தாழம்பூ|கவிதை| நா.மோகனசெல்வி மனோகரன்

தாழம்பூ-கவிதை -நா மோகன செல்வி மனோகரன்
🌺 மடல் விரித்த
மங்கையாய்
மணநாளில் !
மங்கலமாய் இதழ் வெடிக்கும்

இளம் தாழம்பூவே..!

 
🌺 பூத்துக்குலுங்கும்

புகழ் உனக்கு இல்லை !

புதருக்குள் மண்டி மனம் வீசும்!

மங்கை நீ

மணக்கும் அழகி !

 
🌺 இதழ்கள் அழகிய

ஜடைப் பின்னலில்

பின்னிப் பிணைந்து

இணைந்து ஊஞ்சலாட…
 

🌺 நறுமணமும் நகைக்கொண்டு

வெட்கப்பட்டு கொண்டது..!

வெள்ளை வீச்சருவாளாய்

மனதை  அள்ளியது..!

 
🌺 நறுமணமடல் மங்கையவள்

புதியதாய் பூத்திடவே..!

கருணாகமும் இடம் தேடி தவழ்ந்தது!

தடம் பதித்த கால்வாய் நீரும்

கண்ணீர் துளிபட காத்துக் கிடந்தது!

 
🌺 மலர்விற்கான விழா 

திருமண வைபோகம்

வரவேற்பில் முதலிடமாய்

சாரம் கொண்டாய்..!


 

🌺 தாழம்பூவே!

விதி செய்யும் நாட்களும்

வினாக்குறிகளாக

மாதங்களை நோக்கி

மலர்விற்காக….


 

கவிதையின் ஆசிரியர்,
கவிஞர் முனைவர் நா மோகன செல்வி மனோகரன்
உதவிப்பேராசிரியை,
தமிழ்த்துறை,
குமுதா கல்வியியல் கல்லூரி,
நம்பியூர், கோபிசெட்டிபாளையம்,
ஈரோடு மாவட்டம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here