முல்லைப்பாட்டில் தமிழர் பண்பாடு |ஆய்வுக்கட்டுரை|முனைவர் இரா.வனிதாமணி

முல்லைப்பாட்டில் தமிழா் பண்பாடு - வனிதாமணி
முன்னுரை    
               
         தமிழரின் பண்டைய வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்துக் கொள்ள நமக்கு பயன்படுவது தமிழ்மக்களின் உயிர்நாடியாக விளங்கக்கூடிய தமிழ்மொழி ஆகும். எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும், பதினெண் கீழ்க்கணக்கும், சிலம்பும், மேகலையும், பழந்தமிழரின் சால்பை விளக்கி காட்டுகின்றன. தாம் வாழும் நிலத்தின் இயல்புக்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை முறையும், பண்பாடும் அமையும் என்பது பண்டைய தமிழா்களின் சிறப்பான கொள்கை ஆகும். ”பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம், நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை முன்னது “அகக்கூறு“ பின்னது புறக்கூறு, மேலும் நாகரிகம் சேர்ந்த பண்பாடு” என்பர்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
               
என தனக்கென முயலாது பிறர்க்கென வாழும் பண்பாளரால் தான் உலகம் நிலைபெற்றிருக்கிறது.

முல்லைப்பாட்டு ஒரு பார்வை
               
      தமிழகத்தை நில அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப்பாகுபடுத்திய நம் முன்னோர்கள் அந்நிலத்தின் வழி, அந்நில மக்களின் பண்பாட்டை வளர்த்துள்ளனர்.

“பண்பெனபடுவது பாடறிந் தொழுகல்”    (கலித்.133)
               
     கூறுகின்றது. பத்துப்பாட்டில் நான்கு ஆற்றுப்படைக் 103 அடிகளால் ஆன இப்பாட்டு அளவால் மிகச் சிறியது பாடியவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார். சங்க இலக்கியத் தொகை நூல்களுள் இவர் பாடியதாக வேறு எந்தப் பாடலும் காணப்படவில்லை. முல்லைப்பாட்டு, முல்லைத்திணையின் இயல்புகளை மட்டுமல்ல”

“வஞ்சி தானே முல்லையது புறனே”  (தொல் – புறந்-61)
               
     எனக் கூறுவதோடு வஞ்சித்திணை இயல்புகளையும் இயைத்துப் பாடுகின்றது. இவ்வகையி்ல் அகத்திணை ஒன்றினை முதன்மையாகக் கொண்டு, அதற்கு இயைபான புறத்திணையையும் சேர்த்து பாடும் ஓர் அரிய நூலாக முல்லைப்பாட்டு விளங்குகின்றது புறத்திணையான வஞ்சி, முல்லைத்திணையோடு நொடுக்கப்பட்ட போதிலும்,

“மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்           
                                             சுட்டி ஒருவா்ப் பெயா்கொளப் பெறாஅா்”  (தொல்.அகம்.நூ.57)
               
       என்னும் அகநூல் மரபைப் பின்பற்றி, பாட்டுடைத்தலைவனின் இயற்பெயரைச் சுட்டாகக் கூறாத அகப்பொருள் சார்ந்த இலக்கியமாக விளங்குகிறது. முல்லைத்திணைக்கு நிலம் காடு வஞ்சித்திணையின் நிலமும் காடேயாகும். இவ்வாறாக பல சிறப்புகளை உடைய முல்லைப்பாட்டில் தமிழா் பண்பாடானது சிறப்பான முறையில் அமைந்துள்ளன.

முல்லைப்பாட்டில் தமிழர் பண்பாடு
             
   மனித இனத்தைப் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தி தமக்குரிய செம்மையையும், உயர்வையும் எடுத்துக்காட்டுவது பண்பாடாகும். மேலும் ”உரைறுறந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற உள்ளப்பாங்கின் வெளிப்பாட்டையெ பண்பாடு, என்கிறோம்.

1.கற்பு நெறி
2.விரிச்சி
3.விளக்கு ஏற்றிடல்
4.காவல் காத்தல்
5.நாழிகை பார்த்தல்
ஆகியவற்றை பற்றிக் காண்போம்.

1.கற்பு நெறி           
         மனித வாழ்வில் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் காதலுக்கும், கற்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தலைவனுக்குத் தலைவியை அவளுடைய பெற்றோர்கள் உரிய சடங்குகளோடு திருமணம் புரிந்து கொடுப்பது கற்பு ஆகும்.
           
“செய்ர்நீர் கற்பிற் சேயிழை கணவ” (புறம்)
               
       கற்புடைமை கணவனின் புகழை மிருவந்நிம் என புற நானூறுப்பாடல் கூறுகின்றன. இதன் மூலம் மனைவியின் தூய்மையான கற்பு அவளுடைய தலைசிறந்த பண்பாடாகப் போற்றப்பட்டது. மனைவியின் கற்பு, கணவன் புகழை மென்மேலும் சிறப்பிக்கும் என்பதாகும்.
           
“முல்லை சான்ற கற்பு” 
        என்று கற்புடன் தொடா்புபடுத்திப் பேசப்படுகின்றது. போர் காரணமாகவோ அல்லது  பொருள் தேடல் காரணமாகவோ பிரிந்து சென்ற தலைவன் காலகாலத் தொடக்கத்திற்குள் வந்துவிடுவதாகக் கூறிப்பிரிவான் அவ்வாறு அவன் வரும்வரை ஆற்றியிருந்தல் தலைவியின் கடமை ஆகும். இதுவே முல்லைத்திணை என்று சிறப்பாகப் போற்றப்படுகின்றது. தலைவனது பிரிவினால் தலைவி துன்பப்படுகிறாள். பின்பனிக் காலத்தில் பிரிந்து செல்வம் தலைவன் கார் காலத்தில் திரும்பி வருவது இயல்பு. அதுவரை ஆற்றியிருத்தல் தலைவியின் கடமை ஆகும். தலைவன் ”ஆற்றியிரு” எனக் கற்பித்த சொல்லைக் கடப்பதுது கற்புநெறிக்கு மாறானது என்பதை எல்லாம் நினைத்து தலைவி ஆற்றியிருக்கின்றாள் இதனை,
“இன்துயில் வதியுறற் காணாள் துயா் உழந்து
                                 நெஞ்சு ஆற்றுப் படுத்த நிறைநபு புலம்பொடு”  (முல்.80)
               
         என்ற வரிகளின் மூலம் அறியலாம். மேலும் நம் தமிழா் பண்பாட்டில் கற்பு என்பது மிகவும் மிக்கியமான ஒன்றாக போற்றப்படுகின்றது.

2.விரிச்சி
               
          விரிச்சி என்பது நற்சொல்லாகும். இது சங்ககாலப் பழக்கவழக்கங்களுள் ஒன்றாகும். பழந்தமிழ் மக்களிடம் நிலவிய ஒரு நம்பிக்கை ஆகும். தாம் விரும்பி  மேற்கொள்ளும் செயல் நன்கு முடிதலை விரும்பி, அதற்கான நன்னிமிந்தம் பெறும் வகையில், ஊரின் புறந்தே, படியில் நெல்லும், மலரும் கொண்டு சென்று தெய்வத்தை வழிபட்டு நிற்பா். அப்பக்கம் செல்வோர் கூறும் சொல் தமக்கு ஏற்றதாக இருப்பின் தாம் மேற்கொள்ளும் செயல் இனிது நிறைவேறும் என நினைப்பது அக்கால மக்களின் நம்பிக்கையை உணா்த்துவதாகும்.

நெல்லொடு”
நாழி கொண்ட நறுவி முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது
பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப” (முல் -10)
என்ற பாடலின் மூலம் அறிய முடிகிறது.
 
“ஞால மூன்றடித்தாய முதல்வன்”
என்ற வாமன அவதாரச் செய்தி மூலம் அறியலாம்.

“மூவுலாகும் ஈரடியால் முறைநிரம்பா வகை
முடியத்தாவிய சேவடி”  (சிலப் 17-35)

“காலை யரும்பிப் பகலெல்லாம் போராகி
மாலை மலருமிந்நோய்” (குறள்1227)

       என்ற குறளின் மூலம் நாம் ஒப்பிட்டு பார்க்க முடிகின்றது. இவ்வாறாக, விரிச்சி கேட்பது என்ற நம்பிக்கை நம் பண்பாடாக விளங்குகின்றன.
3.விளக்கு ஏற்றிடல்           
       நம்முடைய வாழ்வில் விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நம்மிடையே இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கும் தன்மை விளக்கிற்கு உண்டு. விளக்கு இல்லா வீடு பொழிவிழந்துக் காணப்படும் அவ்வகையிலே” அரசனுக்கென அமைந்த பாசறையிலே திண்மையான பிடியமைந்த வாளினைக் கச்சோடு சோ்த்துக்கட்டிய மகளிர், பாவை விளக்கில் நீண்ட திரியை இட்டு, நெய் வார்க்கும் குழாயால் நெய் வார்த்து விளக்கேற்றினா்.இதனை,
விரவரிக் கச்சின் பூண்ட மங்கையர்
நெய்உமிழ் கரையர் நெடுந்திரிக் கொளீ
                                                    கைஅமை விளக்கம் நந்துதொறும் மாட்ட (முல் – 497)
       என்பதாகும்.

4.காவல் காத்தல்
               
           காவல் என்பது ஒரு முக்கிய சொல்லாக இருந்து வருகின்றது. பண்டைய காலம் முதலே காவல் காத்தல் ஒரு தொழிலாகவும் இருந்து வந்தது. பகைவர்களிடமிருந்து தம்முடைய உடைமைகளை பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. அரசனுக்கு காவலராக இருக்கும் மெய் காப்பாளா்கள் மன்னனைச் சூழ்ந்து காவலராக நின்றனா் என்பதை,

“துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப்
பெருமூ தாளர் ஏமம் சூழ”
      (முல்-50)

என்ற பாடலின் மூலம் அறியலாம்.

5.நாழிகை பார்த்தல்
     
           நாழிகை என்ற சொல், அக்கால மக்களிடையே புழக்கத்தில் இருந்து வந்தது. நாழிகை கணக்கா் என்பவா் தனியே இருந்தனா். அவா்கள் நாழிகையை அளர்து இவ்வளவு என்று அறியும் தொழிலனை செய்தனர். மேலும், கடல் சூழ்ந்த உலகத்தே பகைவரை வெல்லச் செல்கின்றவனே! உன்னுடைய நாழிகை வட்டிலிற்சென்ற நாழிகை இத்துணை காண்” என்று மன்னனுக்கு அறிவிக்கின்றனர், இதனை,

“பொழுதுஅளர்து அறியும், பொய்யா மாக்கள்
தொழுதுகாண் கையா், தோன்ற வாழ்த்தி
எறிநீா் வையகம் வெரீஇய செல்வோம் நின்
குறுநீர்க் கின்னல் இனைத்து”  (முல்-55)

     என்பவற்றின் மூலம் அறிய முடிகிறது. இவ்வாறாக, முல்லைப்பாட்டில் தமிழர் பண்பாடு இடம்பெற்றுள்ளன.

முடிவுரை
                 
       பண்டைய தமிழ் மக்கள் அளவற்ற இன்பத்துடன் இவ்வாழ்வில் ஈடுபட்டனர். தொழில் புரிவதை தலைவன் நம் உயிராக மதித்தனர். மகளிர் நம் கணவரைத் தம் உயிருக்கு நேராகக் கருதி வாழ்ந்தனா். மேலும், உணவு, உடை, அணிகலன்கள், உறையுள், வாணிகம், கலைகள், கல்வி, மொழி, நிலங்கள், விளையாட்டுகள், அரசியல் ஆகிய அணைத்திலும் சிறந்து விளங்கியும், பின்பற்றியும் வாழ்ந்து வந்தனா். முல்லைப்பாட்டில் தமிழா் பண்பாடு சிறப்புடன் வீற்றிருந்தது. இப்பண்பாட்டு முறையை நாமும் பின்பற்றி வாழ்ந்தால் நல்ல சிறப்பானதொரு வாழ்வை வாழலாம் என்பதில் ஐயமில்லை.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் இரா.வனிதாமணி,

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

குயின்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,

புனல்குளம், புதுக்கோட்டை 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here