வீழ்ந்து விடாத வீரம்|கவிதை|ச. குமரேசன்

வீழ்ந்து விடாத வீரம் - ச. குமரேசன் - கவிதை

வீழ்ந்து விடாத வீரம்

 
வல்லவனையும் வழுக்கி விடும்
வழுக்குப் பாறை தான் வாழ்க்கை…!

 

நம்பிக்கை என்னும்
நரம்பு கயிற்றைப் பிடித்து நட…
உந்தி உந்தி உயரே செல்..
நாளை நட்சத்திரமாய் ஒளிர்வாய்…!

 

வறுமையென்னும்
வளைவுகள்
வாழ்க்கை நதியை
தாமதப்படுத்தலாம்
 தடுத்து நிறுத்தி விடாது…!

 

வாடிய பயிர்கள் எல்லாம்
வளைந்து ஓடும்
நதிகளால்தான்
வளம் கொழிக்கின்றன…!

 

காற்றினால்
களவாடப்பட்ட
கருமேகங்களும் – தான்
கண்ணெதிரே
கனமழையை
கொடுக்கின்றன…!

 

உன் வீரம் வீழ்ந்து விடாது…
நம்பிக்கையோடு
நதியாக..
கனவுகளோடு
கார்மேகமாக..
தடைகளைத் தகர்த்தெறி
வீறுநடைபோடு வெற்றி உனதே..!

ஆசிரியர்

கவிஞர் பேரா. ச. குமரேசன்,

தமிழ் உதவிப் பேராசிரியர்,

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம்.

கவிஞர் பேரா. ச. குமரேசனின் படைப்புகளைக் காண்க..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here