நவகிரகங்கள் பற்றிய தகவல்கள்

நவகிரகங்கள் பற்றிய தகவல்கள்
      தமிழர்களின் இந்து சமயக் கோவில்களில் நவகிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நவகிரகங்களைத் தமிழில் கோள்கள் என்கிறோம். ஒருவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கிற ஒன்றாக நவகிரகங்கள் அமைந்துள்ளன. வாழ்க்கையில் ஏற்படும் சுக-துக்கங்கள், ஏற்ற-இறக்கங்கள், தடங்கல்கள்-தடைகள், சிக்கல்கள் -ஆபத்துகள் எனச் சகல நிகழ்வுகளையும் இந்த நவகிரகங்களே தீர்மானிக்கின்றன.  ஒருவரது முன்வினைப் பயன்களைப் பொறுத்தே நவகிரகங்கள் அவரவர் வாழ்க்கையில் பின்தொடர்கிறது. நவகிரகங்கள் ஒருவரது வாழ்வில் விதியை தீர்மானிக்கும் காரணியாக விளங்குகிறது. இந்த நவகிரகங்களே நமக்கு வருகின்ற பிரச்னைகளுக்கான தீர்வையும், வழியையும் காட்டுகிறது.

1.சூரியன் (ஞாயிறு)
காசியப முனிவரின் குமாரர்.
ஒளிப்பிழம்பானவர்.
நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.

சிம்மராசிக்கு அதிபதி.
நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.

மனைவி – சாயா, சரண்யா

திக்கு – கிழக்கு

அதிதேவதை – அக்னி
ப்ரத்யதி
தேவதை – ருத்திரன்

தலம் –  சூரியனார் கோவில்

நிறம் – சிவப்பு

வாகனம் – ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்

தானியம் – கோதுமை

மலர் – செந்தாமரை , எருக்கு

வஸ்திரம் – சிவப்பு

ரத்தினம் – மாணிக்கம்

அன்னம் – கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்
2.சந்திரன் (திங்கள்)
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர்.
வளர்பிறையில் சுபராகவும்,
தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.

மனைவி – ரோகிணி

கடக ராசிக்கு அதிபதி.

திக்கு -தென்கிழக்கு

அதிதேவதை – ஜலம்
ப்ரத்யதி
தேவதை – கௌரி

தலம் – திருப்பதி

நிறம் – வெள்ளை

வாகனம் – வெள்ளைக் குதிரை

தானியம் – நெல்

மலர் – வெள்ளை அரளி

வஸ்திரம் – வெள்ளாடை

ரத்தினம் – முத்து

அன்னம் – தயிர் சாதம்

3.அங்காரகன் (செவ்வாய்)
இவர் வீரபத்திரர் அம்சம்.
சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர்,

பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம்,
விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.

மனைவி –  சக்தி தேவி

திக்கு -தெற்கு

அதிதேவதை – நிலமகள்
ப்ரத்யதி
தேவதை – க்ஷேத்திரபாலகர்

தலம் – வைத்தீசுவரன் கோவில்

நிறம் – சிவப்பு

வாகனம் – ஆட்டுக்கிடா

தானியம் – துவரை

மலர் – செண்பகப்பூ, சிவப்பு அரளி

வஸ்திரம் – சிவப்பு ஆடை

ரத்தினம் – பவளம்

அன்னம் – துவரம் பருப்பு பொடி சாதம்
4.புதன் (அறிவன்)
இவர் சந்திரனுடைய குமாரர்.
தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.

மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி

மனைவி – இலா

திக்கு – வட கிழக்கு

அதிதேவதை – விஷ்ணு
ப்ரத்யதி
தேவதை – நாராயணன்

தலம் – மதுரை

நிறம் – வெளிர் பச்சை

வாகனம் – குதிரை

தானியம் – பச்சைப் பயறு

மலர் – வெண்காந்தள்

வஸ்திரம் – வெண்ணிற ஆடை

ரத்தினம் – மரகதம்

அன்னம் – பாசிப்பருப்பு பொடி சாதம்

5.குரு (வியாழன்)
இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர்.

இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
பூரண சுபர்.
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.

மனைவி – தாரா

திக்கு – வடக்கு

அதிதேவதை – பிரம்மா
ப்ரத்யதி
தேவதை – இந்திரன்

தலம் – திருச்செந்தூர்

நிறம் – மஞ்சள்

வாகனம் – மீனம்

தானியம் – கடலை

வஸ்திரம் – மஞ்சள் நிற ஆடை

ரத்தினம் – புஷ்பராகம்

அன்னம் – கடலைப் பொடி சாதம் , சுண்டல்.

6.சுக்கிரன் (வெள்ளி)
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர்.
சுபர். ரிஷபம்,
துலாம் ராசிகளுக்கு அதிபதி.

மனைவி – சுகிர்தி மற்றும் உர்ஜஸ்வதி    

திக்கு – கிழக்கு

அதிதேவதை – இந்திராணி
ப்ரத்யதி
தேவதை – இந்திர மருத்துவன்

தலம் – ஸ்ரீரங்கம்

வாகனம் – முதலை

தானியம் – மொச்சை

மலர் – வெண் தாமரை

வஸ்திரம் – வெள்ளாடை

ரத்தினம் – வைரம்

அன்னம் – மொச்சைப் பொடி சாதம் .

7.சனி
இவர் சூரியனுடைய குமாரர்.
பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர்.

சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.

மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.

மனைவி – நீலாவதி

திக்கு – மேற்கு

அதிதேவதை – யமன்
ப்ரத்யதி
தேவதை – பிரஜாபதி

தலம் – திருநள்ளாறு

நிறம் – கருமை
வாகனம் – காகம்

தானியம் – எள்

மலர் – கருங்குவளை, வன்னி

வஸ்திரம் – கருப்பு நிற ஆடை

ரத்தினம் – நீலம்

அன்னம் – எள்ளுப்பொடி சாதம்

8.ராகு

இவர் அசுரத்தலையும், நாக உடலும் உடையவர்.

மிக்க வீரம் உடையவர்.

கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.

மனைவி – சிம்ஹி

திக்கு – தென் மேற்கு

அதிதேவதை – பசு
ப்ரத்யதி
தேவதை – பாம்பு

தலம் – காளத்தி

நிறம் – கருமை

வாகனம் – நீல சிம்மம்

தானியம் – உளுந்து

மலர் – மந்தாரை

வஸ்திரம் – கருப்பு நிற ஆடை

ரத்தினம் – கோமேதகம்

அன்னம் – உளுத்தம் பருப்புப்பொடி சாதம்

9.கேது
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர்.

சிகி என்றும், செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.

மனைவி – சித்திரலேகா

திக்கு – வட மேற்கு

அதிதேவதை – சித்திரகுப்தன்
ப்ரத்யதி
தேவதை – பிரமன்

தலம் – காளத்தி

நிறம் – செம்மை

வாகனம் – கழுகு

தானியம் – கொள்ளு

மலர் – செவ்வல்லி

வஸ்திரம் – பல நிற ஆடை

ரத்தினம் – வைடூரியம்

அன்னம் – கொள்ளுப்பொடி சாதம்

நவகிரக தோசம் போக்கும் சில பொதுவான வழிமுறைகள்
🎯காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல்.

🎯வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.

🎯தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.

🎯கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும்.

🎯கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தை கூட்டும்.

🎯வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும் தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.

🎯தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும்: பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.

🎯வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.

🎯பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால், வீட்டிலுள்ள பீடைகள் அகலும்.
🎯16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு உகந்தது.

🎯பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும்; கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.

🎯அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.

🎯சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.

🎯இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோசம் நீங்கும்.

🎯வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்.

மேற்கண்ட செய்திகள் அனைத்தும் புலனக்குழுவில் வெளிவந்தவைகள்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here