நான் இப்படி தான்…! |கவிதை|யோகேஷ் குமார்.ச

நான் இப்படி தான்…! யோகேஷ் குமார்.ச

✒️ நான் இப்படி தான்..!


தமிழ் மொழியை நேசிப்பவன்


பிற மொழியை மதிப்பவன்


என்னை மதிபவர்களை மதிப்பவன்


என்னை மிதிபவர்களை மண்ணிபவன்

 



✒️ நான் இப்படி தான்..!


சிறியவையும் என்னை மகிழ்விக்கும்


உறவுகள் என்னை ஏமாற்றும் – இருப்பினும்


நான் இப்படி தான்..!



 

✒️ இயற்கையின் காதலன் நான் !


புத்தகங்களின் வாசகன் நான் !


பேனாவின் மைந்தன் நான் !


பயணங்களின் நேசன் நான் !


தனிமையின் காதலன் நான் !


புகழ்ச்சிக்கு எதிரானவன் நான் !


வெற்றியில் மகிழ்பவன் நான் !


தோல்வியில் கற்றுகொள்பவன் நான் !


கவியின் வாசகன் நான் !


வாழ்கையின் நேசன் நான் !


நான் இப்படி தான்..!
         

 

கவிதையின் ஆசிரியர்,

கவிஞர்  ச.யோகேஸ்குமார்,

மூன்றாமாண்டு இளங்கலை நிர்வாகவியல்,

KPR கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோயம்புத்தூர்,

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here