🐟 கண்ணாடிச் சிறை
முட்டி மோதாத வாழ்க்கை
மீன்களின் பாடம்..!
🐟வண்ணக் கற்கள்
பாரங்களை அழகாகக் காட்டும்
மீன் தொட்டி…!
🐟செயற்கைச் சுவாசம்
கண்ணாடி அறையில் வாசம்
நிறைவான வாழ்க்கை..!
🐟கண்ணாடித் தொட்டி
முகம் பார்க்கும் அழகு
மீன்களின் வாழ்க்கை…!
🐟பிடித்திருக்கிறது மீனைத் தொட்டி
பிடித்திருக்கிறது மீனுக்குத் தொட்டி
பிடித்திருக்கிறது மீன் தொட்டி..!
🐟சுற்றிலும் பீங்கான் சுவர்கள்
தப்பிக்கத் தோன்றாத கைதிகள்
மீன் தொட்டி..!
🐟வலையை சுருட்டிவைத்து
ரசிக்கின்றான் மீன்களை
எதிரில் மீன் தொட்டி..!
🐟குரோட்டன்சுகளோடு பேச்சு
இயற்கை மீது ஆவல்
தொட்டியில் மீன்கள்..!
🐟தரையில் விழுந்த மீன்
துள்ளித் துள்ளி அழுகிறது
தொட்டியின் மரணம்..!
🐟துள்ளி விழுகிறது மீன்
துடிதுடிக்கிறது என்கிறான் மனிதன்
தப்பித்தலின் உத்தி..!
🐟துள்ளித் துள்ளி விழுகிறது.
அழுகை மறந்து சிரிக்கிறது குழந்தை
தவறி விழுந்த மீன்..!
🐟கூடுவிட்டு கூடு மாறினோம்
தொட்டி வைக்க இடமில்லை
கடலுக்கு சென்றன மீன்கள்..!
கவிதையின் ஆசிரியர்
முனைவர் அ எபநேசர் அருள் ராஜன்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி ( தன்னாட்சி)
சிவகாசி