அம்மாவின் கைவளையல்|கவிதை|ச. கார்த்திக்

அம்மாவின் கை வளையல் - கார்த்திக்

          தீர்வு


📜 நான் புத்தகத்தைத்


திறந்து வைத்தேன்


எனக்கு ஐயத்தை


எடுத்து வைத்தது..!


 

📜 நான் எழுத ஆரம்பித்தேன்


எனக்குச் சிந்தனையைத்


தேட வைத்தது..!


 

📜 நான் கண்ணீர்


எடுத்து வைத்தேன்


எனக்கு மழைநீர்


எடுத்து வைத்தது..!

 

📜 
நான் ஏரிகளில்


கட்டிடம் கட்டினேன்


மழை நீர்


செல்வதற்கே வழி இல்லை!


மழை வந்தால்
 

ஏரிகள் நிறைவதல்ல


என் வீடு நிறைகிறது!


 

📜 நீ இருக்கும் இருப்பிடமே!


நான் இருக்கும்


இருப்பிடம் அல்ல !


நீ பத்து மாடிக்கட்டிடத்தில் இரு !


நான் ஒன்பதாவது மாடி வரை !


 

📜 நான் சில நாள் இருப்பேன்


நான் சென்ற பிறகே !


நீ இரு


வருடத்திற்கு ஒரு முறை நான்


என்னுடைய வீடு தேடி வருவேன்..!


 

📜 என்னை வைத்தே
 

கண்ணீர் வேண்டாம்


உனக்கு, எனக்கு தீர்வு வேண்டும்!


 

         உண்மை


📜 காலத்திற்கு என் வீடு


தேடி வருகிறேன் !


சாலை ஓரம்


வீட்டிற்கு புகுந்த


மழை நீர் !


தன்னுடைய இருப்பிடம்


தேடி அலைகிறதே


இந்த பெரு வெள்ளம்..!


 

           கவிதை

📜 எழுதி எழுதிக் கொண்டேன்


எழுதி முடியவில்லை


திருந்தி திருந்திக் கொண்டேன்


திருந்தி முடியவில்லை


என்னுடைய குப்பைத்தொட்டி


நிறைந்ததே


அப்பொழுதே


என்னுடைய கவிதை


முழுமை பெற்றது.


 

அம்மாவின் கைவளையல்


📜 நான் வாழ வேண்டும்


நினைத்தே பருகினாள்


இப்போது !


நான் பருகினேன்


என் தாயின் முகத்தில் மகிழ்ச்சி


ஆனால்


தாய் உண்ண வில்லை!


நான் அறியவில்லை!


 

📜 என் தாய் நாள்தோறும்


வேலைக்குச் சென்றால்


நான் தினந்தோறும்


பள்ளிக்குச் செல்வேன் !


 

📜 என் அம்மாவின்


மூச்சி


அந்த அடுப்பின் புகையில்


கலந்தே


எரிய தொடங்குகிறதே !


 

📜 என் வீட்டின் சுவர்களிலே


சிறு சிறு சேமிப்பு


எங்க அம்மாவின்


கை வளையல் !

 

📜 என் தாயின் செயலே


நான் இந்த கவிதை


எழுதுவதற்கு !


 

கவிதையின் ஆசியியர்


ச. கார்த்திக்,


முதுகலைத் தமிழ் முதலாமாண்டு,


தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),


திருப்பத்தூர்.

Leave a Reply