🎯 இளைஞனே வா!
தோல்விகளால்..
துவண்டு விடாதே!!
🎯 முயற்சி மூங்கிலெடு
இனி…
உன் புல்லாங்குழலில்
வெற்றிப் பாக்கள்
இசைந்து வரும் !
🎯 தூரத்தில்
வைத்துவிட்ட
நம்பிக்கை என்னும்
தூரிகை எடு!!
வெற்றி ஓவியங்கள்
உன் வீடு தேடி வரும்!!!
🎯 உன் வெற்றி
விரல்களுக்கு ஊக்கம் கொடு!!!
சாதனைக் கோலங்கள்
உன் வாசலை
வசீகரிக்கும்!!!
🎯 உன் எழுதுகோலுக்கு
எழுச்சிகொடு..
உன் தரித்திர
பக்கங்கள்
சரித்திரமாய் மாறும்!
🎯 தடை கற்களைக்
குயவனாய் மிதித்துப் போடு!!
உன் வியர்வை துளிகளில்….
கிடைக்கும்
வெற்றி பாண்டம்!!
🎯 உன் உடலுக்கு
உழைப்பு கொடு!!
வியர்வை பூக்கள்
உனக்கு மாலையாகும்!!!
🎯 சிந்தனைச் சிறகுகளை
விரித்துபார்….
வெற்றி வானத்திற்கு…
உன் பயணம் தொடங்கும்…
🎯 இளைஞனே வா
தோல்விகளால்
துவண்டு விடாதே!!!!
கவிதையின் ஆசிரியர்
காஞ்சி கிருபா
528/1 கட்டபொம்மன் தெரு,
விஷ்ணு நகர், தேனம்பாக்கம்,
சின்ன காஞ்சிபுரம், 631501