என் அலமாறியில் |கவிதை |முனைவர் ஆ.சாஜிதாபேகம்

என் அலமாறியில் கவிதை முனைவர் ஆ.சாஜிதாபேகம்
📜 என் அலமாறியில்

அடுக்கி வைக்கப்பட்ட – புத்தகங்கள்

ஆயிரம் கதை சொல்கிறது….!


📜 சில புத்தகங்கள் படிப்பதற்கு…!
சில புத்தகங்கள் பார்வைக்கு…!
சில புத்தகங்கள் என்னைப் புரட்டும்…!
சிலவற்றை நான்புரட்டுகிறேன்.!

 

📜 வாங்கி வைத்த பிறகுதான் தெரிகிறது
வேண்டுவதும் வேண்டாததும்….!!!

ஆகாத புத்தகங்கள்

கழிக்கப்பட வேண்டியவை அல்லவா….

 
📜 இருந்தாலும் அவ்வப்போது கைகட்டி

அலமாரி முன் நிற்கிறேன்….
இருந்து விட்டுப் போகட்டும்

அவைகளும் புத்தகம்தானே என்று
விலக முடியாமல் கலைத்துப் போடுகிறேன்..!
நான் கலைந்து விடாமல்…..!!!
 
கவிதையின் ஆசிரியர்,
முனைவர் ஆ.சாஜிதாபேகம்,

இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்,

காங்கேயம் வணிகவியல் கல்லூரி,

EBET அறிவிப்புப் பூங்கா,
நத்தக்காடையூர்,காங்கேயம் 
,
திருப்பூர் மாவட்டம்.

 

Leave a Reply