கடவுளின் தேசம்!  கல்லறையின் வசம்! |கவிதை|ப.பிரபாகரன்

கடவுளின் தேசம்! கல்லறையின் வசம்! கவிதை ப பிரபாகரன்
🎯 பொழுது விடியும் முன்னே

விழித்தெழுவோம் என்றே

உறங்கினோம் !

 
🎯 விடிந்தும் எழவில்லை

விழித்தெழும் நிலையிலும்

நாங்கள் இல்லை!

 
🎯 நிலச்சரிவே!

நும்பசிக்கு உணவாகாது

தப்பினோம் பலமுறை!

 
🎯 காட்டாற்று வெள்ளமே!

கருணையில்லையோ நுமக்கு!

அபாயம் அறியும் முன்னே

ஏப்பமிட்டுச் சென்றாயே!

 
🎯இறந்தபின் புதைக்கும் வழக்கம்

எங்குமுண்டே! இதுபோல்..

உயிரோடு புதைக்கப்படுவோமென

ஒருபோதும் நினைத்ததில்லையே!
 
🎯நேற்று நாங்கள் உறங்கியது

எங்கள் வீட்டு மெத்தையில்தான்!

இன்று புதைந்து கிடந்ததோ

பன்னிரண்டு கிலோமீட்டருக்கு

அப்பால்!

 
🎯அட கடவுளின் தேசமே

இனி கல்லறையின் வசமா?
 
🎯நாயைக் கொண்டு கண்டுபிடித்தீர்

இறுதிக்கடன் செய்ய உதவினீர்
நன்றிகள் நாயகர்களே!!

 
ப.பிரபாகரன்

த/பெ பி.பன்னீர் செல்வம்,

எண்: 3-92, தெற்குத் தெரு,
பல்லபுரம்,
 இலால்குடி தாலுக்கா,
திருச்சி மாவட்டம்.

அஞ்சலக எண்  – 621712;

கைபேசி – 9843912987

email: karpraba@gmail.com

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here