விடை வனைய வருவீரோ? |கவிதை|கவிஞர் ச.நவநீதனா

விடை வனைய வருவீரோ - கவிஞர் ச.நவநீதனா

📜 நின் தமிழ்ப் பற்றிற்குச்


சரணங்கள் ஈடாமோ?!

உண்ணும் உணவிலுமே,


உட்புகுங் காற்றிலுமே,


பருகும் நீரிலுமே,


உள்ளொளியாய்,


அழகுத் தெய்வமாமே!


 

📜 வெகுளிகள் அதிகந்தான்,


வெளிச்சமாகச் சிலவனவே!


முடிச்சிட்ட முண்டாசினுள்,


அதென்ன? – முத்தமிழ் !


 

📜 அரசிக்கு மட்டுமே,


வித்தாரமாய்ப் பெருங்கோட்டை!


ஆயிரந்தான் கற்றாலும்,


உம் செங்கவிகட்கு ஈடாமோ?


 

📜 ஏனிந்தப் பெருங்காதலோ?

இமைக்கின்ற விழிகளிலே,


பார்வையொன்று சுடராக,

வேள்வியே நடத்தும்


விதிகள்தாம் எதற்கு?


 

📜 எம் கேள்விகட்குப் பஞ்சமில்லை!


செஞ்சொற்களுக்குத்


தானிங்கு, பெரும்பஞ்சம்…


ஓரிரு சொற்கள்


கொடுக்கவுமே மனமில்லையோ?


செம்பொற்சுடரே!


 

 

📜 ஓடுங்குருதியிலே


ஒருத்தி மட்டும் ஒய்யாரமாய்


உறைந்து கிடப்பது,


என்னவித மாயங்களோ?


 

📜 உறைந்திருக்குந்தான்!


துளித் திமிரும் தான்!!!


அவள் வாழுஞ் சிறையுளே,


மிடுக்காய் ஒரு திமிர்!


இல்லையெனில்,

வனப்பிற்குத்தான் ஈடாமோ?


 

📜 கருவிற்குமோர்

பெரும்கவியே!

உயிரிருக்குந்தான்,

கருவாக ஒன்றும்,

அதனுயிராக அரசியுமாய்,

ஓர் கவிதான் இயம்பித்தாருமே!


வெகுளி தீர்த்து


வெளிச்சமாகிப் போகிறேன்…

செகத்தீரே!


 

📜 ஊன் வளர்க்க,


பசிக்குமாமே!


ஏனோ, இங்கே!!


உயிர் வளர்க்க,

பசித்ததாமே! இங்கே!!


உயிர் வளர்க்க, பசித்ததாமே!

பார்அதியின் மாயங்கள்தாம் பாரும்!


 

கவிஞர் ச.நவநீதனா


இளங்கலை இரண்டாம் ஆண்டு,


வணிகவியல் துறை 


கே. பி. ஆர். கலை அறிவியல் மற்றும்
ஆராய்ச்சிக் கல்லூரி,

கோவை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here