நாம் சுதந்திரத்தை பெற்றோமா…….!
இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா…..!
கடைக்கூழ் கஞ்சி என்றாலும்
பகிர்ந்து உண்ட காலம் அதுவன்றோ………. !
10 பேரின் உணவை ஒருத்தரே உண்பது போல்
நடித்து லைக் சிறிது உண்டு பெரிது வீணடிக்கும்
காலம் இதுவன்றோ………………!
நாம் சுதந்திரத்தை பெற்றோமா…….!
இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா…..!
நாடு விடுதலை பெற தொண்டை தண்ணீர் வற்றுமளவில்
புரட்சி மிக்க பாடலை பாடிய காலம் அது ஒன்றோ…………..!
பிறர் பாடலை திருடி வாய் அசைத்து ரீல்ஸ் போட்டு
பணத்தை பார்க்கும் காலம் இது இதுவன்றோ………………!
நாம் சுதந்திரத்தை பெற்றோமா…….!
இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா…..!
ஒருவனுக்கு ஒருத்தி சிலர் உடன்கட்டை ஏறி
அன்பைக் காட்டிய காலம் அதுவன்றோ
ஒரு கணவருக்கு பல மனைவிகளும்…………………!
ஒரு மனைவிக்கு பல கணவர்களும்…………………..!
லிவ்விங் டுகெதர் என்று வாழும் காலம் இதுவன்றோ……………………..!
நாம் சுதந்திரத்தை பெற்றோமா…….!
இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா…..!
முல்லைக்கு தேர் தந்த பாரி போன்ற வள்ளல்கள்
பலர் வாழ்ந்த காலம் அதுவன்றோ………………………………………..!
தேர் சக்கரம் உருண்டு தன்னை நோக்கியே வந்தாலும்
செல்பி எடுத்து சாகும் காலம் இதுவன்றோ…………………………..!
நாம் சுதந்திரத்தை பெற்றோமா…….!
இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா…..!
சித்திரங்களும் கதைகளும் கவிதைகளும் கொஞ்சித் தமிழில் மிஞ்சி
விளையாடிய காலம் அதுவன்றோ………………………………….!
ஏ ஐ டி உயிர் கொடுத்து மனித மூளையின் உயிரை எடுத்து மாற்றுரு
கொடுக்கும் காலம் இதுவன்றோ……………………………………..!
நாம் சுதந்திரத்தை பெற்றோமா…….!
இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா…..!
காலங்கள் மாறலாம் யுகங்களும் மாறலாம்
என்றும் மாறாத ஒன்று பாரம்பரியமும் பண்பாடும்…………………!
சுதந்திரம் நம்மை ஆட்சி செய்தால் அழிவு நிச்சயம்
நாம் சுதந்திரத்தை ஆட்சி செய்தால் ஆக்கம் நிச்சயம்……………..!
இப்பொழுது சொல்லுங்கள்
நாம் சுதந்திரத்தை பெற்றோமா………………………….?
இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா……………………………………?
கவிதையின் ஆசிரியர்
பேராசிரியர் த. கருணா
தமிழ்த்துறை தலைவர்
கிறிஸ்தவ அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி
ஆலம்பாடி (கிராமம் ), சிக்கதிருப்பதி (அஞ்சல்)
மாலூர் வட்டம். கோலார் (மாவட்டம் ),
கர்நாடக(மாநிலம்) 563150.