வியர்வை பூக்கள்|கவிதை|காஞ்சி கிருபா

வியர்வை பூக்கள் - காஞ்சி கிருபா

🎯 இளைஞனே வா!


தோல்விகளால்..


துவண்டு விடாதே!!


 

🎯 முயற்சி மூங்கிலெடு


இனி…


உன் புல்லாங்குழலில்


வெற்றிப் பாக்கள்


இசைந்து வரும்
!

 

🎯 தூரத்தில்


வைத்துவிட்ட


நம்பிக்கை என்னும்


தூரிகை எடு!!


வெற்றி ஓவியங்கள்


உன் வீடு தேடி வரும்!!!


 

🎯 உன் வெற்றி


விரல்களுக்கு ஊக்கம் கொடு!!!


சாதனைக் கோலங்கள்


உன் வாசலை


வசீகரிக்கும்!!!


 

🎯 உன் எழுதுகோலுக்கு


எழுச்சிகொடு..


உன் தரித்திர


பக்கங்கள்


சரித்திரமாய் மாறும்!


 

🎯 தடை கற்களைக்


குயவனாய் மிதித்துப் போடு!!


உன் வியர்வை
துளிகளில்….


கிடைக்கும்


வெற்றி பாண்டம்!!


 

🎯 உன் உடலுக்கு


உழைப்பு கொடு!!


வியர்வை பூக்கள்


உனக்கு மாலையாகும்!!!


 

🎯 சிந்தனைச் சிறகுகளை


விரித்துபார்….


வெற்றி வானத்திற்கு…


உன் பயணம் தொடங்கும்…


 

🎯 இளைஞனே வா


தோல்விகளால்


துவண்டு விடாதே!!!!
                     

கவிதையின் ஆசிரியர்

காஞ்சி கிருபா

528/1 கட்டபொம்மன் தெரு,

விஷ்ணு நகர், தேனம்பாக்கம்,

சின்ன காஞ்சிபுரம், 631501

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here