✒️ நான் இப்படி தான்..!
தமிழ் மொழியை நேசிப்பவன்
பிற மொழியை மதிப்பவன்
என்னை மதிபவர்களை மதிப்பவன்
என்னை மிதிபவர்களை மண்ணிபவன்
✒️ நான் இப்படி தான்..!
சிறியவையும் என்னை மகிழ்விக்கும்
உறவுகள் என்னை ஏமாற்றும் – இருப்பினும்
நான் இப்படி தான்..!
✒️ இயற்கையின் காதலன் நான் !
புத்தகங்களின் வாசகன் நான் !
பேனாவின் மைந்தன் நான் !
பயணங்களின் நேசன் நான் !
தனிமையின் காதலன் நான் !
புகழ்ச்சிக்கு எதிரானவன் நான் !
வெற்றியில் மகிழ்பவன் நான் !
தோல்வியில் கற்றுகொள்பவன் நான் !
கவியின் வாசகன் நான் !
வாழ்கையின் நேசன் நான் !
நான் இப்படி தான்..!
கவிதையின் ஆசிரியர்,
கவிஞர் ச.யோகேஸ்குமார்,
மூன்றாமாண்டு இளங்கலை நிர்வாகவியல்,
KPR கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்,