மொழிப்போர் தியாகிகள்|பேரா. ச. குமரேசன்|கவிதை

மொழிப்போர் தியாகிகள்

மொழிப்போர் தியாகிகள்

 

1. தமிழினி..!

கைகளில் பதாகை ஏந்தி…

கடுமையான குரலொலிகள்..

வேற்று மொழி திணிப்பை எதிர்த்து..

வேகமான போராட்டம்..

பதாகை மேல் பதற்றமான வாசகம்..

“இந்தி  ஒ லி க! “

 

2. அறிவான மொழி

வெளி நாட்டுக்காரரோடு

வெளுத்து வாங்கும் ஆங்கிலம்..

மூன்றாம் வகுப்பு தாண்டாத

முத்துசாமியண்ணன்..

அவரின் முகவரியை

ஆங்கிலத்தில் எழுதி கேட்டேன்..

எனக்கு தெரியாது தம்பி

 “ஏ பி சி டி”

 

3. தியாகி

மத்திய அரசின் போட்டித் தேர்வு..

மொழியெதிர்ப்பு போராட்டத்தில்

முந்தி நின்ற முகேசோடு..

அரசுப் பள்ளியில் பயின்ற

அறிவொளியும் போனாள்

அரைகுறை ஆங்கிலத்தோடு…

தேர்வு முடிவில் தோல்வியுற்ற

அறிவொளி..

முன்னே சென்ற

முகேசிடம் கேட்டாள்..

“நீ எப்படி பாஸான? “

முகம் பார்க்காமல் சொன்னான்

முனகியவாறு..

“இந்தியில் எழுதினேன்”

 

கவிஞர் பேரா. ச. குமரேசன்,

தமிழ் உதவிப் பேராசிரியர்,

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here