பெண் கல்வி

பெண் கல்வி

பெண் கல்வி


            19-ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை இந்தியப் பெண்களின் முன்னேற்றத்திற்காக இடைவிடாது எடுக்கப்பட்ட முயற்சி பெண்கல்விக்கே ஆகும் இம் முயற்சியில் கிருத்துவப் பாதிரிமார்களும் ஆங்கிலேய அரசாங்கமும், சமூகச் சீர்திருத்தவாதிகளும் முழு முயற்சியுடன் ஈடுபட்டனர்.

            1813-ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனிச் கல்வி சட்டம் இந்தியர்களுக்குக் கல்வியளிக்க வேண்டுமென வற்புறுத்தினாலும், பெண்கல்வியை வற்புறுத்தவில்லை. இந்தியச் சமூகத்தில் பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லவும், சமூக வாழ்வில் ஆண்களுடன் பழகவும் தடை இருந்ததாலும், அவர்களுக்கு இளவயதிலேயே திருமணங்கள் நடைபெற்றதாலும், கல்வி கற்பது இயலாததாயிற்று அதனால் பெண்கள் கல்வி பயிலப் பெண்களுக்கெனத் தனியான பள்ளிகளும், அவற்றில் கற்பிக்க ஆசிரியைகளும் தேவைப்பட்டனர் கிருத்துவ மதத்தினர் 1818-ஆம் ஆண்டிலிருந்து பெண் கல்விக்காகப் பாடுபட்டனர்.

            ஆனால் அது வெற்றியடையவில்லை 1818-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்திலிருந்து ஆசிரியைகள் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டுப் பெண்களுக்கெனத் தனிப்பட்ட பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1824 வரை பெண் கல்விக்கு முக்கியமாகப் பாடுபட்டவர்கள் இவர்களேயாவர் பெண்கள் மூடிய வண்டிகளில் பள்ளிகளுக்கு அழைத்து வரப்பட்டுத் திரும்பவும் தத்தம் வீடுகளில் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டனர். இத்தகைய பள்ளிகளில் ஐந்து வகுப்புகளிலும் 400 பெண்களே கல்வி பயின்று கொண்டிருந்தனர். ஆயினும், இவ்வாறு பெண்களுக்குத் தனியான பள்ளிகள் ஆரம்பிக்கப்படும் முன்னரே சமூகத்தின் மேல் நிலையிலுள்ள பெண்கள் தங்கள் வீடுகளிலேயே கல்விப் பயிற்சி பெற்று வந்தனர் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியதாகும்.

            பெரும்பாலான பள்ளிகள் கிருத்துவப்பாதிரிமார்களாலும் ஆங்கிலேயர்களாலும் நடத்தப்பட்டதால், அக்கல்வி இந்திய வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக அமையவில்லை. மேலும், கிருத்துவப்பள்ளிகளில் சேர்ந்த இளைஞர்களை அவர்கள் கிருத்துவமதத்திற்கு மாற்ற முயன்றனர். அதனால் இந்திய வாழ்க்கை முறைக்கு ஏற்ற கல்வியை அளிக்க இந்திய சமூக சீர்திருத்தவாதிகள் முனைந்தனர். பிரம்ம சமாஜம் பெண் கல்வியை வற்புறுத்தியது. பிற்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆரிய சமாஜம் குருகுல முறையைக் கடைப்பிடித்துக் கல்வி புகட்டியது.

            ஈஸ்வர சந்திர வித்யாசாகர், புதேன் மதத்தினரின் ஆதரவுடன் 1849-இல் பெண்களுக்காக கொல்கொத்தாவில் ஒரு பள்ளியை ஆரம்பித்தார். பெண் கல்விக்கு வங்காளத்தில் தயானந்த சரஸ்வதி முயற்சி எடுத்தார். மஹாராஷ்டிராவில் ரானடே முயற்சிகள் எடுத்தார்.

            1850-இல் டல்ஹௌஸி பிரபு சமூக மாற்றத்திற்குப் பெண் கல்வி மிகவும் அவசியமென்று வலியுறுத்தினார். அவரது கருத்துக்களை 1854-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட சார்லஸ் உட் என்பவரின் அறிக்கை (Charles Wooode’s Despatch) விளக்கியது. அது ஆண்களுக்கு அளிக்கப்படும் கல்வியைவிடப் பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வி வாழ்க்கைக்குத் தேவையாகும் எனக் கூறியது. இவரது அறிக்கை பெண்கல்வி வளர்ச்சியில் முக்கியமான மைல் கல்லாகும். கல்வியை, முக்கியமாகப் பெண் கல்வியை ஆதரிப்பது அரசின் கடமை என அது வலியுறுத்தியது.

            இவரது அறிக்கையே, 19- ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்ட கல்வித் திட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்தது 1854-ஆம் ஆண்டு உட்ஸ் அறிக்கையின்படி, பெண் பள்ளிகளும், கல்வி கற்கும் பெண்களும் மிகக் குறைவு. 1870-இல் நகராட்சியும், அதன் நிதிக் குழுவும் அமைக்கப்பட்ட பிறகு, பெண்கல்வி முன்னேற்றமடைந்தது. அவை பெண்களுக்குப் பயிற்சிப்பள்ளிகள் ஆரம்பித்தன. 1882-இல் கல்விக்குழு (Education Commission) தனது அறிக்கையில் சிறு பெண்கள் மட்டுமின்றி 12 வயதுக்குக் குறைந்த பெண்களுக்கும் கல்வி புகட்டப் பரிந்துரைகள் அளித்தது.

            அதற்குப் பள்ளிகளில் ஆசிரியைகளையும், பெண் பார்வையாளர்களையும் (inspectress) நியமிக்கப் பரிந்துரைத்தது விதவைப் பெண்கள் கல்வி கற்க பணஉதவி அளிக்க வேண்டுமென வற்புறுத்தியது.

            பெண்களுக்கும், ஆண்களுக்கும் அவரவர் வாழ்க்கைக்கேற்றவாறு வெவ்வேறு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு பயிற்சியளிக்க வேண்டுமெனப் பரிந்துரைத்தது. இதன் பரிந்துரைகள் 1913-இல் செயல்படுத்தப்பட்டன. ஆயினும், 1818-ல் 133 பெண் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருந்தனர் மிகவும் ஆண்குழந்தைகளுக்கு 6 பெண் குழந்தைகள் என்ற விகிதத்திலேயே முன்னேறிய மாகாணங்களில்கூட 98 சதவிகிதப் பெண் குழந்தைகள்
பள்ளிக்குச் செல்லவில்லை.

            1857-இல் கொல்கத்தா, சென்னை, பம்பாய் ஆகிய நகரங்களிலும், 1882-இல் பஞ்சாபிலும், 1889 இல் அலகாபாத்திலும் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன கிருத்துவப் பாதிரிகளாலும் பெண்களுக்காக இரண்டு கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அவற்றில் ஒன்று பாளையங்கோட்டையில் உள்ள சாராடக்கர் கல்லூரி; மற்றொன்று லக்னோ கல்லூரி டொன்டோ கேசப் கார்வே 1908-இல் பெண்களுக்காக ஒரு பள்ளியை ஆரம்பித்தார். பின்பு ஸ்ரீமதி நாதிபாய் தாமோதர் தாக்ரே இந்தியப் பெண்கள் பல்கலைக்கழகத்தை 1910-இல் ஆரம்பித்தார்.


இவை தவிர, மன்னராட்சி நடைபெற்ற மாநிலங்களில் தனிப்பட்ட மன்னர்களாலும் கொள்ளப்பட்டன. கேரள மன்னராலும், மைசூர் மன்னராலும் முயற்சிகள் எடுத்துக் பெண்களுக்காகக் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ரமாபாய் ரானடே விதவைகளுக்காகவும், அனாதை விதவைகளுக்காகவும் இன மக்கள் பெண்கல்விக்கு முக்கிய
பள்ளிகள் தொடங்கினார். பார்சி தொண்டாற்றினர்.


            அக்கால கட்டத்தில் பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயின்றுவந்த பெண்களின் எண்ணிக்கை கீழ்வருமாறு:


ஆண்டு                                            பள்ளிகளில் படித்த பெண்கள்

1854                                                                 25000
1881                                                                 117000
1892                                                                 127000
1902                                                                 256000



தொழிற்கல்விக் கல்லூரிகளிலும் பயின்று வந்தனர். 1902 ஆம் ஆண்டு 169 பெண்கள், கல்லூரிகளிலும், 87 பேர் ஆசிரியைகளாகவும், செவிலித்தாயார்களாகவும், மருத்துவர்களாகவும் பணிபுரிந்தனர். சிலர்மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியா சுதந்திரமடையும் வரை கல்வியறிவு பெற்ற பெண்களின் சதவிகிதம் கீழ்க்கண்டவாறு இருந்தது.


ஆண்டு                                கல்வியறிவு பெற்ற பெண்களின் விகிதம்

1891                                                                             0.5

1901                                                                             0.7

1911                                                                             1.1

1921                                                                             1.9

1931                                                                             2.4

1941                                                                             6.9


            இந்தியா சுதந்திரமடையுமுன்பு இந்தியக் கல்வியின் முன்னேற்றத்தை ஆராய்ந்த குழு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே விதமான கல்வி அளிக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்தது.

            இந்தியப் பெண்களின் கல்வி வெவ்வேறு காரணங்களுக்காக வலியுறுத்தப்பட்டது. ஆரம்ப காலங்களில் பெண்களின் திருமண வயதை உயர்ந்த அது முக்கியமான வழியாகக் கருதப்பட்டது இக்கருத்தை ஈஸ்வரச் சந்திர வித்யாசாகர் வலியுறுத்தினார். விதவைகளுக்கு மனவலிமையையும், பொருளாதார சுதந்திரத்தையும் அளிக்கக் கல்வி தேவை எனவும் கருதினார். சமூகத்தில் உயர் நிலையில் இருந்தவர்கள் தங்களது குடும்பப் பெண்கள் ஆங்கிலேயர்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கொண்டு, அவர்களுடன் பழகக் கல்வி அவசியம் என வற்புறுத்தினர். பெண்களின் கல்வி, அவர்கள் ஆரியமதக் கோட்பாடுகளையும், கிரியைகளையும் புரிந்துகொண்டு, அவற்றைச் சரியான முறையில் இந்தியக் கலாச்சாரத்தின் கடைப்பிடிக்க உதவும் என மறுமலர்ச்சியில் ஈடுபட்டவர்கள் கருதினர். மாறிவரும் சமூக, அரசியல் சூழ்நிலைகளை உணர்ந்து கொண்டு, அவற்றிற்கேற்பக் முன்னேற்றத்தில் ஈடுபட்டவர்கள் பெண்கல்லியை வலியுறுத்தினர்.

            ஆயின், இக்காலகட்டத்தில் அனைவரும் ஆண் பெண் இருபாலரில் பங்குகளும் வேறுபட்டவை என்றும், அவர்கள் தங்கள் கடமைகளைச் சரியான முறையில் நிறைவேற்றக் கல்வி அவசியம் எனவும் கருதினர்.

            இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட்ட பழக்க வழக்கங்களின் காரணமாகப் பெண் கல்வியில் ஏற்பட்ட முக்கியமான முன்னேற்றம் பெண்களின் மருத்துவக் கல்வியாகும் ஆரம்பகாலத்தில் ஆங்கிலேயப் படைவீரர்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக இந்தியாவில் மருத்துவர்களை உருவாக்க ஆங்கிலேயர்கள் 1826-இல் பம்பாயிலும், 1827-இல் சென்னையிலும் மருத்துவப் பயிற்சிப்பள்ளிகளை ஆரம்பித்தனர். அதன்பிறகு, சென்னை, கொல்கத்தா, பம்பாய் முதலிய நகரங்களில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கினர்.

            இந்தியாவில் பெண்களுக்கு ஆரம்பக் கல்வியை வலியுறுத்திய நாட்களிலிருந்தே, இந்தியப் பெண்கள் மருத்துவத்துறையிலும் பயின்று பட்டம் பெற வேண்டிய அவசியம் இருந்தது. அதற்குச் சில காரணங்கள் உண்டு. அக்காலத்தில் குழந்தைப் பேற்றின்போது இறந்த பெண்களும், குழந்தைகளும் மிக அதிகம். பெண்கள் உடல் உணவிற்கும் இளவயதிலேயே மணமாகி, அவர்கள் உடல் முழு வளர்ச்சியடையுமுன்னரே  தாயாகிக், குழந்தைப் பேற்றை அடையும் நிலைக்கு உள்ளாயினர். குடும்பத்தில் பெண்களின் நலத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும், சத்தான முக்கியத்துவம் அளிக்கப்படாமையால், பெரும்பாலான பெண்கள் இரத்தச் சோகைக்கு உள்ளாகியிருந்தனர். பிள்ளைப்பேறு அறிவியல் பயிற்சியற்ற தாதிகளின் மேற்பார்வையில், சுகாதாரமற்ற சூழ்நிலையில் நிகழ்ந்தது அதனால் குழந்தைப் பேற்றின்பொழுது நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி பெரும்பாலான பெண்களும், அவர்களுடைய குழந்தைகளும் மரணமடைந்தனர்.

            அக்காலத்தில் ஆண் மருத்துவர்கள் இருப்பினும், பெண்களை அவர்கள் அணுக முடியாத காரணத்தினால் அம்மருத்துவர்கள் பெண்களை இந்நிலையிலிருந்து காப்பாற்ற இயலவில்லை. இப்பரிதாபகரமான நிலையிலிருந்து பெண்களைக் காப்பாற்றப் பெண் மருத்துவர்கள்
தேவைப்பட்டனர்.

            ஆரம்பகாலங்களில் கிருத்துவப் பாதிரிப் பெண்களும், இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பெண்களும் மருத்துவப்பயிற்சி பெற்று, இந்தியப் பெண்களுக்கு உதவ ஆரம்பித்தனர். இதில் ஐடா ஸ்டர் (lda Scuder) என்ற கிருத்துவப் பாதிரிப் பெண்ணின் முயற்சி குறிப்பிடத்தக்கது. அவர் வேலூரில் 1900-ஆம் ஆண்டு ஆரம்பித்த சிறிய மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை, இன்று மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கின்றது. இந்தியப் பெண்களை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து பயிற்சி பெற்ற மருத்துவர்களாக உருவாக்குவதற்காகச் சமூகச் சீர்திருத்தவாதிகளும், கிருத்துவப் பாதிரிமார்களும், ஆங்கிலேய அரசாங்கமும் பெரு முயற்சி எடுத்துக் கொண்டன. பெண்கள் மருத்துவக் கல்லூரியில் கற்பதற்காகத் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டன.

             கல்விக் கட்டணத்தில் அவர்களுக்குச் சலுகை அளிக்கப்பட்டது. 1880-களில் வங்காளம், பம்பாய், சென்னை முதலிய ஊர்களில் பெண்கள் மருத்துவக் கல்லூரிகளில் பயின்று பட்டம் பெற்றனர். ஆண்களுடன் சேர்ந்து படிப்பது அக்காலச் சமூகச் சூழலில் மிகவும் கடினமாக இருந்ததால், பெண்களுக்கெனத் தனியான மருத்துவக் கல்லூரிகள் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் லூதியானா, டில்லி, ஆக்ரா, வேலூர், சென்னை முதலிய இடங்களில் ஆரம்பிக்கப்பட்டன. இதைத் தவிர, டாப்ரின்ஸ் நிதி (Dafferin’s fund) என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அது பெண் மருத்துவர்களை உருவாக்கப் பெண் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும், பெண்களுக்கான மருத்துவமனைகள் கட்டவும் நிதியுதவி அளித்தது. இவ்வாறாக, இந்தியாவில் பெண் மருத்துவர்களை உருவாக்கப் பல்வேறு விதங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்ப காலத்தில் இத்துறையில் பெண்கள் பயின்று, பட்டம் பெற்று, மருத்துவராவதற்குச் சமூகத்தில் பெரிய அளவில் எதிர்ப்புக்கள் இருந்தன. பெண்களை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிய குடும்பங்களை அவர்களது உறவினர்களும், சாதியினரும் விலக்கி வைத்தனர் ஆனால், பெண் மருத்துவர்களின் சேவை பல இந்தியப் பெண்களின் உயிரைக் காக்கக் காரணமாக இருந்தது. காலம் செல்லச் செல்ல, மருத்துவத் தொழிலில் பெண்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.

             அவர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் பெற்றனர். மருத்துவத் தொழில் பெண்களுக்கு உகந்த தொழிலாகவும் கருதப்பட்டது. இவ்வாறாக, இந்தியாவில் எழுத்தறிவு பெற்ற பெண்களின் சதவிகிதம் மிகக்குறைவான முன்னேற்றத்தைக் கண்டு கொண்டிருந்த நாட்களிலேயே, ஆண்களுக்கிணையாகப் பெண்கள் மேம்பட்ட கல்வியாகக் கருதப்படும் மருத்துவக் கல்வியில் பயிற்சி பெற்று தங்களுக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினர்.

நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here