காற்றோடு காற்றாக|ச. கார்த்திக்

காற்றோடு காற்றாக - ச. கார்த்திக்
🌳குழந்தையின் உரையாடல்

எந்த புத்தகத்திலும்

அச்சடிக்கப்படவில்லை.

🌳காடுகள் எரிப்பதற்கே

ஒரு மரத்தினால்
ஆன,

தீக்குச்சி தான் தேவைப்படுகிறது.

🌳ஒரு முறையாவது

ரயிலில் பயணம் செல்வோம்

தந்தையின் ஒரு ஆசை.

🌳கொஞ்சம்

இருள் இருப்பதே

நட்சத்திரம் இரசிக்க தான்.

🌳கோவில் கோபுரத்தில்

உலவிக் கொண்டு வருகிறது

புறா.

🌳எத்தனை முறை எழுதினாலும்

அதனோடு,

எழுத்து பிழைகள் பிறக்கிறது.

🌳இழப்பதை நினைத்து

இருப்பதை,

இழந்து விடுகிறோம்.

🌳கூவுகின்ற சேவலுக்கு

தெரியதா ஒன்று

தன்னைப் பலியிடுவார்கள்
என்று!

தெரிந்து இருந்தால்
இன்று!

கூவியே இருக்காது.

🌳நானொரு

ஒற்றுப்பிழை

அவள்

என் கையில்

சேராமல் போனதால்.

🌳மழைக்காலத்தில்

என் அம்மாவின் போராட்டம்

சமையில் அறையின்

விறகுடன்.

🌳காலத்தால் மறைக்க

முடியாதது,

என் எழுத்து தான்.

🌳புத்தகம்  படிப்பவர்கள்

மனிதனிடம் சற்று

விலகியே தான் இருப்பார்கள்..

🌳எவ்வளவு

பெரிய வானம்
இருந்தாலும்,

அதனைப் பார்க்க

வைக்கம் ஒன்று நிலவு தான்.

🌳மழையில் கொஞ்சம்

நனையத்தான் ஆசை

இலைகள் எல்லாம் சேர்ந்து

மறைத்து விடுகின்றன

தவிக்கின்ற மரக்கிளைகளை.

🌳குளிரின் நடுக்கத்தோடு

எதிர் பார்த்துக்கொண்டு

இருக்கிறேன்,

ஒரு தேனீர் கோப்பையுடன்.

🌳பழமையை மறந்து விடுகிறோம்

இன்று,

புதுமைக்கு வந்தப் பிறகு.

🌳இத்தனைக்குப் பிறகு

மீண்டும்
ஏறத்தொடங்குகிறது

எறும்பு!

கோபித்துக் கொள்ளாத கிளை.

🌳என்றைக்கும் போல

வேலைக்குச் சென்று

குடித்துவிட்டு தான் வந்தார்.

🌳என்னை எப்போதும்

சோதித்து பார்த்துக் கொண்டே

இருக்கிறது புத்தகம்.

🌳நதிகள் எல்லாம்

நீதி கேட்பதில்லை

மனிதன் தான்

நதியை வைத்து
நீதிக் கேட்கிறான்.

🌳கடலை அழித்து

வீடு கட்டி

அதில்
வாஸ்து பார்த்து
மீன் வளர்கிறான்.

🌳மழை வராத

நாளை வா

இன்று நெல் காய்கிறது.

🌳மரத்தின் இலைகள்

உதிர்ந்த பிறகு

மற்றொரு துளிர்

தாங்கி பிடிக்கிறது.

🌳மூங்கி(ல்)லுக்கு உயிர் பெருகிறது

ஏதொவொரு பறவையின்

செயலில்.

🌳நிலவை அழகாக

பார்ப்பதற்கு

இருளின் பேரழகு.

🌳காகிதம் எல்லாம்

இந்த சிறுவன் மூலம்

கப்பலாக மாறுகிறது

மழைக்காலத்தில்.

🌳இன்றைய சாலை எல்லாம்

பூக்களும், மாலையாய் நிறைந்து

இருக்கிறது

ஏதோவொரு பிணத்தின் மூலம்.

🌳கை விரல் பட்டதும்

வெக்கம் கொள்கிறது(தே)

தொட்டாச் சிணுங்கி.

🌳பூமியை சுற்றியே

வருகிறது காதல்

கொண்ட நிலா.

🌳கொடிகளை

அலங்கரிக்கின்றன(து)

பூக்கள்.

🌳மழை முடிந்த

பொழுதில்

வீட்டுக் கூரையில்

சொட்டுகிறது நீர்.

🌳பயணம் என்பது ஊர்

பெயர் தெரியாத வரை

நன்றாகவே இருக்கும்.
கவிதையின் ஆசிரியர்
ச. கார்த்திக்
முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here