உழைப்பு

 

சுறுசுறுப்பாய் ஓடு

சோம்பலை நீக்கு

விடியற்காலையே விழித்திடு!

 

விண்ணை தொட்டிட

எழுவாய் தோழா!

 

எறும்புகளைப் பார்

தனக்கு வேண்டியஉணவைத்

தானே சுமந்து செல்லும்

 

காக்கை குருவிகள் தங்கிட

களம் ஒன்று அமைத்திடுமே

 

உழைக்கும் மனிதனே

உயிராய் நினைப்பான் நாட்டை!

 

ஏறு பிடித்து சேற்றில் உழுதாதான்

சோற்றிலே கைவைத்து உண்ண முடியும்!

 

உழைப்புதான் ஆடவர்க்கு உயிர்

உழைப்புதான் புருஷ லட்சனம்பழமொழியே!

 

சுறுசுறுப்பாய் இரு

சோம்பலை நீக்கி

உழைத்து முன்னேறுவாய்

வாழ்வில் வெற்றி பெறுவாய்

கவிஞர் முனைவர் க.லெனின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here