அன்பை விதை|கவிதை|முனைவர் து.சரஸ்வதி

அன்பை விதை - முனைவர் து. சரஸ்வதி
👣 அம்மாமுன் மண்டியிடு

      கரு சுமந்ததால்..!
👣 அப்பாவை வணங்கு

      தோளில்சுமந்ததால்..!
👣 ஆசிரியரிடம்  
நன்றி மறவாதே

      ஆற்றுப்படுத்தியதால்!

👣 உறவுகளை விட்டுக் கொடுக்காதே,

      உன் அடையாளம் என்பதால்..!

👣 உழைப்பை போற்று

      உன்னை உயர்த்தும் என்பதால்..!

👣 இயற்கையிடம் கற்றுக்கொள்

      இன்பத்தோடு நீ வாழ்வதால்..!

👣 இறைவனிடம் நம்பிக்கை கொள்

      இசைப்பட வாழ்வதால்..!

👣 உயிர்களிடம் இரக்கம் கொள்

      உனை உயிர்ப்போடு வாழ வைப்பதால்..!

👣 உடலைப் பேணிக் கொள்

      நீ யார் என்று காட்டுவதால்..!

👣 காலத்தை கவனித்து நட

      கண்டிப்பான ஆசான் என்பதால்..!

👣 கடமையை உள்ளத்தே வை

      கவலை இன்றி வாழலாம் நீ..!

👣 எண்ணங்களை தூய்மையாய் வை

      நினைத்தது கிடைக்கும் என்பதால்..!

👣 எளிமையாய் எவரிடமும் இரு

      ஏற்றங்களே பெறுவாய் நீ..!

👣 புன்னகையை அணிந்திடுவாய்

      புதுப்பொலிவும் பெற்று விடுவாய் நீ..!

👣 குழந்தைகளிடம் கனிவாய் இரு

      குற்றமற்றிருப்பாய் அப்போது நீ..!

👣 பணிவை பழகிக்கொள்

      பாதுகாப்பாய் இருப்பாய் நீ..!

👣 எவரிடமும் இனிமையாய் இரு

      இன்னலின்றி வாழ்வாய் நீ..!

👣 அன்பின்றி அமையாது உலகு

      அதனால் நீ அனைவரிடமும் பழகு..!


கவிதையின் ஆசிரியர்

                              முனைவர் து. சரஸ்வதி

                              உதவிப்பேராசிரியர்,

                             தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு)

     ஸ்ரீமதி தேவ் குன்வர் நானா  லால் பட் 

மகளிர் வைணவக் கல்லூரி, குரோம்பேட்டை, சென்னை -44.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here