மணிமேகலை ஒரு சீர்த்திருத்தவாதி

        தொடக்கக் காலத்தில்மனிதன் சமயங்கள் வாயிலாகவே தன்னுடையநம்பிக்கையை வளர்த்து வந்தான். அந்நம்பிக்கைகளுக்கு எந்தவொரு ஊறு விளைவிக்காமல் நடக்கவும்செய்தான். மனிதனின் உணர்ச்சிகளையும் கற்பனைகளையும்கதைகளாக வடிக்கத் தொடங்கினான். அந்தக் கதைகளின்போக்கு சிறப்புடையதாக அமையநிறைய வடிவங்களையும், கதாப்பாத்திரங்களின் ஆளுமைத்தன்மையினையும் கொண்டு வந்தான். அக்கதையின் வழியாகதான் நினைக்கின்ற உலகத்துஇயல்புகளை எல்லாம் உருவாக்கி நடமாடச்செய்தான். மக்களுக்கு நல்லவை நடக்கும்என்று நம்பி கற்பனைக்கும் எட்டமுடியாதக் கருத்துக்களைக் கூட  நம்பவைத்தான். அந்த வகையில்காப்பியங்கள் மிகச்சிறப்பான இடத்தைப்பெறுகின்றன. ஐம்பெருங் காப்பியத்தில் மணிமேகலையில்கோவலனுக்கு கிடைத்த தண்டைனையை மாற்றி, கண்ணகியின்கோபம் குறைவுபட, மாதவியின் மானம்காத்து, பசித்து வந்தவர்க்கெல்லாம் உணவுஇட்டாள் காவிய நாயகி மணிமேகலை. அம்மணிமேகலைபசிப்பிணி என்னும் பாவியை சுட்டெரித்துவீழ்த்தியச் செய்திகளை இவ்வாய்வுக் கட்டுரைவெளிப்படுத்த முயல்கிறது.

மணிமேகலை 

            தன்னுடையப் பழம் பிறப்பினைஅறிந்து கொண்ட மணிமேகலை, அறத்தின் இயல்புகளையும்தத்துவங்களையும் கற்றுக் கொள்வதற்கு தகுதிஅடைந்தவளாய் இப்போது இருக்கின்றாள். மணிமேகலை சிறுகுமாரியாகஇருப்பதனால் சமயக் கொள்கைகளை அடிகளார்கூறமாட்டார்கள். அதனால் உனக்கு வேற்றுருக்கொண்டும், வான் வழியேச் செல்லும் மந்திரத்தையும் அளிக்கின்றது மணிமேகலாத் தெய்வம்.

            புத்த பிரான் அவதரித்தநாளான வைகாசி நாளன்று கோமுகிப்பொய்கையின்று அமுதசுரபி என்னும் ஐயக்கலம்வெளிப்படும். அக்கலமானது ஆபுத்திரன்கையில் இருந்தது. அதில் இடப்பட்டசோறு எடுக்க எடுக்க குறைவுபடாதுவளரும் தன்மையுடையது. இன்றுதான் அமுதசுரபிதோன்றும் நன்னாள் என்று கூறிதீவத்திலகை மணிமேகலையை கோமுகிப்பொய்கைக்கு அழைத்துச் செல்கின்றாள். அப்பொய்கையில் இருந்துதோன்றிய அமுதசுரபியானது மணிமேகலையின்கைகளில் வந்து தங்கியது. அமுதசுரபி தன்கைகளில் புகுந்ததும் மனதில்பெரும் மகிழ்ச்சி அடைந்து புத்தப்பகவானை வணங்கித் துதித்தாள்.

                        குடிப்பிறப் பழிக்கும்விழுப்பங் கொல்லும்

                         பூண்முலைமாதரொடு புறங்கடை நிறுத்தும்

                         பசிப்பிணி  யென்னும் பாவியது தீர்த்தோர்” (மணிமேகலை.11:76-79)

            பசிப்பிணி என்னும் பாவியானவன்குடிப்பெருமையை அழிப்பான். மேன்மையைக் கொல்வான். நாணம்என்ற அணிகலனைக் களைந்து எறிவான். உடலழகையும்அழித்து விடுவான். மனைவி மக்களோடுஅயலான் வீட்டுக்கு நாணாதுபிச்சை எடுக்கச் செய்வான். இவ்வளவு கொடுமைகளைச்செய்யும் கொடும்பாவியை அழிப்பவரைபுகழ வேண்டும். அக்கொடும்பாவியாகியப் பசியைஅழிக்க வந்தவள்தான் மணிமேகலைஆவாள். தன்னுடையப் பாத்திரத்தின் வாயிலாகமக்களின் பசியினைத் தீர்த்து வைக்கிறாள்.

பசியின் கொடுமை

            பசி வந்தால் பத்தும் பறந்துபோகும், பசி ருசி அறியாது என்றபழமொழிகள் கிராமங்களில் சொல்வதுண்டு. பசியின் வலியை அறிந்தவன் மற்றவரின்பசியை நன்கு புரிந்து கொள்வான். திருக்குறளில்,

                        உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்

                           சேரா தியல்வதுநாடு” (குறள்.74:4)

            மிகுதியானபசியும், அந்தப் பசியோடு சேர்ந்தநீங்காத நோயும், அழிவைத் தருகின்றபகையும் சேராது ஒரு மனிதன்வாழம் நாடே சிறந்த நாடாகக்கருதப்படுகிறது. பசிப்பிணி இல்லா நாட்டையேவள்ளுவர் விரும்பினார். மணிமேகலைக் காப்பியத்தில்பசியின் கொடுமையை சாத்தனார் அவர்கள்விரிவாகச் சுட்டுகின்றார். பசியின் வலிஅவஅவனுக்கு வந்தால்தான் தெரியும்என்பார்கள். உன்று கொழுத்தவனுக்கு பசியின்கொடுமைப் பற்றி எங்கே தெரியப்போகிறது. மணிமேகலையில் மழையின்மையால் கௌசிகமுனிவன் இறந்து கிடந்த நாய்க்கறியினைஉண்ணுகிறான்.  அதையேஇந்திரனுக்கும் படைக்கவும் செய்கின்றான்.

            பசியானது கௌசிக முனிவனையேஇழி செயல் செய்யத் தூண்டியிருக்கிறது. அப்பசியின் கொடுமை பாமர மக்களைஎன்னச் செய்யத் துண்டாது? உலக அறங்களில்சிறந்தது பிறருடையப் பசியினைப்போக்குவதுதான். பசியைப் போக்கி ஆற்றுவாரேசிறந்தவராகக் கருதப்படுகிறார். “எல்லா ஒழிப்புக்களிலும் உயிர்களின் பசியொழிப்பே மணிமேகலைவற்புறுத்தும் பேரறமாகும். இவ்வறத்தை இந்நூல்போல்வற்புறுத்தும் வேறு நூல் தமிழில்இல்லை. பசியின் கொடுமை மிகப்பெரியது. குடிமை, பெருமை, கல்வி, நாண், தோற்றம் என்றநல்லவை யாவும் பசித் தீமுன் அழிந்தொழியும். எதனைத் துறந்ததுறவியும் பசியைத் துறத்தல் முடியாது. பசியாரையும் வாட்டிப் பண்பு திரிக்கும்”1  என்று .சுப. மாணிக்கம் அவர்கள்பசியின் வலியை உணர்த்தி நிற்கின்றார்.

                        பசிப்பிணி யென்னும் பாவியதுதிர்த்தோர்

                         இசைச்சொலளவைக் கென்னு நிமிராது” (மணிமேகலை.11:80-81)

            சோற்றுக் கொடையும் அக்கொடையாளரின் சிறப்பும் இந்நூலால் பறைச்சாற்றப்படுகின்றன. சோற்றை ஆரூயிர்மருந்து என்றும் அதனை வழங்குவோரைஆருயிர் மருத்துவர் என்றும்சாத்தனார் கூறுகின்றார். பசி என்கிறநோயிலிருந்துதான் ஏனையப் புற நோய்களும்அக நோய்களும் பிறக்கின்றன. உடற்பிணி மருத்துவர்களாலும் அகப்பிணி அறிஞர்களாலும் போக்கப்படுகின்றன.  ஏனைய நோய்களுக்குப் பிறப்பிடமாகப்பசி என்னும் நோய் தோன்றுகிறது.

                        மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்

                         உண்டிகொடுத்தோ ருயிர்கொடுத் தோரே” (மணிமேகலை.11: 95-96)

            என்று சீத்தலைச் சாத்தனார்அவர்கள் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு தனிமனிதனும் பசியினைப் போக்க பாடுபடுதல்வேண்டும். அதன் ஒழிப்பை அரசும் முதற்கடைமையாகக் கொண்டு எண்ணுதல் வேண்டும். ஓருயிர்கூட பசித்துக் கிடத்தல் கூடாதுஎன்று நினைத்தல் வேண்டும். பசிப்பிணி நீங்கபுறப்பிணி நீங்கும். புறப்பிணி நீங்கஅகப்பிணி நீங்கும். மக்கள்களுக்கு அடிப்படையாகத்தேவைப்படுவது உணவு, உடை, உறைவிடம் ஆகியவைஅரசு அமைத்துக் கொடுத்தல் வேண்டும்என்று சாத்தனார் அவர்கள் மணிமேகலையில்பாடுகின்றார்.

                        ஆற்றுநர்க் களிப்போரறவிலை பகர்வோர்

                         ஆற்றாமக்கள் ளரும்பசி களைவோர்

                         மேற்றேயுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை” (மணிமேகலை.11:92-94)

            அறத்தை விலைக் கூறிவிற்கும் அறவணிகர்கள் பொறுத்துக்கொள்ளும் செல்வந்தர்களுக்கு உணவுஅளிப்பார்கள். பசியைப் பொறுத்துக் கொள்ளமுடியாத மக்களின் பசியினை நீக்குபவர்கள்உண்மையுடையவர்களாக இருப்பார்கள். உண்மையான வாழ்க்கையானதுஅவர்களின் உள்ளம்தான். இந்த உலகத்தில்வாழ்கின்ற உயிர்களுக்கெல்லாம் உணவுகொடுத்து பசியைப் போக்குவோர்தாம் உயிர்கொடுத்தவர்களாகக் கருதப்பெருவார்கள். உணவு கொடுப்பதுதான்உயிர் கொடுப்பதற்குச் சமமாகக்கருதப்படுகின்றது.

                        சோறில்லை என்பார்க்குச் சோறுதருவதுதான்

                         கூறறங்களின்சாற்றுக் கூட்டம்மாவேறேதான்”2

            என்று மணிமேகலை வெண்பாவில்பாரதிதாசன் குறிப்பிடுகின்றார். வயிற்றுக்குச் சோறில்லைஎன்று துன்பம் படுகிறவர்களுக்கு சொறுதந்த உதவுவதுதான் சிறப்பித்துச்சொல்லுகின்ற அறத்தின் தொகுதியாகக் கருதப்படுகிறது. அறங்களின் சாற்றையெல்லாம் கூட்டியகூட்டுத்தான் சோறு தருவது என்றுபாரதிதாசன் கூறுகின்றார்.

சிறைக்கோட்டத்திற்கு உணவுவழங்கல்

            ஒருநாள் சிறைக்கோட்டத்திற்குச் சென்றுஅங்குப் பசியால் வாடிக்கொண்டிருந்தவர்களைக் கண்டுஇன்மொழிகளைக் கூறி அமுதசுரபியிலிருந்து உணவைஅள்ளி அள்ளித் தந்து அவர்களின்பசியினைப் போக்கி உள்ளம் குளிரச்செய்தாள் மணிமேகலை.

                        ஆங்குப் பசியுறு மாருயிர்மாக்களை

                         ஊட்டியபாத்திர மொன்றென வியந்து” (மணிமேகலை.19:45-46)

            மணிமேகலையின் செயலைக் கண்டசிறைக் காவலன் மன்னனிடம் சென்றுநடந்ததை தெரிவித்தான். சோழ மன்னன்தன்னுடைய அரசமாதேவியுடன் சோலையில்வீற்றிருந்தான். நம் நகரத்தில் யானைத்தீ என்னும் கடும் பசியால்உடல் வருந்தி மெலிந்து திரியும்பெண்ணொருத்திக்கு ஒருத்தி தன்னுடையப் பாத்திரத்தில்இருந்து உணவினை எடுத்துக் கொடுத்தாள். அது அள்ள அள்ள குறைவில்லாமல்இருந்தது. அவள் தந்த உணவினை அனைவரும்உண்டு பசி நீங்கினார்கள். மன்னன் மணிமேகலையைஅழைத்து வர உத்திரவிடுகின்றார்.

            ஐயக்கலனைப் பற்றி மன்னர்வினவுகின்றார். உலக அறவியில் ஒருதெய்வம் எனக்கு தந்தது. இது தெய்வத்தன்மைபொருந்தியது. புசியால் வாடும் உயிர்களுக்குஉயிர் தரும் மருந்தான உணவைவற்றாமல் சுரக்கின்ற அமுதசுரபிஇது. இதைக் கொண்டு என்னுடைய கடமையைச்செய்து வருகின்றேன் என்கிறாள்மணிமேகலை.

            மன்னன் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்ற வழிவகைச் செய்தல்வேண்டும் எனக் கூறுகிறாள். மன்னனும் சிறைப்பட்டோரைஎல்லாம் விடுதலை செய்த அறக்கோட்டமாகமாற்றுகிறேன் என்று உறுதி கூறுகின்றான். முனிவர்கள் அரசரிடம் உம் கொற்றம்சிறக்க வேண்டும் என்று வாழ்த்தினார்கள். பஞ்சமா பாதங்களில் மிகவும்கொடியதாகக் காமமேச் சுட்டப்படுகின்றது. அதை நீக்கிவிட்டால் பொய், கொலை, களவு, கள் எனநான்கும் தானாகவே நீங்கிவிடும் என்கிறார்ஆசிரியர்.

இலக்கியப் பார்வை

பொய், களவு, பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைவிட மிகப்பெரிய நோய்பசியே என்கிறார்கள். அப்பசியினைப் போக்கஅரசாங்கம் வழிவகை செய்தல் வேண்டும். அக்காலத்தில்பசி என்று வந்தவர்களுக்கு உணவுபரிமாறிட அன்னச்சத்திரங்கள் ஆங்காங்குகட்டி வைத்தார்கள். தானத்தில் சிறந்ததுமற்றவர்களுக்கு பசியை ஆற்றும் அன்னதானமேஆகும். சங்ககாலம் முதல் இடைக்காலம்வரை சத்திரங்களும் மடங்களும்மக்களுக்கு சோறு போட்டன. காவிரிபூம்பட்டினத்தில், சோறாக்கிய கொழுங்கஞ்சிஆறு போல் வீதியை நனைத்ததுஎன்று பட்டினப்பாலை உரைக்கிறது. ஆனால் இன்றைக்கு உணவினை காசுக்குபோட்டிப்போட்டுக் கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். உழைப்பவனுக்கே அனைத்தும் கிடைக்க வேண்டும்என்கிறார்கள். ஆனால் அவனுக்கு கிடைப்பதுவெறும் கூழோடு கூடிய கஞ்சிமட்டும்தான். நாட்டின் வளர்ச்சி மாணவஇளைஞர்கள் கையில் உள்ளது. அப்படிப்பட்ட மாணவர்கள்பட்டினி கிடந்தால் பாடம்தான் ஏறுமா? புத்திதான்விளையுமா?

                            தனியொருவனுக்கு உணவில்லைஎனில்

                             ஜகத்தினை அழித்திடுவோம்  (பாரதியார் கவிதைகள், பாரதசமுதாயம். பா.2)

என்கிறார் பாரதியார். தனி மனிதனுக்கு உணவில்லைஎனில் இந்த உலகம் எதற்காக? அரசாங்கம்எதற்காக? மானுடம் வெல்லும் என்றுவாய்ப்பேச்சில் மட்டும் இருந்தால் போதாது.

முடிவுரை

அள்ள அள்ளகுறையாத தமிழ் மண்ணில் பிறந்தமக்கள் சோற்றுக்கு வக்கத்தவர்களாக மாறி விட கூடாது. ஆபுத்திரன் கையில்இருந்த அமுதசுரபியானது எத்தனையுகங்கள் ஆனாலும் மணிமேகலை போன்றநல்ல உள்ளங்கள் கைகளில் இருந்து, பசிக்கொடுமையால் வாடி வதங்கிக்கிடக்கும் மனிதர்களுக்குஎப்போதும்  உணவு வழங்கிக்கொண்டிருக்கும்.

சான்றெண் விளக்கம்

1.காப்பியப் பார்வை, .சுப.மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, .146

2.மணிமேகலை வெண்பா, பாரதிதாசன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, நூ.113

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here