மெய்ப்பொருள்‌ நாயனார்‌ வரலாறு

மெய்ப்பொருள் நாயனார்

மெய்ப்பொருள்‌ நாயனார்‌

      சேதி நாட்டில்‌ திருக்கோவலூரில்‌ அரசாட்சி புரிந்த மன்னரே மெய்ப்பொருள்‌ நாயனார்‌ ஆவார்‌. சிவனடியார்களின்‌ வேடத்தை மெய்ப்பொருளாக இவர்‌ கருதியதால்‌ மெய்ப்பொருளார்‌ என்று மக்களால்‌ அழைக்கப்‌பட்டார்‌. பகை அரசர்களை வென்று நாட்டைக்‌ கண்ணெனக்‌ காத்தார்‌. சிவபெருமான்‌ மீதும்‌ அடி.யவர்கவின்‌ மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார்‌. ஆலயங்களில்‌ பல திருத்தொண்டுகள்‌ புரிந்து வந்தார்‌. தனக்கு உடைமையான பொருள்கள்‌ அனைத்தும்‌ அடியவர்க்கு உடையது என்று கருதினார்‌ மெய்ப்பொருளார்‌.

       மெய்ப்பொருளார்‌ மீது முத்தநாதன்‌ என்ற ஓர்‌ அரசன்‌ பகை கொண்டான்‌. அவன்‌, “மெய்ப்பொருளாரை போரில்‌ வெல்ல இயலாது, அதனால்‌ வஞ்சகத்தாலேயே கொல்ல வேண்டும்‌” என்று தீர்மானித்தான்‌. சிவனடியார்கள்‌ மீது மெய்ப்பொருளார்‌ கொண்டிருந்த அரும்பக்தியை அறிந்திருந்தான்‌ முத்தநாதன்‌.

      ஒருநாள்‌ இரவு முத்தநாதன்‌ அடியவர்‌ வேடம்‌ பூண்டான்‌. இடுப்பில்‌ ஒரு கத்தியை மறைத்து வைத்தான்‌. மெய்ப்பொருளாரின்‌ அரண்மனைக்கு வந்தான்‌. அரண்‌ மனையிலிருந்த காவலாளி தத்தன்‌, மன்னர்‌ உறங்குவதாகக்‌கூறி அடியவர்‌ வேடத்திலிருந்த முத்தநாதனைத்‌ தடுத்தான்‌.

      அவன்‌ காவலாளியிடம்‌, “நான்‌ அரசர்க்கு வேதப்‌பொருளைக்‌ கூறும்பொருட்டு வந்துள்ளேன்‌. என்னைத்‌தடுக்காதே!” என்று தத்தனை விலக்கிவிட்டு அரண்‌மனைக்குள்‌ நுழைந்தான்‌.

       அப்போது மெய்பொருளார்‌ கட்டிலில்‌ உறங்கிக்‌கொண்டிருந்தார்‌. அவரது அருகில்‌ அரசியார்‌ அமர்ந்து, மன்னர்க்கு விசிறிக்‌ கொண்டிருந்தார்‌. அடியவழைக்‌ கண்டதும்‌ அரசியார்‌, மெய்ப்‌பொருளாரைஎழுப்பினாள்‌. மெய்ப்பொருளாரும்‌ விழித்து அடியவரைக்‌ கண்டதும்‌ எழுந்து வணங்கினார்‌.

       “அடியவரே! இந்நேரத்தில்‌ என்னைக்‌ காண வந்ததன்‌ காரணம்‌ என்னவோ?” என்று கேட்டார்‌. உடனே அடியவர்‌ வேடத்திலிருந்த முத்தநாதன்‌, “மெய்ப்பொருளாரே! இறைவன்‌ என்னிடம்‌ ஆகமப்‌ பொருளொன்றைக்‌ கூறினார்‌. அதை நான்‌ ஓலையில்‌ குறித்து வைத்துள்ளேன்‌. அதைத்‌ தாங்களுக்கு உரைத்திடவே வந்துள்ளேன்‌! என்று நயமாகப்‌ பேசினான்‌.

      மெய்ப்பொருளாரும்‌, “சிவாகமத்தைக்‌ கேட்பது நான்‌ செய்த பாக்கியமன்றோ! உடனே அதை என்னிடம்‌ படித்துக்‌ காட்டுவீராக!” என்றார்‌.

       உடனே அடியவர்‌, “நான்‌ ஆகமத்தைப்‌ படிக்கையில்‌ உன்‌ மனைவியார்‌ அருகில்‌ இருக்கக்‌ கூடாது!” என்று கூறினான்‌. அகைக்கேட்டு நாயனார்‌, தன்‌ மனைவியை அவ்விடத்தை விட்டுப்‌ போய்விடுமாறு கூறினார்‌. அடியவர்‌ வேடம்‌ பூண்டிருந்த முத்தநாதனும்‌, இதுதான்‌ தக்கநேரம்‌ என்று, தன்‌ இடுப்பிலிருந்த ஒலையை எடுப்பதுபோல்‌, கத்தியை எடுத்து மெய்ப்பொருளாரைக்‌ குத்தினான்‌. தான்‌ குத்துப்பட்ட நிலையிலும்‌, மெய்ப்‌ பொருளார்‌ அடியவர்‌ வேடத்திலிருந்த முத்தநாதனை வணங்கியபடிச்சாய்ந்தார்‌.

    ஏற்கெனவே சந்தேகத்திலிருந்த தத்தன்‌, தற்செயலாக அரண்மனைக்குள்‌ நுழைய, அங்கே மன்னர்‌ மெய்ப்‌பொருளார்‌ அடியவரால்‌ குத்துப்பட்டதைக்‌ கண்டான்‌. உடனே தன்‌ உடைவாளை உருவி, அடியவரின்‌ மீது வீச முயன்றான்‌.

      அதைக்கண்ட மெய்ப்பொருளார்‌, “தத்தா! இவர்‌ அடியவர்‌. அவரை ஒன்றும்‌ செய்யாதே!” என்று தடுத்தார்‌. அதைக்கேட்ட தத்தன்‌ மன்னரிடம்‌, “நான்‌ இப்போது என்ன செய்ய வேண்டும்‌?” என்று கேட்டான்‌. மெய்ப்‌பொருளாரும்‌, “தத்தா] இவ்வடியவர்க்கு இவ்வூர்‌ மக்கள்‌ எவராலும்‌ தீங்கு நேராதபடி பாதுகாப்புடன்‌ அனுப்பி வைப்பாயாக!” என்று ஆணையிட்டார்‌.

      அரசனை அடியவர்‌ ஒருவர்‌ கத்தியால்‌ குத்திவிட்டார்‌ என்று அறிந்த அவ்வூர்‌ மக்கள்‌, முத்தநாதனைச்‌ சூழ்ந்து கொண்டார்கள்‌. ஆனால்‌ தத்தனோ, அவர்களைத்‌ தடுத்து மன்னரின்‌ ஆணையை அவர்களிடம்‌ கூறினான்‌.

       அடியவர்‌ வேடத்திலிருந்த முத்தநாதனை நகரின்‌ எல்லையில்‌ கொண்டுவிட்டு, அரண்மனை இரும்பி, மெய்ப்‌ பொருளாருக்குச்‌ செய்தியை அறிவித்தான்‌.

     அதுவரை உயிர்‌ பிரியாதிருந்த மெய்ப்பொருளார்‌ அதைக்கேட்டு, அடியவரைக்‌ காத்த தத்தனுக்கு நன்றி தெரிவித்தார்‌. அரண்மனையில்‌ இருந்தவர்களிடம்‌ அடியவர்‌ திருத்தொண்டை வழுவாது செய்யும்படிக்‌ கட்டளையிட்டார்‌. சிவனைச்‌ சிந்தித்தார்‌.

    அக்கணத்தில்‌ சிவபெருமானும்‌ நாயனாருக்குத்‌ திருக்காட்சி தந்தார். மெய்ப்பொருள்‌ நாயனாரைச்‌ சிவபதம்‌ சேர்த்தார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here