விலையில்லா ஊடகம்|கவிஞர் ச.குமரேசன்

விலையில்லா ஊடகம் - கவிஞர் ச. குமரேசன்

🍵 அரசமர நிழலில்


ஆறுக்கு ஆறு


அளவமைந்த


கீற்றுக் கொட்டகை..!


 

🍵 தொண்ணூறுகளின்


பேருந்து நிறுத்த அடையாளம்,


எங்கள் ஊரின் இருட்டுக்கடை அது..!


 

🍵 கீரைப்பட்டி 


பாட்டியின் கைப்பக்குவம் !


பனிக்கால குளிர்,


வெயில் கால அயற்சி,


அனைத்தையும் போக்கும்


தித்திக்கும் தேநீருக்கு


பெயர் போன கடை அது..!


 

🍵 முதல் பேருந்துக்கு


முந்தி நிற்போருக்கு


பிரம்ம முகூர்த்த தீர்த்தம்..!


 

🍵 இரவு நேர


இறுதிப் பேருந்தில்


இறங்குவோருக்கு


இனிமையான அமிர்தம்..!


 

🍵 காலை நேர பணியாரம்,


மாலை நேர சுண்டல்


ஆறிப்போனாலும்


அங்கே பேச்சுக்கள்


சூடாக இருக்கும்..!


 

🍵 பித்தளையில்


பால் கொதிக்கும் பாத்திரமும்


குவளையில் ஆற்றித் தரும் தேநீரும் !


பாட்டியின்


வெற்றிலைப் போட்ட பற்களும்


ண்ணத்தில் ஒன்றாக வந்து நிற்கும்..!


 

🍵 பாமரரின்


உள்ளூர் செய்திகளுக்கு


உரமாகும் பாட்டி


அவளின் வாய்..!


படித்தவரின்


வெளியூர் செய்திகளுக்கு


வரமாகும் தாள்களுக்கு


அவள் தாய்..!


 

🍵 எங்கள் ஊரின்
 

முதல் வானொலி,


தொலைக்காட்சி,


நூலகம் எல்லாமே


பாட்டிக்கடை தான்!


விலையில்லா
அன்பான ஊடகம் அது..!


 

🍵 மங்கலான இராந்தல் ஒளியும்


மங்கும் நேரம்..


பத்து மணி ஆன பின்னும்


பாட்டியின் கடை


பகலாகத்தான் இருக்கும்..!


 

🍵 ஆண்டுகள் பல ஓடிய பின்..


அங்கே மின்விளக்குகள்


மின்ன மின்ன பேக்கரிகள் பெருகிவிட்டன..!


 

🍵 திரும்பிப் பார்த்தால்


விளம்பரமற்ற ஊடகம் !


விலையில்லா ஊடகம் !


என்று எதுவும் இல்லை !


 

🍵 தொகைக் கொடுத்து


தோண்டிப் பார்த்தாலும்,


இந்தத் தகவல்கள்


அதைப்போல்


சுவாரசியத்தை கொடுக்கவில்லை..!


 

🍵 எதிர்பார்க்கிறேன்


விலையில்லா ஊடகத்தை..!


கவிதையின் ஆசிரியர்

கவிஞர் ச. குமரேசன்,
 

உதவிப்பேராசிரியர்,
 

தமிழ்த்துறை,
 

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 

இராசிபுரம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here