மலை மண்மக்கள் பளியர் |கவிதை |ம.ஆன்றிஷா

மலை மண்மக்கள் பளியர் - கவிதை - ம.ஆன்றிஷா

🍄 மலைமுகடுகளில்


தஞ்சம் புகுந்து


இயற்கையின் மடியில் தவழ்ந்த


இயற்கை காவலர்கள்..!


 

🍄பசித்த வயிறு


படிப்பில்லா வாழ்க்கை


அரிசி உணவிற்கு ஏங்கும்


விழிகள் கொண்ட


வறுமையின் குழந்தைகள்..!


 

🍄விரல் விட்டு உடைகளை


எண்ணும் உலகில்


கந்தல் கசக்கி கட்டிய


ஆதிக்குடிகள்..!
.


 

🍄குறுங்குறிஞ்சி பூக்கள் நடுவில்


மனம் போல் வாழாமல்


மனம் மரத்து வாழும்


இராஜபாளையம் மேற்கு


மலைத்தொடர் பழையர்குடி


அதுதான் பளியர்குடி..!


                                                                                                                

            கவிதையின் ஆசிரியர்                      

ம.ஆன்றிஷா

பதிவுஎண்-22113154022011

முனைவர் பட்ட ஆய்வாளர்

தெ.தி.இந்துக்கல்லூரி

நாகர்கோவில் -02.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here