👣 அம்மாமுன் மண்டியிடு
கரு சுமந்ததால்..!
👣 அப்பாவை வணங்கு
தோளில்சுமந்ததால்..!
👣 ஆசிரியரிடம் நன்றி மறவாதே
ஆற்றுப்படுத்தியதால்!
👣 உறவுகளை விட்டுக் கொடுக்காதே,
உன் அடையாளம் என்பதால்..!
👣 உழைப்பை போற்று
உன்னை உயர்த்தும் என்பதால்..!
👣 இயற்கையிடம் கற்றுக்கொள்
இன்பத்தோடு நீ வாழ்வதால்..!
👣 இறைவனிடம் நம்பிக்கை கொள்
இசைப்பட வாழ்வதால்..!
👣 உயிர்களிடம் இரக்கம் கொள்
உனை உயிர்ப்போடு வாழ வைப்பதால்..!
👣 உடலைப் பேணிக் கொள்
நீ யார் என்று காட்டுவதால்..!
👣 காலத்தை கவனித்து நட
கண்டிப்பான ஆசான் என்பதால்..!
👣 கடமையை உள்ளத்தே வை
கவலை இன்றி வாழலாம் நீ..!
👣 எண்ணங்களை தூய்மையாய் வை
நினைத்தது கிடைக்கும் என்பதால்..!
👣 எளிமையாய் எவரிடமும் இரு
ஏற்றங்களே பெறுவாய் நீ..!
👣 புன்னகையை அணிந்திடுவாய்
புதுப்பொலிவும் பெற்று விடுவாய் நீ..!
👣 குழந்தைகளிடம் கனிவாய் இரு
குற்றமற்றிருப்பாய் அப்போது நீ..!
👣 பணிவை பழகிக்கொள்
பாதுகாப்பாய் இருப்பாய் நீ..!
👣 எவரிடமும் இனிமையாய் இரு
இன்னலின்றி வாழ்வாய் நீ..!
👣 அன்பின்றி அமையாது உலகு
அதனால் நீ அனைவரிடமும் பழகு..!
கவிதையின் ஆசிரியர்
முனைவர் து. சரஸ்வதி
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு)
ஸ்ரீமதி தேவ் குன்வர் நானா லால் பட்
மகளிர் வைணவக் கல்லூரி, குரோம்பேட்டை, சென்னை -44.