அசைந்தோ, நின்றுகொண்டோ உணவு 4 அருந்துவதால் செரிமான நரம்புகள் முழுமையாக இயங்குவதில்லை. அதனால் செரிமானத் தன்மையில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மலச்சிக்கல் ஏற்படுவதுடன் வயிற்றுக்கோளாறுகளும் ஏற்படுகின்றன. இவ்வாறு ஆசாரக்கோவை கூறும் கருத்துக்கள் அறிவியல் தன்மையோடு பொருந்தியுள்ளதை அறியமுடிகிறது.

உளவியல் தன்மை

மனித மனத்தைப்பற்றி ஆய்வது உளவியல் ஆகும். இவ்வுளவியல் மனிதனின் மனச்சிக்கலுக்குத் தீர்வுகாண உதவுகின்றது. மனிதன் ஒன்றிற்கு அடிமையாவதற்கான மூலகாரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அதற்குத் தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. ஆனால் நம் இலக்கியங்கள் வாழ்வதற்கு சில விதிமுறைகளையும் முதியோர்களிடம் நடந்துகொள்ளும் முறை பற்றியும் கூறுவதில் சில உளவியல் தன்மையைக் காண முடிகின்றது.

 பொதுவாகவே தினமும் குளித்தல் என்பது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் குளித்தால் உடல் தூய்மையடைவதுடன் மனமும் தூய்மை அடைகின்றது. அச்சமயத்தில் இறைவனை வணங்கினால் வேண்டும் வரங்கள் கிட்டும் என்று எண்ணினர். தினந்தோறும் வழிபாடு செயவதினால் வாழ்க்கை முழுவதும் மகிழ்வோடு இருப்போம் என்ற மன உணர்வு அனைவரிடத்தும் காணமுடிகின்றது. இதனால் காலையில் குளித்து இறைவனை வழிபாடு செய்கின்றனர். பிறகு உண்ணும் இடம் பற்றிக் கூறும் பொழுதுஇ இடம்சுற்றி நீர் இறைத்தல் வேண்டும் என்பதனால் உண்ணும் இடம் தூய்மை அடைவதோடு அங்குள்ள தூசிகள் உணவில் விளாதவாறு பாதுகாக்க உதவுகின்றது. அக்கால மக்கள்தரையில் அமர்ந்து உண்ணுவதையே வழக்கமாகக் கொண்டனர். இவ்வாறு உளவியல் தன்மைகள் ஆசாரக்கோவையில் காணப்படுகின்றன.

முடிவுரை

தமிழ் இலக்கிய நீதிநூல்களுள் ஒன்றான ஆசாரக்கோவையில் மனித வாழ்வின் அன்றாட நடைமுறைகளான உண்ணுதல், உறங்குதல், செயல்படுதல் போன்ற அனைத்தும் வாழ்வியல் முறைகளுக்கும் ஏற்ற வழி முறைகளை கூறுகின்றது. அவற்றுள் உணவு உண்ணும் முறைப்பற்றியும் கூறப்பட்டுள்ளது ஆசாரக்கோவை கூறும் கருத்துக்கள் அனைத்தும் நம் நிலத்தின் தன்மைக்கு ஏற்பவும், தட்பவெட்ப நிலைக்கு ஏற்பவும், அதேசமயம் அறிவியல் மற்றம் உளவியல் தன்மைகளோடும் பொருந்தக் கூறியிருப்பது இன்றும் வியக்கத்தக்கது. பழமை என்று அனைத்தையும் விளக்குதல் அறிவீனம். பழமையாயினும் மனிதனின் வாழ்முறைகளின் அடிப்படையை, ஒழுக்க நெறிகளை அறிவியல் தன்மையோடு கூறும் “ஆசாரக்கோவையைய் பின்பற்றுதல்” இன்றைய மாசு அடைந்த சூழல வாழ்நிலையில் ஒரு ஆக்கப்பூர்வமான செயல்பாடே.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை. சிவக்குமார்

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர்- 635 130.

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

சீமாறு (துடைப்பம், விளக்கமாறு)

கூனி, கைகேயின் உரையாடல்கள் – ஃபிராய்டிய உளவியல் நோக்கு

எழுதிகச் சாங்கியம்

விடுதலைப் பண்ணையம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »