Abstract
Computer plays and vital role in student’s education. It encourages them to learn in a innovative way. All the new technology ideas can be using computers. Students can make use of the computer in all the fields like science technology and language studies. Since it gives innovative ideas in modern technology. Students were motivated to learn all the field with technological ideas. According to Leib – 1982, the computer replaces teachers in classroom learning. The main purpose of this article is how to teach Tamil language with all the technological terms and its growth by using computers.
Keywords
Computer plays, Student’s education, Innovative, Science technology, Language studies, Technological ideas, Classroom learning, Article, Tamil language, computer
Kanini vazhi Tamil karpithal | Dr.S.Chitra
கணினி வழித் தமிழ் கற்பித்தல்
முன்னுரை
உயர்தனிச் செம்மொழி என்று இன்று உலக அரங்கில் உலா வரும் நமது தாய் மொழியாம் செம்மொழித் தமிழை மேலும் சீரிளமைத் திறத்தோடு வைத்திருக்க வேண்டிய பொறுப்பிற்கு நவீன உத்திகளும் தொழில் நுட்ப சாதனங்களும் இன்றியமையாதவைகளாகும்.
“உலத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்” (கு 140)
என்பது நமது தமிழ்த் திருமுறை தந்த வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு. கற்பித்தலின் ஒவ்வொரு நிலையும் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாறி இன்று தொழில்நுட்ப சாதனங்களின் கோலோச்சுதலுக்கு ஆட்பட்டு நிற்கின்றது. விஞ்ஞானத்தின் இத்தகைய நவீன தொழில் நுட்ப உத்திகளுக்கு ஆட்பட்டு கற்பித்தல் முறை மாறி வருகிறது. வரவேற்கத்தக்க இவ்வளர்ச்சியினை நாம் கைக்கொள்ள வேண்டியது, நமது மொழி வளர்ச்சிக்கு முக்கியமானதொரு தேவையாகும்.
கணினியில் தமிழ் மொழியின் தாக்கம்
கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், காகிதம் எனப் பல்வேறு வழிகளில் வளர்ச்சி பெற்ற தமிழ் தற்போது இணையத்தில் உலா வருகிறது. 1980ஆம் ஆண்டு முதல் கணினியில் இடம்பெறத் துவங்கியது தமிழ். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் அறிவியல் தமிழ் நான்காகவும், கணினித் தமிழ் ஐந்தாம் தமிழாக இன்று வளர்ந்திருக்கிறது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் அச்சுத் தொழில் நுட்பம் தோன்றியது. இதன் பயனாகத் தமிழ் மிக உயர்ந்த நிலையிலுள்ளது. முன்பு கணினியில் தமிழ் எழுத்துக்களைத் தட்டச்சு செய்ய முடியாத நிலையிலிருந்தது. ரோமன் எழுத்துக்களில் தான் தமிழை எழுத முடிந்தது. தமிழ் எழுத்துகளில் மாற்றிக் கொள்ளக்கூடிய வளர்ச்சியும், தமிழ் எழுத்துக்களையே நேரடியாகத் தட்டச்சு செய்து கொள்ளக் கூடிய வளர்ச்சியை எட்டியது.
இணையத்தில் தமிழ்க்கல்வி
தமிழ்ப் பட்டமேற்படிப்பு வரை படிப்பதற்கான வாய்ப்புகள் இணையம் வழி, அதிகமாகக் காணக்கிடக்கின்றன. தமிழ் கற்க, தமிழ்வழிக் கல்வி என்ற சொல்லைக் கூகுள் போன்ற தேடு பொறிகளில் உள்ளீடு செய்தால் பல ஆயிரம் தளங்கள் தமிழைக் கற்றுத்தர ஆயத்தமாக நிற்கின்றன. தமிழ் எழுத்துக்களை அறிமுகப்படுத்தி எழுதும் முறையைக் கூறிப் பயிற்சி அளிப்பதுடன் அதனை உச்சரிக்கும் முறையை ஒளி ஒலிப் பல்லூடகக் காட்சிகளாக இத்தளங்கள் தருகின்றன. இணையத்தில் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களான தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்கள் ரோமன் ஆங்கில எழுத்துகளில் தரப்பட்டுள்ளன. நூலின் பாடுபொருள், தேடுபொருள் போன்றவற்றை எளிய முறையில் தேடிப்பெறும் வகையில் மின்நூலகம் அமைந்திருப்பது சிறப்பு. தமிழர்களின் பண்பாட்டு நாட்டுப்புறக் கலைகள், வரலாற்றுச் சின்னங்கள், விளையாட்டுகள், வழிபாட்டுத்தலங்கள் இவற்றை நினைவில்கொள்ள, ஒலி ஒளிக்காட்சித் தொகுப்புகளைப் பதிவு செய்யவும், தமிழகக் கலைகளான நாட்டியம், கரகம், காவடியாட்டம், தப்பாட்டம், தெருக்கூத்து, தாலாட்டு, மயிலாட்டம், கோலாட்டம், கும்மி போன்றவற்றின் தரமான காலப்பதிவுகள் இடம் பெற்றுள்ளன.
கணினி வழிக் கல்வி
கணினி வழிக் கற்றல் கற்பித்தலினால் குறிப்பிடத்தக்க விளைக்கின்றன.
🖥️ பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துக்கொள்ள முடிகிறது.
🖥️ மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்கவும் பல புதிய சிந்தனைகளை வெளிக்காட்டவும் பயன்படுகிறது.
🖥️ எழுத்து (text), ஒலி (sound), காட்சி (visual), அசைவுப்படம் (graphics), நிகழ்ப்படம் (video), உடலியக்கம் (psychomotor), இருவழித்தொடர்பு என பல வகையில் கற்பதற்குரிய வாய்ப்பு கிடைக்கின்றது.
🖥️ மாணவர்களின் கற்றல் திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்த்திடவும் உதவுகிறது.
🖥️ மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி ஆய்வு மனப்பான்மையை வளர்க்கிறது.
🖥️ கற்பதற்குரிய அனைத்து தகவல்கள் விரைவாகவும், விரிவாகவும் பெற முடிகின்றது.
கற்றலும் கற்பித்தலும்
கற்றல் – கற்பித்தல் பலமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் நிகழ்வாகும். கணினி வழிக் கற்றல் – கற்பித்தலில் சிறந்த முறையாகக் கருதப்படுகிறது. மொழியியல் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் முதலிய திறன்களையும் மொழியியல் பகுப்பாய்வு, பண்பாடு, தொழில், சான்றாண்மை போன்ற நிலைகளையும் மையமாகக் கொண்டு கணினி வழிக் கற்றலும் கற்பித்தலும் நடைபெறுகிறது.
இணையத்தில் தமிழின் இடம்
இன்று இணையத்தில் உலகின் பல மொழிகள் இடம் பெற்றுவருகின்றன. ஆயினும் ஆங்கில மொழியை அடுத்து மிகுதியாகப் பயன்படுத்தப்படும் மொழி தமிழ் என்பது பெருமைக்குரிய செய்தி. மேலும் இதனால் வளர்ந்துவரும் கணினித்துறை நாட்டின் பலதரப்பட்ட இடங்களில் எல்லாம் பரவ எளிதாக வழி பிறந்துள்ளது.
முடிவுரை
நேற்றைய உலகம் இருண்டு கிடந்தது, இன்றைய உலகம் வெளிச்சமாக இருக்கிறது. நாளைய உலகம் பிரகாசமாக இருக்க வேண்டும். தமிழ் மொழியைக் கற்பிக்கும்போது அடிப்படைத் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் திறன்களை இரு வழிகளில் கற்பிக்க முடியும். இதனால் திருத்தமான பேச்சு, வேற்றொலி, மயங்கொலிப் பிழைகள், குறில், நெடில் வேறுபாடறிதல் முதலியனவற்றை மாணவர்களுக்கு எளிதாகக் கற்பிக்க வேண்டும். கேள்வியோடு காட்சியும், இணையும்போது கற்றல் மேம்படுகிறது. ஒலி – ஒளி இரண்டும் இணையும் போது ஈர்ப்புடைய துணைக்கருவியாகவும், ஆர்வத்துடன் தொடர்ந்து சலிப்பில்லாமற் கற்கவும் கற்பிக்கவும், துணை செய்கிறது. கணினி வழியாகக் கற்பிக்கும்போது விரைவு, நுட்பம், தெளிவு, மாணவர் ஈர்ப்பு, அறிவுத்திறனை நிலைநிறுத்துதல், தன்னார்வம் முதலிய பல விளைதிறன்கள் வலுப்படுத்துகின்றன.
துணைநூற்பட்டியல்
1.ஆண்டோபீட்டர், மா., தமிழும் கணினிப்பொறியும், சாப்ட் வியூ பதிப்பகம், முதற்பதிப்பு ஜீலை 2002, சென்னை.
2.இரத்தின சபாபதி, தி. , தமிழ் கற்க கற்பிக்க, அம்சா பதிப்பகம், சென்னை
3.இராதா செல்லப்பன், தமிழும் கணினியும், 2011, கவிதை அமுதா வெளியீடு (திருச்சி)
4.பன்னிருகை வடிவேலன், தமழ் மென்பொருள்கள், நோக்கு (2014)
5.மணிகண்டன், துரை. தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள், கமலினி பதிப்பகம் , 2012, தஞ்சாவூர்.
6.முத்து நெடுமாறன், கையடக்கக் கருவிகளில் தமிழ் மின்னூல், 2012, தமிழ்மொழிக் கருத்தரங்கு கல்வி அமைச்சு, சிங்கப்பூர்
7.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் ஆராய்ச்சி மையம்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சு. சித்ரா
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி,
சென்னை.