மாக்காளை நாவல் காட்டும் தீபாவளி பண்டிகை|ஆய்வுக்கட்டுரை|சு.கீதா

மாக்காளை நாவல் காட்டும் தீபாவளி பண்டிகை - சு.கீதா
முன்னுரை
               
உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் பல்வேறு பட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவ்வகையில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். பண்டிகைகள் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஓர் நிகழ்வாகும். தனி மனித சமூகத்தின் நல்வாழ்கை கருதி மிகுந்த சிந்தனையுடன் நம் முன்னோர்கள் பண்டிகைகளை ஏற்படுத்தியுள்ளனர். மனிதநேய ஒருமைப்பாட்டை தமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதற்கு பண்டிகைகள் துணைபுரிகின்றன. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு வகையாக கொண்டாடுகின்றனர். அந்த வகையில் கலாப்ரியா அவர்கள் மாக்காளை நாவலின் மூலம் விஸ்வம் அண்ணாச்சி பெரிய கோவிலுக்கு செல்வதைப் பற்றியும், அங்கு சாமியை வணங்கிவிட்டு காளையின் முன்பு அமர்ந்து அது அசைவு போடுவதன் மூலம் நம்மளிடம் பேசுவதைப் போலவும் அதனால் விஸ்வம் அண்ணாச்சி தன் வாழ்க்கையை முன்நோக்கி யோசித்து கொள்வதன் மூலம் அன்று தீபாவளி பண்டிகையை தன் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கொண்டாடுவதை இக்கட்டுரை மூலம் உணர்த்துகின்றனர்.

விஸ்வம் அண்ணாச்சி கோயிலுக்கு செல்லும் செய்தி
               
விஸ்வம் அண்ணாச்சி அதிகாலையிலேயே எழுந்து தேனீர் குடித்து விட்டு பெரிய கோவிலுக்கு சென்று விடுவார். வழக்கமாக எப்பொழுதும் போல் பொற்றாமரைக் குளத்தில் கால் கழுவிட்டு கோயிலின் பக்கத்தில் உள்ள கொடிமரத்தருகே எட்டு முறை தரையில் விழுந்து, விழுந்து கும்பிட்டு வழிபாட்டு முறைகள் ஒன்றினைக் கூட குறை இல்லாமல் தன் வழிபாட்டை செய்துக் கொண்டிருந்தார். காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் பாட்டு ஒன்றையோ மற்றும் அபிராமி அந்தாதி ஒன்றிரண்டோ வாசித்தபடி அம்மையைக் வணங்கிடுவார். அன்று அம்மன் சன்னதியில் பிள்ளைத்தமிழ் பாடலை அந்நாளைப் பொறுத்து வேகமாகவும், சாவகாசத்தைப் பொறுத்து நன்றாக அனுபவித்தும் வாசிப்பார்.
               
“பிரியமுடன் (ஒக்கலையில்) வைத்துத் தேரார் வீதி வளங்காட்டேன், செய்யக் கனிவாய் முத்தமிடேன், திகழும் மணிக்கட்டிலில் ஏற்றி திருக்கண் வளரச் சீராட்டேன், தாரார் இமவான் தடமார்பில் தவழுங்குந்தாய் வருகவே, சாலிப்பதிவாழ் காந்திமதித் தாயே வருக வருகவே”1 என்று ‘ஒக்கலையில் வைத்து’ என்ற வார்த்தையை அனுபவித்துச் சொல்வார்.

மாக்காளையிடம் பேசுவது போல் நினைவு
               
அம்மையைக் வணங்கி முடித்த பிறகு சாமி கோயிலுக்கு வருவார். சாமி தரிசனமெல்லாம் முடிந்த பிறகு நந்தி மண்டபத்தில் உள்ள சுதைச் சிலையான பெரிய மாக்காளை முன்னாடி இடது புறமாக அமர்ந்து ஏதோ ஒன்றை பேசிக் கொண்டேயிருப்பார் விஸ்வம் அண்ணாச்சி. அம்மாக்காளை, அண்ணாச்சியின் மூக்கை தடவுவது போல் உணர்வார். அக்காளையின் கண்கள் இரண்டும் அழகாக இருக்கும். அது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருப்பது என்றும் கோயில் கூரையை தொடும் போது உலகமே அழிஞ்சி போய்விடும் என்ற ஒரு கதை உண்டு. விஸ்வ அண்ணாச்சி சிறு வயதாக இருக்கும் போது மாக்காளை வளர்ந்திருக்குமா என்று பார்ப்பதற்கு தன் நண்பர்களோடு கோயிலுக்கு தினமும் வந்து கொண்டே இருப்பார். “ஆமாலே, கொஞ்சம் வளர்ந்திருக்கும்”2 ம்ப்பான் ஒருத்தன். “எங்கலே அதெல்லாம் டூப்புலே”3 ம்பான் இன்னொருவர்.

மாக்காளை கோயில் கட்டும் முறை
               
கோயிலுக்குள் நுழைந்ததும் மிக பெரிய நந்தியை தனி மண்டபமாக கட்டி உண்டாக்கி வைப்பது அந்த கால நாயக்க மன்னர்களோட ஆட்சியில் தான் நடைபெறும். தஞ்சாவு+ரில் உள்ள நந்தியை பார்த்து இங்கு உள்ள நாயக்கர் ஒருத்தர் நந்தி செய்து அதற்கு வழுவழுவென்று சுண்ணாம்புப் பாலை தடவி பூசி, மாவு போலத் தேய்த்து மாக்காளையை செய்து வைத்திருந்தார். இன்றைக்கு அந்த காளை முன்னால் அமர்ந்து பழைய நினைவுகளை சொல்வதற்கு எப்பவும் போல எனக்கு அவகாசம் இல்லை. வேகமாக அவ்வேளையை முடித்து விட்டு நந்தியைப் பார்த்தபடி இரண்டு நிமிடம் அமரலாம் என்று நினைத்தார். நின்ற காலோட கோயிலைவிட்டு போக கூடாதுன்னு அமர்ந்தார். விஸ்வம் அண்ணாச்சி காளையின் முன்னால் அமர்ந்ததால் அது அசை போட, போட மனசை சும்மா இரு என்று சொல்ல முடியுமா. மறுபடியும் அது ஓட ஆரம்பித்துவிட்டது.

அண்ணாச்சியின்  தீபாவளி குளியல்
               
இன்னைக்கு ஏதோ வென்னீர் போட்டுக் குடுத்தாள் புண்ணியவாதி வேம்பு என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு “வீட்டுக்குள்ள இருக்கற குடத்துத் தண்ணி வெது வெதுன்னுதான் இருக்கு. ரெண்டு குடம் ஊத்திட்டுப் போங்க. எனக்கு தலைக்கு மேல வேலை கிடக்கு. இதுல ஓலையைப் போட்டுக் கொளுத்தி வென்னீர் வைக்கவா நேரமிருக்கு”4 என்று கத்துவாள்.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
               
இன்று தீபாவளி பண்டிகை தலைக்கு மேல் வேலைகள் இருக்கிறது. வேம்பு தனக்கும் வென்னீர் போட்டு விட்டு விஸ்வ அண்ணாச்சிக்கும் வென்னீர் போட்டு வைத்திருக்கிறாள். அவர் குளிக்கறதுக்கு கோவணத்தோட குளியலறையில் நின்று கொண்டிருக்கும் போது வேம்பு ஓடிவந்து “இந்தாங்க இங்கு வாங்க. இம்புட்டு நல்லெண்னை தலையில வச்சுக்கிடுங்க”5 என்று வீட்டு வாசலில் நின்று ஒரு பாத்திரத்தில் கை நீட்டினார்.
              
  “ஏளா என்னத்த அங்கன வந்து எண்ணெய் வைக்க ஒரு செம்புத் தண்ணிய தோளுக்கு விட்டாச்சே”6 என்று அண்ணாச்சி சலிப்புடன் இருக்கும் போது வேம்பு அவன் பக்கத்தில் வந்து ஒரு கை எண்ணெயைத் தலையில் தேய்த்துவிட்டு எதையோ நினைத்து தானே சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் சிரித்ததுக்கு காரணம் கோவணம் துணி சற்று விலிகியிருந்தது அதை பார்த்துக் கொண்டு தான் வேம்பு சிரித்தாள். “ஆமா இப்ப என்ன நீதானே நிக்கற வேற யாருமா இருக்காங்க”7
               
“உங்களுக்கு வெக்கமே கிடையாதா? புள்ளை வள்ளி எந்திரிச்சுரவா, சீக்கிரம் குளியுங்க.”8 என்று வேம்பு விளையாட்டாக கோவிச்சிக்கிட்டாள். விஸ்வா அண்ணாச்சியின் தலையில் வேம்பு எண்ணெயை தேய்கும் போது அவள் கையில் ஊறின கடலைப் பருப்போட வாசம் மூக்கை நுளைத்தது. அண்ணாச்சி வேம்புவிடம் குளிச்சதும் கோயிலுக்குச் சென்று வரலாம் என்றார். தீபாவளி பண்டிகை போது எட்டு மணிக்கு முதல் காட்சின்னு சொன்னாள், ஏழு மணிக்கலாம் போய் நிக்கணும்பாரு மேனேஜரு.

சினிமா பற்றிய செய்திகள்
               
ஒரு நாளும் இல்லாத திருநாளா, இந்த தீபாவளிக்கு அஞ்சு ஷோவுக்கு அனுமதி வாங்கிட்டாக முதலாளி. நேற்று தீபாவளி கடைசிவாரம் ஆகும். மாலைநேரத்தில் இருந்தே ரத வீதியில் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது. என்னப்பா இந்த நடுஇரவு நேரத்திலும் கூட மக்கள் கூட்டம் ரத வீதியில் இருக்கும். அதுவும் சரிதான். நம்மள போல ஆட்களுக்கு இப்பத்தான் நல்ல நாள் வரும் என்று நினைத்துக் கொண்டார்.
               
இன்று தீபாவளி தினத்தன்று திரைப்படம் வெளியாக இருகின்றது. அந்த பட் நேந்து பப்படமா ஒரு பாடாவதிப் படம்தான் போட்டியிருந்தார்கள். அந்த படத்துக்கு நூறு பேர் வந்திருந்தார்கள். தியேட்டரில் ஐந்து ரூபாய்க்கு பீடி விற்று, பத்து ரூபாய்க்கு முறுக்கு விற்று, இந்த வியாபாரத்துக்கு மூணு மணி நேரம் நின்று கால் புண்ணுதான் ஆனது மிச்சம். அந்த புண்ணு ஒரு பரு மாதிரியாகத் தான் இருந்தது. இப்பொழுது பெரிய காயமாக ஆயிற்று. கால் வீக்கம் குறையும் என்று சொன்னார்கள் ஆனால் வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தாச்சி. இரண்டாவது ஷோவே முடிஞ்சிடுச்சி. மாப்பிள்ளை முதலாளி வந்து ஒரு வேட்டியும் துண்டையும் ஐம்பது ரூபாயும் தந்தார் படம் ஓடும்போது எவனோ ஐந்து ரூபாய் குடுத்துவிட்டு இரண்டு முறுக்கு வாங்கி இருக்கான்.

                “என்னப்பா பத்து பைசாவுக்கு அஞ்சு ரூவா குடுக்கே சரி, படம் விட்டுப் போகும்போது வாங்கிக்க”9 என்று சொல்லி மீதி ரூபாயை எடுத்து வைத்திருந்தான். படம் முடிந்து விட்டும் லைட் எல்லாமே அனைத்த பிறகும் கூட ஆள் வரவே இல்லை. அது ஐந்து ரூபாய் இருக்கும். அதை எடுத்து கொண்டு கடைத்தெருவிற்கு வந்து பார்த்தால் கூட்டம் அதிகமாக உள்ளது. பெரிய கடையில் கூட கூட்டம் அதிகமாக தான் இருந்தன. ஆனால் வேலைக்கு போகும் மக்கள் தான் பாவம் கை, கால் எல்லாம் அயர்ந்து போகும் வரையில் நின்று கொண்டிருப்பார்கள்.

முடிவுரை
               
தீபாவளிப் பண்டிகை என்றாலே மக்கள் அனைவரும் எண்ணெய் குளியில் என்ற பழக்கம் இன்றைக்கும் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர் மக்கள். கோவிலுக்கு செல்லுதல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளம், இனிப்பு வகைகளும், புத்தாடைகளும் நினைவுக்கு வருகின்றது. அதோடு சத்தம் அதிகமாக இருக்கும் வண்ண வெடிகள் வெடித்து மகிழ்வதும் ஒருபுறம் நடக்கிறது. இவ்வாறு கலாப்ரியா அவர்கள் மாக்காளை நாவலின் மூலம் விஸ்வம் அண்ணாச்சியின் குடும்பம் தீபாவளி திருநாளை நம் உறவினர்களோடும், நண்பர்களோடும், அனைத்து மக்களோடும் மற்றும் பெரிய கோயிலில் உள்ள மாக்காளை அசை போடுவதன் மூலம் விஸ்வம் அண்ணாச்சி பின்னோக்கி நடக்கும் நிகழ்வுகளையும் இக்கட்டுரையின் மூலம் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சான்றெண் விளக்கம்
1. மாக்காளை – கலாப்ரியா., ப.21.

2. மேலது., ப.22.

3. மேலது., ப.22.

4. மேலது., ப.22.

5. மேலது., ப.22.

6. மேலது., ப.22.

7. மேலது., ப.23.

8. மேலது., ப.23.

9. மேலது., ப.23.

10. மேலது., ப.24.

11. மேலது., ப.24.

12. மேலது., ப.24.

13. மேலது., ப.24.

14. மேலது., ப.25.

துணைநூற் பட்டியல்
மாக்காளை – கலாப்ரியா 
சந்தியா பதிப்பகம்
 
புதிய எண் 77, 53 வது தெரு,
 
9-வது அவன்யூ,
அசோக் நகர்
  சென்னை 600083.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here